ஜெயம் கொண்டான் – 1 (Tamil Hot Stories - Jayamkondan 1)

Tamil Hot Stories – மீண்டும் ஒரு காதல் + காமக்கதையுடன் வந்திருக்கிறேன் நண்பர்களே.. இந்த முறை ஒரு இதமான, சுவையான காதல்.. பின்பு அவர்கள் காமத்தில் கலப்பதையும் மென்மையாக சொல்லியிருக்கிறேன்.. உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.. கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாகஉள்ளேன். – ஸ்க்ரூட்ரைவர்

ஜெயம்கொண்டான்

107

நான் எனது அறையில், என்னுடைய லேப்டாப்பில் ஒரு ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜெயாவும், விஷ்ணுவும் தயங்கி தயங்கி, என் அறைக்குள் நுழைந்தார்கள். ஜெயா என் மாமா பெண். காலேஜில் படிக்கிறாள். விஷ்ணு அவளுடைய தம்பி. ஸ்கூல் படிக்கிறான்.

நான் என் மாமா வீட்டில்தான் கடந்த நான்கு மாதங்களாக தங்கியிருக்கிறேன். ஜெயாவுக்கு என்னை பிடிக்காது. விஷ்ணுவுக்கு என்னை சுத்தமாக பிடிக்காது. இருவரும் சேர்ந்து வந்திருக்கிறார்கள் என்றால் எதோ பிரச்னையை சுமந்து கொண்டுதான் வந்திருப்பார்கள். என்னவென்று கேட்போம்.

“என்ன ஜெயா..?” நான் கேட்க, அவள் அமைதியாக தன் தம்பியை பார்த்தாள். ‘நீ சொல்லுடா..’ என்பது போல அந்த பார்வை இருந்தது. அவன் என்னை திரும்பி முறைத்தான்.

“என்னடா..?” இப்போது நான் விஷ்ணுவிடம் அதட்டலாக கேட்டேன்.

“இங்க பாருங்க அத்தான்.. நீங்க அடிக்கடி அக்கா ரூட்டுல க்ராஸ் பண்றீங்க.. இது நல்லதில்ல..!!”

என்று சினிமா வில்லன் போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். நான் ஓரக்கண்ணால் ஜெயாவை நோட்டம் விட்டுக்கொண்டே சொன்னேன்.

“நான்.. உன் அக்கா ரூட்டுல க்ராஸ் பண்றனா..? என்னடா சொல்ற…? எனக்கு ஒன்னும் புரியலை..”

108

“நல்லா யோசிச்சு பாருங்க.. புரியும்…”

நான் உடனே யோசிப்பது மாதிரி ஓரிரு வினாடிகள் நடித்தேன். பின்பு சொன்னேன்.

“ம்ம்ம்… நல்லா யோசிச்சுட்டேன்…!! ஒன்னும் புரியலை…!! அத்தானுக்கு.. ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சு..!!” நான் கேலியாக சொல்ல, இப்போது ஜெயா அமைதியை உடைத்துக் கொண்டு, படபடவென பொரிந்தாள்.

“நடிக்காதீங்க அத்தான்…!! என் பிரென்ட்சுக எல்லார்ட்டயும் என் பேரு ‘ஜெயமாலினி’னு சொல்லிருக்கீங்க.. எல்லோரும் என்னை எப்படி கேலி பண்றாளுக தெரியுமா..?” அவள் முகத்தை சுருக்கியபடி, மூக்கை ஒருமுறை விசும்பிக் கொண்டாள். எனக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் கேலியான குரலில் சொன்னேன்.

“ஜெயமாலினிதான உன் பேரு..? அதுக்கெதுக்கு கேலி பண்றாளுக…?”

“என் பேரு ஒன்னும் ஜெயமாலினி இல்லை.. வெறும் ஜெயாதான்…!!” அவள் சூடாக சொன்னாள்.

“அது ஸ்கூல் சேர்றப்போ கொடுத்த பேரு… நீ பொறந்ததும் மாமா உனக்கு ஆசையா வச்ச பேரு ஜெயமாலினிதான..?”

“ம்ஹூம்…!! அதெல்லாம் இல்லை.. என் பேரு ஜெயாதான்…” அவள் குழந்தை போல சிணுங்கினாள்.

“உனக்கு தெரியாது ஜெயா…!! அந்தக்காலத்துல மாமா.. கவர்ச்சிக்கன்னி ஜெயமாலினியோட டை ஹார்ட் ஃபேன்… அதனாலதான் நீ பொறந்ததும்…”

“ஐயோ..!! ப்ளீஸ் அத்தான்… நிறுத்துங்க…!! ம்ம்ம்ம்… சரி.. அப்படியே இருந்துட்டு போகட்டும்.. அதை எதுக்கு இப்போ போய் எல்லார்ட்டயும் சொன்னீங்க…?”

“நானா சொன்னேன்..? அவளுகதான் கேட்டாளுக.. உனக்கு காமடியா ஏதாவது பட்டப்பேர் இருக்கான்னு.. நான் அவ சொந்தப்பேரே செம காமடியா இருக்கும்னு சொன்னேன்…”

“போங்க அத்தான்..!! எல்லாரும் என்னை பயங்கரமா கிண்டல் அடிக்கிறாளுக.. அசிங்க அசிங்கமா பேசுறாளுக..”

“இதுல அசிங்கமா பேசுறதுக்கு என்ன இருக்கு…?” நான் புரியாத மாதிரி கேட்க,

“வெளையாடாதீங்க அத்தான்…!! எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு… நீங்க நல்லா ப்ளான் பண்ணி என்னை பழிவாங்கிட்டீங்க…”

“ஆமாம்.. இவங்களை பழி வாங்குறதுக்கு ப்ளான்லாம் பண்றாங்க.. சரி… ப்ளான் பண்ணிதான் சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ…?”

நான் கூலாக கேட்க, அவள் ஓரிரு வினாடிகள் என்னையே முறைத்தாள். பின் தன் தம்பியை திரும்பி பார்த்தாள். இப்போது அவன் என்னிடம் சொன்னான்.

“நீங்க அக்காகிட்ட சாரி கேக்கணும்…!!”

“என்னது..? சாரியா…? அதுவும் இவகிட்டயா…? போடா டேய்…!! உண்மையை சொன்னதுக்கெல்லாம் சாரி கேக்க முடியாதுன்னு உன் அக்காகிட்ட சொல்லு…”

“சொல்றம்ல..? நீங்க சாரி கேட்டுத்தான் ஆகணும்…” விஷ்ணுவின் முகம் இப்போது ரவுத்ரமானது.

“கேக்க முடியாது…!! என்னடா பண்ணுவீங்க ரெண்டு பேரும்…?” நானும் கோபமாகவே சொன்னேன்.

109

“வேணாம் அத்தான்.. எங்களை பகைச்சுக்காதீங்க…!! விளைவு விபரீதமா இருக்கும்…!!”

“இங்க பாரு…!! இந்த சினிமா டயலாக்லாம் உன்கூட விளையாடுமே குட்டிப்பொண்ணு ஷாலினி.. அதுகிட்ட போய் விடுங்க அக்காவும், தம்பியும்.. எங்கிட்ட வேணாம்… புரிஞ்சதா…? சாரிலாம் கேக்க முடியாது.. ஓடிப்போங்க ரெண்டு பேரும்…!! கெட் அவுட்..!! கெட் அவுட் ஆப் மை ரூம்…!!”

நான் கோபமாக சொல்ல, அக்காவும் தம்பியும் ஒரு இரண்டு வினாடிகள் என்னையே முறைத்து பார்த்தார்கள். அப்புறம் விஷ்ணு தன் அக்காவின் கையை பிடித்தபடி சொன்னான்.

“வாக்கா போலாம்…!! நமக்கும் டைம் வரும்.. அப்போ பாத்துக்குவோம்…!!”

அவர்கள் என் அறையை விட்டு வெளியேற, எனக்கு எழுந்த சிரிப்பை அடக்க மிகவும் கடினமாக இருந்தது. சிரித்துக்கொண்டே இங்க்லீஷ் படத்தை தொடர்ந்தேன்.

நான் அசோக். சாப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறேன். எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்ததுமே என் அம்மா நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள்.. தன் அண்ணனின் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று.. நானும் நான்கு மாதங்களுக்கு முன்னால், ஒரு நல்ல நாளில் பெங்களூர் வந்து இறங்கினேன்.

ஜெயாவை நான் சின்ன வயதில் பார்த்தது. இப்போது வளர்ந்து, தளதளவென தக்காளி மாதிரி இருப்பாள் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சினிமா நடிகை போல, விளம்பர மாடல் போல இருப்பாள். எனக்கு இவ்வளவு அழகாக ஒரு முறைப்பெண்ணா என்று, என் மீதே எனக்கு ஒரு கர்வம் கூட வந்தது. ஜெயாவின் அழகில் சொக்கிப் போனேன். பார்த்ததுமே எனக்கு ஜெயாவை பிடித்து போனது. அவள் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு வந்திருந்தது.

ஆனால் ஜெயாவுக்கு என்னை பார்த்ததுமே பிடிக்காமல் போனது. தாங்க முடியாத வெறுப்பு வந்திருந்தது. காரணம்.. வந்ததுமே அவளுடைய மாடிரூமை, நான் தங்கிக்கொள்ள ஒதுக்கிக் கொடுத்ததுதான். அங்கே ஆரம்பித்தது இந்த பனிப்போர். மனதுக்கு பிடிக்காத அத்தானை அடிக்கடி வெறுப்பேற்றி மகிழ்வாள். துணைக்கு தன் தம்பியையும் சேர்த்துக் கொண்டாள். அவள் மிக சீரியசாக என்னை சீண்ட, நான் ஜாலியாக அவளை சீண்டி விளையாடுவேன்.

ஜெயாவின் சீண்டல் என்றால் பெரிதாக ஒன்றும் இருக்காது. எல்லாமே சில்லறைத் தனமாகத்தான் இருக்கும். ஆபீஸ் கிளம்புகையில் என் ஷூவை எடுத்து மறைத்து வைப்பாள். மேட்ச் பார்க்க டிவி முன் அமரும்போது ரிமோட்டை எடுத்து ஒளித்து வைப்பாள். கேட்டால் ‘நான் பாக்கலையே.. எனக்கு தெரியாது..’ என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்வாள். வேண்டுமென்றே காபியை மேலே சிந்திவிட்டு, ‘சாரி… கவனிக்கலை..’ என்பாள். யாராவது பிரெண்டின் செல்போனை வாங்கி, அவர்களுக்கு தெரியாமல், என் நம்பருக்கு ‘லூசு.. குரங்கு.. எருமை மாடு..’ என்று எஸ்.எம்.எஸ். அனுப்புவாள். அந்த அளவில்தான் அவளுடைய கோபம் இருக்கும். Anni Koothi Nakkum Tamil Hot Stories

– தொடரும்

NEXT PART

1 thought on “ஜெயம் கொண்டான் – 1 <span class="desi-title">(Tamil Hot Stories - Jayamkondan 1)</span>”

Leave a Comment