பனித்துளி – 47 (Panithuli 47)

Tamil Sex Story மத்யாணம் லஞ்ச் டைமில்.. கையில் டிபன் பாக்ஸுடன்.. தாமுவிடம் வந்து கேட்டாள். கீர்த்தனா..!
”லஞ்ச் கொண்டு வரலையா..?”

”இல்லே…” என்றான்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”என்னோடத சாப்பிட்டுக்கோ.. இந்தா..” என அவளது டிபன் பாக்சைக் கொடுத்தாள்.

”உனக்கு..?” என அவளைக் கேட்டான்.

”இன்னொரு டிபன் இருக்கு..! எனக்குத்தெரியும்.. இன்னிக்கு நீ லஞ்ச் கொண்டு வந்துருக்க மாட்டேன்னு..! உங்கக்காவுக்கு இன்னும் நல்லாகலையா..?” என அககறையோடு கேட்டாள்.

”ம்கூம்..” தலையை ஆட்டினான்.

”உங்க மச்சான்.. வந்துட்டாரா..?”

” இல்லே…”

” அடப்பாவி… கூட யாருமே.. இல்லயா..?” என அவள் கேட்டதும் அவனுக்கே.. ஒரு மாதிரி.. மனசு கஷ்டமாகி விட்டது..!
”நீயாவது கூட இருந்துருக்கலாமில்ல.. பாவம்..” என்றாள்.

”அந்தளவுக்கு.. ஒன்னும் சீரியஸ் இல்லே..” என்று சமாளித்தான்.

”சரி… நீ சாப்பிடு..” என்று விட்டு பெண்கள் பகுதிக்குப் போனாள் கீர்த்தனா.

வேலை முடிந்து.. அவன் வீடு போனபோதும்.. படுக்கையில்தான் இருந்தாள் உமா.
அவளை ஒட்டி உட்கார்ந்து.. அவள் நெற்றியைத்தொட்டுப் பார்த்துவிட்டு கேட்டான்.
”ஆஸ்பத்ரி போனியா..?”

”ம்..” என்றாள் உமா.

”எத்தனை ஊசி..?”

” ரெண்டு பக்க டிக்கிலயும்.. ஒரொரு ஊசி..” என லேசாக சிரித்தாள்.
அவள் குரல் மிகவும் பலவீனமாக இருந்தது..! தலைமுடி கலைந்து முகம் வாடியிருந்தது..! அவளது உதடுகள் கூட.. லேசாக வறண்டிருந்தது..!

”இன்னும் காச்சல் இருக்கா..?”

”காச்சல் இல்ல..! ஆனா.. கை.. காலெல்லாம் பயங்கர அசதி..!!”

” மாத்திரை சாப்பிட்டியா..?”

” ம்..ம்ம்..”

”கஞ்சி குடிச்சியா..?”

” ம்..ம்ம்..!”

”இப்ப.. டீ..ஏதாவது..?”

”வேணாண்டா… வாயெல்லாம்..கசக்குது.! வாய்ல எதுவுமே வெக்க முடியறதில்ல..!” என்றாள்.

”அப்ப…சரியாகிரும்..!!” என்றான்.

சிறிது நேரத்தில் கீர்த்தனா தன் தங்கையுடன் வந்தாள். அவள் கையில்.. பிரெட்டும்… பிஸ்கெட்டும் இருந்தது..!
அவள்களைப் பார்த்ததும் உமா எழுந்து உட்கார்ந்தாள்.

”வாப்பா…” என்று வரவேற்றாள்.

”இப்ப எப்படிக்கா இருக்கு..?” கீர்த்தனா கேட்டாள்.

”தேவலப்பா.. உக்காருங்க ரெண்டு பேரும்..”

”தாமு சொன்னான்.. நைட் ரொம்ப காச்சல்னு.. ஆஸ்பத்ரி போனீங்களா..?”

” ம்..! போனம்பா..! நைட்டெல்லாம்.. செரியான குளிர் காச்சல்..! என்னால சேந்து… இவனுக்கும் சரியா.. தூக்கமில்ல..!!” என்றாள் உமா.

”இருக்கறதுதான்க்கா..! தாமு கவனிக்கலேன்னா வேற யாரு கவனிப்பாங்க… உங்கள..? இந்த நேரம் பாத்து.. உங்க ஹஸ்பெண்டும் ஊர்ல இல்ல..” என்றாள்.

கீர்த்தனா சுடியிலும்.. சைலா லெக்கின்ஸிலும் இருந்தார்கள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு.. தாமுவிடம் கேட்டாள் கீர்த்தனா.
”சாப்பிட.. இன்னிக்கு என்ன பண்ணப்போறே..?”

”கடைலதான்..!”என்று சிரித்தான்.

”நாங்க இப்ப கடைக்குத்தான் போறோம்..”

” நானும் வரேன்..” என்றான்.

” நீ.. வரவேண்டாம்..! இங்கயே இரு.. நானே கொண்டு வரேன்..!” என்றாள் கீர்த்தனா.

”உனக்கு எதுக்குப்பா.. சிரமம்..?” என்று குறுக்கிட்டுக்கேட்டாள் உமா.

”அய்யோ.. எனக்கெல்லாம் ஒரு சிரமமும் இல்லேக்கா..! தாமு இங்கருந்தா.. உங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்..!” என்று சிரித்து விட்டு எழுந்தாள்.

” பரவால்ல..! நீ கடைல இரு.. நானே வந்து வாங்கிக்கறேன்..!!” என்றான் தாமு.

அரைமனதாக”ம்..ம்ம் சரி..வா…” என்றாள்.

அக்கா.. தங்கை இருவரும் விடைபெற்றுப் போன பின் கேட்டாள் உமா..!
”நானே கேக்கலாம்னு நெனச்சேன்.. எப்படிடா போகுது.?”

அவளைப் பார்த்தான் ”என்ன..?”

”லவ்வு…?”

சட்டென ஒரு சங்கோஜம் வந்தது. ”அதெல்லாம் ஒன்னுமில்ல…” என்றான் டிவியைப் பார்த்துக் கொண்டு.

”எங்கே… என்னைப் பாத்து சொலலு..” என்றாள்.

அவளைப் பார்த்தான். ”ஒன்னும் இல்ல..!”

”என் கண்ணைப் பாத்து சொல்லு..?”என்று முகத்தின் முன் விரலைக்காட்டி.. விக்ரம் ஸ்டைலில் கேட்டாள் உமா.

சிரித்துவிட்டான் ”போ..!!”

” எப்படி போகுது…இப்ப..?” என்று கேட்டாள்.

”அதான்.. நீயே பாக்ற இல்ல..?”

”எனக்கு ஓகேடா..! கல்யாணம் பண்ணிக்குவியா..?”

”ஏன்..?”

”ஆள் நல்லாருக்கா..! நல்ல புள்ளையாவும் இருக்கா..! கட்டிக்கோ… நீ நல்லாருப்ப…!!”

” உனக்கு புடிச்சிருக்கில்ல..?”

” ம்.. ம்ம்…!! அவ பேசறது.. பழகறது.. எல்லாமே புடிச்சிருக்கு..!!”

உமா சொன்னது அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. தன் காதலை அவள் அங்கீகரித்து விட்ட பூரிப்பில்.. உமாவின் கால்களைப் பிடித்து விட்டான்.

மேலும் அரைமணிநேரம் கழித்துக் கிளம்பினான் தாமு.
சரவணனைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று.. அவன் வீட்டுக்குப் போனான்.

வீட்டில் சரண்யா மட்டும்தான் இருந்தாள்.
நைட்டியில் இருந்தாள்.

”உங்கண்ணன் இல்லையா..?” என்று அவளிடம் கேட்டான்.

”இருக்கான்..!” என்றாள்.

” எங்க. .?”

” அது தெரியாது..!!” என்று சிரித்தாள்.

”என்ன… நெக்கலா..?”

”ச்சும்மா….” என்றாள் கண் சிமிட்டி..!

”உங்கம்மா…?”

”இன்னும் வரல…”

” சரி… நான் வரேன்.!” என்று திரும்பினான்.

”என்ன மேட்டர்..?” என்று கேட்டாள்.

அவளைப் போலவே ”ச்சும்மா..” என்று கண் சிமிட்டினான்.

சிரித்தாள் ”அவன மட்டும்தான் பாக்க வருவீங்களோ..?”

”வேற யார பாக்க வரதாம்..?”

”ஏன்… எங்கள பாக்க வரமாட்டிங்களா..?”

”உங்கள பாத்து.. என்ன பண்றது..?”

”இது என்ன கேள்வி..? பேசலாமே ஜாலியா..?”

”ஜாலியாவா…?”

” ம்…! அப்றம் சைட்டடிக்கலாம்.. கல்லை போடலாம்..! இப்படி.. எவ்ளோ இருக்கு…?”

”சைட்டு..? கல்ல…? அவ்வளவுதானா..?”

”இதுக்கு மேல.. உனக்கு என்ன வேனும்..? கிஸ்.. ஓகேவா .?” என்று இயல்பாகச் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

”ஏய்.. என்ன சரண்.. பேசற..?”

” ம்..! வாயேன்… இப்ப நான் மட்டும் தனியாத்தான இருக்கேன்…!!” என்று கண்ணடித்தாள்.

” நீ… என்னைவே கலாய்க்கற பாத்தியா..! வேண்டாம்ப்பா.. வம்பு..!!”

”பயந்தாங்கோழி..!”என்று சிரித்து ”சரி.. ஒரு ஆட்டம் போடலாமா..?” என்று கேட்டாள்.

”என்ன ஆட்டம்..?”

”கேரம்….”

நிச்சயம்.. அவளை.. அவனால் வெல்ல முடியாது. யோசணையாகப் பார்த்தான்.

”பணம் வெச்சிருக்காயா..?” என்று கேட்டாள்.

”வேனுமா..?”

”பெட் மேட்ச் வெளையாடலாம்..! அம்பது ருபா..”

” பெட் மேட்ச்சா..?”

” ம்..! நான் உனக்கு.. தரனுமில்ல..? அதுல கழிச்சிக்கலாம்..”

” அதுக்கு நான் .. ஆடவே தேவையில்ல..”

”ஏன்..?”

”எப்படியும் நீதான்.. ஜெயிப்ப..!!”

” மோதிப்பாக்கலாம் வா..” என்றாள் ”ஒண்டிக்கு.. ஒண்டி..”

தாமு பேசாமல்.. நின்றான்.
அவன் பக்கத்தில் வந்து.. அவன் தோளில் கை வைத்தாள் சரண்யா.
”வா… மச்சான்..”

” வேண்டாம்..” என மறுத்தான்.

”ஏன்..?”

” ஜெயிக்கப்போறது என்னமோ… நீதான்..! அப்பறம் எதுக்கு வேஸ்ட்டா..? எனக்கு இப்ப வெளையாடற மூடும் இல்ல..!” என்றான்.

அவனை உற்றுப்பார்த்தாள்.
”சண்டையா..?”

புரியாமல் அவளைப் பார்த்தான்.
”என்ன…?”

”கீர்த்தனாவோட.. சண்டையா..?”

”சே ! அதெல்லாம் ஒன்னும் இல்ல ..”

”அப்றம் ஏன்.. மூடு அப்செட்டா இருக்க. .?”

”அப்செட்னு இல்ல….”

”விடு மச்சான்.. இந்த கருமம் புடிச்ச.. லவ் பண்ணாலே அப்படித்தான்..! நம்ம மூடு எப்ப.. எப்படி இருக்கும்னு நமக்கே தெரியாது..!!” என்று சிரித்தாள் ”வா.. கொஞ்ச நேரம் உக்காந்து பேசலாம்..”

”ஏன். . உனக்கும் பேச ஆள் கெடைக்கலியா…?”

” அப்படித்தான் வெச்சிக்கயேன்..! ரெண்டு ஆட்டம் போட்டம்னா… எல்லாம் சரியாகிரும் மச்சான்..! பெட் வேண்டாம்.. சும்மா வெளையாடலாம்… வா..!!”

அவனுக்கும்.. விளையாடலாம் என்றுதான் தோண்றியது.
”ம்… நீயும் விடற மாதிரி இல்ல..”

”அட.. வா.. பையா..! சும்மா.. என்னமோ..” என அவன் கையைப் பிடித்து இழுத்துப் போனாள்..!

இருவரும் உட்கார்ந்து காயினை எடுத்து அடுக்கும்போது… சரவணன் வந்து விட்டான்…!!
அவனும் ஒரு பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள.. மூவரும் விளையாடினார்கள்..
நிறைய அரட்டை அடித்தபடி….!!!!!!!

– நீளும்…….!!!!!!!

NEXT PART

1 thought on “பனித்துளி – 47 <span class="desi-title">(Panithuli 47)</span>”

Leave a Comment