நீ – 28 (NEE 28)

கலவரம் மாறாத முகத்துடன் நீ..நடுங்கும் குரலிலேயே சொன்னாய்.
”உங்க..அப்பா… வகை.. உறவுன்னு… சொன்னங்க…”

சற்று நிம்மதியாக உணர்ந்தேன்.
”ஹப்பாடா..! என் நெஞ்சுல பீர வாத்த…!!” எனப் புன்னகைத்தேன்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

உன் பயமும் கொஞ்சம் நீங்கியது போலத் தெரிந்தது. நீ லேசாகப் புன்னகைத்து..
”அதுவாத்தாங்க கேட்டுச்சு..” என்றாய்.

”ம்ம்..சரி… பரவால்ல..! இனிமே கவனமா இரு..! அதிகமா பேச்சு வார்த்தை வெச்சுக்காத…” என்றேன்.

”செரிங்க…”

”முடிஞ்சவரை ஒட்டாமயே பேசு..!”

”சேரிங்க..”

மறுபடி மேகலா வெளியே வந்தாள். அவளைப் பார்த்த..நீ சட்டென நகர்ந்து.. சமையல்கட்டுப் பக்கம் போய்விட்டாய்.
மேகலா.. என்னைப் பார்த்தாள். லேசாக முறுவலித்தாள்..!

”முடிஞ்சுதா…?” என்று கேட்டாள்.

”என்ன..?”

‘சேவிங்’ என்பதை ஜாடையில் கேட்டுவிட்டு..
”குளிக்கலியா..?” என்று கேட்டாள்

”ஆ.! குளிக்கனும்…!!”

”வாசல்ல வந்து நில்லுங்க..! இயற்கை குளியல்…!! நல்லாருக்கும்..!!” என்றாள்.

நான் ”நீங்க குளிச்சிட்டிங்க.. போலருக்கு…?” என்று சிரித்துக் கேட்டேன்.

உடையைப் பார்த்துக்கொண்டு… புன்னகைத்தாள். ”நனஞ்சுட்டேன்..!!”

மழையில் நனைந்த…புடவையில்.. மிகவும் கவர்ச்சியாகத் தோண்றினாள்.!! அவளது கணவன்மீது பொறாமை எழுந்தது..!!

”சூப்பர். .!!” என்றேன்.

”என்ன..?” என்று கேட்டாள்.

”மழைல நனைஞ்ச…சிற்பம் மாதிரி.. அழகா இருக்கீங்க…”

சிரிப்பு மாறாமல்.. தண்ணீர் நிறைந்து விட்ட பாத்திரத்தை இரண்டு கைகளிலும் பிடித்து தூக்கிக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.

நீ.. காபியை சூடாற்றியவாறு வந்து… சுவரோரமாக நின்றாய்.
நான் உன்னைப் பார்த்தேன்.
”நீ ஏன் இப்படி பயப்படற..?”

” உங்களுக்கு எதுக்குங்க கெட்ட பேரு..?”

”ஆஹா..! நான் ஒன்னும் யோக்யன் இல்ல…!!”

”இருந்தாலும்…” என்று சிரித்தாய்.

”சரி..அதான் தெரிஞ்சு போச்சே…?” என்று விட்டு.. நான் கிச்சு முடியைச் சுத்தம் செய்தேன்..!
நீ காபியைக்கையில் பிடித்தவாறு… நான் சுத்தம் செய்வதையே பார்த்தாய்.

இரண்டு அக்குள் முடிகளையும்… சுத்தம் செய்து விட்டு.. உன்னைக் கேட்டேன்.
”உனக்கும் பண்ணனுமா.. தாமரை..?”

”ஐயோ..! வேண்டாங்க..!!” என்று சிரித்தாய்.

”சுத்தம் பண்ணிட்டியா..?”

”ஆமாங்க…”

சுத்தம் செய்த பின் திரும்பி காபியை வாங்கினேன்.!
”நீயும் குடி..” என்றுவிட்டு காபியைக்குடித்தேன்.

நீயும் காபி குடித்தாய்.! என் இடப்பக்கத்தில் வந்து..சுவரோரமாக நின்று கொண்டு…
மெல்லக் கேட்டாய்.
”நல்ல பழக்கங்களா..?”

”என்னது..?”

”பேசினீங்களே… அந்தப் பொம்பள..?”

”ஓ..! மேகலாவா..?”

”ஆமாங்க…”

”ம்ம்..! ஆமா… ஏன்..?”

5

”கேட்டங்க..!! ”

”ம்ம்…!!”

”ரெண்டு கொழந்தைங்களா… அதுக்கு…?”

”ம்ம்…!!”

”அதும் புருஷன்… வாட்ச்சு கடை வெச்சுருக்குங்களாமே…?” என்று கேட்டாய்.

வியப்பானேன் ”உனக்கெப்படி தெரியும்..?”

”அதாங்க சொல்லுச்சு…”

”ஓ…!!” சிறிது இடைவெளி விட்டுக் கேட்டேன் ”ஆமா.. நீ எதுக்கு இங்க வர்ரேனு கேட்டுசசா..?”

”ஆமாங்க…”

”நீ… என்ன சொன்ன…?”

”வீடு கூட்டி… துணி தொவச்சுக்குடுக்க வர்றதா….”

சிரித்துவிட்டேன் ”ஓ..!! வேலைக்காரி… மாதிரி..?”

”ஆனாக்கா..அது நம்பின மாதிரி தெரியலீங்க…” என்றாய்.

காபி குடித்த பின்.. நான் குளிக்க ஆயத்தமானேன். சேவிங் செட்டெல்லாம் எடுத்து வைத்து விட்டு..
”சரி.. நான் குளிச்சிட்டு வந்தர்றேன் தாமரை..” என்றேன்.

”செரிங்க..” என்று விட்டுச் சொன்னாய் ”என்னங்க இந்த மழை..? காலைலயே இப்படி பெய்யுது..?”

”தூரல்தான..?”

”இன்னிககேதான்.. பேயனுங்களா..? நேத்தோ.. இல்ல நாளைக்கோ..பேஞ்சா.. என்னங்களாம்..?”

”புயல் உருவாகியிருக்கும்..! சொல்ல முடியாது… இன்னும் ரெண்டு..மூனு நாள் பெஞ்சாலும் பெய்யலாம்..”

”எத்தனை நாள் வேனா… பேயட்டுங்க..! இன்னிக்கு ஒரு நாள் மட்டும்..நிக்கக்கூடாதுங்களா…?”

”ஹா..ஹா..! உனக்கென்னடி.. மழைமேல.. இத்தனை கோபம்..?”

”நாம.. இன்னிககுத்தாங்க.. பண்ணாரி போறோம்..?”

”ஏய்..! கவலப்படாத..! நாம போறத.. இந்த மழை தடுத்துராது..!!”

”போலாந்தாங்க..?”

”ம்ம்..! போலாம்.. போலாம்..!!”

”நா…ரொம்ப ஆசையா.. வந்தங்க..!!”

”பத்து மணிக்கு மேல.. போனாபோதும்…”

”சரிங்க..!” என்றவள்.. சிறிது தயக்கத்துக்குப் பின் கேட்டாய் ”கார்லீங்களா போறோம்..?”

”ஏன்… கார்லதான் போகனுமா..?”

”ஐயோ..! அப்படி இல்லீங்க..! சும்மா கேட்டங்க..!!”

”கார்ல இல்ல..! பஸ்லதான் போறோம்..!!” என்றேன்.

”செரிங்க…! தெரிஞ்சக்கலாம்னுதாங்க கேட்டேன்..!!” என்று சிரித்தாய்.

உன் கன்னத்தில் சுண்டிவிட்டு… நான் குளிக்கப் போனேன்..!! நான் உல்லாசக் குளியல் போட்டு… உடை மாற்றிய போது… ஜன்னல் வழியாக மேகலா தெண்பட்டாள்.
சட்டென நீ..மறைந்து நின்றாய்.
நான் சிரிக்க…
அவளும் சிரித்து… ”சாப்பிட்டாச்சா..?” என்று கேட்டாள்.

”இல்ல..! நீங்க…?”

”நா… இன்னும் பல்லுகூட வெளக்கல..!” என்றாள்.

”பசங்க..?”

”உள்ளருக்காங்க..”

”உங்க வீட்டுக்காரரு..?”

”எங்கயே போனாரு..”

”என்ன சமையல்..? மட்டனா.. சிக்கனா..?”

சிரித்தாள் ”இப்ப.. ஆப்பம் மட்டும்தான்..! இனிமேதான்.. மத்ததெல்லாம்..!!”

”ஓ..! காலைல.. டிபன்..! ஆப்பமா..?”

”ம்ம்..! தரட்டுமா..? சாப்பிடறீங்களா..?” என்று கேட்டாள்.

மறுக்க மனமில்லை..!
”ம்ம்.. குடுங்க..!!” என்றேன்.

உடனே வீட்டுக்குள் போய்.. ஒரு தட்டில் போட்டு… மூடி.. நனையாமல் குடை பிடித்துக் கொண்டு வந்து ஜன்னல் வழியாகக் கொடுத்தாள்.

”நனஞ்சிட்டு வரனுமா..?” என்று வாங்கினேன்.

”பரவால்ல..! ” கொடுத்த பின்..கையை வெளியே எடுத்து.. ”குளிக்கனும்..” என்றாள்.

”குளிச்சிட்டு…?”

என்னைப் பார்த்தாள்.

”இ..இல்ல..! இப்பவே பாதி குளிச்சிட்டீங்க..! அதான்..குளிச்சிட்டு என்ன பண்ணப்போறதா.. பிளான்னு கேட்டேன்..!!”

” பிளான்லாம்.. ஒன்னும் இல்ல..” என்று விட்டுத் திரும்பிப் போனாள்.

மூடிய தட்டை விலக்க.. உள்ளே நான்கு ஆப்பங்களும்.. அதற்கு தொட்டுக்கொளள.. தேங்காய் சட்னியும்.. கத்தரிக்காய் சாம்பாரும் இருந்தது..!! மூடியைத் திறந்தவுடனே.. ஆப்பம் மணத்தது..!!

நகர்ந்து கட்டிலில் உட்கார்ந்து.. உன்னைக் கூப்பிட்டேன்.
”இந்தா…சாப்பிடு..”

” நீங்க..சாப்பிடுங்க..!!” என்றாய்.

”ஏய்.. சாப்பிடு..வா..” என்க.. நீ என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாய். இருவரும் பேசிக்கொண்டே.. ஆப்பம் சாப்பிட்டோம்..!

சாப்பிடும்போது கேட்டாய்.
”நா.. இருக்கறது தெரிஞ்சா.. என்னங்க நெனைக்கும்..?”

” என்ன நெனைக்கப் போறா..? எல்லாரையும் போலத்தான்..!”

”ஆனா… நல்ல.. அழகா.. லட்சணமா இருங்குங்க..”

உன்னைப் பார்த்தேன் ”அப்படிங்கறியா..?”

”ஏங்க…?”

”ம்ம்…! நீ சொல்றது.. உண்மைதான்..! மாநிறமா இருந்தாலும்… ஒடம்பு நல்லா.. நசசுனுதான் இருக்கு..! அலட்டல் இல்லாத.. அழகுனு சொல்லலாம்..!! என்ன.. அவ புருஷனுக்கு.. அவள புடிக்கறதில்லேன்னு… கொஞ்சம் பீல் பண்ணுவா..!!”

நீ… வெறுமனே சிரித்தாய்.

நான் மறுபடி.. ”ஆனா…நல்ல கட்டை..!!” என்றேன்.

உடனே நீ.. ”அதும்பேர்ல ஆசைங்களா..?” என்று கேட்டாய்.

”என்ன…?”

தயங்கினாய் ”இ..இல்ல… அது மேல…?”

”உனக்கு.. ஏன் இப்படி கேக்கனும்னு தோணுச்சு..?”

”ஐயோ..! தப்புன்னா மன்னிச்சிருங்க..! என் குணம்.. சட்னு கேட்டுட்டேன்..!”

”ஓகே..! பரவால்ல… விடு..!!” என சிரித்தேன்.

ஆளுக்கு இரண்டு ஆப்பம் சாப்பிட்டோம்..! நீ.. சிரித்துவிட்டு.. சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துப் போய் கழுவிக் கொண்டு வந்து கேட்டாய்.
”குடுத்துராலங்களா..?”

ஜன்னல் வழியாகப் பார்த்தேன். மேகலா தெண்படவில்லை.
”இப்ப.. அத வெளில காணம்..! வெச்சிரு.. அப்பறம் குடுத்துக்கலாம்..!” என்றேன்.

பாத்திரங்களை வைத்து விட்டு.. வந்து… நீ என் பக்கத்தில் உட்கார்ந்து.. டிவியைப் பார்க்க. ..
நான் உள்ளே நகர்ந்து உட்கார்ந்து.. உன்னைப் பக்கத்தில்.. இழுத்து… உட்கார வைத்து.. அணைத்துக் கொண்டேன்.!
”அப்றம்.. உன் பிரெண்டு எப்படி இருக்கா..?”

”யாருங்க..?” என்னைப் பார்த்தாய்.

”தீபமலர்..?”

”ஓ..! அவ நல்லாருக்காங்க..!!”

” ஆமா…அந்த.. தீபாளுக்கு வேலை கேட்டியா..?”

”ஆ..! கேட்டங்க…! உங்ககிட்ட அத.. சொல்ல மறந்துட்டங்க..!”

6

”சரி.. என்ன சொன்னாரு..?”

”இப்ப.. ஆள் வேண்டாம்னு சொன்னாருங்க..! அப்படி வேனும்னா.. சொல்றேன்னு சொன்னாருங்க..”

”சரி.. விடு..! வேற வேலைக்கு ஏற்பாடு..பண்ணலாம்..” என்றேன்.

”செரிங்க…” என்றாய்..!

சிறிது நேரத்தில் மழை ஓய்ந்து விட்டது..! அதைப்பார்த்த.. நீ..
”மழ நின்றுச்சுங்க…” என்றாய்.

”போலாமா…?” நான் கேட்க…

”போலாங்க…!!” என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சிரித்தாய்….!!!!!

— சொல்லுவேன்…..!!!!!!

NEXT PART

நீ – 28

Leave a Comment