நண்பனின் முன்னால் காதலி – 41 (Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 41)

Tamil Kamakathaikal – நான் நினைக்கிறேன் டேவிட்க்கும் சுவாதிக்கும் இப்ப affair இருக்குன்னு நினைக்கிறேன் என்று மணி சொல்ல இவன் என்னடா புது கதைய கட்டி விடுறான் சரி என்ன சொல்றான்னு கேப்போம் .எப்படிடா சொல்ற என்று விக்கி கேட்டான் .

டேய் யோசிச்சு பாரு ஸ்வாதிய ஒரு ரெண்டு மாசமா காணோம் .நம்பரையும் மாத்திட்டா .அவ ரூம் மெட்டு கிட்ட கூட அவ எங்க போனான்னு சொல்லல அப்புறம் இந்த டேவிட் பையன் முகரையே ரெண்டு மாசமா ஒரு மாதிரி இருக்கு எதையோ மறைக்கிற மாதிரியே இருக்கு என்றான் மணி .

மணி இத மட்டும் வச்சு ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்ல முடியாது ஒரு வேல சுவாதி திரும்ப தமிழ் நாட்டுக்கே போயி இருக்கலாம் அவ லவ் பிரேக் ஆப் ஆனதால டேவிட்க்கு வேற எதாச்சும் டென்சன் இருக்கும் இது ரெண்டையும் முடிச்சு போட்டு பாவம் கல்யாணம் ஆனவன் வாழ்க்கைல விளையாடிடாத என்றான் விக்கி .

நான் அத வச்சு மட்டும் சொல்லலடா நேத்து ஒரு விஷயம் நடந்துச்சு அத வச்சு தான் சொல்றேன் என்று மணி சொல்லவும் விக்கிக்கு மனதில் தீடிரென ஒரு வருத்தம் வந்தது .இவன் என்ன சொல்றான் ஒரு வேல ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குமோ இந்த குழந்தை கூட அவனோடாத இருக்குமோ சும்மா ரெண்டு பேரும் என்னைய யூஸ் பண்றாங்களா என்று விக்கி நினைத்தான் .

பின் ஒரு வருத்தமான குரலில் அப்படி நேத்து என்னடா நடந்துச்சு என்றான் விக்கி ,நேத்து சாயங்கலாம் சுவாதி ஆபிஸ்க்கு போனேன் .அங்க போனப்ப அவ இல்ல .அங்க இருந்த செக்க்யுரிட்டி கிட்ட கேட்டப்ப என்ன இப்பதான் ஒருத்தர் அவங்களா கேட்டு போறாரு நீங்களும் கேக்குறிங்க அப்படின்னு சொன்னார் .

நானும் கேட்டேன் வந்தவர் எப்ப வந்தாரு எப்படி இருந்தாருன்னு அவர் கிட்ட கேட்டேன்

அவரு சொன்னாரு இப்பதான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்துட்டு போனாரு கருப்பு கலர் கார்ல ஆள் எப்படி இருப்பாருன்னு சரியா பாக்கல அப்படினாறு .நான் உடனே அப்ப டேவிட்க்கு போன் போட்டேன் அவன் எடுக்கல அப்புறம் மேல் மீட்டிங்க்ல இருந்ததா பொய் சொன்னான் இதுக்கு என்ன அர்த்தம் என்றான் மணி .

தெரியலையே நீயே சொல்லேன் என்றான் விக்கி .நம்ம செட்ல கார் வச்சு இருக்கிறது ரெண்டு ஆள் தான் .ஒண்ணு நீ இன்னொன்னு அவன் நீ வச்சு இருக்கிறது ப்ளு கலரு கார் அப்ப அவன்தானே வந்து இருக்கணும் நீயே சொல்லு என்றான் மணி .

தெரியல அது இருக்கட்டும் நீ எத்தன மணிக்கு அவள பாக்க போன என கேட்டான் விக்கி .நம்ம ஆபிஸ் முடிஞ்சதும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு 5.30 போல போனேன் .அட பாவி அப்ப பத்து நிமிசத்துக்கு முன்னாடி வந்தது நான் தாண்டா என்று மனதிற்குள் நினைத்து கொண்டு அது இருக்கட்டும் செக்க்யுரிட்டி என்ன சொன்னான் .ஆள் எப்படி இருப்பான் கார் எந்த கம்பெனி இதலாம் கேட்டியா அந்த ஆள் கிட்ட என்றான் .

அட போடா அங்க தான் சிக்கலே அந்த கிழவனுக்கு கண்ணே சரியா தெரியல வந்தது கருப்பு காரா பச்சை காரான்னு கூட தெரியல அப்புறம் எப்படி அவன் கிட்ட ஆள் எப்படின்னு கேக்க ஆனா அந்த ஆள் இன்னொன்னு சொன்னான் நேத்து காலைல அதே கார்ல தான் சுவாதி வந்தாளாம் .ஆனா ஆபிஸ விட்டு கொஞ்ச தூரம் தள்ளி நின்னு இறக்கி விட்டு போனானாம் .

அப்படினா அது நம்மளேதான் நான் தானே நேத்து அவள கார்ல அவ ஆபிஸ்க்கு கொண்டு போயி விட்டேன் .அப்ப அந்த குருட்டு கிழம் நம்ம ப்ளு கலர் கார கருப்புன்னு சொல்லி இருக்கு

அத நம்பி இந்த வேலக்கன்னை அதுக ரெண்டையும் முடிச்சு போடுது அவ புல்லா இப்ப என் கூட இருக்கா என்று நினைத்து கொண்டு சரி மணி அதுக எப்படி போனா எனக்கு என்ன லஞ்ச் முடிய போகுது வா நம்ம ரெண்டும் பெரும் நம்ம கேபினுக்கு போவோம் என்று சொல்லி விட்டு விக்கி போக பின் மணியும் போனான் .

விக்கி அவன் இடத்திற்கு வந்த பின் அப்பா கொஞ்ச நேரத்துல மணி வயித்துல புளிய கரைசுட்டான் டேவிட்ம் சுவாதியும் போயி தொடர்புல இருக்காங்களாம் என்று சொல்லி தனக்கு தானே சிரித்து கொண்டான் ,

ஆமா இப்ப எதுக்கு அங்க மணி அப்படி சொன்னதும் ஒரு நிமிஷம் வருத்தப்பட்ட இப்ப அங்க போனது நீதான் தெரிஞ்ச உடனே சந்தோஷ படுற நீதானா அந்த குழந்தை வேணாம்னு நினச்சா உன்னோட குழந்தையா இருக்க கூடாதுன்னு நினைச்ச அத வயித்தல இருக்கும் போது கொல்லவும் நினச்ச இப்ப என்ன திடிர்னு அவ மேல சந்தேகமும் பாசமும் ஒண்ணா வருது அவ என்ன உன் லவ்வரா இல்ல பொண்டாட்டியா

என்று அவன் மனம் கேட்க விக்கிக்கு அப்போது தான் தோன்றியது நம்ம ஏன் இப்படி இருக்கணும் அவள மறக்கறது மட்டும் தான் நல்லது என்று நினைத்து கொண்டு வேலை பார்த்தான் .

அதே நேரம் வீட்டில் இருந்த சுவாதிக்கு அஞ்சலியிடம் இருந்து போன் வந்தது என்னடி பண்ற எப்படி இருக்க என்று கேட்க சொல்லுங்க அக்கா நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்று பதிலுக்கு கேட்க நான் நல்லாத்தான் இருக்கேன் சரி உன் குழந்தையோட அப்பன் மக்கியா விக்கியா அவன் எப்படி இருக்கான் என்று அஞ்சலி கேட்க சுவாதி கோபமாக அக்கா அவன் பேரு விக்கி அவன் ஒன்னும் குழந்தைக்கு அப்பன் இல்ல .

நான்தான் என் குழந்தைக்கு அப்பா அம்மா எல்லாம் நான்தான் என்றாள் கோபமாக .அடேங்கப்பா கோபத்த பாரு அதுல அவன் ரத்தமும் தான ஓடுது .நாளைக்கே அவன் மனம் திருந்தி குழந்தை எனக்கும் தான் சொந்தம் பாக்கனும்னா என்ன சொல்வ என்று அஞ்சலி கேட்க

யாரு விக்கியா சூரியன் தேக்க உதிச்சாலும் உதிக்கும் விக்கி திருந்த எல்லாம் மாட்டான் என்று சொல்லி சுவாதி சிரித்தாள் .ஏன் அவன் என்ன ரோபட்டா அப்படியே இருக்கிறதுக்கு இந்நேரம் ரெண்டு மாசம் அவன் உன் கூடவெ இருந்ததுக்கு உன்னையே லவ் பண்ணி இருக்கணுமே உன் கண்ண பாத்தே மயங்கி இருக்கணும் .என் ஆபிஸ்ல ஒருத்தன் ஒரு தடவ உன்னையே பாத்துட்டே .இன்னும் என்னையே உன் நம்பர் கேட்டு டார்ச்சர் கொடுக்குறான் .

பேசாம அந்த விக்கி திருந்தாட்டி சொல்லு இவன் நீ குழந்தையோட இருந்தா கூட எத்துக்கவன் போல அந்த அளவுக்கு உன் மேல பைத்தியம் பிடிச்சு போயி இருக்கான் என்ன சொல்ற என்று அஞ்சலி கேட்க

அட போங்க அக்கா எனக்கு எவனும் வேணாம் நான் என் குழந்தையும் மட்டும் கடைசி வரைக்கும் ஒண்ணா இருந்துகறோம் என்றாள் .ஏண்டி உனக்கு அப்ப ஆம்பிள துணையே வேணாமா என்று அஞ்சலி கேட்க எதுக்கு ஆம்பிள துணை என்று சுவாதி மறுபடி கேட்க ம்ம் ஒரு பாது காப்புக்கு ஒரு அன்புக்கு ஒரு அரவணைப்புக்கு இதுக்கு எல்லாம் வேணாமா உன் வாழ்க்கை என்று அஞ்சலி சொன்னாள் .

ஒ இதுக்குதான் ஆம்பிள துணை வேணுமா நீங்க சொல்றபடி பாத்தா இதலாம் எந்த ஆம்பிளக கிட்டயும் கிடைக்காது எனக்கு தெரிஞ்சு ஆம்பிலகன்னா ஒரு சுயநலவாதிக யாரையும் புரிஞ்சுக்க தெரியாதவங்கே அவங்களுக்கு அன்பு என்னன்னு தெரியாது அவங்களுக்கு தேவை செக்ஸ் மட்டும் தான் இல்லாட்டி பணம் எப்படி சம்பாதிக்கிரதுன்னு யோசிப்பங்கே அன்பு காட்டுறத பத்திலாம் யோசிக்க மாட்டேங்கே என்று சுவாதி கோபமாக சொல்லி கொண்டே போக

ஹ ஹ ஓகே கூல் கூல் நீ பாட்டுக்கு அடிக்கட்ட போற சரி நீ ரொம்ப குழப்பத்துல இருக்க உன் கிட்ட போன்ல பேசுனா புரிய வைக்க முடியாது நேர்ல பேசுனாதான் கரெக்ட்டா வரும் .நாளைக்கு உன் வீட்டுக்கு வரவா என்றாள் அஞ்சலி .

ஐயோ அவன் யாரும் வந்தா திட்டுவனே என்றாள் சுவாதி .அவன் என்ன உன் புருசனா திட்டறதுக்கு என்றாள் அஞ்சலி ..ஐயோ புருசனா ஆகி இருந்தா கூட நீங்க எப்படி உங்க புருசன திட்டிரிங்கலொ அப்படி திட்டி இருக்கலாம் அவன ஆனா அவன் தான் என்னையே எதுக்கு எடுத்தாலும் திட்டுறான் அவனுக்கு பயந்து பயந்து இருக்க வேண்டியாதா இருக்கு என்றாள் சுவாதி .

என்னது பிரகன்ட் வோமன் கூட பாக்கமா திட்டுரனா அவன நாளைக்கு வந்து ரெண்டு அரட்ட போடவா பயந்து அடங்கிடுவான் .வேணாம் வேணாம் இப்ப ஓரளவு நார்மலா இருக்கான் .சரி இருந்தாலும் நான் கேட்டு சொல்றேன் நீங்க வரர்துக்கு என்றாள் சுவாதி .

ம்ம் சரி கேளு .அது இருக்கட்டும் அது என்ன சைட் கேப்ல நான் என் புருஷன திட்டறத சொல்லி கிண்டல் அடிக்கிற ஏண்டி வில்லி என்று அஞ்சலி கேட்க ஆமா நீங்க போன்லே அண்ணன திட்டுனதா நான் எத்தன தடவ பாத்து இருக்கேன் .போன்லே அப்படின்னா நேர்ல அடிப்பிங்க போல என்று சுவாதி சிரித்து கொண்டே சொல்ல

அடியே 40 வயசுக்கு மேலதான் உங்க அண்ணன நான் திட்ட முடியுது .உன் வயசுல நானும் உங்க அண்ணனுக்கு நடுங்கி கிட்டு தான் இருந்தேன் .எல்லாம் எனக்கு குழந்தை பிறந்ததும் அவர் அடங்கிட்டாறு .நீ வேணா பாரு உன் குழந்தைய பாத்த உடனே உன் ஆளும் மாறிடுவான் என்று அஞ்சலி சொல்ல

இதே தான் பல முறை சொல்லிட்டிங்க போர் அடிக்குது என்றாள் சுவாதி .எத்தன தடவ சொன்னாலும் அதான் நடக்க போகுது என்று அஞ்சலி சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி அக்கா எனக்கு தீடிருன்னு புளிப்பா சாப்பிடனும் போல இருக்கு என்று சுவாதி சொல்ல ஒ அதுவா கண்சிவா இருக்கும் போது அப்படிதான் தோணும் வீட்ல மாங்கா இல்ல என்று அஞ்சலி கேட்க

இல்லக்கா ஆனா எனக்கு இப்ப சாப்பிட்டே ஆகணும் போல இருக்கே இங்க மாங்கா எங்க கிடைக்கும் என்றாள் சுவாதி .அது மார்கெட் போகணும் இந்நேரம் மார்கெட் போக முடியாது அதுனால் நீ பேசாம பக்கத்துல எங்கயாச்சும் மாங்கோ பிளவர் ஐஸ் கிரிம் வாங்கி சாப்பிடு என்றாள் அஞ்சலி

.சரிக்கா நான் இப்பவே போறேன் என்றாள் சுவாதி .யே லூசு மணி 7 ஆச்சு இருட்டி இருக்கும் நீ போகாத அவன போ சொல்லு என்று அஞ்சலி சொன்னாள் .

அவன் இன்னும் வரலையே என்றாள் சுவாதி .சரி அவன் வர வரைக்கும் வையிட் பண்ணு நீயா தனியா போகாத என்றாள் அஞ்சலி .சரிக்கா என்று போனை வைத்து விட்டாள் .

அவள் ஒரு பத்து நிமிடம் பொறுத்து பார்த்தாள் .ஆனால் அவளால் முடியவில்லை எனவே பர்சை எடுத்து கொண்டு கதவை பூட்டி விட்டு கடைக்கு நடக்க ஆரம்பித்தாள் ,

விக்கி வீடு தனியாக இருப்பதால் மெயின் ரோட்டிற்கு கொஞ்ச தூரம் செல்ல வேண்டும் .அந்நேரமே அவள் நடந்து சென்ற ஏரியா ஆள் அரவம் இல்லமால் இருக்க சுவாதியை பயம் தொற்றி கொண்டது .பயத்தோடு தனியாக நடந்து சென்றாள் . Kadhali Tamil Kamakathaikal

தொடரும் .

Leave a Comment