உன்னைக்கொடு என்னைத்தருவேன் – 1 (Tamil Kama Stories - Unnaikodu Ennaitharuven 1)

Tamil Kama Stories – உன்னைக் கொடு என்னைத் தருவேன் – 1
நன்பர்களே . அதிகமாக மிகைப் படுத்தப்படாதது.. அதிகம் மிகைப் படுத்தாதலாலே கொச்சை வார்தைகள் இருக்காது..எனதுக் காதல் எனதுக் காமம் என இது எனதுக் கதை…

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : sowmiya p

1

நான் அருன் சக்திவேல்.. வயது 44 சென்னையில் சி.ஏ முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு கம்பெனியில் ஜி.அம் •பினான்ஸ் ஆக இருக்கிறேன். என் மனைவி ப்ரியாவும் நானும் காதலித்துத் திருமனம் செய்துக் கொண்டோம். 2 குழந்தைகள். அமைதியான வாழ்க்கை.. முன்புப் போல தினம் இல்லாவிட்டாலும் 5 வருடங்களாக எங்களுக்குள் வாரம் ஒருமுறை தாம்பத்யம் நடைபெறும்.. ஒவ்வொரு திங்கள் கிழமையும் நான் காலை லேட்டாகத்தான் ஆ•பீஸ் செல்வேன். என் பெண்( எஞ்சி¢னியரிங் முதல் வருடம்) காலை 7.15 க்கும் பையன் (11ஆம் வகுப்பு) 7.45 மணிக்கும் கிளம்பியதும் ஆரம்பிக்கும் எங்கள் கா(மம்)தல் 2 மணி நேரம் நீடிக்கும்.. அதன் பின் ஆ•பீஸ் சென்றுவிடுவேன். எனது மகள் 9 ஆம் வகுப்பு வந்ததும் பிள்ளைகள் பெரியவர்களாக ஆகி விட்டார்கள் இனி நம் ஆட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் இருவரும் கலந்து எடுத்த முடிவு இது. இரவில் பெண் கண் விழி¢த்துப் படிப்பதாலும் காலையில் சமையல் வேலை இருப்பதாலும் வாரம் ஒருமுறை இப்படி வைத்துக் கொள்வதாக முடிவு செய்தோம்…

ம்ம்ம்ம்.. விளையாட்டாக 25 வருடம் ஆயிற்று.. எங்கள் காதல் ஆரம்பித்து.. இப்பவும் நாங்கள் எங்கள் காதலை மதிப்பதால் வாழ்க்கை சுகமாக சென்றுக் கொண்டிருக்கிறது..

எங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி சொல்வதென்றால் இன்று முழுதும் சொல்லிக்கொண்டேயிருக்கலாம்..

1983 ஆம் வருடம் நான் ப்ரெசிடென்ஸி கல்லூரியில் பி.காம் 3ஆம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதுப் போல அந்தக் காலத்தில் மாணவர்களிடம் பைக், கார் வசதிகள் இல்லை… பல்லவன்தான் பெரும்பாலும். எங்கள் வீடு நந்தனத்தில் இருந்தது.. தினமும் 45-பி யில் தான் காலேஜ்..அப்போது 8.10க்கு ஒரு பஸ் வரும் அதில்தான் தினமும் பயனம் செய்வேன். இந்த ஆண்டு கல்லூரி ஆரம்பித்து 1 வாரம்தான் ஆயிற்று.. அப்போதெல்லாம் எங்கள் காலேஜில் எலக்ஸன் ரொம்பப் பிரபலமானது.. எலக்ஸன் முடிந்தப் பின்தான் வகுப்புகள் ஒழுங்காக நடைபெறும். அதுவரை ஒரே கலாட்டாதான்.. பகல் முழுதும் கேண்டீன், மாலையில் பீச்.. ஏதோ அந்த மெரினாவே எங்கள் காலேஜிக்காக படைக்கப்பட்டதுப் போல ஒரு எண்ணம்..

2

அன்று ஜூலை 12ம் தேதி அன்றுதான் என் ப்ரியாவை நான் முதன் முதல் பார்த்தது..கருப்புக் கலர் சல்வாரில் இருந்தாள்.. உயரம் சுமார் 5.4 அடி இருப்பாள்.. கையில் 2 A4 சைஸ் நோட்புக்ஸ்.. சின்னதா ஒரு ஹேண்ட்பேக்.. துப்பட்டாவைக் கவணமாக ஒழுங்காகப் போட்டிருந்தாள். நான் வந்த அதே 45பி பஸ்ஸில் மைலாப்பூர் காமதேனு ஸ்டாப்பில் ஏறினாள். நான் எப்போதுமே முன் பக்கப் படிக்கட்டில் தான் பயனம் செய்வேன். அன்று அவள் காமதேனு ஸ்டாப்பில் ஏறி பெண்கள் பக்கம் படிக்கட்டுக்கும் முதல் சீட்டிற்கும் இடையே நின்றுக் கொண்டாள். குழந்தைத் தனம் மாராத முகம்.. உடைக்கு வெளியில் தெரிந்த கைகளும் முகமும் சந்தனக் கலர். கருப்பு சவாருக்கு இன்னும் பளிச்சென்றுத் தெரிந்தது.. நெற்றியில் 5 mm அளவிற்கு விபூதி வைத்திருந்தாள் அதனடியில் 3mm சைஸில் குங்குமம். எல்லாவற்றிகும் சிகரம் வைத்தமாதிரி அவளைப் பார்த்ததும் என்னைக் கவர்ந்தது அவளது முடி. இந்த 25 வருடங்களில் என்னிடம் அதிகமாக கொஞ்சல் வாங்கியது அந்த முடிகள் தான். நன்கு சுருண்டிருந்த கேசத்தை அழகாகப் பின்னியிருந்தாள். நடு முதுகு வரை வந்த சடையின் அடிப்பகுதியில் 2 கைகளாலும் சேர்த்துப் பிடிக்கும் அளவிற்கு ஒரு பந்துப் போல சுருண்டுக் கிடந்தது. அதைப் பார்த்த முதல் தருனத்திலேயே அவளின் அந்த முடிப் பந்தை தொட்டுப் பார்க்க வேண்டும் போல இருந்தது. காதை ஒட்டி அலை அலையாக கொஞ்சம் முடிக் கற்றை ஓடியது.. அவள் பின்பக்கம் திரும்பி நின்றிருந்ததால் எனக்கு அவளது முடிதான் முதலில் தெரிந்தது.. நான் பிடித்திருந்தக் கம்பியையே அவளும் பிடித்திருந்தாள்…QMC காலேஜ் ஸ்டாப்பில் இறங்கினாள். இறங்கும் போது அவளிடம் “ஹாய்.. யூ ஹாவ் நைஸ் ஹேர்” என்றேன். என்னை ஒரு விநாடி பார்த்துவிட்டு காலேஜ் உள்ளே போய்விட்டாள். என் கமெண்ட் எந்த அளவிற்கு அவளைப் பாதித்தது என்று அன்று எனக்குத் தெரியவில்லை.. ஆனால் நாங்கள் காதலிக்க ஆரம்பித்தப் பின் ஒருநாள் சொன்னாள்…

“அருன் நீதான் என் காதுப் பட என்னைப் பார்த்து கமென்ட் அடித்த முதல் ஆள். ஸ்கூல் எல்லாம் சர்ச் பார்க்கில் வெறும் கேர்ள்ஸ் தான்.. எப்போதும் அப்பா என்னை காலையில் விட்டு விடுவார்.. மதியம் வீட்டிற்கு வர கார் வந்துவிடும். நான் தான் அப்பாவிடம் காலேஜிற்கு நான் பஸ்ஸில் தனியாகத் தான் போவேன் எனப் பிடிவாதம் பிடித்து சம்மதம் வாங்கினேன். நீ என்னை •பர்ஸ்ட் டைம் பார்த்த அன்னைக்குத்தான் எனக்கு காலேஜ் •பர்ஸ்ட் டே.. நான் தனியா பஸ்ஸில வந்த முதல் நாளும் அதுதான். முதல் நாளே ஒருத்தன் கமென்ட் அடித்ததும் உள்ளுக்குள் சந்தோசமாகவும் பயமாகவும் இருந்தது.. ஆனால் யாராவதுப் பார்த்து அப்பாவிடம் சொல்லிவிட்டால் அவ்வளவுதான் தனியா வரும் சுதந்திரம் போய்விடும் என்பதால் எந்த ரீயாக்ஸனும் காட்டாமல் போய்விட்டேன்” என்றாள்.

அன்றைக்கு அவள் QMC காலேஜில் படிக்கிறாள் காமதேனு ஸ்டாப்பில் பஸ் ஏறுகிறாள் என்ற 2 விசயங்களைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது.. ஆனால் நாள் முழுதும் அவள் நினைவாகவே இருந்தது.. அடுத்த நாள் என் பஸ் காமதேனு ஸ்டாப் வந்த போது மனம் பட படவென் அடித்துக் கொண்டது.. ஆனால் அவள் அன்றைக்கு வரவில்லை. எனக்கு அன்று வகுப்பிற்கு செல்லவே மனம் வரவில்லை. பாரதியார் சிலை அருகே மரத்தடியில் அமர்ந்திருந்துவிட்டு வீடு திரும்பினேன். அடுத்து வந்த 2 நாட்களும் அவள் கண்ணிலே படவில்லை…. ஆனால் மனம் அவளை இழக்கத் தயாராக இல்லை.. என்னை மாதிரி அவளும் ஒரே பஸ்சில் காலேஜ் போவாள் என எதிபார்த்து 3 நாளை வீனக்கியது தப்பென புரிந்தது. அதனால் திங்கள் கிழமை காலை 7.00 மணிக்கெல்லாம் மைலாப்பூர் காமதேனு ஸ்டாப்பிங் சென்று நின்று விட்டேன்.. 7.55க்கு என் தேவதை வந்தாள்.. அன்று ஆரஞ்ச் நிற காட்டன் சேலைக் கட்டியிருந்தாள். அதில் சின்ன சின்னதாய் சிகப்பில் பூக்கள் இருந்தது.. காட்டன் புடவையில் ம.செ.( மணியன் செல்வம் ) ஓவியத்தில் வரும் பெண் போலவே இருந்தாள்.. என்னை அவள் கவணிக்கவில்லை ஆனால் என் அதிர்ஸ்டம் அவளுக்கு முன்புற படிக்கட்டின் அடுத்து உள்ள சீட்டில் உட்கார இடம் கிடைத்தது. நான் வழக்கம் போல படிக்கட்டில் நின்றுக் கொண்டேன்.அவளது கவனத்தை என் பக்கம் எப்படித் திருப்புவது என யோசித்துக் கொண்டிருந்தேன். பஸ் எல்லோ பேஜ் ஸ்டாப்பில் நின்றது.. நான் என் புக்ஸை அவளிடம் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமா என் யோசித்தேன். வேண்டாமென்று விட்டு விட்டேன். எதற்குமேத் தய்ங்கிப் பழக்கமில்லாத நான் அவளிடம் என்னப் பேசுவது எனத் தயங்கியது எனக்கே வியப்பாக இருந்தது. பின் சட்டென்று அவள் பக்கம் திரும்பி..”ஹலோ” என்றேன்.. அவள் என் முகத்தைக் குழப்பத்துடன் பார்த்தாள்..QMC அருகே வந்திருந்தது.. என் அவள் இறங்கிவிடுவாள் என்றதும் அவளிடம் ” யூ ஹாவ் நைஸ் ஹேர் ரொம்ப அழகா இருக்கு” என்றேன்.அதற்குள் அவள் இறங்கும் இடம் வந்தது.. என்னை சின்ன சிரிப்புடன் பார்த்துக் கொன்டே இறங்கினாள். எனக்கு எதையோ சாதித்துவிட்டத் திருப்தி.

3

அடுத்த நாளும் காலை 7.30க்கெல்லாம் காமதேனுவில் நின்றிருந்தேன்.. 7.50க்கு அவள் வந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் கண்கள் தடுமாறின. பார்வையைத் தாழ்த்தி பஸ் க்காகக் காத்திருந்தாள். அப்போது 12-பி ஒன்று வந்தது.. அது அவளது கல்லூரிப் போகும் ஆனால் என் கல்லூரிக்குப் போகாது. பின்னாலே 45-பி ஒன்று வந்தது..நான் அவள் காதில் விழுவதுப் போல் “பின்னால வரும் பஸ்சில் போகலாமே ப்ளீஸ்” என்றேன். அவளால் டக்கென்று முடிவெடுக்க முடியவில்லை..கொஞ்சம் தயங்கினாள். அப்போது 12-பி இல் இருந்து ஒரு பென் அன்னவளைப் பார்த்து “ப்ரியா.. காலேஜ்தானே போற.. கமான்” என்றாள். வேறு வழியில்லாததுப் போல் என்னவளும் அதில் ஏறினாள். நானும் ஏறலாமா என யோசித்தேன்.. அவள் என்னை “சாரி” என்பதுப் போலப் பார்த்தாள். நான் நகர்ந்து பின்னல் வந்த 45-பி இல் ஏறிக் கொண்டேன். ஆனால் அவளது பெயர் தெரிந்துக் கொண்ட மகிழ்ச்சியில் மனம் துள்ளிக் கொண்டு இருந்தது.

அடுத்து வந்த சில நாட்கள் 7.30 க்கெல்லாம் காமதேனு ஸ்டாப்பில் நிற்பதை வழக்கமாக்கியிருந்தேன். கவனமாக தினம் ஒரு ஸ்டைலில் ட்ரெஸ் பன்னிக் கொண்டேன். ஆனால் அவளிடம் பேச முயலவில்லை. ஒருநாள் அவளுக்குக் கேட்கும் விதத்தில் ப்ரெசிடென்ஸி ஒரு டிக்கெட் என சத்தமாகக் கேட்டு நான் படிக்குமிடத்தை தெரிவித்தேன். 15 நாட்களுக்குப் பின் ஒருநாள் நான் காலை பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் அவள் வந்தால் அவள் கண்ணில் படாத மாதிரி தள்ளி மறைந்து நின்றிருந்தேன். அன்று எனக்காக 8 மணிவரை அவள் காத்திருந்தாள்.. அதன் பின் வந்த ஒரு பஸ்ஸில் ஏறினாள். பஸ் கிளம்பும் நேரம் நான் வேகமாக ஓடிவந்து ஏறிக் கொண்டேன். வழக்கமான இடத்தில் நாங்கள் நின்றிருந்தோம். நான் அவளிடம் எனக்காகத் தானே காத்திருந்தீர்கள் என்றேன்.. அவள் நாணம் கலந்த சிரிப்புடன் ஆம் என்பதுப் போலத் தலையாட்டினாள்.

இன்னொரு நாள் எனக்கு மிகவும் பிடித்த கருப்பு ஜீன்ஸ்ம் வெள்ளை டீ சர்ட்டும் போட்டிருந்தேன். அன்று பஸ்ஸில் செல்லும் போது அவளிடம் “ஈவ்னிங் ஒரு 10 நிமிடம் எனக்காக பீச் வர முடியுமா?” என்றேன். அவள் தயக்கத்துடன் ” மற்ற ஸ்டூடன்ட்ஸ் நிறையப் பேர் இருப்பார்கள் பயமாக இருக்கு” என்றாள். நான் அவளை அவள் காலெஜ் முன்னால் வேண்டாம் ஏதாவது ஆட்டோ பிடித்து உழைப்பாளர் சிலை அருகே வந்து விடுங்கள்” என்றேன். அவள் 4.00 மணிக்கு வருவதாகச் சம்மதித்தாள். எங்கள் காதல் கணியத் துவங்கியது அன்றுதான். நாங்கள் பாரதியார் சிலைக்கு எதிர் புறம் உள்ளா ஆவின் பார்லரில் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு உழைப்பாளர் சிலைக்கும் பாரதியார் சிலைக்கும் இடையில் உள்ள ஒரு மரத்தடியில் நின்றுக் கொண்டு பேசினோம். எங்களிடையே நிறையத் தயக்கமிருந்தது. அவள் பி.ஏ. லிட்ரெச்சர் முதல் வருடம் படிப்பதாகச் சொன்னாள். அவள் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் காதலுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றாள். நான் எப்படியும் பெற்றோர்களை சம்மதிக்க வைக்க முடியும் என்றேன்.

அவளிடம் “ப்ரியா நான் பொழுதுப் போக்கிற்காக பெண்களை சைட் அடித்துக் கொண்டு சுற்றும் ரகமல்ல.. ரொம்ப சீரியஸா காதலை எடுத்துக் கொள்கிறவன்.. என்னையும் என் காதலயும் அக்ஸப்ட் பன்னுவது உங்கள் இஸ்டம் ஆனால் இப்ப சரி என்று சொல்லிவிட்டு பின்னால என் அப்பா மறுக்கிறார் வேறு வழியில்லை என்றெல்லாம் சொல்ல சான்ஸ் இருக்கு என்றால் இப்பவே நாம் பிரிந்து விடுவோம். நல்லா யோசித்துச் சொல்லுங்க.. ஆனல் உறுதியான முடிவை எடுங்க.. என்னால என் உயிர் இருக்கும் வரை உங்களுடன் சந்தோசமாக வாழமுடியும்.. அதே நேரம் உங்கள் பேரன்ட்ஸையும் என் பேரன்ட்ஸாக மதித்து அன்பு காட்டுவேன்.. இத்தனை நாளில் என் வாழ்க்கையில் எனக்கு எதிரிகளே இல்லை.. யாரிடமும் சண்டைப் போட்டதில்லை.. அந்த மாதிரி கேரக்டர் உள்ள நான் எனக்காக தன்னில் பாதியைத் தருபவளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்கமாட்டேன்

நான் பேசியதில் நெகிழ்ந்து நின்றாள்.. இன்னும் 3 நாட்கள் அவகாசம் எடுத்துக்கலாமா எனக் கேட்டாள். நான் 10 நாள் யோசிக்கிறதுன்னாலும் சரி ஆனால் உறுதியான முடிவை எடுங்க என்றேன். அவளிடம் அவள் முடிவு சொல்வது வரை காலையில் அவளைப் பஸ்சில் பார்க்க மட்டும் அனுமதிக் கேடுப் பெற்றுக் கொண்டேன்.அன்று அவளை மட்டும் ஆட்டோவில் அனுப்பிவிட்டு நான் பிறகு பஸ்ஸில் சென்றேன். அடுத்த நாள் எனக்குப் பிடித்த வெளிர் மஞ்சள் சல்வாரில் வந்திருந்தாள். அவளைப் பார்த்தாலும் அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். அவள் இறங்கும் இடம் வந்ததும் என்னிடம் முதல் நாள் மாதிரியே பாரதி சிலையருகே 4.00 மணிக்கு வரச் சொன்னாள். டிஸைட் பண்ணிட்டிங்களா என்று நான் கேட்க.. என் கண்களைப் பார்க்காமல் “ப்ளீஸ் ஈவ்னிங் வாங்க சொல்றேன் 4 வேண்டாம் 3 மணிக்கே வந்துடுங்க.. நிறையப் பேசனும்” என்று சொல்லி இறங்கிப் போய் விட்டாள்..

அவள் கண்களில் பார்த்த சோகத்தைக் கண்டு எனக்கு உள்ளுக்குள் பயம் .. மதியம் 2 மணிக்கெல்லாம் காலேஜிலிருந்து வெளியே வந்து பாரதி சிலையருகே சென்று சிலையிலிருந்து 4 ஆவதாக இருந்த ஒரு புங்கை மரத்தின் அடியில் உட்கார்ந்தேன். சரியாக 3 மணிக்கு வந்தாள். சற்று சோகமாக இருந்தாள். என்னிடம் ” அருன் தயவு செய்து என்னைத் தப்பாக எடுத்துக்காதீங்க.. நான் என் அப்பாவை மதிக்கிறேன்,,நேசிக்கிறேன் ஆனால் என்னதான் அவர் பார்த்து பார்த்து எனக்கு ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தாலும் வரவனும் என் பெற்றோர்களை மதிப்பான் என்றோ அல்லது என்னை என் பேரன்ட்ஸ் உடன் இதுப் போலவே பழக விடுவான் என்பது நிச்சயமில்லை. நேத்து நீங்கள் பேசியதிலிருந்து நீங்கள் என் மீது உள்ளக் காதலையும் வெளிப்படுத்தி அதே நேரம் என்னை கம்ப்பெல் பன்னாமல் என் முடிவிற்கும் விட்டதும் அப்புறம் என் பேரன்ட்ஸ் பற்றி சொன்னதும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நானும் உங்கள் கதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கேன். நிச்சயம் அன் அப்பாவை நான் மதிப்பதுப் போல அவரும் என் •பீலிங்ஸ்ஸை மதிப்பார் என் நம்புகிறேன். அவரிடம் நம் காதலை சொல்வதற்கு முன் நீங்கள் உங்களை இன்னும் குவாலி•பை பன்னிக்கிறது பெட்டர்.. ஒரு வேளை நம் காதலுக்கு எதிர்ப்பு ரொம்ப இருந்தா நான் யாரையும் கல்யானம் பன்னிக்காம இருக்கேன். நம் பேரன்ட்ஸ் காலத்திற்குப் பின் கல்யானம் செய்துக்கலாம்.. லக் இருந்தால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சந்தோசமா எவ்வளவு சீக்கிறம் மேரேஜ் பன்னிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிறம் பன்னிக்கலாம்” என்றாள்.

அதன் பின் தினம் நான் காமதேனுவில் காத்திருப்பதில்லை காலை 7.30க்கு நந்தனன்த்திலிருந்து கிளம்பும் 45-பி ல் வருவேன். அது 7.50க்கு காம தேனு வரும் என்னை பார்த்ததும் ப்ரியா அதில் ஏறிக் கொள்வாள். நான்தான் அவளுக்கு டிக்கெட் எடுப்பேன். வாரத்தில் 2 நாட்கள் பீச்சில் பாரதி சிலைக்கருகே சந்தித்துக் கொண்டோம்.

பாரதியார் சிலைக்கும் உழைபாளர் சிலைக்கும் நடுவில் பாரதியாரிடமிருந்து 4 ஆவதாக இருக்கும் புங்கை மரம் எங்களது காதல் ஸ்பாட் ஆனது.

என் ப்ரியாவிடம் அவள் முடிக்கு அடுத்து என்னைக் கவர்ந்த அழகு அவள் கழுத்து.. அவள் வலதுப் பக்கம் திரும்பினாள் கழுத்தின் இடதுப் பக்கமும் இடதில் திரும்பினால் வலதுப் பக்கத்திலும் காதிலிருந்து காலர் போன் வரை புடைத்துக் கொண்டுத் தெரியும் அந்த அழகான ” ஹையாய்ட் எலும்பு.. அப்படியே கடிக்க வேன்டும் போல வெறி வரும். தலை முடிக்குப் பிறகு என்னால் அதிகமாகக் கொஞ்சப் பட்டது அந்தப் பாகம்தான்.

நாங்கள் காதலிக்க ஆரம்பித்து 5 மாதங்களில் என் ப்ரியாவின் தலை முடி, அவள் கைகள் அப்புறம் எனக்குப் பிடித்த கழுத்து எலும்பு தவிர நான் அவளை எந்தப் பகுதியிலும் தொட்டதில்லை. என் ப்ரியாவிற்கு மிகவும் பிடித்த கமல் நடித்த சலங்கை ஒலி தான் நாங்கள் பார்த்த முதல் படம்.

அதன் பிறகு அவள் ஆசைப்பட்டதால் சென்னையில் எந்த மூலையில் நடந்தாலும் தேடித் தேடி பழைய அவள் பார்க்கத் தவறிய கமலஹாசன் படங்களுக்குச் சென்றோம். 70 களின் நடுவில் வந்த ஒரு மலையாளப் படத்தின் டப்பிங் ” பருவக்காலம்” என்று ஒரு படம்.. கமல் ஜரினா வஹாப் நடித்தது.. படம் முழுதும் 2 கேரக்டர்ஸ்தான்.. காதல் கல்யானம்.. நாயகன் மனைவியைத் தாங்குத் தாங்கென்று தாங்குவான்.. சில வருடங்களில் நாயகி கேன்சரில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து விடுவாள்.. அந்தப் படம் பார்த்தப் போது 21/2 மனி நேரமும் என் கையைப் பிடித்து அழுதுக் கொண்டே இருந்தாள்.. படம் முடிந்ததும் அருன் இதுப் போல நம்மில் யாருக்காவது ஏதாவது வந்துச்சுன்னா நாம கக்ஷ்டப்பட வேன்டாம்.. 2 பேரும் சேர்ந்து செத்துடலாம் எனச் சொன்னாள்..

அந்த வருடம் பி.காம் முடிந்ததும் நான் சி.ஏ சேர்ந்தேன். என் அப்பா எனக்கு ஒரு பைக் வாங்கித் தந்தார். காலையில் காமதேனுவில் பஸ் ஏறும் ப்ரியா அடுத்து திருவள்ளுவர் சிலையில் இறங்கி என் பைக்கில் ஏறிக் கொள்வாள். நாங்கள் எங்கள் பாரதி சிலை மரத்திற்குப் போய் 5 நிமிடம் பேசிக்கொன்டிருந்துவிட்டு அவளை அவள் காலேஜில் விடுவேன். அங்கிருந்து எங்கள் ஆடிட்டர் ஆ•பீசுக்குச் செல்வேன். இது எங்கள் அன்றாட வழக்கமாயிற்று.

நான் ட்ரெயினிங் எடுத்துக் கொண்டிருந்த ஆடிட்டர் ஆ•பீசில் ஏ.வி.எம் ஸ்டுடியோ மற்றூம் அவர்கள் இதர நிறுவனங்களுக்கு நாங்கள் தான் ஆடிடர்ஸ். ஒருநாள் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஆடிட் செய்துக் கொண்டிருந்தப் போது ராஜேஸ்வரி தியேட்டரில் “புன்னகை மன்னன்” ப்ரிவியூ அடுத்தநாள் இருப்பதாக செய்திக் கிடைத்தது. நான் அவர்கள் மேனேஜரிடம் 2 டிக்கெட் கேட்டேன். நிறைய வி.ஐ.பி க்கள் வருவதால் 10 மணிக்கு காட்சி ஆரம்பமாகும் அதனால் 9.30க்கெல்லாம் உள்ளே வந்து வடுமாறும்.. காட்சி முடிந்து வி.ஐ.பி க்கள் வெளியேறிய பின் வெளியே வரும்படியும் கூறி 2 டிக்கெட் கொடுத்தார்..

நானும் ப்ரியாவும் 9.30க்கெல்லாம் உள்ளே அமர்ந்தோம்.. திரையுலகப் பெறும் புள்ளிகள் கமல் ரஜினி உட்பட அனைவரும் வந்திருந்தார்கள்… படம் ஆரம்பித்தது.. என்ன சத்தம் இந்த நேரம் பாடல்.. சந்தோசத்தில் என் கைகளை இருக்கிப் பிடித்திருந்தாள். அடுத்த 3 ஆவது நிமிடம் கமலும் ரேகாவும் அந்த நீர் வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள.. கமல் மட்டும் ஒரு மரத்தில் மாட்டித் தொங்கிக் கொண்டே கத்தும் சீனைப் பார்த்ததும் டக் கென்று எழுந்துக் கொண்டாள்.. என் கையைப் பிடித்து “அருன் போகலாம் வாங்க இப்படி ஒருப் படத்தைப் பார்த்தால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.. ப்ளீஸ் வாங்க” என சத்தமாக சொல்லியபடி வெளியே வந்தாள். நாங்கள் வெளியே வரவும் டைரக்டர் பாலச்சந்தர் உள்ளே வர கதவருகே வருவதற்கும் சரியாக இருந்தது.. அவரைப் பார்த்ததும் “சார் நீங்க ஒரு சாடிஸ்ட்.. கலைங்கிறப் பேரில் பணத்துக்காக உங்கள் கேரக்டர்களைக் கக்ஷ்டப்படுதுறீங்க.. இன்னொரு முறை இப்படி செய்யாதீங்க..ப்ளீஸ்” என் அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டபடி கூறி பின் என்னை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல முற்பட்டாள். அவரும் ப்ரியாவிடம்.. ” அம்மா இது எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டு.. ரொம்ப நல்லப் படம்.. உட்கார்ந்து முழுதும் பாரும்மா ” என்றார்.. ப்ரியா அதற்கு உங்கள் என்னமே சரியில்லை சார்.. அவள் ஒரு தொடர்கதையில் ஆரம்பித்து அவர்கள், மரோசரித்ரா, நினத்தாலே இனிக்கும், மூன்று முடிச்சு, இப்ப புன்னகை மன்னன்..எல்லாத்திலும் கமலைக் கக்ஷ்டப் படுத்தி பாக்கிறதில் ஒரு திருப்தி.. ச்சே இனி உங்கள் படமே நான் பாக்க மாட்டேன்..சாரி” என்று சொல்லி கட கட வென வெளியேறினாள்.

வெளியே வந்ததும் நான் ப்ரியாவிடம் ஏன் அப்படி நடந்துக் கொன்டாள் எனக் கேட்க ” அருன் நான் கமலை கமலாப் பாக்க மாட்டேன் என் அருனாகத்தான் பார்ப்பேன்.. என் அருனுக்கு என்னக் கக்ஷ்டம் வேனும்னாலும் வரலாம்.. ஆனால் லவ் •பெயிலியர் மட்டும் வரக் கூடாது.. வாழ்க்கையில் நீ உயிரோடு இருக்கும் வரை நான் வாழனும்.. பின் நீ செத்ததும் உனக்கு செய்ய வேண்டிய சடங்கெல்லாம் முடிச்சுட்டு அப்புறமாத்தான் நான் சாகனும்” என்றாள்.

நீங்களே சொல்லுங்க இந்த அன்பின் முன்னால் ஒரு ஆனின் நிலை எப்படியிருக்கும் என யூகிக்க முடியுதா?……

எங்களுக்குள் காமமே இல்லையா… இருந்தது.. இன்னும் இருக்கு.. சொல்கிறேன்… Mulaigal Tamil Kama Stories

Leave a Comment