கண்ணாமூச்சி ரே ரே – 33 (Sex Stories In Tamil - Kannamoochi Rae Rae 33)

Sex Stories In Tamil – அகல்விழியின் அம்மாவுக்காக ஆதிராவின் இதயத்தில் இரக்கம் கசிந்தாலும்.. அவர்களது நம்பிக்கையின் மீதுதான் இவளுக்கு ஏனோ நம்பிக்கையே பிறக்கவில்லை..!! குறிஞ்சியை பற்றிய ஆராய்ச்சியில் அகல்விழியும் பங்கெடுத்திருக்கிறாள் என்கிற குறுகுறுப்பான நினைப்புதான் அதற்கு காரணம்..!!

13

அகல்விழி பற்றிய சிந்தனையில் இருந்த ஆதிராவின் மனவோட்டம் திடீரென தடம்புரண்டது..!! அந்த ஆராய்ச்சியைப் பற்றி தனக்கு நினைவு வந்த செய்தியை சொல்லி.. நேற்றிரவு கணவனிடம் விவாதித்தது, இப்போது ஆதிராவின் மனதுக்குள் ஓடியது..!! அவளுடைய கேள்விக்கு, மிக இயல்பாக மறுமொழி கூறிக்கொண்டிருந்தான் சிபி..

“ஹ்ம்ம்.. ஆமாம்.. நல்லா ஞாபகம் இருக்கே.. குறிஞ்சி பத்தி ஏதோ ஆராய்ச்சி பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருந்தா.. எங்கிட்ட கூட அதை பப்ளிஷ் பண்றதுக்கு ஹெல்ப் கேட்டாளே.. நானும் கண்டிப்பா பண்றேன்னு சொல்லி வச்சிருந்தேன்..!! அதுவிஷயமா ஒருதடவை.. மைசூர்க்கு கூட தாமிரா வந்துட்டு போனா..!!”

“ஓ..!!”

“நாவரசு ஸாரை உனக்கு ஞாபகம் இருக்கா.. என்னோட பாஸ்..!! நீ ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ உன்னை பாக்க வந்தாரே..??”

“ம்ம்.. ஞாபகம் இருக்குத்தான்..!!”

“ஹ்ம்.. தாமிரா மைசூர் வந்து அவரைத்தான் மீட் பண்ணினா.. அவளோட ஆராய்ச்சியை மக்கள்ட்ட கொண்டுபோய் சேக்குறது பத்தி பேசினா.. அவரும் ஹெல்ப் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணினாரு..!!”

“அ..அப்படினா.. அந்த ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி ஏதாவது.. தாமிரா அவர்ட்ட குடுத்திருக்க சான்ஸ் இருக்குல..??”

“இல்ல ஆதிரா.. அவ அப்படி எதும் அவர்ட்ட குடுக்கல.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. நானும் கூடவேதான் இருந்தேன்..!!” சிபி அவ்வாறு உறுதியாக சொல்லவும்,

“ப்ச்..!!”

ஆதிராவிடம் சட்டென ஒரு சலிப்பு.. அவளுடைய முகத்தில் அப்பட்டமாய் ஒரு ஏமாற்றம்..!! வாடிப்போன மனைவியின் முகத்தை பார்க்க பார்க்க.. சிபியின் மனதுக்குள் ஒரு கவலையூற்று சுரக்க ஆரம்பித்தது..!! சற்றே நகர்ந்து அவளை நெருங்கியவன்.. அவளது கன்னங்கள் இரண்டையும் கைகளால் தாங்கிப்பிடித்து.. கனிவு பொங்கும் குரலில் சொன்னான்..!!

“தேவை இல்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்காத ஆதிரா.. ப்ளீஸ்..!! தாமிரா காணாமப் போனதுக்கும் அந்த ஆராய்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது..!!”

“இல்லத்தான்.. எனக்கு அப்படி தோணல.. ஏதோ சம்பந்தம் இருக்குன்னு என் உள்மனசு சொல்லுது..!! கண்டிப்பா நாளைக்கு வேக்ஸின் ஃபேக்டரிக்கு போகத்தான் போறேன்..!!”

“இங்க பாரு ஆதிரா.. எனக்கு முகிலனை பிடிக்காதுதான்.. அவர் ரொம்ப ரஃப் அண்ட் டஃப் ஆளுதான்..!! அந்த ஆராய்ச்சி என்னவோ அவருக்கு பிடிக்காம போயிருக்கலாம்.. அதுக்காக.. தாமிராவுக்கு அவரால ஆபத்து வந்திருக்கும்னு என்னால கொஞ்சம் கூட நெனைச்சு பாக்க முடியல..!!”

“ப்ளீஸ்த்தான்.. என்னை நம்புங்க..!! என் முன்னாடியே அவளை கொலை பண்ணிடுவேன்னு மெரட்னார்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!! கோவம் வந்தா என்ன பண்றோம்னே தெரியாத அப்படி ஒரு மூர்க்ககுணம் முகிலனுக்கு.. நான் சந்தேகப்படுறதுல எந்த தப்பும் இருக்குறதா எனக்கு தோணல..!! நேர்லயே போய் கேட்டுட வேண்டியதுதான்.. என்ன சொல்றார்னு பாக்கலாம்..!!”

“ப்ச்.. இப்போ நீ போய் இதைப்பத்தி அவர்ட்ட பேசுறதால, தேவையில்லாத புதுப்பிரச்சினைதான் கெளம்பும் ஆதிரா..!!”

“என்ன பிரச்சினை வேணா வரட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!”

“ப்ச்.. சொல்றதையே புரிஞ்சுக்க மாட்டேன்ற நீ..!!”

“உங்களுக்குத்தான் நான் சொல்றது புரியல..!!”

14

விவாதத்தில் ஆரம்பித்து வாக்குவாதத்தில் சென்று முடிந்தது கணவன் மனைவியின் உரையாடல்..!! ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு.. உடல் ஸ்பரிசம் இல்லாமலே உறங்கிப்போனார்கள் இருவரும்..!!

முதல்நாள் இரவின் நினைவில் இருந்து மீண்டாள் ஆதிரா..!! ‘சிபி சொல்வதை வைத்துப் பார்த்தால்.. தாமிரா அந்த ஆராய்ச்சியில் மிக உறுதியாகத்தான் இருந்திருக்கிறாள்.. அதற்கென மைசூர் வரை பயணித்து உதவி தேடியிருக்கிறாளே..?? அவளுடைய அந்த உறுதிதான் உயிருக்கு எமனாக முடிந்திருக்குமோ..??’ என்கிற ரீதியில் இப்போது அவளது மூளை யோசித்துக் கொண்டிருந்தது..!!

ஆழ்ந்த சிந்தனையுடன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த ஆதிராவின் கவனத்தை.. அருகில் கேட்ட சிபியின் குரல் கலைத்தது..!!

“ஹேய்.. வந்துட்டியா.. வந்ததும் வராததுமா ஊஞ்சல்ல உக்காந்து ஆடிட்டு இருக்குற..?? போன வேலை என்னாச்சு..??”

ஆதிரா ஊஞ்சலின் வேகத்தை சற்றே குறைத்து, தலையை திருப்பி பார்த்தாள்.. கையில் இருந்த செல்ஃபோனை காதோடு வைத்து பிடித்தவாறு, சிபி இவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்..!! அவனுடைய கேள்விக்கு ஆதிரா பதில் சொல்ல வாயெடுக்கும் போதே..

“ஒன் மினிட்..!!”

என்று அவளை தடுத்தான்..!! காதுக்கு கொடுத்திருந்த செல்ஃபோனில் இப்போது காலர் ட்யூன் ஒலித்திருக்க வேண்டும்..!! இரண்டு மூன்று வினாடிகளில், மறுமுனையில் கால் பிக்கப் செய்யப்படவும்..

“ஹலோ..!!” என்றான். பிறகு,

“ஹலோஓஓஓ..!!” என்று பெரிதாக கத்தினான்.

“நான் பேசுறது கேக்குதா..??” என்று இரைந்தான்.

மேலும் நான்கைந்து முறை அந்த மாதிரி இரைந்துவிட்டு, அப்புறம் கடுப்புடன் காலை கட் செய்தான்.

“ச்சே.. என்ன எழவு நெட்வொர்க்கோ..?? ரூம்லயும் சிக்னல் இல்ல.. ஹால்லயும் சிக்னல் கெடைக்க மாட்டேன்னுது..!!” என்று சலித்துக்கொண்டான். பிறகு அந்த சலிப்புடனே மனைவியின் பக்கமாய் திரும்பி,

“ம்ம்.. சொல்லு.. என்னாச்சு..??” என்று கேட்டான்.

ஆதிரா ஒருசில வினாடிகள் நிதானித்துவிட்டே பேச ஆரம்பித்தாள்..!! முகிலனிடம் சென்று நேரிடையாகவே விஷயத்தை தெரிவித்தது.. உடனடியாய் அவனுக்கு கிளம்பிய கோபம்.. கதிரிடம் அவன் காட்டிய வெறுப்பும், முறைப்பும்.. பிறகு அந்த மாந்திரீகவாதியின் சொற்பொழிவு.. இறுதியாக முகிலனின் எகத்தாளப் பேச்சு.. எல்லாவற்றையும் கணவனிடம் பொறுமையாக ஒப்பித்தாள்..!!

ஆதிரா சொன்னதையெல்லாம் ஒரு கூர்மையான பார்வையுடன் கேட்டுக்கொண்டிருந்த சிபி.. அவள் பேசி முடித்ததும் சற்றே எள்ளலான குரலில் சொன்னான்..!!

“ஹ்ம்ம்.. நான்தான் சொன்னேன்ல.. இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு..!! இப்போ என்னாச்சு பாரு.. சும்மா இருந்தவரை சீண்டி விட்ட மாதிரி ஆய்டுச்சு..!! இனிமேலாவது உன் ஆர்வத்தை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு.. கொஞ்சம் அமைதியா இரு ஆதிரா..!!”

“இல்லத்தான்.. இப்போத்தான் என் ஆர்வம் இன்னும் அதிகமாகிருக்கு..!!” ஆதிரா அவ்வாறு இறுக்கமான குரலில் சொல்ல, சிபி சற்றே நெற்றியை சுருக்கினான்.

“என்ன சொல்ற..??”

15

ஆதிரா இப்போது அகல்விழி பற்றிய விஷயத்தை கணவனுக்கு உரைத்தாள்..!! இந்த செய்தி சிபிக்கு புதிதாக இருந்தது.. அத்தனை நேரம் முகிலன் பற்றி சொன்னபோதெல்லாம் இயல்பாக இருந்த அவனது முகத்தில்.. இப்போது எக்கச்சக்கமாய் ஒரு திகைப்பு.. ஆதிராவையே நம்பமுடியாத ஒரு பார்வை பார்த்தான்..!! அவனது தடுமாற்றம் அவனுடைய வார்த்தைகளிலும் வெளிப்பட்டது..!!

“அ..அகல்விழினா.. கொஞ்சம் மாநிறமா.. குள்ளமா.. ஸ்பெக்ஸ் போட்டுக்கிட்டு.. அந்தப் பொண்ணா..??”

“ஆமாம்.. அவளேதான்..!! அவளும் தாமிராவும் சேர்ந்துதான் அந்த ஆராய்ச்சியை ஆரம்பிச்சிருக்காங்க அத்தான்.. அப்புறம் என்னாச்சுனு தெரியல.. பாதிலேயே அந்த ஆராய்ச்சில இருந்து அகல்விழி விலகிருக்கா.. குறிஞ்சி பத்தின பயமா, இல்ல வேற யாராவது அவளை மெரட்னாங்களான்னு தெரியல..!!”

“ம்ம்..!!”

“அதுக்கப்புறம் தாமிரா மட்டுந்தான் தனியா அந்த ஆராய்ச்சியை கண்டின்யூ பண்ணிருக்கா..!! தாமிரா காணாமப்போன ரெண்டாவது மாசம்.. அந்த அகல்விழியும் காணாமப் போயிருக்கா..!!”

“ஓ..!!”

“Something’s wrong, definitely..!! உ..உங்களுக்கு என்ன அத்தான் தோணுது..??”

“என்ன தோணுதுனா..?? புரியல..!!”

“அந்த ஆராய்ச்சில இன்வால்வ் ஆகிருந்த ரெண்டு பேருமே இப்போ இல்ல.. ரெண்டு மாச கேப்ல, அடுத்தடுத்து மாயமா மறைஞ்சு போயிருக்காங்க.. அது உங்களுக்கு உறுத்தலா தெரியலையா..??”

“அவங்க ரெண்டு பேர் மட்டும் காணாம போகலையே.. லாஸ்ட் ஃபைவ் இயர்ஸ்ல.. அகழில அந்தமாதிரி இன்னும் நெறைய பேர் காணாம போயிருக்காங்களே..??”

“ம்ம்.. உண்மைதான்..!! நான் என்ன நெனைக்கிறேன்னா.. மத்தவங்க காணாம போனதுக்கு வேற ஏதாவது காரணமா இருக்கலாம்.. ஏன்.. குறிஞ்சியா கூட இருக்கலாம்..!! இவங்க காணாம போனதுக்கு இந்த ஆராய்ச்சி காரணமா இருக்கலாம்..!! அந்த ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி கெடைச்சா, என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாம்னு தோணுது..!! நீங்க என்ன நெனைக்கிறீங்க..??” ஆதிரா தீவிரமாக பேசிக்கொண்டிருக்க, சிபி அவளையே கவலையாக பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு,

“நீ தேவையில்லாம மனசை போட்டு கொழப்பிக்கிறன்னு நெனைக்கிறேன்..!!” என்றான் பட்டென.

“அத்தான்..”

“இங்க பாரு ஆதிரா.. தாமிரா எப்படியும் திரும்ப வரப்போறது இல்ல.. அவளுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கப்போய்.. நீ ஏதாவது சிக்கல்ல மாட்டிக்குவியோன்னு எனக்கு பயமா இருக்கு..!!”

“இ..இல்லத்தான்.. அப்படிலாம் எதுவும் ஆகாது..!!”

“என்னோட கவலைலாம் உன்னை நெனச்சுத்தான் ஆதிரா..!! இந்த இன்வெஸ்டிகேஷன்லாம் நமக்கு வேணாண்டா.. போலீஸ் இருக்காங்க.. அவங்க பாத்துப்பாங்க..!! அதுமில்லாம.. இப்போ உன் உடம்பும், மனசும் இருக்குற கண்டிஷன்க்கு இந்த மாதிரிலாம் நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுமா.. சொன்னா புரிஞ்சுக்கோ..!!” சிபியின் வார்த்தைகளில் தொனித்த அக்கறையும், கவலையும் ஆதிராவை சற்றே அடங்க வைத்தது.

“ம்ம்..!!” என்றாள் அமைதியாக.

“நீ இந்தமாதிரிலாம் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா.. சத்தியமா உன்னை அகழிக்கே கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன்..!!”

சிபி அவ்வாறு சலிப்பாக சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் அவனுடைய செல்ஃபோன் ஒலித்தது..!! Ilampen Koothi Nakkum Sex Stories In Tamil

– தொடரும்

NEXT PART

Leave a Comment