மலரோடு பேசும் தென்றல் – 4 (Tamil Sex Stories - Malorodu Pesum Thendral 4)

Idhu Bathroom Tamil Sex Stories – காலையில் நான் கண்விழித்தபோது.. தலை மிகவும் பாரமாக இருந்தது..!
உடம்பில் ஒரு மாதிரி சோர்வு இருந்தது. எழுந்து பாத்ரூம் போய் சிறுநீரு கழித்தபோது.. உறுப்பில் லேசான எரிச்சலுடன்.. மஞ்சளாக சிறுநீர் பிரிந்தது..!!

ஒரு கட்டிங் போட்ட எனக்கே இந்த நிலமை என்றல்… ஒரு ஆஃப்புக்கு மேல் அடித்த நந்தாவின் நிலமை எப்படியிருக்கும்..??

அவனுடன் பேச எனக்கு நேரம் இருக்கவில்லை. நான் குளித்து.. சாப்பிட்டு.. வேலைக்குப் போய்விட்டேன்.!

பதினொரு மணி இருக்கும்.. நந்தா என்னைப் பார்க்க.. கடைக்கு வந்தான்.
குளித்து.. நீட்டாக ட்ரஸ் பண்ணி.. பிரஷ்ஷாக இருந்தான்.

”என்னடா.. எங்காவது போறியா என்ன. .?” எனக் கேட்டேன்.

”ஆமாடா..” என்றான்.

”எங்க..?”

”ஊருக்குத்தான்.. காலைல எங்க மாமா போன் பண்ணிருந்தாரு.. பங்க்ஷனுக்கு வரலேன்னு புடிச்சு ஏத்து ஏத்துனு ஏத்தறாரு..! கெழவி உசுரோட இருந்தப்ப ஒரு பய மதிக்கல.. இப்ப செத்துப்போன பதினாறுக்கு வரலேன்னு.. அந்த போடு போடறாரு..பாசக்கார பயபுள்ள மாதிரி..” என்றான்.

” ஓ..!! சாருமா..?”

”அவ வரலடா.! அவ காலேஜ் போய்ட்டா..! நானே போய் நைட்டெல்லாம் அங்க தங்க மாட்டேன்..! எவ்ளோ நேரம் ஆனாலும் வந்துருவேன்..!”

”அவளுக்கு தெரியுமா.. நீ போறது..?”

”ம்.. தெரியும்..!”

”சரி.. எப்ப கண் முழிச்ச..?”

” எட்டு மணிக்கு.. அவதான் எழுப்பிவிட்டா..! எந்திரிக்கவே முடியல என்னால..! அதுக்கு என்ன பண்ணா தெரியுமா அவ..? தண்ணிய கொண்டு வந்து மேல ஊத்திவிட்டு.. லெப்ட் ரைட் வாங்கிட்டா..! அவகிட்ட மங்கள வாழ்த்து வாங்கின நேரமோ.. என்னமோ.. கொஞ்ச நேரத்துலயே எங்க மாமங்காரன் போன் பண்ணி ஏத்தறான்…”எனச் சிரித்துக் கொண்டே சொன்னான்.

”அப்ப.. நைட்டு சாப்பிடலயா நீ..?”

”சாப்பிடறதா..? ஆமா.. நீ எப்ப வந்த.? வீட்டுக்கு போனதுமே நான் பிளாட்டு..! காலைலருந்து ஒரே தலைவலி வேற.. இப்ப போய் ஒரு கட்டிங் போட்டுதான் போகனும்..! அதான் உன்ன கேக்கலாம்னு வந்தேன்.. வரியா..?” எனக் கேட்டான்.

”அடப்பாவி.. நான் வேலைல இருக்கன்டா..”

”ஆமா.. பெரிய வேலை..? வாடா.. ஒரு டீ குடிக்கற நேரம்..!”

”இல்லடா.. வேண்டாம்..! நீ வேணா அடிச்சிட்டு போ..! மீதி ஆனாக்கூட அத கொண்டு போய் அங்க அடி..”

”ஆமான்டா.. அத இங்கருந்து வேற கொண்டு போறாங்க..? அங்க போயும் எப்படியும் அடிப்பேன்.. அங்கயும் நம்ம செட்டுக இருக்கானுக..! வாடா ஒரு கட்டிங்தான..?” என அவன் வற்புறுத்தினான்.

ஆசை இருந்தபோதும்.. குடித்துவிட்டு வேலை செய்ய எனக்கு உடன்பாடு இல்லை.
”பரவால்லடா.. நீ போ.. எனக்கு வேண்டாம்..” என நான் மறுத்துவிட்டேன்.

”சரி.. ஒரு கோட்டர அடிச்சிட்டு போக வேண்டியதுதான்..! சரிடா நான் போறேன்.. நைட் வந்துருவேன்..! சாரு ஏதாவது வேனும்னு கேட்டானா வாங்கி குடுத்துரு..! நான் போய்ட்டு போன் பண்றேன்..!!” என்று விடை பெற்றுப் போனான் நந்தா..!!

அன்று மாலை..
சாருவிடமிருந்து போன் வந்தது எனக்கு..!
நான் தனியாகப் போய்.. கால் பிக்கப் செய்து காதில் வைத்தேன்.
”ஹாய்.. மை ஸ்வீட் ஏஞ்சல்..? வாட் யூ டூ.. டா..?” என்று கேட்க.. எதிர் முனையிலிருந்து.. அவளது விசும்பல் சத்தம் கேட்டது.

”ஏய்ய்…” என் மனசு பதறியது ”என்னாச்சு சாரு..?”

விசும்பலுடன்.. கரகரக்குரலில்.. மெதுவாகப் பேசினாள்.
”நந்தா.. நந்தா.. க்கு ஆக்ஸி.
.. ஆக்ஸிடெண்ட்…. ஆகி…”

”வாட்..? என்ன சொல்ற..? ஆக்ஸிடெண்ட்டா..? மை காட்.. என்னாச்சு..?இப்ப எங்க இருக்கான்..?” எனக்கும் குரல் நடுங்கியது.

”கோயமுத்தூர்ல.. அட்மிட் பண்ணிருக்கு.. அப்பா.. இப்பதான் போன் பண்ணி சொன்னாரு.. நான் போறேன்..”

”தனியாவா.? ஏய்.. நீ வீட்ல இரு.. நான் இப்ப வரேன்..!”

”ம்.. சீக்கிரம் வா..” என் பேசி முடித்தாள்.

நான் உடனே கடையிலிருந்து கிளம்பிவிட்டேன்..!!

வீட்டில் இருந்து சாரதா மட்டும்தான் கிளம்பினாள். பக்கத்தில் வேறு யாருக்கும் தகவல் சொல்லவில்லை..!!

நான்.. என் வீட்டில் சொல்லிவிட்டு.. சாருவை அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.
பஸ்ஸில் போகும்போதே.. அவள் தன் அண்ணனைத் திட்டியது பற்றியெல்லாம் சொல்லிச் சொல்லி.. புலம்பினாள்..! அடிக்கடி அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது..!!

கோவை..!!
மருத்துவமனை..!!
நாங்கள் போனபோது.. நந்தாவின் உறவினர்கள் எல்லாம்.. திரண்டு கூட்டமாக நின்றிருந்தனர்.!
விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நந்தாவைப் பார்க்க.. அனுமதி கிடைக்கவில்லை. !
ஆனால் அவன் சீரியஸ் நிலமையில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். !
ஆபரேசன் நடந்து கொண்டிருந்தது..!!

நந்தாவின் அம்மாவும்.. சாரதாவும் பிழியப் பிழிய அழுதார்கள். அவர்களுக்கு நிறைய ஆறுதல் சொல்லவெண்டியிருந்தது.!

இரவு பதினொரு மணிக்கு மேல்தான் நந்தாவைப் பார்க்க முடிந்தது.!
ஆனால் பேசும் வாய்ப்பு இல்லை.
‘ஹெல்மெட் ‘இல்லாமல் பைக் ஓட்டியதால்.. தலையில் நல்ல அடி பட்டு.. ஆபரேசன் செய்யப்பட்டிருந்தது..!!

மப்பில் பைக்கை எடுத்துக் கொண்டு தனியாக எங்கோ போயிருக்கிறான். அப்போது குறுக்கே வந்துவிட்ட.. இன்னொரு பைக்குக்கு பயந்து.. இவன் பைக்கைத் திருப்ப.. தடுப்புச் சுவரில் மோதி.. தூக்கி வீசப்பட்டிருக்கிறான்.!!

அன்று இரவு முழுவதும் யாரும் தூங்கவே இல்லை.
அடுத்த நாள் மாலையில்தான்.. அவனைத் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஜெனரல் வார்டுக்கு மாற்றினார்கள்..!!

அவன் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்று தெரிந்தபிறகுதான்.. அவனது உறவினர்கள் உட்பட.. எங்கள் அனைருக்கும்.. ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது..!!

முக்கியமானவர்கள் தவிற.. மற்றவர்கள் கிளம்பினர்.!!
இரவு எட்டு மணிக்கு மேல்.. நானும்.. சாரதாவும்.. அவளது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் கிளம்பினோம்..!!

வெளி கேட் வரை வந்து எங்களை வழியனுப்பிய அவளது அப்பா.
”நாளைக்கு நீ காலேஜ் போக வேண்டாம்..! வீட்லயே இரு..நான் காலைல.. டிபன் வாங்கி குடுத்துட்டு வரேன்..!”

”ம்..ம்ம்..!” என இருக்கமான முகத்துடன் தலையாட்டினாள்.

என்னிடம் திரும்பிய அவளது அப்பா.
”கொஞ்சம் இவள பாத்துக்க.. தனியா இருக்கப்ப.. அழுதுட்டே இருப்பா.. அப்பப்ப.. கவனிச்சிக்க.. நைட்டு உங்க வீட்லயே படுக்க வெச்சுக்க..” எனச் சொன்னார்.

”நீங்க இங்க பாருங்க.. சாருவ பத்தி கவலப்படாதிங்க…” என நான் சொல்ல…

”நான் நம்ம வீட்லயே படுத்துப்பேன்..!!” என்று.. அவளது அப்பாவைப் பார்த்து.. முனகலாகச் சொன்னாள் சாரதா.

அங்கிருந்து கிளம்பி.. டவுன் பஸ் பிடித்து.. காந்திபுரம் போனோம்.!
சாரதா மிகவும் களைப்பாக இருந்தாள்.
இரவெல்லாம் தூங்காமல் அழுதழுது.. அவள் முகம் வீங்கிப் போயிருந்தது.!
அழுக்கு முகம்.. கலைந்த தலை..!!
”ஏதாவது குடிக்கறியா.. சாரு..?”

”ம்கூம்..!!” மறுத்துத் தலையாட்டினாள்.

”ஜீஸ் ஏதாவது குடிக்கலாம்.. வா..!!” என அவளை பக்கத்தில் இருந்த பழக்கடைக்கு அழைத்துப் போய் இரண்டு சாத்துக்குடி ஜூஸ் சொல்லி.. அமைதியாக உட்கார்ந்து குடித்தோம்.!!

கடையை விட்டு வெளியில் வந்து கேட்டேன்.
”டிபன் ஏதாவது சாப்பிடறியா..?”

”இல்ல.. வேண்டாம்.. பசியே இல்ல..”

அங்கிருந்து பஸ் ஏறி.. புது பஸ் ஸ்டாண்ட் வந்து மீண்டும் எங்கள் ஊர் பஸ் ஏறிய போதே.. பத்து மணியாகிவிட்டது..!!
பஸ்ஸில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை..!

பஸ் புறப்பட்ட பத்தாவது நிமிடம்.. என் தோளில் சாய்ந்து தூங்கினாள் சாரதா..!
டிக்கெட் எடுத்த பிறகு.. நானும் கண்மூட.. எனக்கும் தூக்கம் வந்துவிட்டது.!!

மீண்டும் நான் தூக்கம் கலைந்து கண்விழித்தபோது.. காரமடை ரயில்வே கேட்டில் நின்றிருந்தது பேருந்து. !
சாரு என் மடியில் தலைவைத்து.. அவளது துப்பட்டாவை இழுத்துப் போர்த்தி.. ஒரு காலை மட்டும் மடக்கிப் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள்.!

நான் மெதுவாக அவளது கன்னம் வருடினேன்.
”சாரு…” என அவளை எழுப்பினேன்.

”ம்..?” என முனகினாள்.

”காரமடை வந்தாச்சு..!”

”பஸ் ஸ்டாண்ட்ல என்ன எழுப்பு..” என அப்படியே என் கையைப் பிடித்துக்கொண்டு.. தூங்கினாள் சாரதா…..!!!!!! Kannam Thadavum Tamil Sex Stories

-தொடரும்…..!!!!!!

Leave a Comment