அழகிய காதல் – 1 (Azhagiya Kathal)

This story is part of the அழகிய காதல் series

    வணக்கம் நண்பர்களே நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு கதை எழுதுகிறேன்.

    இதுவும் ஒரு கற்பனை கதை தான் இதை படித்து விட்டு உங்கள் கருத்துகளை தெரிவிங்கள்.

    வாருங்கள் கதைக்கு செல்லலாம்.

    நான் ஒரு சிறிய நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு இருக்கிறேன். நான் எப்போதும் சீக்கிரமே ஆபீஸ் சென்று விடுவேன். எனக்கு வித விதமாக டிரஸ் அணிய தெரியாது. பாண்ட் மற்றும் ஷர்ட் மேட்சிங் கலர் அணிய தெரியாது. எந்த என்னிடம் உள்ளதோ அதையே நான் அணிந்து கொண்டு ஆபீஸ் செல்வேன்.

    நான் கொஞ்சம் கருப்பு மற்றும் ஒல்லியாக இருப்பேன். தினமும் ஆபீஸ் கு பஸ் ல் தான் செல்வேன். என்னிடம் பைக் கார் என்று எதுவும் கிடையாது. நான் சென்னை தனியாக ரூம் எடுத்து தங்கி உள்ளேன். அது ஒரு சின்ன ரூம் தான்.

    ஒரு நாள் காலை நான் எப்போதும் செல்லும் பேருந்தை விட்டு விட்டேன். அதனால் அடுத்து வந்த பேருந்தில் சென்றேன். பஸ் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. நான் நின்று கொண்டு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே பயணித்தேன்.

    திடிரென்று என் தோளில் ஒரு கை தட்டி கண்டக்டர் இடம் டிக்கெட் வாங்கி தருமாறு என்னிடம் பணத்தை நீட்டினார்கள். நான் பணத்தை வாங்கி கண்டக்டரிடம் கொடுத்து டிக்கெட் வாங்கினேன்.

    வாங்கிய டிக்கெட்டை திரும்பி கொடுக்கும் போது தான் பார்த்தேன். தேவதை போன்று முகம் கொண்ட ஒரு பெண் என் அருகில் நின்று கொண்டு இருந்தாள் . அவள் தான் என்னிடம் டிக்கெட் வாங்கி தருமாறு கேட்டு இருக்கிறாள்.

    நான் அந்த டிக்கெட் அந்த பெண்ணிடம் கொடுத்தேன். அவள் தேங்க்ஸ் என்று சொன்னாள். நான் பரவாயில்லை என்றேன். அந்த நிமிடமே காதலில் விழுந்து விட்டேன். நான் பஸ் கம்பியில் சாய்ந்து கொண்டு அவள் அழகிய முகத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன்.

    கொஞ்ச நேரத்தில் அவள் ஸ்டாப் வந்து விட்டது. அவள் இறங்கி சென்று விட்டாள் . அடுத்த ஸ்டாப் நான் இறங்கி என் ஆபீஸ் சென்று விட்டேன். அன்று நாள் முழுவதும் அவள் நினைவாகவே இருந்தது. எங்கு பார்த்தாலும் அவள் முகம் தான் தெரிந்தது.

    எனக்கு ஒரு பழக்கம் உள்ளது. என்னிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்வேன். முதியோருக்கு உதவாது இவ்வாறு செய்து வருவேன்.

    அன்று வேலை முடிந்து வீட்டிற்கு சென்றேன். அவளை நினைத்து கொண்டே சமைத்து கொண்டு இருந்தேன். ஆனால் உப்பு அதிகமாக போட்டு விட்டேன். அதை வாயில் வைக்கும் போது தான் தெரிந்தது. வாயில கூட வைக்க முடியவில்லை. அதன் பின்னர் வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் சாப்பிட்டு விட்டு உறங்கி விட்டேன்.

    அவளை நினைத்து கொண்டு படுத்து இருந்தேன். ஆனால் எனக்கு உறக்கம் வரவே இல்லை. அவள் முகம் மட்டுமே வந்து கொண்டு இருந்தது. எப்போது இந்த இரவு போகும் எப்போது விடியும் என்று காத்து கொண்டு இருந்தேன்.

    காத்திருப்பது என்பது கொடுமை. ஆனால் அவளுக்கு காத்திருப்பது என்பது ஒவ்வொரு நிமிடமும் எனக்கு இனிமை தான். எப்படியோ காலை விடிந்து விட்டது. வேகமா கெளம்பி கொண்டு இருந்தேன். குளித்து விட்டு வந்து சாப்பிட சென்றேன். அப்போது தான் எனக்கு நியாபக வந்தது. நான் இன்னும் பல் விலக்க வில்லை என்று . பேஸ்ட் மற்றும் ப்ருஷ் எடுத்து பாத்ரூம் சென்று பல் விலக்கினேன்.

    பஸ் ஸ்டாப் சென்றேன். நேற்று சென்ற அந்த பஸ் கு காத்து கொண்டு இருந்தேன். இன்றும் அவள் அந்த பஸ் ல் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். பஸ் வந்தது அதில் நான் ஏறி என் தேவதை தேடினேன். என் பிரார்த்தனை வீண் போகவில்லை. என் தேவதை அதில் வந்து இருந்தாள் .

    அவளை தினமும் பஸ் ல சைட் அடித்து கொண்டு இருப்பேன். அவளிடம் என் காதலை சொல்ல பயமாக இருந்தது. எல்லோரோட நண்பர்களும் ஒன்று மட்டும் செய்வார்கள். நான் இருக்கேன் மச்சான் நீ உன் காதலை தைரியமாக சொல்லுடா என்று சொல்வார்கள். இதே தான் என் நண்பர்களும் சொன்னார்கள்.

    அவங்க எளிதில் சொல்லி விடுவார்கள். ஆனால் காதல் பண்ணும் எனக்கு தான் தெரியும் அது எவ்வளவு கடினம் என்று. என்னுடைய ஒரு தலை காதல். வேலை நாட்களில் மட்டும் என் தேவதை பஸ் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். சனி மற்றும் ஞாயிறு அவளை பார்க்க முடியாது. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.

    சனி கிழமை அன்று நண்பர்களுடன் படத்திற்கு சென்றேன். அங்கு வந்தவர்கள் எல்லாம் காதல் ஜோடியாக இருந்தார்கள். எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. இருந்தாலும் படம் பார்த்து விட்டு பீச் சென்றோம்.

    பீச் முழுவதும் ஜோடியாக தான் இருந்தார்கள். எனக்கு கொஞ்சம் கடுப்பாக தான் இருந்தது. எங்கு சென்றாலும் எல்லோரும் ஜோடியாக இருக்கிறார்கள் என்று. அங்கு ஒருவன் அவன் காதலிக்கும் பெண்ணுக்கு வைரம் மோதிரம் ஒன்று வாங்கி வந்து கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தினான். அவளும் அவனின் காதலை அன்போடு ஏற்று கொண்டால்.

    அதை பார்த்த என் நண்பன் ஒருவன் என்னிடம் டேய் மச்சான் நீயும் இந்த மாதிரி ஒரு மோதிரம் வாங்கிட்டு போய் கொடுத்து உன் காதலை சொல்லுடா என்று சொன்னான்.

    அதற்க்கு நான் ஏன் டா ஒரு புது ஷர்ட் வாங்கவே காசு இல்லை என்கிட்ட இதுல மோதிரம் எல்லாம் எப்படி டா என்னால வாங்க முடியும் என்று கேட்டேன். எப்பவும் நம்மால எது முடியுமோ அது மட்டும் தான் செய்யணும் என்று சொன்னேன்.

    அதன் பின்னர் என் தேவதை எங்கு பணி புரிகிறாள் என்று கண்டு பிடித்தேன். அவள் ஒரு மிக பெரிய நிறுவனத்தில் பணி புரிகிறாள். நானும் இந்த பெண் நமக்கு செட் ஆகாது என்று விட்டேன். நம்ம சும்மா இருந்தாலும் கூட இருக்கிறவங்க சும்மா விட மாட்டாங்கள. அது மாதிரி தான் என் நண்பர்கள் என் உசுப்பேற்றி விட்டார்கள். அந்த பெண் உனக்கு கரெக்ட் ஆஹ் இருக்கும் நீ ட்ரை பண்ணு டா என்றார்கள். நானும் சரி என்று சொன்னே.

    ஒரு மாதம் அவளை தூரத்தில் இருந்து சைட் அடிப்பது. அவள் ஆபீஸ் வெளியே அவள் வரும் போது ஒரு கடையில் மறைந்து நின்று என் தேவதை முகத்தை பார்த்து ரசிப்பேன். இப்படியே சென்று கொண்டு இருந்தது.

    ஒரு நாள் மனதில் தைரியம் வர வழைத்து கொண்டு என் காதலை அவளிடம் சொல்லலாம் என்று முடிவு எடுத்தேன். அதற்க்கு துணையாக என் நண்பர்களையும் அழைத்து கொண்டு அந்த பஸ் ல் சென்றேன்.

    ஒரு ரோஜா பூ வாங்கி கொண்டு சென்றேன். பஸ் ல் அவள் அருகில் சென்று நின்றேன். என் கால் மற்றும் கை எல்லாம் நடுங்கியது. என் நண்பர்கள் பின்னே நின்று கொண்டு என் முதுகில் தட்டி போய் சொல்லுடா என்றார்கள்.

    நான் அவள் அருகே சென்று நின்று ஹலோ என்றேன். என் வாயில் இருந்து ஓசை வரவே இல்லை. வெறும் காற்று தான் வந்தது. என் முகம் எல்லாம் வியர்க்க ஆரம்பித்து விட்டது. என் முகம் முழுவதும் வியர்வை துளிகள்.

    என் உடல் தலை முதல் பாதம் வரை நடுங்கியது. என் இதய துடிப்பு அதிகரித்து கொண்டே சென்றது. பின்னாடி இருந்து என் நண்பர்கள் சொல்லு சொல்லு என்று என் முதுகில் தட்டினார்கள். நான் பின்னாடி திரும்பி இருங்கட என்று சொன்னேன்.

    ஹலோ என்று என் தேவதை அழைத்தேன். அவள் திரும்பி என்னை பார்த்து என்ன என்று கண்ணாலே கேட்டாள் . அவள் கண்ணை பார்த்ததும் எனக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. உறைந்து போய் நின்றேன். பின்னாடி இருந்து என் நண்பர்கள் அடித்த பின்னர் தான் எனக்கு சுய நினைவு வந்தது.

    அவள் என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டாள். நான் ஐ ஐ என்று இழுத்தேன். அவள் என்னது என்று கொஞ்சம் அவள் முகம் மாறியது. நான் ஐ லவ் யூ என்று சட்டுனு சொல்லி ரோஜா பூ அவளிடம் நீட்டினேன்.

    அவள் ஓங்கி என் கன்னத்தில் அறைந்தால். என் காதுக்குள் சங்கு சத்தம் மட்டும் தான் கேட்டது. அவள் வாய் அசைந்து கொண்டு இருந்தது. அவள் ஏதோ என்னை திட்டுகிறாள் மட்டும் எனக்கு தெரிந்தது.

    பின்னாடி திரும்பி பார்த்தால் என் நண்பர்கள் ஒருவரும் இல்லை. எல்லோரும் இறங்கி ஓடி விட்டனர். இது தான் நண்பர்கள். நம்மளை நன்றாக உசுபேத்தி விடுவார்கள். அடி வாங்கும் போது ஓடி விடுவார்கள்.

    அப்புறம் என்ன நடக்கும் பஸ் ல உள்ள எல்லோரும் சேர்ந்து என்னை திட்டி என்னை பஸ் ல் இருந்து இறக்கி விட்டனர். நான் அங்கு இருந்து நடந்து என் ஆபீஸ் சென்றேன். இனிமேல் நமக்கு இந்த காதலும் வேண்டாம் இந்த பஸ் ல போகவும் வேண்டாம் என்று முடிவு எடுத்தேன்.

    நான் தான் ஆரம்பித்தேலேயே சொன்னேன் என் நண்பர்களிடம் இதெல்லாம் செட் ஆகாது என்று. இந்த நிமிடம் தான் எனக்கு புரிந்தது எனக்கு எதிரி வெளியே இல்லை. கூடவே தான் இருக்கிறார்கள் என்று.

    அதன் பின்னர் என் வேலைமட்டும் கவனத்தை செலுத்தி அதை பார்த்து கொண்டு இருந்தேன். அவள் எனக்கு ஏற்படுத்திய அவமானம் என் நெஞ்சில் இருந்தாலும் எனக்கு துளி அளவு கூட அவள் மீது கோவம் இல்லை. எங்கிருந்தாலும் அவள் நல்லபடியா இருக்கட்டும் என்று மட்டும் தான் நினைத்தேன்.

    என் வேலை பார்த்து ஒரு மாதம் அப்படியே சென்றது. ஒரு நாள் வேலை முடித்து விட்டு என் ஆபீஸ் ல் இருந்து பஸ் ஸ்டாப் நடந்து சென்று கொண்டு இருந்தேன். அப்போது பஸ் ஸ்டாப் அருகே சென்றதும் பஸ் ஸ்டாப் என் தேவதை மற்றும் அவள் தோழி உடன் நின்று கொண்டு இருந்தாள்.

    நான் என் மனதில் நினைத்து கொண்டேன். அன்று என்னை அடித்தது போதவில்லை போல இன்று அவள் தோழி அழைத்து கொண்டு வந்து என்னை அடிக்க நிக்கிறாள் என்று. நான் பயந்து பயந்து பஸ் ஸ்டாப் சென்றேன். பஸ் ஸ்டாப் ஓரத்தில் சென்று நின்றேன்.

    நான் அங்கு வந்ததை என் தேவதை பார்த்து விட்டால். அதை அவள் தோழியிடம் இவன் தான் அது என்று என்னை நோக்கி கை நீட்டி காண்பித்தாள். இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டு என் அருகில் வந்தார்கள்.

    என் மனதில் பயம் அதிகரித்தது. இன்று என்னை என்ன செய்ய போகிறார்களோ என்று நினைத்து கொண்டேன். சுற்றி பார்த்தால் பஸ் ஸ்டாப் நெறய பேர் நின்று கொண்டு இருந்தார்கள். அது எனக்கு மேலும் பயத்தை கொடுத்தது. இத்தனை பேரு சேர்ந்து என்னை அடித்தால் என்னால் தாங்க முடியாது.

    ஒரு பொண்ணுக்கு ஏதவது ஒன்று என்றால் எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள். என் கை மற்றும் கால் எல்லாம் நடுங்கியது. அப்படியே மெதுவா அடி எடுத்து வைத்தேன். அங்கு இருந்து நகர முற்பட்டேன்.

    இருவரும் என் முன்னாள் வந்து நின்று என்னை வழி மறித்தனர். என்னால் அங்கு இருந்து தப்பி கூட ஓட முடியவில்லை. இருவரும் என்னை முறைத்து கொண்டு இருந்தார்கள். இவர்கள் என்னை வழி மறித்ததை பஸ் ஸ்டாப் ல் இருந்தவர்கள் பார்த்து விட்டனர். எல்லோரும் என்னையே பார்த்து கொண்டு இருந்தார்கள்.

    எனக்கு தலை முதல் கால் வரை வியர்த்து நீரா கொட்டியது. என் தேவதை மற்றும் அவள் தோழி என்னை முறைத்து கொண்டே இருந்தார்கள். நான் என் மனதில் இன்று அடி உறுதி என்று நினைத்து கொண்டு தலை குனிந்து நின்றேன். அப்போது என் தேவதை பேச ஆரம்பித்தாள்.

    அவள் என்னிடம் என்ன பேசினால் என்று அடுத்த பாகத்தில் சொல்கிறேன். அது வரை காத்திருங்கள்.

    தொடரும்.

    இது ஒரு கற்பனை கதை.

    நீங்களும் தரும் ஆதரவை பொறுத்து தான் என் கதை தொடர போகிறேன்.

    என்னுடன் பேச விரும்பும் பெண்கள் மற்றும் ஆண்ட்டி என் மெயில் ஐ டி [email protected] அல்லது என் ஹாங்கவுட் [email protected] தொடர்பு கொள்ளவும். என்றும் உங்கள் நட்பிற்கு காத்திருப்பேன். நம்பி வாருங்கள் உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். 100% பாதுகாப்பாக இருக்கும். உங்கள் நட்புக்கு என்று காத்திருக்கிறேன்.

    இப்படிக்கு
    உங்கள் நண்பன்
    unluckyboy

    Leave a Comment