இதயப் பூவும் இளமை வண்டும் – 101 (Idhayapoovum Ilamaivandum 101)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamilkamaveri july அசதியில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த சசியை அவனது மொபைல் பாடி அழைத்து.. எழ வைத்தது.!
    மிகவும் சிரமப்பட்டு.. கண்களைத் திறந்து.. மொபைலை எடுத்துப் பார்த்தான்.
    ‘குமுதா..காலிங்.’

    Story : Mukilan

    மனதுக்குள் அவளைத் திட்டிக்கொண்டே கால் பிக்கப் செய்து காதில் வைத்தான்.
    ”அலோ..”

    ”என்னடா இவ்ளோ நேரம் ரிங்காகுது தூங்கிட்டிருக்கியா..?”

    ”ம்..ம்ம்..! ஏன்..?”

    ”தெரியும்.. நீ இன்னும் எந்திரிச்சுருக்க மாட்டேனு.. உன்ன எழுப்பி விடலாம்னுதான் போன் பண்ணேன்..”

    படுத்துக்கொண்டே வாட்சைப் பார்த்தான்.
    எட்டு மணிகூட ஆகவில்லை.
    ”சரி.. பாடி எடுத்துட்டாங்களா ?” என்று கேட்டான்.

    ”பதினொரு மணிக்குதான் டைம் குடுத்துருக்காங்க.. மின் மயாணத்துல கொண்டு போய் எரிக்காறாங்க..”

    ”ம்..ம்ம்.. அப்ப.. எப்ப வருவீங்க..?”

    ”உங்க மச்சான் எப்படினு தெரியல.. அம்மா.. அப்பா.. நாங்கள்ளாம் சாயந்திரத்துக்குள்ள வந்துருவோம்..! சரி நீ மறுபடி தூங்கிடாத.. எந்திரிச்சுரு..!”

    ”ம்.. ம்ம்..எந்திரிச்சு..?”

    ”குளிச்சு.. பொறப்பட்டு போய் கடையை தெறடா..”

    ”ம்..ம்ம்.. அது எனக்கு தெரியாதா.. நீ வேற சொல்லனுமா..?”

    ”நைட் தண்ணியடிச்சியாடா..?”

    ”ஏன். .?”

    ”நாங்க இல்ல.. தண்ணியடிச்சுட்டு.. சினிமா ஏதாவது போய்ட்டு.. லேட்டா வந்து படுத்துருப்ப.. அதனாலதான் உன்னை எழுப்பி விட்றலாம்னு போன் பண்ணேன்.”

    ”ஏய்.. தண்ணியெல்லாம் ஒன்னும் அடிக்கல.. கடையை சாத்தினதும் நேரா வீட்டுக்கு வந்துட்டேன்..”

    ”பொய் சொல்லாதடா..”

    ”ஆமா.. இதுல உன்கிட்ட பொய்வேற சொல்றாங்க.. நெஜமாதான்..”

    ”அப்படியா.. ஏன்டா..?”

    ”என்ன.. ஏன்டா..?”

    ”இல்ல. . ஏன் தண்ணியடிக்கலேன்னு கேட்டேன். . வீட்லதான் நாங்க யாரும் இல்லையே..?”

    ”ஏய் லூசு.. காலைல போன் பண்ணி ஏன் இப்படி என்னை போட்டு வாதிக்கற..? நான் தண்ணியடிக்கனும்னா நீங்க இருந்தா என்ன.. இல்லேன்னா என்ன..?”

    ”அப்ப நேத்து அடிக்கல..?”

    ”ம்கூம்…”

    ” நைட் சாப்பிட்டியா..?”

    ”ம்..ம்ம்..”

    ”என்ன.. சாப்பிட்ட..?”

    ”தோசை..”

    ”கடைலயா..?”

    ”ம்கூம். . வீட்ல…”

    ”வீட்லயா.. யாரு வீட்ல..?”

    ” என் பிரெண்டு வீட்ல..”

    ”எந்த பிரெண்டு வீட்ல..?”

    ”இருதயா வீட்ல..”

    ”இருதயா வீட்லயா..? யாரு சுட்டு குடுத்தா..?”

    ”வேற யாரு.. அவதான்..!” என சிரித்தான் சசி.

    ”ஓ.. ஓ.. அந்த அளவுக்கு போய்ருச்சா..! ஓகே.. ஓகே.. எப்படி நல்லா சுட்டு குடுத்தாளா..?”

    ”உனக்கு மோசமில்ல.. ” என அவளை கடுப்பேற்றினான்.

    ”ம்..ம்ம்..! சொல்லுவடா சொல்லுவ.. ஏன் சொல்ல மாட்ட.. சரி.. எத்தனை தோசை..?”

    ”அட ச்சீ.. நல்லா வாய்ல வந்துரும்.. காலங்காத்தால போன பண்ணிட்டு.. கேக்கறா பாரு.. பேசாம போன வெச்சுட்டேன்னா அது உனக்கு மரியாதை..” என்றான்.

    ”என்னடா அவள பத்தி கிண்டல் பண்ணா இப்படி பொங்கற..?”

    ”இப்ப நீ நல்லா வாங்கப் போறே. என்கிட்ட. . மூடிட்டு போனை வெய்..டீ..” என சிரித்தவாறு சொன்னான்.

    ”செரிடா.. வெச்சிர்றேன்.. இப்ப.. காலைல டிபனும் அவ வீட்லதானா..?” என்று எதிர் முனையில் சிரித்தாள் குமுதா.

    ”போதும் குமுதா.. வெய்..” என அவனே காலைக் கட் பண்ணினான். !

    போனைப் பார்த்தான்.
    அரைமணி நேரம் முன்பே இருதயா
    ‘குட் மார்னிங்.. மை டியர்..!!’ என மெசேஜ் அனுப்பியிருந்தாள்.!

    அவனும் பதில் ‘குட் மார்னிங் ‘ அனுப்பி விட்டு எழுந்து.. பாத்ரூம் போனான்.!

    உடம்பில் இருந்த களைப்பு போக குளித்துவிட்டு.. இருதயா வீட்டுக்குப் போனான் சசி.!
    அவன் மனதில் ஒரு புத்துணர்ச்சி வந்திருந்தது.!

    திறந்திருந்த இருதயாவின் வீட்டில் சசி நுழைந்தான். அப்போதுதான் போனில் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் இருதயா.!
    அவள் குளித்திருந்தாள். அவளது வெட்டிவிடப்பட்ட ஈரக்கூந்தல் அவள் முதுகில் படர்ந்திருக்க.. அந்த கூந்தல் முனையிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது.

    சசியைப் பார்த்ததும்.. புன்னகைக்க வேண்டிய இருதயாவின் கண்களில் இருந்து மளமளவென கண்ணீர் வழியத் தொடங்கியது.!

    திகைப்படைந்தான் சசி.
    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும்….
    ‘என்னாச்சு..?’ என சைகையில் கேட்டான்.

    அவனைப் பார்த்துக் கொண்டே பேசியவள்..
    ”ஒரு நிமிசம்.. சசி வந்துட்டாங்க.. அவங்ககிட்ட சொல்லிரு..” என மொபைலை அவனிடம் நீட்டினாள்.

    ”யாரு..?” எனக் கேட்டவாறு வாங்கினான்.

    ”மம்மி…” அவள் குரல் தழதழத்தது. மூக்கை உறிஞ்சினாள்.

    ”என்னாச்சு.. இப்ப ஏன் அழற..?” மெதுவான குரலில் கேட்டான்.

    ”அப்பாக்கு.. அட்டாக் வந்து… ஹாஸ்பிடலைஸ் பண்ணிருக்காங்களாம்.. என்ன வரச்சொல்றாங்க..” அவள் அழுதுகொண்டே சொல்ல..

    திடுக்கிட்ட சசி போனில்
    ”ஹலோ…” என்றான்.

    ”நான்தாப்பா..” என இருதயாவின் அம்மா பேசினாள்.

    ”ஆ.. சொல்லுங்க.. என்னாச்சு..?”

    ”அவங்கப்பாக்கு அட்டாக் வந்துருச்சுப்பா.. நேத்து மிட்நைட்ல.. இப்ப ஹாஸ்பிடல்லதான் இருக்கோம்.. இப்ப பரவால்ல நல்லாருக்காரு..! அவகிட்ட சொன்னா.. பயந்துட்டு நைட்டெல்லாம் தூங்காம அழுதுட்டிருப்பானுதான் நைட் சொல்லாம இப்ப சொன்னேன்.
    ஒரு சின்ன ஹெல்ப் பண்ணு சசி..”

    ”என்ன ஆண்ட்டி.. இப்படி கேட்டுட்டு.. சொல்லுங்க..” இருதயாவைப் பார்த்தவாறு பேசினான்.

    ”அவ இப்ப அங்க இருக்க வேண்டாம்.. தனியா இருந்தா அழுதுட்டேதான் இருப்பா.. அவள பஸ் ஸ்டாண்ட் கூட்டிட்டு போய் ஊட்டி பஸ்ல வெச்சு விட்றுப்பா.. அவளே வந்துருவா..”

    ”இப்ப.. அவருக்கு எப்படி இருக்கு ஆண்ட்டி..?”

    ”இப்ப பரவால்லப்பா.. நார்மலாதான் பேசிட்டு இருக்காரு.. ஆனாலும் நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க..”

    ”ஒன்னும் பயமில்லையே ஆண்ட்டி..?”

    ”இல்லப்பா.. பர்ஸ்ட் அட்டாக்தான்.. கொஞ்சம் கேர் புல்லாதான் இருந்துக்கனும்..”

    அவருடைய நிலவரம் பற்றி விசாரித்துவிட்டுச் சொன்னான் சசி.
    ”நீங்க பயப்படாதிங்க ஆண்ட்டி.. நானே இருதயாவ கூட்டிட்டு வந்து விடறேன்..”

    ”உனக்கு சிரமம்னா.. அவள பஸ் வெச்சு விட்டா போதும்ப்பா….”

    ”இல்ல ஆண்ட்டி.. நான் பைக்லதான் வரேன்.. அப்படியே அவரையும் வந்து பாத்துட்டு… நீங்க பயப்படாதிங்க ஆண்ட்டி.. நான் கூட்டிட்டு வரேன்..!” எனச் சொல்லிவிட்டு இருதயாவிடம் போனைக் கொடுத்தான்.

    அழுத கண்களுடன் அவள் வாங்கி.. அவளது அம்மாவுடன் மேலும் பேசினாள்.
    அவள் பேசி முடித்தபின்.. அவளை அணைத்தவாறு சொன்னான் சசி.
    ”பயப்படாத.. உங்கப்பாக்கு ஒன்னும் இல்ல.. நார்மலாதான் இருக்காரு..! நீ புறப்படு.. போலாம்..!”

    ”நீங்களும் வரீங்களா..?”

    ”ம்..ம்ம்..! உங்கப்பாவ பாத்துட்டு…”

    ”கடை..?”

    ”லீவ்..!!”

    சட்டென அவனை இருக்கமாகக் கட்டிப்பிடித்தாள்.
    ”தேங்க்ஸ்..”

    ”ஹேய்.. டோண்ட் வொர்ரி.. புறப்படு..! போலாம்..!” அவள் தலையை தடவினான்.

    மெதுவாக அவனிடமிருந்து வலகினாள்.
    ”குளிச்சிட்டேன்.. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணா போதும்..! அஞ்சே நிமிசம்.. !”

    ”ம்..ம்ம்..!” அவளுக்கு முத்தம் கொடுத்தான் ”மனச தளறவிடாத.. ஓகே..?”

    ”ம்..ம்ம்..” தலையாட்டிவிட்டு அடுத்த அறைக்குள் போனாள்.

    அடுத்த பத்தாவது நிமிசம்.. இருவரும் கிளம்பிவிட்டார்கள்.
    பக்கத்தில் யாருக்கும்.. எதுவும் சொல்லவில்லை.!

    பைக்கில் காம்பௌண்ட்டை விட்டு வெளியே போனதும் கேட்டான் சசி.
    ”டிபன் ஏதாவது சாப்பிடறியா.?”

    ”ம்கூம்..”

    ”பசிக்கும்மா.. லைட்டா ஏதாவது சாப்பிட்டுக்கோ..”

    ”இந்த நிலைமைல.. என்னால எதுவும் சாப்பிடமுடியாது..”

    ”அது சரிதான் வெறும் வயித்தோட இருந்தா.. ஃபீலிங் இன்னும் அதிகமாகும்.. லைட்டா ஏதாவது சாப்பிட்டுக்கோ..”

    ”வேணாம்ப்பா.. அப்பாவ பாக்கறவரை எனக்கு.. எதுவுமே வேண்டாம்.. ”

    ”டீயாவது..?”

    ”வேனாமே.. ப்ளீஸ்..! ஊட்டிக்கு எப்ப போவோம்..?”

    ”அதிக பட்சம்.. ஒன் ஹவர்..”

    ”அப்ப நா.. ஊட்டில போய் சாப்பிட்டுக்கறேன்.” என்றாள்.

    அதற்குமேல்.. சசி அவளை வற்புறுத்தவில்லை.
    அவன் வேறு எங்கும் பைக்கை நிறுத்தவும் இல்லை.
    இருதயா அவன் முதுகில் ஒட்டிக்கொள்ள.. ஒரு மணி நேரத்தில் அவர்கள் ஆஸ்பத்ரியை அடைந்து விட்டார்கள். !!

    இருதயாவின் அம்மாவுக்கு.. இருதயாவைப் பார்த்த மாத்திரத்தில் அழுகை வந்து விட்டது.
    இருதயாவும் கண்கள் கலங்கி மூக்கை உறிஞ்சினாள்.

    அவளுடைய அப்பா நல்ல நிலமையில்தான் இருந்தார்.
    அவர்களோடு நீண்ட நேரமாகப் பேசினான்.!

    மதியம் இரண்டு மணிவரை அவர்களுடனே இருந்துவிட்டு.. அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு.. அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பினான் சசி..!!

    கண்களில் நிறைந்த காதலுடனும்.. நெஞ்சில் நிறைந்த நன்றியுடனும்.. அவனுக்கு கையசைத்து விடைகொடுத்தாள் இருதயா..!!

    குமுதா ஊரிலிருந்து வந்து விட்டாள். அன்று இரவில் சசி சாப்பிடும்போது.. இருதயாவின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது பற்றி.. விவராமாகக் கேட்டாள்.

    அவன் சாப்பிட்டபின்பு புன்னகையுடன் கேட்டாள்.
    ”அப்றம்.. இந்த வீட்லயும் யாரும் இல்ல.. அந்த வீட்லயும் யாரும் இல்ல.. என்ன பண்ணீங்க ரெண்டு பேரும்..?”

    அவளை முறைத்தான் சசி.
    ”ஏய்.. என்ன கேக்கற..?”

    ”இல்லடா.. ஒரு நாள் ராத்திரி.. பூரா.. யாருமே இல்லாம…” சிரித்தாள்.

    ”ஆ… யாருமே இல்லேன்னா..?”

    ”அதான்… என்ன செஞ்சீங்கனு கேட்டேன்….”

    அவள் மண்டையில் கொட்டினான்.
    ”போ.. போய் நேரங்காலமா.. புருஷன்கூட படுத்து தூங்கற வேலைய பாரு..”

    ”அத விடுடா.. சரி… நேத்து நைட்.. நீ எத்தனை மணிக்கு தூங்கின..?”

    ”பதினொரு மணிக்கு. ..” அவளைப் பார்க்காமல் டிவியைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

    ”அவ…?”

    ”எவ..?”

    ”இருதயாடா…?”

    நிஜமாகவே அவனுக்கு கோபம் வந்துவிட்டது.
    திரும்பி அவளை முறைத்தான்.
    ”ஏய் வெளக்கெண்ண.. மூடிட்டு போய் தூங்கமாட்ட…”

    ”இப்ப ஏன்டா இப்படி கோச்சுக்கற..? இல்ல ரெண்டு பேரும் பேசிட்டிருந்துருப்பீங்கள்ள..? அவ வேற உனக்கு தோசையெல்லாம் சுட்டு குடுத்துருக்கா..? நாங்கள்ளாம் இருக்கப்பவே ரெண்டு பேரும் மணிக்கணக்கா பேசுவீங்களே… அதான் கேட்டேன்…?” என சிரித்துக் கொண்டே எழுந்தாள்.

    எழுந்து நின்றவளின் பின்பக்கத்தில் ஓங்கி ஒரு அடி வைத்தான் சசி.

    ”சரி.. அவகிட்ட கேட்டா எல்லாம் சொல்லிடப்போறா..! நாங்கேட்டா எதையுமே மறைக்க மாட்டா..” என்றவாறு போனாள்.

    சசி அவள் பின்னாலிருந்து சொன்னான்.
    ”ஒரு வெங்காயமும் நடக்கல.. மூடிட்டு போய் தூஙகு.. குட்நைட்..!!”

    ”குட்நைட்..ரா..”

    சசி எழுந்து மொட்டை மாடிக்குப் போனான். இருதயாவைப் போனில் அழைத்து.. அவளது அப்பி பற்றி விசாரித்தான்.!

    அவள் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மேலாகும் என்றாள்.!
    அவளே..
    ”மிஸ் யூ.. ப்பா..!!” என்றாள்.

    ”நானும்தான் உன்ன மிஸ் பண்றேன்..! மிஸ் யூ..!!பை..!!”

    ”கிஸ் மீ.. ப்பா..!!”

    போனில் முத்தம் வைத்து..
    ”ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!” என்றான்.

    அவளும் முத்தம் கொடுத்து..
    ”பை..!!” என்றாள்.

    சசிக்கு இப்போது இருதயாவின் நினைவு அதிகமாக வந்தது.
    ஒரு இரவில் அவள்.. அவனது இதயம் முழுவதும் நிறைந்துவிட்டது போல் தோண்றியது.!!

    ஆனாலும் காதல் என்கிற உறவில் அவன் ஆழமாக மூழ்கிப்போக விரும்பவில்லை.
    நீண்ட ஒரு பெருமூச்செறிந்து விட்டு.. மொட்டை மாடியில் இருந்து இறங்கி படுக்கப் போனான் சசி….!!!!!!

    -வளரும்……!!!!!!

    – புரிந்துகொண்டு இந்தக் கதைக்கு ஆதரவு காட்டும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான…
    நன்றிகள்….!!!!

    – முகிலன்…..!!!!!!

    Leave a Comment