கண்ணாமூச்சி ரே ரே – 54 (Tamil Kamaveri - Kannamoochi Rae Rae 54)

Tamil Kamaveri – ஒரு வருடத்திற்கு முன்பு..!! குறிஞ்சி பற்றிய ஆராய்ச்சி தொடர்பாக, சிபியின் முதலாளியை சந்தித்து உதவி கேட்பதற்கென, தாமிரா மைசூர் பயணிக்க இருந்ததற்கு முதல்நாள்..!! அகழிவீட்டில் ஆதிராவும் தாமிராவும் பகிர்ந்துகொண்டிருந்த, இரவில் ஒன்றாக படுத்துறங்குகிற அறை..!!

“அக்காஆஆஆஆ..!!!!”

254

உற்சாகமாக கத்திக்கொண்டே.. ‘படார்ர்ர்ர்…’ என்று கதவை தள்ளிக்கொண்டு புயலென அறைக்குள் நுழைந்தாள் தாமிரா..!! நழுவியிருந்த மாராப்புடன், இடுப்புப்பகுதி புடவைமடிப்பை இயல்பாக சரி செய்துகொண்டிருந்த ஆதிரா.. சப்தத்திற்கு பதறிப்போனவளாய் முந்தானையை அள்ளி அவசரமாக அவளது மார்புகளை மூடிக்கொண்டாள்..!!

“ஏய்ய்ய்ய்ய்ய்..!!!!! லூசாடி நீ..?? கதவை தட்டிட்டு வரணும்னு அறிவில்ல..?? பிசாசு..!!” என்று தங்கையிடம் சீறினாள்.

“ம்க்கும்..!! போதும் போதும்.. நீ பொத்திப் பொத்தி வச்சதுலாம்..!! எல்லாத்தையும் தெறந்து காட்டுறதுக்கு நேரம் வந்துருச்சுடி யக்கோவ்..!!” தாமிராவின் குரலில் கேலி.

“எ..என்னடி சொல்ற..??”

“ம்ம்ம்..?? இந்த கூச்சத்தைலாம் கூடப் பொறந்தவளோட மட்டும் வச்சுக்க, கட்டுன புருஷன்கிட்ட வெக்கப்படாம வெவரமா நடந்துக்கன்னு சொல்றேன்..!!” அக்காவின் கன்னத்தைப் பிடித்தவாறு கொஞ்சலாக சொன்ன தாமிரா,

“பொண்ணுக.. வெக்கப்படுற மாதிரி நடிக்க மட்டுந்தான் செய்யணும்.. வெக்கப்படக்கூடாது.. வேலைல கரெக்ட்ட்ட்டா இருக்கணும்..!!” என்றுவிட்டு கண்ணடித்தாள்.

“ஐய்யே.. ச்சீய்…!! வெவஸ்தையே கெடையாதுடி உனக்கு.. அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டு..!!”

“ஓஹோ.. அசிங்கமா இது..?? இருக்கட்டும் இருக்கட்டும்.. இன்னும் அஞ்சாறு மாசத்துல வயித்தை தள்ளிக்கிட்டு வந்து நிப்பல.. அப்ப வச்சுக்குறேன் உன்னை..!!”

“எ..என்னது அஞ்சாறு மாசத்துல..??”

“ஆமாம்.. அடுத்த மாசம் கல்யாணம்னா.. அஞ்சு மாசத்துக்குள்ள இந்த ஏரியா உனக்கு பெருசாயிடாது..??” அக்காவின் வயிறை சுட்டிக்காட்டி தாமிரா சொல்ல, ஆதிராவிடம் இப்போது ஒருவித எரிச்சல்.

“லூசு மாதிரி ஏதாவது உளறாதடி..!!”

“நான் ஒன்னும் உளறல.. உனக்குத்தான் இன்னும் புரியல..!!”

“எனக்கு என்ன புரியல..??”

“காலைல நம்ம வீட்டுக்கு ஜோசியர் வந்தாரே.. எதுக்குன்னு நெனைக்கிற..??”

“எதுக்கு..??”

“உன் கல்யாணத்துக்கு நாள் குறிக்க..!!”

“என்னடி சொல்ற..??”

“ஆமாக்கா.. உண்மையைத்தான் சொல்லிட்டு இருக்குறேன்..!! நாம நெனச்ச மாதிரியேதான்.. அப்பா மனசுலயும் அத்தானைத்தான் முடிவு பண்ணிருந்திருக்காரு..!! அடுத்த மாசம் அத்தானுக்கும் உனக்கும் கல்யாணம்.. வந்த ஜோசியர் நாள்கூட குறிச்சு குடுத்துட்டு போயிட்டாரு..!!”

அத்தனை நேரம் தாமிரா சொன்னதையெல்லாம் வழக்கமான கிண்டல் என்றே நினைத்திருந்த ஆதிராவுக்கு.. இப்போதுதான் அவளது வார்த்தைகளில் இருந்த தீவிரம் மெல்ல மெல்ல உறைத்தது..!! உடனே அவளுடைய உள்ளத்துக்குள் ஒருவித ஆனந்த பூரிப்பு.. அவளது கட்டுப்பாடு இல்லாமலே அவளுடைய முகம் மெல்ல மெல்ல ஒரு மலர்ச்சிக்கு போனது..!! காதால் கேட்பதை நம்பமுடியாமல், ஒருவித இனிமையான அதிர்ச்சியில், அவளது வார்த்தைகளில் மட்டும் லேசான தடுமாற்றம்..!!

“நெ..நெஜமா.. நெஜமாத்தான் சொல்றியா தாமிரா..??”

“ஆமாண்டி ஆமாம்..!! அம்மா, அப்பா, திரவியம் அங்கிள்லாம் பேசிட்டு இருந்தாங்க.. அதை ஒட்டுக் கேட்டுட்டு வந்துதான் உன்கிட்ட சொல்றேன்..!!”

“எ..என்னால.. எனக்கு நம்பவே முடியலடி..!!”

255

“ப்ச்.. இன்னுமா நீ நம்பல.. இதைவிட நான் என்ன சொல்..” ஜன்னல் பக்கமாக எதேச்சையாக பார்த்த தாமிரா, பேசியதை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு,

“இரு.. வர்றேன்..!!”

என்று அறைக்கு வெளியே ஓடினாள்.. ஐந்தாறு நொடிகளிலேயே மீண்டும் அறைக்குள் நுழைந்தாள்.. அவளுடன் இப்போது திரவியமும்..!! அந்தப்பக்கமாக கடந்து சென்றுகொண்டிருந்த அவரது கையை பிடித்து, அறைக்குள் இழுத்து வந்தாள்..!!

“வாங்க அங்கிள்.. உள்ள வாங்க..”

“ஹாஹா.. என்னம்மா இது..?? எங்க இழுத்துட்டுப்போற என்னை.??”

“வாங்க அங்கிள்.. வந்து இவகிட்ட சொல்லுங்க.. நம்ப மாட்டேன்றா..!!”

“என்ன சொல்லணும்..??”

“உள்ள நீங்க அப்பாட்ட பேசிட்டு இருந்திங்கல்ல.. அதைப்பத்தி சொல்லுங்க..!!”

“ஹாஹா.. ஆதிராவோட கல்யாண விஷயமா..??”

“ஆமாம்..!! நான் சொன்னா நம்ப மாட்டேன்றா.. நீங்க சொல்லுங்க..!!” தாமிரா அவ்வாறு சொன்னதும், திரவியம் இப்போது ஆதிராவின் பக்கமாக திரும்பினார்.

“ஹ்ஹ்ம்ம்ம்..!! உன் தங்கச்சி சொல்றது உண்மைதான்மா.. உன் கல்யாணம் விஷயமாத்தான் பேசிட்டு இருந்தோம்..!! உனக்கும் சிபிக்கும் அடுத்த மாசமே முடிச்சிறலாம்னு முடிவு பண்ணிருக்கோம்..!!” என்றவர்,

“என்னம்மா.. கரெக்டா சொல்லிட்டனா..??” என்று தாமிராவிடம் கேட்டார்.

“பெர்ஃபக்ட் அங்கிள்..!!” விரல்களை மடக்கி கண்களை சிமிட்டி சொன்னாள் தாமிரா.

“ஹாஹாஹாஹா..!! ம்ம்ம்.. கல்யாணத்தை நாலு மாசம் கழிச்சு வச்சுக்கலாம்னுதான் இருந்தோம்..!! ஜோசியர்தான்.. ‘அடுத்த மாசத்துலயே முடிச்சுட்டா நல்லது, இல்லைன்னா ஒரு வருஷம் தள்ளிப் போகும்’னு சொன்னாரு.. யோசிச்சு பாத்து நாங்களும் சரின்னுட்டோம்..!!”

“ஓ..!!”

“உனக்கு சம்மதந்தானம்மா ஆதிரா..??”

அன்பும் அக்கறையுமாக திரவியம் கேட்ட கேள்விக்கு, ஆனந்த அதிர்ச்சியும், அடங்காத வெட்கமுமாக, ஆதிரா பதில் சொல்லமுடியாமல் உறைந்துபோய் நின்றிருந்தாள்.. தாமிராவே கேலியான குரலில் அவருக்கு பதில் சொன்னாள்..!!

“ம்க்கும்.. நல்ல கேட்டிங்க போங்க..!! அவளே எப்போ எப்போன்னு இருக்குறா.. நீங்க வேற..!!”

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!” தாமிரா சொன்னதை கேட்டு, திரவியம் பெரிதாக சிரித்தார்.

“ஏய்.. லூசு..!!!! சும்மா இருடி..!!!!” ஆதிரா தங்கையை முறைத்தாள்.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

அவளது கோபம் திரவியத்தின் சிரிப்பை இன்னுமே அதிகமாக்கியது..!! இப்போது திரவியத்திடம் திரும்பிய ஆதிரா, திடீரென பூத்துக்கொண்ட ஒரு வெட்கத்துடன் தடுமாற்றமாக கேட்டாள்..!!

“அ..அவரு.. அவர்ட்ட கேட்டாச்சா அங்கிள்..??”

“சிபிட்டயா..??”

“ம்ம்..!!”

“அவன்ட்ட இன்னும் பேசலம்மா.. செல்ஃபோன் ரீச் ஆகல.. அவன் ஆபீஸ்க்குத்தான் ஃபோன் பண்ணி கேட்டோம்.. மடிக்கேரி ஃபாரஸ்ட்க்குள்ள இருக்கானாம்.. நாளைக்கு காலைலதான் மைசூர் வர்றதா சொன்னாங்க..!! உன் அப்பாவும் நாளைக்கே அவன்ட்ட பேசிடுறதா சொல்லிட்டு இருந்தான்..!!”

“ஓ..!!”

256

“ஹாஹா.. அதெல்லாம் நெனைச்சு ஏன்மா கவலைப்படுற..?? சிபி என்ன வேணாம்னா சொல்லப்போறன்..?? சின்ன வயசுல இருந்தே அவனை தூக்கி வளர்த்தது உன் அப்பன்.. மாமா மேல அவனுக்கும் அவ்வளவு மரியாதை.. மாமா பொண்ணு வேற நல்லா மகாலட்சுமி மாதிரி இருக்க.. கட்டிக்க கசக்குதா என்ன அவனுக்கு..?? ஹாஹாஹாஹா..!!” கேட்டுவிட்டு திரவியம் சிரிக்க, ஆதிரா நாணத்தில் முகம் சிவந்து போனாள்.

“ஹையோ.. போங்க அங்கிள்..!!”

“ஹாஹாஹாஹா..!!”

“அப்படி சொல்லுங்க அங்கிள்.. என் அக்காவை கட்டிக்க அத்தான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!” தாமிரா பெருமிதமாக சொல்லியவாறே ஆதிராவின் தோளில் கைபோட்டு அணைத்துக்கொள்ள, அவளோ தங்கையை இப்போது ஒரு ஸ்நேஹப் பார்வை பார்த்தாள்.

அதன்பிறகு தணிகைநம்பியும், பூவள்ளியும்.. ஆதிராவிடம் தங்களது முடிவைப்பற்றி முறைப்படி தெரிவித்தனர்.. அவளது சம்மதத்தை கேட்டனர்.. அவளும் திரவியத்திடம் சிந்திய அதே வெட்கப்புன்னகையுடன், தலையசைத்து தனது ஒப்புதலை உணர்த்தினாள்..!!

அன்று முழுவதுமே.. ஆதிராவுக்கு நடக்கிற உணர்வென்பது சிறிதளவும் இல்லை.. அந்தரத்தில் மிதப்பது போலவே அங்குமிங்கும் அலைந்து திரிந்தாள்.. அப்படியொரு சந்தோஷ ஊற்று அவளது உள்ளத்துக்குள் சிதறியடித்துக் கொண்டிருந்தது..!! சிறுவயதில் இருந்தே அவளது மனதுக்குள் வளர்த்துக்கொண்ட ஆசை அது.. அத்தானை மணந்து அவனுக்கு மனைவியாகிவிட வேண்டும் என்பது..!! எண்ணம்போலவே திருமணவாழ்வு அமையப்போவதில்.. எல்லையில்லா ஆனந்தக்கடலில் மூழ்கித்திளைத்தாள்..!!

அன்று இரவு..

அகழி ரயில் நிலையம்.. மைசூருக்கு செல்கிற அந்த ரயில் புறப்பட தயாரான நிலையில் இருந்தது.. யானையின் பிளிறல் போல ஒருமுறை சப்தம் எழுப்பி ஓய்ந்தது..!! பாட்டிலில் தண்ணீர் நிரப்பிவிட்டு அவசரமாக திரும்பிய ஆதிரா.. எதிர்ப்பட்ட செம்பியன் மீது எதிர்பாராதவிதமாய் முட்டிக் கொண்டாள்..!!

“ஸாரி அங்கிள்..!!”

“ஹாஹா.. பரவாலம்மா..!! ஆமாம்.. என்ன இந்தப்பக்கம்.. ?? ஊருக்கு எங்கயும் போறியா..??”

“நான் இல்ல அங்கிள்.. தாமிரா போறா.. நான் சும்மா வழியனுப்ப வந்தேன்..!!”

“ஓ.. சரி சரி..!! அப்பா, அம்மால்லாம் நல்லா இருக்காங்களா..??”

“ம்ம்.. நல்லா இருக்காங்க அங்கிள்..!!”

“சரிம்மா.. சீக்கிரம் போய் தண்ணியைக் குடு.. வண்டி இப்போ கெளம்பிடும்..!!”

சொல்லிவிட்டு செம்பியன் நகர, ஆதிரா ரயிலை நோக்கி ஓடினாள்.. ஜன்னலோரமாய் அமர்ந்திருந்த தங்கையிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்..!! அதை வாங்கிக்கொண்ட தாமிரா, மூடி திறந்து தொண்டையை கொஞ்சம் நனைத்துக் கொண்டாள்.. பாட்டிலை மூடி பேகின் பக்கவாட்டில் செருகியவள், ஈரப்பட்ட உதடுகளை துப்பட்டாவால் துடைத்துக்கொள்ள.. ஆதிரா இப்போது அவளிடம் இயல்பாக கேட்டாள்..!!

“காலைல எப்போடி ரீச் ஆகும்..??”

“அஞ்சு அஞ்சரைக்குலாம் போயிருவான்னு நெனைக்கிறேன்..!!”

“அத்தான் வெளியூர்ல இருக்குறதா சொன்னாங்க.. அதுக்குள்ள வந்துடுவாரா..??”

“வந்துடுவேன்னாரு, ஸ்டேஷன் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு.. பாக்கலாம்..!!”

“ஹ்ம்ம்.. எனக்கு இன்னுமே அவர் என்ன சொல்வாரோன்னு இருக்குடி..!!”

“எதுக்கு..?? கல்யாணத்துக்கா..??”

“ம்ம்ம்..!!!”

ஆதிரா சற்று கவலையாக சொல்ல, அக்காவின் முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள் தாமிரா.. பிறகு, உதட்டில் ஒரு புன்னகையை தவழவிட்டவாறே சொன்னாள்..!!

“ஒன்னு பண்ணலாமா..??”

“என்ன..??”

“காலைல நான் மைசூர் போனதும்.. உனக்கு கால் பண்றேன்.. நீயே டைரக்டா அத்தான்ட்ட பேசுறியா..??”

“ஏய்ய்ய்..!!! எ..என்ன வெளையாடுறியா..?? ம்ஹூம்.. அ..அதுலாம் ஒன்னும் வேணாம்..!!”

“ப்ச்.. ஏன்டி இப்படி வெக்கப்படுற..?? சும்மா பேசு.. ‘நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு பேசிக்கிறாங்க.. எனக்கு சம்மதம்.. என்னை கட்டிக்க உங்களுக்கு சம்மதமா..’ன்னு கேளு..!! அப்படியே.. சின்ன வயசுல இருந்து அவர்ட்ட சொல்லணும் சொல்லணும்னு நெனச்சுட்டு இருக்கியே.. அதையும் சொல்லிடு..!!”

“எதை..??”

“ம்ம்..?? ஐ லவ் யூ அத்தா………ன்..!!!” தாமிரா விழிகளை சுழற்றி, குரலை இழுத்து கிண்டலாக சொல்ல, ஆதிராவின் முகத்தில் இன்ஸ்டன்டாய் ஒரு வெட்கச்சிவப்பு.

“ச்சீய்.. போடி லூசு..!!”

“யாரு..?? நானா..?? ஹ்ம்ம்ம்.. இப்பவும் சொல்லலனா வேற எப்ப சொல்லப்போறியாம்..?? டைரக்டா ஃபர்ஸ்ட் நைட்ல போய், ஐ லவ் யூ சொல்லிக்கலாம்னு அம்மணிக்கு ஐடியாவோ..??”

“ஹையோ.. போடி எனக்கு வெக்கமா இருக்கு.. அப்டிலாம் அவர்ட்ட சொல்ல முடியாது..!!”

“சரி போ.. நான் சொல்லிக்கிறேன்..!!”

“ஏய்ய்ய்ய்..!!”

“ப்ச்.. ஐ லவ் யூ இல்லடி.. கல்யாண மேட்டரை சொல்றேன்னு சொன்னேன்..!! மேட்டரை சொல்லி.. அவர் மனசை தெரிஞ்சுக்கிட்டு.. உடனே உனக்கு கால் பண்ணி சொல்றேன்.. போதுமா..??”

“இ..இல்ல தாமிரா.. வேணாம்..!! அப்பா சொன்னது ஞாபம் இல்லையா.. அப்பாவே அவர்ட்ட பேசட்டும்.. அதுதான் சரியா இருக்கும்.. நீ வாயை மூடிக்கிட்டு கம்முனு இரு..!! புரியுதா..??”

“ம்ம்..!!”

தாமிரா அமைதியாக அமோதித்துக் கொண்டிருக்கும்போதே, ரயில் பெரிதாக ஒரு அலறலை வெளிப்படுத்தியது.. அதைத்தொடர்ந்து தனது சக்கரக்கால்களால் தண்டவாளத்தில் மெல்ல ஊர்ந்தது..!!

“பார்த்து பத்திரமா போடி..!!!”

“சரிக்கா..!!”

ரயில் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து.. அவ்வப்போது ‘க்கீய்ங்ங்ங்க்.. க்கீய்ங்ங்ங்க்..’ என்று கத்தியவாறே.. தண்டவாளத்தில் தடதடவென ஓட ஆரம்பித்தது..!! கண்ணிலிருந்து தங்கையின் முகம் மறையும்வரை.. கையசைத்தவாறே நின்றிருந்தாள் ஆதிரா..!!

தாமிராவை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவள், தனது அறைக்குள் சென்று தனிமையில் அடைந்துகொண்டாள்.. கட்டிலில் விழுந்து கல்யாணக் கனவுகளில் மூழ்கிப் போனாள்..!! கண்களின் பார்வை மொத்தமும் அந்தரத்தில் சஞ்சரிக்க.. கைவிரல்களோ கழுத்துச் சங்கிலியை அனிச்சையாக பற்றியிழுக்க.. கவனம் முழுதையும் கற்பனைக்குள் தொலைத்துவிட்டு, காதல் நாயகனுடன் கல்யாணக் கனவு..!!

செய்தி கேள்விப்பட்டு அகழி வந்திருந்த சிபி, மற்றவர்கள் அறியாமல் ஆதிராவை காதல் பார்வை பார்த்தான்.. இவளை சுவற்றோடு சாய்த்து பிடித்து வைத்திருந்தவன், ‘நீ சொல்லலனா என்ன.. நான் சொல்றேன்..!! ஐ லவ் யூ ஆதிரா..!!’ என்று இவளது காதோரமாய் கிசுகிசுத்தான்..!! கழுத்தில் தாலியை கட்டிவிட்டு, இவளுடைய இடுப்புச்சதையை இழுத்தான்.. மணமேடை வலம் வருகையில் விரல்களை அழுத்தி நெரித்தான்.. ஆசீர்வாதத்திற்கென காலில் விழுகையில், அவன்மட்டும் பக்கவாட்டில் திரும்பி இவளைப்பார்த்து கண்சிமிட்டினான்..!!

கையிலிருந்த பாலை வாங்கிக்கொண்டு, கட்டிலில் அமர வைத்தான்.. பால் மீது ஆர்வமில்லாமல், பார்வையால் இவளது அழகை அருந்தினான்..!! உதட்டோடு உதட்டினை வைத்து ஈரமாய் கொஞ்சம் உரசினான்.. உடையினை கையால் பற்றி மெல்லமாய் சற்று நெகிழ்த்தினான்.. கட்டிலில் சாய்த்து மேலே கவிழ்ந்தான்.. கழுத்துப்பகுதியில் அனல்மூச்சோடு மோதினான்..!! Ilampen Pundai Nakkum Tamil Kamaveri Kathai

– தொடரும்

NEXT PART

Leave a Comment