மயக்கம் தந்தது யாரோ (Mayakkam Thanthathu Yaro)

This story is part of the மயக்கம் தந்தது யாரோ series

    வணக்கம் அனைவருக்கும்! நான் உங்கள் அஜய்! என்னுடைய அனைத்து கதைகளுக்கும் தொடர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவும் ஒரு குடும்ப உறவு தொடர் கதை தான்.

    ஆனால் இந்த கதையின் நாயகியை பற்றியும் உறவு முறையை பற்றியும் நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. மாறாக வாசகர்கள் கதையை படித்து, கதையின் போக்கில் தெரிந்துக் கொள்ளும்படி அமைத்துள்ளேன். படித்துவிட்டு தங்களின் பொன்னான கருத்துகளை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
    கதைக்குள் புகுவோம் வாருங்கள்!

    என் பேரு வருண்! வயசு 24. பீ.ஈ. முடிச்சிட்டு இப்ப எம்.ஈ. படிச்சுட்டு இருக்கேண். எங்க வீட்ல நா, ஒரு அண்ணன் (28), அம்மா (50). அண்ணன் ஐ.டி ல இருக்காரு, அம்மா ஹவுஸ் வைஃப்! அண்ணனுக்கு ஒரு ஆறு மாசமா பொண்ணு பாத்து ஒரு நல்ல வரனும் அமஞ்சது.

    அவங்க பேரு அஞ்சலி, வயசு 26. எம்.பீ.பீ.எஸ். முடிச்சுட்டு சொந்தமா க்ளினிக் வச்சிருக்காங்க. வீட்ல அண்ணா அம்மா ரெண்டு பேருக்கும் பிடிச்சு போயி பொண்ணும் பாத்து எல்லாமே சுபமா முடிஞ்சு கல்யாணமும் நடந்து முடிஞ்சது.

    பொதுவா வீட்ல நானும் அண்ணனும் அதிகமா பேசிக்க மாட்டோம். அண்ணா கொஞ்சம் அமைதியான ஆளு, அதிகம் பேச மாட்டாரு! ஆனா அண்ணி நல்லா பேசுற டைப். கல்யாணம் ஆன புதுசுல அண்ணி சாயங்காலம் வரைக்கும் க்ளினிக் ல இருப்பாங்க. அதனால ரெண்டு பேரும் அதிகமா பேசிக்கிட்டது கிடையாது.

    ஆனா கல்யாணம் முடிஞ்ச ஆறாவது மாசம் அண்ணி கர்ப்பம் அடஞ்சிட்டாங்க. அதுக்கு அப்புறம் க்ளினிக் போகுற டைம கொறச்சிட்டு வீட்ல அதிக நேரம் இருக்க ஆரம்பிச்சாங்க. அந்த சமயம் நானும் கடைசி செமெஸ்டெர் படிச்சிட்டு இருந்தேன். அதுனால எனக்கும் அதிக நேரம் வீட்ல இருக்குற மாதிரி ஆச்சு.

    என்ன பத்தி சொல்லணும்னா, அதிகமா வீட்லயே அடஞ்சி கெடக்குற கேரக்டர். நண்பர்கள் அவ்ளோவா இல்ல, அதிகம் படிப்பேன், இல்லனா வர்கவுட் பண்ணுவன், எப்பவாச்சு நண்பர்கள் கூட விளையாட போவேன். பதின்வயசுல எல்லாரயும் மாதிரி எனக்கும் செக்ஸ் ஆசை வந்துச்சு.

    நானும் நெறய விடியோஸ் பாத்து, கை அடிச்சுட்டு இருந்தவன் தான். ஆனா ஜிம்முக்கு போக ஆரம்பிச்சதும் கொஞ்ச கொஞ்சமா கை அடிக்குறத கம்மி பண்ணிக்கிட்டேன். அதுக்கு அப்புறம் காம ஆசை கம்மி ஆகிடுச்சு. கிட்டத்தட்ட காமம்னா என்னென்னே மறந்து போகுற அளவுக்கு படிப்புலயும் ஜிம்லயும் மூழ்கிட்டேன்.

    முன்னாடி நானும் அம்மாவும் மட்டும் தான் இருப்போம். அம்மா கொஞ்சம் நோயாளி. எப்பவும் பெட்லயே தான் இருப்பாங்க. அதனால நானும் என் ரூம்ல எதாச்சு படிச்சுட்டு இருப்பேன். ஆனா இப்ப அப்டி இல்ல. அண்ணியும் கூட இருக்குறதால நா கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்றதுக்கு கிச்சன்ல இருக்க ஆரம்பிச்சேன்.

    முன்னாடியே சொன்ன மாதிரி அண்ணி நல்லா பேசுற டைப். அவங்க கூட இருந்தா நேரம் போகுறதே தெரியாது! அவ்வளவு பேசுவோம். அண்ணி கொஞ்சம் அறிவாளியும் கூட. நிறைய விஷயங்கள் தெரிஞ்சி வெச்சிருப்பாங்க. அதுனால அவங்க கூட பேசுறதுக்கு டாபிக் நெறய கிடைக்கும்.

    ரிலாக்ஸேஷனுக்காக கிச்சனுக்கு போக ஆரம்பிச்ச நான் கடைசில அண்ணியோட பேச்சு பிடிச்சு போயி அடிக்கடி கிச்சனுக்கு போக ஆரம்பிச்சேன். அண்ணி கூட பேசுறது, சமையல்ல அவங்களுக்கு சின்னச்சின்ன ஹெல்ப் பண்றது, துணி காயப்போட போகும்போது தொணைக்கு போகுறது…….. இப்படி போக ஆரம்பிச்சது.

    அடுத்த ஒரு மாசத்துல அண்ணியோட உடம்பு கொஞ்சம் பலவீனமாக ஆரம்பிச்சது. அதோட விளைவா அவங்களால முன்ன மாதிரி வேலை செய்ய முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. சில சமயங்கள்ல அவங்களால ஒழுங்கா நிக்க கூட முடியாது.

    அண்ணி கொஞ்சம் பூசுனாமாதிரி உருவம் தான். கர்ப்பம் ஆனதும் இன்னும் குண்டு ஆகி, கால் வலி அதிகம் ஆகிருச்சு. அம்மாவும் நோயாளி, அதனால மூணு வேளையும் அண்ணியே சமைக்கணும். நானும் என்னால முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்ணுவேன்.

    நைட்டு தூங்க போகும்போது அண்ணிக்கு கை கால் பிடிச்சி விடுறது, நா படிச்ச புக்ஸ்ல இருந்து நல்ல நல்ல ஸ்டோரிஸ் சொல்றது, அவங்க வலிய மறக்குற மாதிரி எதாச்சு பேசிட்டு இருக்குறதுனு என்னால முடிஞ்ச வரைக்கும் அவங்க கூடவே ஆறுதலா இருந்தேன்.

    ஒன்பதாம் மாசம் வந்ததும் அண்ணிய அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. எனக்கும் அது பரீட்சை சமயம். முழு கவனத்தயும் எக்சாம்ஸ்ல காட்ட ஆரம்பிச்சன். அடுத்த கொஞ்ச நாட்கள்ல அண்ணிக்கு அழகான பொண்ணு பிறந்துச்சு.

    அன்னைக்கு எனக்கு எக்சாம். முடிச்சுட்டு நேரா போயி பாத்தன். அண்ணி நல்லா தூங்கிட்டு இருந்தாங்க. பக்கத்துல தொட்டில்ல கொழந்த இருந்துச்சு. நல்லா க்யூட்டா இருந்துச்சு. அண்ணி நல்லா தூங்கிட்டு இருந்ததால எதுவும் பேச முடியல. அடுத்த எக்சாம்க்கு படிக்கணும். அதுனால நா என் வீட்டுக்கு வந்துட்டன்.

    பாப்பா பொறந்ததும் அண்ணி நேரா அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க. எனக்கும் எக்சாம்ஸ் முடிஞ்சுடுச்சு. நா அந்த டைம்ல இன்னும் என் உடம்புல கான்சன்ட்ரேட் பண்ணி உடம்ப இன்னும் ஸ்ட்ராங்க் ஆக்கிட்டு இருந்தேன். ஆறு மாசம் கழிச்சு அண்ணி எங்க வீட்டுக்கு கொழந்தையோட வந்தாங்க. நா தான் போயி கதவ திறந்தேன்.
    நான்: என்ன அண்ணி? இன்னைக்கு தான் உங்க வீட்டுல அனுப்ப மனசு வந்துச்சா??

    அண்ணி: வந்ததும் ஆரம்பிச்சுட்டியா? நானே ஒரு ஆறு மாசம் தான் போயி எங்க அம்மா வீட்ல இருந்துட்டு வரேன். அது பொறுக்கலையா உனக்கு?

    நான்: ஹ்ம்ம் ஆறு மாசம் செம்ம கவனிப்பு போல? பாத்தாலே தெரியுதே?

    ஆமாம். இந்த் ஆறு மாசத்துல அண்ணி இன்னும் கொஞ்சம் குண்டாகி இருந்தாங்க. அவங்க முகத்துல இருந்து முழங்கால் வரைக்கும் உடம்பு நல்லா மெருகேரி இருந்தது. எங்க வீட்ல இருந்தத விடவும் அண்ணி இப்ப கொஞ்சம் தெம்பாவும் அழகாவும் தெரிஞ்சாங்க.

    அண்ணி: என்ன பா தெரியுது உனக்கு?

    நான்: அதான் நல்லா கொலுக் மொலுக்னு வந்திருக்கீங்களே?? இங்க இருக்கும்போது அப்படியே ஒடிஞ்சு விழுற மாதிரி இருப்பீங்க! இப்ப அப்டியே சும்மா ரெஸ்ட்லர் மாதிரி இருக்கீங்க.

    நா சொல்லிட்டு சிரிக்க, அண்ணி என்ன மொரச்சாங்க.

    அண்ணி: போடாங்கு……. நானே பலூன் மாதிரி ஊதி போயிட்டனேனு கவலைல இருக்கன். உனக்கு கேலியா? ஆனா பரவால்ல டா. வீட்ல இருந்தாலும் நீ உன் உடம்ப நல்லா மெயின்டேய்ன் பண்ரியே?!

    நான்: ஹ்ம்ம் வாங்க! ரெண்டு மாசம் தான். கிச்சன், சமையல், வேலன்னு திரும்ப எப்படி ஸ்லிம் ஆகப் போறீங்க பாருங்க!

    அண்ணி(கிண்டலாக): ஆள விடு சாமி! என்னால இனிமே அதெல்லாம் ஒரு துரும்பும் அசைக்க முடியாது. வேணும்னா நீ ஒருத்திய கட்டிட்டு வந்து போயி தள்ளு!

    நான்: வாய்ப்பில்ல ராஜா! ஐ ஹேவ் சம் அதர் ஐடியா.

    அண்ணி: அதென்ன டா ஐடியா? லிவிங் டுகெதர் அப்படி எதாச்சு யோசிச்சு இருக்கியா?
    நான்: ஆளே இல்ல, இதுல லிவிங் டுகெதர் தான் கொறச்சல் எனக்கு…..

    அண்ணி: உன்ன பாத்தா அப்படி தெரியலயே? நல்லா ஜிம் போயி வாட்ட சாட்டமா இருக்க, இன்னேரம் ரெண்டு மூணாச்சு உஷார் பண்ணிருப்பன்னுல நெனச்சேன்?

    நான்: அய்யோ அண்ணி…… அதெல்லாம் ஒன்னும் கெடயாது! என்ன பத்தி தான் தெரியும்ல உங்களுக்கு?
    அண்ணி: அது எட்டு மாசத்துக்கு முன்னாடி, இப்பவும் நீ அதே மாதிரி தான் இருக்கியா?
    நான்: எப்பவும் அதே மாதிரி தான்.

    அண்ணி: இப்ப இப்படி தான் பா சொல்லுவீங்க, அதுக்குன்னு ஒரு சமயம் வரும்ல, அப்ப பாக்க தான போறேன்?
    நான்: அடடா அண்ணி…… வேற எதாச்சு பேசலாமா?

    அண்ணி: சரி சரி கோவப்படாத….. அப்ப வேற என்ன ஐடியா??
    நான்: நா என் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து சின்னதா ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன்.
    அண்ணி: சூப்பர் டா……

    நான்: யா. சோ, அடுத்த மூணு நாலு வருஷத்துக்கு நா என் பிசினஸ்ல முன்னுக்கு வரத்த பத்தி மட்டும்தான் யோசிக்க போறேன். அதுவரைக்கும் காதல் கல்யாணம்லாம் வாய்ப்பே இல்ல. அதனால சீக்கிரமா போயி உங்க கிச்சன் ட்யூட்டில சார்ஜ் எடுத்துக்கோங்க.

    அண்ணி(பொய்க் கோபத்தோடு): ஹ்ம்ம் நீங்க நல்லா உங்க பிசினஸ் கனவுன்னு பேரு வாங்கிட்டு இருப்பீங்க, நாங்க இங்க உக்காந்து சாமான் கழுவிட்டு இருக்கணுமா?? நானும் எம்.பீ.பீ.எஸ். படிச்சிருக்கன். எனக்கும் கனவு இருக்கு! எண்ணி மூணு மாசம் தான். அதுக்கப்புறம் ஃபுல்லா க்ளினிக் தான்.

    நான்: அப்ப சோறு??

    அண்ணி: சமையலுக்கு ஒரு ஆளுப் போடுங்க. நீங்க தான் லட்சாதிபதி ஆகப் போறீங்களே? ஆமா இந்த ஆறு மாசம் எப்படி ஓட்டுன?

    நான்: அம்மா சமையல் தான். அப்புறம் உங்க கூட இருக்கும்போது நா கொஞ்சம் கத்துக்கிட்டது. எப்பவாச்சு நானும் சமைப்பேன். அம்மாவயும் செக் பண்ணனும். அடிக்கடி மூச்சு வாங்குதுனு சொல்றாங்க.

    அண்ணி: அய்யோ…… நா போய் இன்னும் அவங்கள பாக்கவே இல்ல. எங்க, நீ போக விட்டா தான?

    அண்ணி சொல்லிட்டு பாப்பாவ தூக்கிட்டு அம்மாவ பாக்க ரூமுக்குள்ள போனாங்க. இந்த 5 நிமிஷம் பேசும்போது தான் தெரிஞ்சது இவ்ளோ நாள் நா அண்ணிய எவ்வளவு மிஸ் பண்ணிருக்கேன்னு. நா அப்படியே யோசிச்சுட்டு நிக்க, கொழந்த அழுவுற சத்தம் கேட்டது. அண்ணி பாப்பாவ தூக்கிட்டு வெளிய வந்தாங்க.

    நான்: அய்யோ அண்ணி, கொழந்தைய என்ன பண்ணீங்க? இப்படி அழுவுது?
    அண்ணி: நா என்ன டா பண்ணேன்? இதுதான் என்ன வெச்சு செய்யுது. ஒரு அஞ்சு நிமிஷம் என்ன சும்மா விட மாட்டுது. மூஞ்சிய பாரு!!!

    அண்ணி கொஞ்சம் பிடிவாத குணம். முன்கோபியும் கூட. பாப்பாவ வெச்சுட்டு அவங்க பட்ட அவஸ்த பாக்க நல்லா சிரிப்பா இருந்துச்சு.

    அண்ணி: அய்யய்யோ…… கொஞ்ச நேரம் வாய மூடிட்டுதான் இரேன்….. அப்படியே வாய புடிச்சு அமுக்கிடுறேன் பாரு!!!!

    நான்: என்ன அண்ணி நீங்க, ஒரு குட்டி பாப்பாவ சமாளிக்க இவ்வளவு கஷ்டப்படுறீங்க?? நீங்க எப்படி பொறுமையா பேஷன்ட்ட ஹேண்டில் பண்ணுவீங்களோ??

    அண்ணி: அதெல்லாம் சொல்ற பேச்ச கேட்டா சமாளிக்கலாம். இது வாணரம்! கொஞ்சமாச்சு என் பேச்ச கேக்குதா??

    நான்: அட சும்மா என்ன நீங்க என் பொண்ண திட்டிட்டு……

    அண்ணி: என்னப்பா….. உன் பொண்ணா? இந்தா புடி! ஒரு பத்து நிமிஷம் இத நீ சமாளி. அதுக்கப்புறம் பேசு! நா போயி ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வரேன்.

    அண்ணி பாப்பாவ எங்கிட்ட குடுத்துட்டு அவங்க ரூமுக்கு போனாங்க. அண்ணி சொன்ன மாதிரி பாப்பா கொஞ்சம் வேகமா தான் இருந்தது. கொஞ்ச நேரம் கூட கீழயோ பெட்லயோ விட முடியல. இயல்ப விடவும் வேகமா சுறுசுறுப்பா இருந்துச்சு.

    அது கூட விளையாடும்போது எனக்கு நேரம் போனதே தெரியல. அண்ணியும் குளிச்சு ஃப்ரெஷ் ஆகிட்டு கிச்சனுக்குள்ள போனாங்க. சமையல் எல்லாம் முடிச்சுட்டு மொதல்ல அம்மாவுக்கு குடுத்துட்டு வந்தாங்க. அப்புறம் என்னோட ரூமுக்கு வந்தாங்க.

    அண்ணி: சித்தப்பாவும் பொண்ணும் நல்லா விளையாடி முடிச்சாச்சா? சாப்பிடலாமா?

    அண்ணி கூப்டதும் நா எழுந்து சாப்பிட போனேன். கிட்டத்தட்ட ஒன்பது மாசம் கழிச்சு அண்ணியோட சமையல சாப்பிடுறன். ப்பாஹ்ஹ்ஹ்ஹ்!!!! அப்படி ஒரு சுவை. அம்மாவோட சமையலும் நல்லாதான் இருக்கும். ஆனா அண்ணியோட கை பக்குவம், வேற லெவல்.

    அண்ணி: என்ன டா, டேஸ்ட் எல்லாம் ஓகே வா?

    நான்: உங்கள மிஸ் பண்ணேனானு தெரியல, ஆனா உங்க சமையல நா ரொம்ப மிஸ் பண்ணேன் அண்ணி! அவ்ளோ சூப்பரா இருக்கு. தயவு செஞ்சு சொல்றேன், எனக்கு கல்யாணம் ஆனாலும் சரி, சமையல் பொறுப்ப நீங்களே பாத்துக்கோங்க ப்ளீஸ்!!

    அண்ணி(சிரித்துக்கொண்டே): அப்ப கடைசி வரிக்கும் நீ என்ன சாதிக்க விடுறதா இல்ல…..

    ரெண்டு பேரும் பேசிட்டு இருக்க, உள்ள பாப்பா அழுவுர சத்தம் கேட்டுச்சு. அண்ணி எழுந்து பாப்பாவ கவனிக்க போயிட்டாங்க. அடுத்த கொஞ்ச நாட்கள் இப்படியே போனது. கொழந்த சத்தம் கேட்டதும் படுத்த படுக்கையாவே இருந்த அம்மா இப்ப எழுந்து வெளிய வர ஆரம்பிச்சாங்க.

    கொழந்தையோட எங்கம்மா ரொம்ப சந்தோஷமா சிரிச்சு விளையாடிட்டு இருக்குறத பாக்க ரொம்ப நிம்மதியா இருந்துச்சு. ஆனா அந்த நிம்மதி நிலைக்கல. கொஞ்ச நாள்ல அம்மாவுக்கு மூச்சு விட ஸ்ரமமா இருக்குன்னு ஹாஸ்பிடல்ல கொண்டு போயி சேர்த்தாங்க.

    அன்னைக்கு நா வீட்டுல இல்ல. விஷயம் தெரிஞ்சி ஹாஸ்பிடலுக்கு போயி பாக்குறதுக்குள்ள அம்மா தவறிட்டாங்கன்னு செய்தி வந்தது. அன்னையோட என் வாழ்க்கையே இருட்டுன மாதிரி ஆகிடுச்சு. என்னதான் நா என் அம்மாகூட அதிகம் பேசுனதில்லனாலும் அவங்க என்ன ரொம்ப அன்பா பாத்துக்கிட்டாங்க.

    பொதுவாவே எங்கம்மாக்கு என் மேல பாசம் அதிகம். அவங்களுக்கு உடல்நலம் எவ்வளவு மோசமா இருந்தாலும் எனக்காக ஒவ்வொரு நாளும் பாத்து பாத்து சமைச்சு, அவ்ளோ ஆசையா பரிமாறுவாங்க. வயசான சமயத்துல அவங்கள பாத்துக்குறதே கஷ்டம்னு இருக்கும்போது எனக்காக அவங்க அவ்ளோ மெனக்கெடுவாங்க. ஹ்ம்ம்!! அம்மாவாச்சே!!!

    அவங்களோட இறப்பு என்னால கொஞ்சமும் ஏத்துக்க முடியல. அவங்க இல்லன்னு நெனைக்கும்போதே எனக்கு அப்படியே ஒரு வெறுப்பு வந்துச்சு. யாருக்கிட்டையும் என்னால ஒழுங்கா பேச முடியல. அந்த ஏக்கம், வருத்தம் எல்லாமே ஒரு கட்டத்துல கோவமா ஆகிடுச்சு.

    யாரப்பாத்தாலும் ஒரு கோவம், அடக்க முடியாத அளவுக்கு! என் நண்பர்கள் கிட்ட கூட என்னால சரியா பேச முடியல. இந்த சமயத்துல என் அண்ணனுக்கு வெளியூர்ல வேலை செய்ய வேண்டிய சூழ்னிலை வருது. முதல்ல அண்ணா அண்ணி பாப்பா ரெண்டு பேரயும் கூட்டிட்டு போக நெனைச்சாரு.

    ஆனா அண்ணி போக மறுத்துடுறாங்க.
    அண்ணி: இந்த நெலமைல வருணை தனியா விட்டுட்டு வரத்து எனக்கு சரியா படலங்க. வேணும்னா அவனயும் கூட்டிட்டு போகலாம்.

    அண்ணன்: அவனுக்கு இங்க பிசினஸ் ப்ளான்லாம் இருக்கு, அங்க கூட்டிட்டு போயி என்ன பண்றது? நீ சொல்றதும் சரி தான். ப்ச்ச்!! ஒரு வருஷம் தான? நா தனியாவே இருந்துக்குறேன். நீ இங்கயே இரு. இப்பதான் பாப்பா வேற பொறந்திருக்கா.

    அண்ணி: சரிங்க. நா வேணும்னா வருணைக் கூட்டிட்டு என் அம்மா வீட்டுக்கு போயிடட்டா? அவனுக்கும் இடம் மாறுச்சுனா மனசுக்கு கொஞ்சம் நல்லாருக்கும்ல?

    அண்ணன்: ஹ்ம்ம் குட் ஐடியா! அப்படியே பண்ணிடு. சரி நா என்னோட திங்க்ஸ ரெடி பண்றேன்.
    அடுத்த ஒரு வாரத்துல அண்ணன் ஊருக்கு புறப்பட்டுட்டாரு. அண்ணியும் ஒரு வழியா என் மனச மாத்தி என்ன அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. புது இடம், புது மக்கள். ஆனாலும் மனசுல இருந்த கவலையும் வெறுப்பும் இன்னும் போகல.

    என்னெனமொ பண்ணி பாத்தாச்சு. எதுவுமே வேலைக்கு ஆகல. புக்ஸ் படிக்குறது, ஜிம்முக்கு போகுறது, ஃப்ரெண்ட்ஸ் கூட இருக்குறது, கொழந்த கூட விளையாடுரது, டிவி, சினிமா, சாங்க்ஸ், டான்ஸ்,…… என்ன பண்ணியும் மனசுல இருந்த வலி போகல.

    கிட்டத்தட்ட பைத்தியமே ஆகிட்டேன். அந்த வலி, அந்த வேதனைய விட்டு எப்படி வெளிய வரதுனு தெரியாம தவியா தவிச்சுட்டு இருந்தேன். அப்ப என்னோட பாழா போன நண்பர்கள் எனக்கொரு வழி சொன்னாங்க. அந்த வழி……

    போதை!!!

    நண்பர்களே!!!!! இந்த கதைய நா கொஞ்சம் புது விதமா அணுகி இருக்கன். அதாவது ஒரு துளி கூட காமம் இல்லாம இந்த தொடரோட ஆரம்ப பகுதிய நா எழுதி இருக்கேன். காரணம், கதைப்படி நாயகன் காமத்துல அதிகம் நாட்டமில்லாத ஒரு வாலிபன்.

    அவன் எப்படி காமத்துல மூழ்குறான் அப்படிங்குறது தான் இந்த கதை.
    அதனால இந்த பகுதிய படிச்சுட்டு என்னடா கதை இதுன்னு யாரும் சலிச்சுக்க வேணாம். வேற லெவல்ல காம விளையாட்டுகள் இந்த தொடர்ல இடம் பெறும். படிக்க படிக்க நீங்களே தெரிஞ்சுப்பீங்க.

    நிறை குறை எதுவா இருந்தாலும் கமெண்ட்ஸ்ல மறக்காம, மறைக்காம சொல்லுங்க. மேலும் உங்க கருத்துகளை என்னோட மெயில் ஐ.டி. [email protected] மற்றும் hangouts லயும் சொல்லலாம். தொடர்ந்து படிங்க. தொடர்ந்து ஆதரவு தாங்க. உங்கள் கருத்துகளை மதித்து வரவேற்கிறேன். நன்றி!
    தொடரும்!!!

    Leave a Comment