நண்பனின் முன்னால் காதலி – 14 (Nanbanin Munnal Kadhali 13)

udal uravu tamil பின் சுவாதி ஒரு வித குழப்பத்தோடு ஹோஸ்டல் போனாள் .அங்கு போனதும் அவளுக்கு அடுத்த நாள் அவள் அபர்சென் பண்ண போவதை எண்ணி பயந்து கொண்டு இருந்தாள் .அப்போது ஹாஸ்டலில் அவளுக்கு இருக்கும் தோழிகளில் ஒருவரான அஞ்சலி அக்கா வந்து பேசினார் .

என்னடி ரொம்ப டல்லா இருக்க இன்னும் உன் பழைய லவர் டேவிட்யே நினைச்சுகிட்டு இருக்கியா என கேட்டார்கள் .அவள் இல்லக்கா அவனாலாம் மறந்து பல மாசம் ஆச்சு என்றாள் சுவாதி .

அது அப்படின்னு இருக்கணும் பொன்னுகன்னா எதுக்கு எடுத்தாலும் அழுதுகிட்டு மட்டும் இருக்க கூடாது .அவன் முன்னாடி நீயும் ஒரு நல்ல பையனா கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டின்னு சந்தோசமா வாழனும் என்றார் .

நல்ல பையனா என்று சொல்லி மெல்ல சிரித்து விட்டு நல்ல பையன்லாம் இந்த காலத்துல கிடைப்பானுகளக்கா என்றாள் ஒரு விரக்தியோடு .ஏண்டி அப்படி சொல்ற என கேட்டார்கள் .இல்லக்கா இந்த காலத்துல எல்லா பசங்களும் லேடிஸ் விசயத்துல கொஞ்சம் வீக்கா இருக்க மாதிரியே எனக்கு தோணுது என்று அவள் விக்கியை மனதில் நினைத்து கொண்டு சொன்னாள் .

அது இந்த காலத்துல மட்டும் இல்ல எப்பயுமே பசங்க அப்படித்தான் ஏன் மன்னர் காலத்துல எடுத்துக்கோ நாம இப்ப ஆஹா ஓஹோன்னு சொல்ற எந்த மன்னர் ஆச்சும் ஒரு பொண்டாட்டியோட இருந்து இருக்காங்களா அதுக்குன்னு ஒரு அந்தபுரம்ன்னு ஒன்ன வேற வச்சுருகாங்கேசரி அத விடு இந்த காலத்து பசங்கள பத்தி கேட்டியே இந்த காலத்து பசங்க ரொம்ப ஒன்னும் கெட்டவெங்கெ இல்லடி

அவங்கே நம்ம மேல காதல விளுகுரதுக்கு முன்னாடி வேணா அப்படி இப்படி இருப்பாங்கே நம்மள லவ் பண்ண ஆரம்பிசுட்டாங்கே அவளவு சீக்கிரம் நம்மள விட்டு கொடுக்க மாட்டேங்கே

நாம கூட நமக்கு கல்யாணம் ஆன பிறகு நம்ம பழைய லவர மறந்துருவோம் ஆனா அவங்கே கல்யாணம் பண்ண கூட நம்மள மறக்க மாட்டங்கே .

அப்புறம் இந்த பொண்ணுக விசயத்துல வீக்கா இருக்க எல்லா ஆம்பிளையும் அவனுக்கு குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் பொறுப்பா மாறிடுவாங்க .குழந்தைன்கிற வார்த்தையே கேட்டதும் சுவாதிக்கு ஆர்வம் தோற்றி கொண்டது .நிஜமாவே குழந்தை பிறந்ததும் மாறிடுவாங்களா ஆம்பிளைக என்றாள் .

என்னடி அப்படி கேக்குற குழந்தைகதாண்டி நம்ம புருசனா நம்ம கூட தக்க வைக்க ஒரே வழி குழந்தைக மட்டும் நமக்கு பிறக்காட்டி நம்மள நாய் கூட மதிக்காது என்றார் .

என்ன டாக்டர் சொன்ன அதே வார்த்தைய அக்காவும் சொல்றாங்கன்னு சுவாதிக்கு ஒரு மாதிரியாக மனம் இளகியது .

என் வீடுகாரரையோ எடுத்துக்கோ ஆரம்பத்துல அவருக்கு என்னையே பிடிக்கவே பிடிக்காது ஆனா குழநதைக பிறந்ததுக்கு அப்புறம் ஆளே மாறிட்டாரு இப்ப என்னைய ரொம்ப விரும்பராறுன்னா அதுக்கு காரணம் அவருக்கு நான் குழந்தை பெத்து கொடுத்துதான்

இன்னைக்கு நான் மும்பைலயும் என் வீட்டுக்காரார் டெல்லிலயும் தனிதனியா இருக்கோம் ஆனா இன்னைக்கும் என் வீட்டுக்காரர் நான் என் குழநதைக எல்லாரும் வாரத்துல ரெண்டு நாள் மீட் பண்ணாலும் நாங்க எவளவு சந்தோசமா இருக்கோம் தெரியுமா அதாண்டி வாழ்க்கை

அது எல்லாம் இந்த காலத்து பசங்களுக்கும் பொண்ணுகளுக்கும் எங்க புரிய போகுது .உங்களுக்கு எல்லாம் பார்ட்டி செக்ஸ்ம் லவ்வும் மட்டும்தான் வாழ்கைன்னு நினைக்கிறிங்க சரி நான் போயி தூங்குரென் நீயும் தூங்கு என்று சொன்னார்கள் .

ஆனால் சுவாதிக்கு தூக்கம் வரவில்லை ,அவள் அந்த அக்கா சொன்னதையும் காலையில் ஆஸ்பத்திரியில் டாக்டர் சொன்னதையும் நினைத்து அவள் குழம்பி போனாள் .கருவை அழிப்பதா வேண்டாமா என்று இரவு முழுதும் யோசித்தாள் .

அடுத்த நாள் அவர்கள் சொன்னது எல்லாம் வைத்து நைட் சுவாதி கருவை அழிக்க வேண்டாம் என்றுதான் நினைத்து இருந்தாள் .ஆனால் காலையில் எழுந்த போது அவள் விக்கி சொன்னதுபடி யோசித்தாள் அவன் சொன்னது

படியும் பார்த்தால் குழந்தை பெறுவதிலும் வளர்ப்பதிலும் உள்ள சிக்கலை யோசித்து பார்த்தால் ஏன் மாடர்ன் குந்தி தேவியாக மாற வேண்டும் என்று நினைத்து கொண்டு அவள் கருவை கலைக்க முடிவு செய்து ஆஸ்பத்திரி சென்றாள் .

ஆஸ்பத்திரிக்கு போனாள் .அங்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்று சொன்னாதால் வெளியே காத்து இருந்தாள் .அவள் முதல் முறை அபர்சென் பண்ண போவாதால் பயத்தில் தலையில் கை வைத்தவாறே குனிந்து இருந்தாள் .

அப்போது யாரோ அவள் பின்னால் இருந்து அவள் முடியை மெல்ல பிடித்து இழுப்பது போல் இருந்தது யார் என்று அவள் கடுப்பில் திரும்பி பார்த்தாள் அங்கு ஒரு ஆறு மாத குழந்தை அவள் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு இவளின் முடியை அதன் பிஞ்சு கைகளால் பிடித்து இழுத்து கொண்டு இவளை பார்த்து சிரித்தது .

இவளும் பதிலுக்கு சிரித்தாள் ,அந்த குழந்தையின் கையில் சிக்கிய தன் முடிகளை விலக்கினாள் சுவாதி .அப்போது அந்த பிஞ்சு விரலின் சபரிசம் அவளுக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத தாய் உணர்வை தந்தது

அப்போது அக்குழந்தையின் அம்மாவும் திரும்பி பார்த்தாள் ,என்ன உங்க முடியையும் பிடிச்சு இழுத்துட்டானா என்று சிரித்து கொண்டே அந்த குழந்தையை ரவுடி பையலே எத்தன தடவ சொல்றது அடுத்தவங்க முடிய பிடிச்சு இழுக்க கூடாதுன்னு என்று அந்த குழந்தையை அந்த தாய் கொஞ்சினாள் ,

பின் சுவாதி பக்கம் திரும்பி நீங்க என்ன முத தடவ கன்சீவ் ஆகிருக்கெங்கலா என கேட்டாள் .சுவாதி அவளிடம் உண்மையை மறைக்கவில்லை அதனால் ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்டாள் .

அவள் சிரித்து கொண்டே அதான் உங்க முகத்துல பய ரேகை தெரியுதே .இத பாருங்க முத குழந்தைக்கு எப்பவுமே நம்மள மாதிரி லேடிஸ்க்கு பயம்

இருக்கத்தான் செய்யும் ஆனா நீங்க கஷ்டப்பட்டு பத்தவாது மாசம் குழந்தை பெத்து கையில வாங்கிட்டேங்கேனா எல்லாம் மறந்து போகும் .ஏன் உங்க புருசன கூட மறந்துடுவீங்க அப்புறம் குழந்தை தான் நம்ம உலகம்ன்னு மாறிடுவோம் அதனால பயப்படாம இருங்க

இருந்தாலும் நீங்க பயப்படாம இருக்க ஒரு வழி சொல்றேன் . நீங்க ஸ்கேன் எடுத்துட்டின்களா என்றாள் .

ஸ்வாதி இல்லை என்றாள் .முதல அத எடுத்து பாருங்க அப்பதான் அதுல குழந்தையோடு மூவ்மென்ட் பாத்து உங்களுக்கே பிடிச்சு போகும் என்றாள் அந்த பெண் .

அதன் பின் மீண்டும் அந்த குழந்தை சுவாதியை பார்த்து சிரித்தது .இவளும்

பதிலுக்கு அந்த குழந்தையை பார்த்து சிரித்தாள் .பின் அங்கு உள்ள குழந்தைகள் படங்கள் எல்லாத்தையும் பார்த்தாள் .பின் அவள் சேரில் உக்காந்து தன் வயிற்றை தடவி பார்த்தாள்

அவள் வயற்றில் இருந்து ஒரு குழந்தையின் குரல் கேட்டது அவளுக்கு அம்மா என்னையே கொன்னுடாதம்மா ப்ளிஸ் என அக்குழந்தையின் குரல் அவளுக்கு கேட்டது.அதை கேட்ட அவள் மீண்டும் அவள் வயிற்றை தடவி கொண்டே யாருக்கும் தெரியாதவாறு மெல்ல கண்ணிர் விட்டாள் .

பின் அவளை உள்ளே கூப்பிட்டர்கல் .அவள் உள்ளே போகும் முன் தன் வயிற்ரை தொட்டு கொண்டு தன் குழந்தையிடம் அம்மா உன்னையே ஒன்னும் பண்ண மாட்டேன்டா செல்லம் நீதான் இப்ப இருந்து எனக்கு ஒரே சொந்தம் நீதான் எப்பவும் அம்மாவுக்கு உயிரு அதனால பயப்படாம இருடா தங்கம் என்றாள் மனதிற்குள்ளே .

பின் உள்ளே சென்றாள் அவள் உள்ளே போன போது முதல் நாள் விக்கியிடம் பேசிய ஆண் டாக்டர் இல்லை அவரின் மனைவியான பெண் டாக்டர்தான் இருந்தார் .

சுவாதி உள்ளே போனதும் அந்த டாக்டரிடம் டாக்டர் நான் அபார்சன் பண்ணல என்றாள் தன்னை மீறி அழுதுகொண்டே .டாக்டர் அபார்சன் பண்ணாம இருக்க எதுவும் புருஷன் அனுமதி வேணுமா என்றாள் .அதை கேட்டு டாக்டர் சிரித்தார் .

என்னம்மா முதல புருசனுக்கு பயந்து அபார்சன் பண்ண ஒத்துகிட்டு இப்ப வெளியே இருக்க குழந்தைகள பாத்ததும் மனசு மாறிட்டியா என்றார் சிரித்து கொண்டே

அவள் அழுதுகொண்டே ஆமாம் டாக்டர் ப்ளிஸ் எனக்கு அபார்சன் வேணாம் என்றாள் .அழுகாத அம்மா இந்த காலத்து புருசங்கே எல்லாம் பிள்ள பெத்துகிட்டா பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்க முடியாதுன்னு அபார்சன்பண்ண சொல்றாங்கே.அவங்களுக்கு சந்தோசம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்

ஆனா பொண்ணுகளுக்கு அதுக்கு மனசு வராது தான் கருவ ஆழிக்க ஏன்னா அவ இரக்க குணம் படைச்சவ என்றார் .

சரி டாக்டர் நான் இப்ப குழந்தையே அழிக்காம என் வயித்துகுல்லேயே வளக்க புருஷன் சம்மதம் வேணும்மா என்றாள் .

இங்க பாரும்மா அழிக்கத்தான் புருஷன் சம்மதம் வேணும் வளக்க உன் சம்மதம் மட்டும் இருந்தா போதும் என்றார்/

அவள் தன் கண்ணீரை துடைத்து கொண்டு சரி டாக்டர் நான் வரேன் என்று கிளம்பினாள் .

பின் வெளியே அந்த பெண் சொன்னது நினைவில் வர டாக்டர் ஒரு சின்ன request என்றாள் .

என்னாம்மா என்றார் .நான் என் குழந்தைய ஸ்கேன் மூலம் பாக்கலாமா என்றாள் .ம்ம் தரளாமா வாம்மா பாப்போம் என்று அவளுக்கு ஸ்கேன் செய்து அவள் கருவை ஸ்கேனில் காட்டினர் .சுவாதி அதை பார்த்து ஒரே நேரத்தில் அழுகவும் சிரிக்கவும் செய்தாள் .

அதை பார்த்து டாக்டர் என்னாம்மா சந்தோசம்மா என்றார் ,ம்ம் என்றாள் .நேத்து நான் லீவ் ஆச்சே யாரு உனக்கு அபார்சன் பண்ண அப்பாயின்மெண்ட் கொடுத்தா என கேட்டார்கள் .

உங்க ஹாஸ்பண்ட் கிட்டதான் என் ஹாஸ்பண்ட் பேசி அனுமதி வாங்குனாரு என்றாள் .அதானே பாத்தேன் டாக்டரா இருந்தாலும் அந்த ஆளும் ஒரு ஆம்பிளைதானே அதான் ஒத்துகிட்டாரு . நர்ஸ் நாளைல இருந்து சார பிர்கன்ட் செக்சென்க்கு விடாத கேட்டா நான் சொன்னேன்னு சொல்லு என்று நர்சிடம் சொல்லிவிட்டு

மெல்ல சுவாதியிடம் இரு ஒரு ரெண்டு நாளைக்கு அவர நான் நைட் பட்னி போடறேன் அப்பத்தான் புத்தி வரும் என்று சிரித்து கொண்டே சொன்னார் .அதை கேட்டு சுவாதியும் சிரித்தாள்

அதன் பின் நீ கவலைப்படாம குழந்தைய சும .உன் புருசனோ இல்ல மாமியாரோ உன்ன அபார்சன் பண்ண கம்பல் பண்ணா போலீஸ்ல சொல்லு அவங்க பாத்துகிருவாங்க என்று சொல்லி சிரிக்க

சுவாதியும் ரொம்ப சந்தோசமாக ஒரு புது மனுசியை போல உற்சாகத்தோடு வெளியே வந்தாள்

தொடரும்

Leave a Comment