இதயப் பூவும் இளமை வண்டும் – 75 (idhayapoovum ilamaivandum 75)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil kamakathaikal free download சசியின் மனம் கலங்கித் தவித்தது. இப்போது அண்ணாச்சியம்மா கர்ப்பம் எனத் தெரிய வந்தால்.. அதற்கு சசிதான் காரணம் என்பது ராமுவுக்குத் தெரிந்துவிடும்.!
    அப்படித் தெரிந்தால் ராமு அதை சாதாரணமாக விடமாட்டான்.
    சசியின் பெயரை நாறடித்து விடுவான். அவனது மானம் மரியாதை எல்லாம் தொலைந்து விடும்..!
    இது எங்கு போய் முடியுமோ..?

    Story : Mukilan

    அவன் மனநிலையை உணராத அண்ணாச்சியம்மா.. அவன் புலம்பியதை கவனித்துக் கேட்டாள்.

    சசி சொல்ல முடியாமல் திணறினான்.

    ”என்னடா.. ஏதாவது பிரச்சினையா..?” என மீண்டும் கேட்டாள்.

    மெல்ல. ”ம்..ம்ம்..!!” என்றான்.

    ”என்ன பிரச்சினை.?” அவள் குரல் மிகவும் தணிந்தது.

    தயக்கத்துடன் ”நம்ம மேட்டர்.. ராமுவுக்கு தெரியும்..!!” என்றான்.

    அவள் முகம் வெளிறியது.
    ”என்னடா சொல்ற..?”

    ”ஸாரி…”

    ”எ.. எப்படி..?”

    ”என்னை மன்னிச்சிருங்க.. ஒரு தடவ.. நான்தான்.. கொஞ்சம் ஒளறிட்டேன்..”

    அவள் முகம் இருளடைந்தது.
    ”ச்ச.. என்ன பையண்டா நீ..? சரி உள்ள வா.. பேசலாம்..” என்றாள்.

    ”இல்ல…. நா போறேன்.. நாளைக்கு பேசிக்கலாம்..”

    ”என்னால பொறுக்க முடியாது.. மரியாதையா உள்ள வா.. என்ன நடந்துச்சுனு சொல்லு..” என்று கடுப்புடன் சொன்னாள்.

    அவளைப் பார்க்கத் திறானியில்லாமல் தயங்கி நின்றான் சசி.
    ”நாளைக்கு பேசிக்கலாமே..?”

    ”ஏய் வாடா.. என்னால நிம்மதியா இருக்க முடியாது. யாராவது பாக்றாங்களா.?”

    சுற்றிலும் பார்த்தான்.
    ”இல்ல..”

    ”வா..”

    ”அண்ணாச்சி..?”

    ”அவரு எந்திரிக்க மாட்டாரு.. நீ வா..” என்றவள் கதவ தாள்பாளைத் திறந்து விட்டாள்.

    மறுபடி ஒருமுறை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு லேசான தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.
    அவனுக்குப் பின்னால் கதவைச் சாத்திய அண்ணாச்சியம்மா.. அவனைத் தன் பக்கம் திருப்பினாள்.
    ‘பளீ ‘ரென அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டாள்.

    ”அவன்கிட்டல்லாம் எதுக்குடா சொன்ன நீ.? அவனையெல்லாம் நம்ப முடியாதுடா.. சரியான லுச்சா பையன் அவன்..”எனத் திட்டினாள்.

    கன்னத்தைத் தடவின சசி..
    ”ஸாரி..” என முணுமுணுத்தான்.

    மீண்டும் ”என்ன பையன்டா நீ..?” என்றவள் சட்டென அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
    தாபத்தோடு அவனைக் கட்டிப்பிடித்து.. அவன் கன்னத்திலும்.. உதட்டிலுமாக முத்தங்கள் கொடுத்தாள்.

    சில நொடிகளுக்குப் பிறகு ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவனைவிட்டு விலகினாள்.
    ”இரு..” என்றுவிட்டு பெட்ரூம் கதவைச் சாத்திவிட்டு வந்தாள்.

    அவனை அவர்களது அறைக்குள் கூட்டிப் போனாள்.
    அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னாள்.
    ”ஸாரிடா.. கோபத்துல அடிச்சிட்டேன்..”

    ”ம்..ம்ம்..! பரவால்ல..” முணுமுணுத்தான்.

    அவன் கையைப் பிடித்து.. அவளது வயிற்றில் வைத்துக் கொண்டாள்.
    ”இப்ப நா எவ்ளோ சந்தோசமா இருக்கேன் பையா.. எல்லாம் உன் கருணைதான்..”

    அவளிடம் எப்படிச் சொலாவது எனத் திணறியவாறிருந்தான் சசி. நடந்த விபரீதம் புரியாமல் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.
    விசயம் வெளியாகிவிட்டதை அறிந்தால்.. என்னாவாளோ..?
    கடவுளே..?

    அவளே சொன்னாள்.
    ”என்னால இன்னுமே நம்ப முடியல பையா.. நா அம்மா ஆகப்போறேன்றத.. ஊருக்கு போன நாலஞ்சு நாள்.. வாந்தி மயக்கம்.. பயந்துட்டுதான் நான் டாக்டர்கிட்ட போனேன். அப்பதான் எனக்கே தெரிஞ்சுது.. நான் தலைக்கு தண்ணி ஊத்தி மூனு மாசம் ஆகுதுனு.. அவ்ளோ நாள் நானும் கவனிக்கவே இல்ல பாரேன்.! அப்ப நா பட்ட சந்தோசம் இருக்கே..அப்பப்பா.. அத நா வார்த்தையால சொல்லவே முடியாது பையா..!!” மீண்டும் மீண்டும் அவனைக் கொஞ்சினாள். நிறைய முத்தங்கள் கொடுத்தாள்.

    கணத்துப் போன அவன் மனசு.. அவளுடன் பாலுறவில் ஈடுபட.. முழுமையாக ஒத்துழைக்க மறுத்தது.
    இருப்பினும் அதைக்காட்டிக் கொள்ளாமல்.. அவளுடன் உடலுறவு கொள்ள முயன்றான்.

    அவளும் ஆரம்ப நிலை கர்ப்பம் என்பதால்.. உடம்பை அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
    ஒருமுறை உடலுறவு கொண்டதோடு நிறுத்திக் கொண்டான்.

    ”சரி.. நா போறேன்..” என்றான்.

    அண்ணாச்சியம்மா மெல்ல..”ம்..ம்ம்.. அவன்கிட்ட சொல்லிரு தப்பித் தவறிக்கூட வெளில சொல்லிர வேண்டாம்னு..” என்றாள்.

    ”ம்..!!” தலையசைத்தான்.
    இனி வெளியில் சொல்ல என்ன இருக்கிறது..?

    ”நீ உன் பிரெண்டுகிட்ட சொன்னது தப்பில்ல.. ஆனா அவன் ரொம்ப நம்பிக்கையானவனா இருக்கனும்..! அது ரொம்ப முக்கியம்..!” என்றாள்.

    ”சரி.. நல்லா தூங்குங்க.. நா போறேன்.. பை.. குட்நைட்..”

    ”குட்நைட் பையா..” என்றாள்.

    சசி வெளியேறினான். அவன் குழப்ப சிந்தனைகளுடன் நடந்து.. மாடிப்படிகளில் ஏற..
    அந்த நேரத்தில் மாடிவெராண்டாவில் நின்றிருந்தாள் இருதயாவின் அம்மா.
    அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டான் சசி.
    அவன் அண்ணாச்சியம்மா வீட்டில் இருந்து வருவதைப் பார்த்திருப்பாளோ..?

    ”ஏன்ப்பா.. இவ்ளோ லேட்டா வர..?” என்று அவளே கேட்டாள்.

    ”ஆமாங்க.. கொஞ்சம் வேலை.. நீங்க என்ன இந்த நேரத்துல.. வெளிய வந்து நிக்கறீங்க..?” எனத் தடுமாறியவாறு கேட்டான்.

    ”அவங்கப்பா வந்துட்டிருக்காருப்பா..அதான்..” என்று சிரித்தாள்.

    ”ஓ.. வராரா..?”

    ”ம்..ம்ம்.! வீட்டுக்குள்ளதான் டிவி பாத்துட்டிருந்தேன்.. தூக்கம் தூக்கமா வருது.. அதான் வெளிய வந்தேன்..”

    ”சாப்பிட்டிங்களா.?”

    ”இல்லப்பா.. அவரு வந்தப்றம் சாப்பிட்டுக்கலாம்னு..’

    ”இருதயாவும்.. தம்பியும்..?”

    ”அவங்க தூங்கிட்டாங்க..” என்றாள்.

    சசி விடைபெற்று.. வீட்டுக்குள் போனபின்பும்.. கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

    சாப்பிட்டு படுத்தபின்பும் சசிக்கு தூக்கம் வரமறுத்தது.
    அண்ணாச்சியம்மாவிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்தது தவறு எனத் தோண்றியது.
    இந்தச் சூழ்நிலையில் அவள் கர்ப்பம் வேறு.
    இது வெளியில் தெரிந்தால்.. அவளது பெயர்.. மானம்.. மரியாதை எல்லாம் போய்விடும்… அதனால் உண்மையைச் சொல்லிவிடுவதே நல்லது எனத் தீர்மானித்தான்..!!

    மிகவும் தாமதமாகத் தூங்கி.. காலையில் ஏழு மணிக்கு எழுந்த சசி.. காபி குடித்த பின்.. எதுவும் யோசிக்காமல்.. நேராக அண்ணாச்சி வீட்டுக்குத்தான் போனான்.

    அண்ணாச்சியம்மா டிபன் செய்து கொண்டிருந்தாள்.
    ”ஹேய்.. வா பையா.. என்ன இவ்ளோ தைரியமா.. காலைலயே வந்துருக்க..?” என லேசான வியப்புடன் கேட்டாள்.

    அவள் முகம் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது சசிக்கு.
    ”அண்ணாச்சி..?” என மெதுவாகக் கேட்டான்

    ”கடைல இருப்பாரு..” என்றாள்.

    ”கடை தெறந்தாச்சா..?”

    ”ம்..ம்ம்..! உக்காரு..! காபி குடிக்கறியா.?”

    ”இல்ல.. வேண்டாம்..! குடிச்சிட்டேன்..!” சுவற்றில் சாய்ந்து நின்றான்.

    அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
    ”அல்வா சாப்பிட்டியா.?”

    ”இன்னும் இல்ல..”

    ”தரட்டுமா..?”

    ”இல்ல.. வேண்டாம்..”

    ”சரி.. என்ன விஷயம்..?” பக்கத்தில் வந்தாள் ”ராத்திரி திருப்திபடலையா..?”

    ”சே..சே..நா அதுக்காக வரல..”

    ”சரி.. உக்காரு..”அவனை உரசியவாறு நெருங்கி நின்றாள்.

    ”பரவால்ல..”

    ” என்னமாவது சொல்லனுமா..?” அவன் முகத்தை ஆவலோடு பார்த்தாள்.

    ”ம்..ம்ம்..!!”

    ”சொல்லு..! ராத்திரியே கேக்கலாம்னு நெனச்சேன்.. மூடு மாறினதுல.. பேச முடியல. ஏதோ பிரச்சினைனு சொன்னியே.. என்ன பிரச்சினை..?”

    அவள் முகத்தை ஒரு நொடி பார்த்துவிட்டு தலைகுணிந்தவாறு மெதுவாக முணுமுணுத்தான்.
    ”நம்ம மேட்டர் ராமுக்கு தெரியும்..”

    ”அதான் ராத்திரியே சொல்லிட்டியே..”

    ”ஆனா.. அவன் இப்ப.. எனக்கு நண்பன் இல்ல….”

    ”ஆ.. அப்றம்..?” அவள் முகம் குழப்பமடைந்தது.

    ”எதிரி..”என்றான் ”நம்பிக்கை துரோகி..”

    சட்டென அவன் கையை இருக்கிப் பிடித்தாள்.
    ”என்ன சொல்ற சசி..?”

    அவன் தொண்டை கமறியது.
    ”என் வாழ்க்கைலயே நான் பண்ண ஒரு பெரிய முட்டாள்தனம்.. அவன என் நண்பன்னு நம்பினதுதான்..”

    பயம் கவ்விய முகத்துடன்..அவனைப் பார்த்தாள்.
    ”என்னடா ஆச்சு..?”

    ”என் வாழ்க்கைல நான் சந்திச்ச முதல் எதிரியும் அவன்தான்.. முதல் துரோகியும் அவன்தான்.! நயவஞ்சகன்..” என்றான்.

    ”என்ன நடந்துச்சுனு சொல்லுடா.. எனக்கு பதறுது..” குரல் நடுங்கக் கேட்டாள்.

    அவள் முகத்தைக் கிட்டத்தில் பார்த்த சசியின் கண்கள் அவனையும் மீறிக் கலங்கியது.
    ”என்னை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ்.. நம்ம இது.. வெளிய தெரிஞ்சுருச்சு..”

    தூக்கிவாரிப் போட.. அதிர்ந்து போய் நின்றாள் அண்ணாச்சியம்மா….!!!!

    -வளரும்….!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் – 75

    Leave a Comment