என் காம வாசல் 5 (En Kama Vasal 5)

This story is part of the என் காம வாசல் series

    நானும் சுபாவும் டிக்கெட் எடுத்துவிட்டு ரயில் நிலையத்தினுள் நுழைந்த உடனே சுபா பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு காத்திருக்கும் அறையின் உள்ளே சென்றாள். நான் வெளியில் இருந்த மேசையில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தேன். இருபது நிமிடங்களுக்கு பிறகு சுபா புள் மேக்கப்புடன் வெளியே வந்தாள்.

    மேக்கப்பில் சுபா இப்போது தேவதை போல தெரிந்தாள். அவளை அப்படி பார்த்ததும் மேசையில் இருந்து எழுந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன். சுபா என் அருகில் வந்து ஏதோ கூறிக் கொண்டு இருந்தாள், அது எதுவும் எனக்கு கேட்கவில்லை. கடைசியாக “ஏண்டா இந்த பட்டனை போடல” என்று கூறிக் கொண்டே என் குர்த்தாவில் உள்ள மூன்று பொத்தான் களில் இரண்டாவது பத்தானை மாட்டுவது மட்டும் தெரிந்தது.

    நான் சுபாவின் நெற்றி உச்சியில் உள்ள குங்குமம் மற்றும் அவளது தலை வகுடை பார்த்து கொண்டு இருக்க, சுபா பொத்தானை மாட்டியதும் நிமிர்ந்து என்னை பார்த்தாள். அந்த நொடி இருவரது கண்களும் சந்திக்க இருவரும் அசைவின்றி உறைந்து நின்றோம்.

    இருவருக்கும் இடையில் இரு விரல் அளவிற்கு மட்டுமே இடைவெளி இருந்தது. சுபாவின் கைகள் என் மார்பில் பதிந்திருந்தது. அவள் கண்களில் காதலும் காமமும் நிரம்பி வழிய, அவள் எச்சில் விழுங்கும் சப்தம் கேட்டது. நான் மெதுவாக என் கைகளால் சுபாவின் கைகளை அக்குளுக்கு மேலாக பிடிக்க, அபாய சங்கு ஒலித்தது.

    ஆம் அந்த நேரத்தில் ஒரு ரயில், எங்களுக்குள் கிளம்பிய உணர்ச்சிகளுக்கு தடை போட்டு கிளம்பியது. அதன் பிறகு தான் நாங்கள் சுய நினைவுக்கு திரும்பினோம். பிறகு இருவரும் சுதாரித்துக் கொண்டு விலகி நின்றோம், ரயிலும் கடந்து சென்றது. பிறகு இருவரும் சகஜமாக பேச ஆரம்பித்தோம். “டிரெய்ன் வர இன்னும் டைம் இருக்கு சுபா, அதனால கொஞ்சம் நேரம் கடைக்கு போயிட்டு வரலாம்” என்று நான் கூற சுபாவும் சரி என்று என்னுடன் கிளம்பினாள்.

    நாங்கள் இருவரும் ரயில் நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று கொண்டு இருந்தோம். நடக்கும் போது சுபா என் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு வந்தாள். நாங்கள் இருவரும் விரலோடு விரல் கோர்த்து சாலையில் நடந்து சென்றோம். பிறகு ஒரு காபி கடையில் அவளுக்கு காபி மற்றும் பஜ்ஜி வாங்கி கொடுத்து, அவள் சாப்பிடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். பிறகு அங்கிருந்த ஒரு ஹோட்டலில் அவளுக்கு இரவு சாப்பாடு வாங்கிக் கொண்டு மீண்டும் ரயில் நிலையத்திற்கு வந்தோம்.

    மணி ஐந்து தான் ஆனது, பெங்களூர் செல்லும் ரயில் ஆறு மணிக்கு தான் வரும் என்பதால் நானும் சுபாவும் அங்கிருந்த நடை மேம்பாலத்தில் சில படிகள் மேலே ஏறி அமர்ந்தோம். அங்கு சிறு தொலைவில் ஒரு காதல் ஜோடி உரசிக் கொண்டு மிக நெருக்கமாக அமர்ந்து இருந்தனர். அதனை பார்த்த உடனே எங்களது நெருக்கம் அதிகரித்து, சுபா என் தோளில் சாய நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம்.

    சுபா : தெரியல, பாக்கலாம் என்ன நடக்கும் னு. பட் நான் மேரிட், ரெண்டு பசங்க குடும்பம் இருக்கு. இருந்தாலும் இந்த வயசுல இதுலா தோனும் னு நினைக்கிறேன்.

    நான் : என்ன சுபா சொல்ற.

    சுபா : (மழுப்பலாக) ஒன்னும் இல்ல டா, இந்த கை ரொம்ப வலிக்குது. நேத்து டிரெய்ன்ல ஒன் சைடா படுத்துட்டு வந்ததால வலிக்குது னு நெனக்கிறேன்.

    நான் : அது ஒன்னும் இல்ல தானா சரி ஆகிடும்.

    சுபா : (கோபமாக என்னை பார்த்துவிட்டு) எவனையும் நம்ப கூடாது, போன்ல பேசும் போது அப்படி பாத்துக்கறேன் இப்படி பாத்துக்கறேன் கை, கால் புடிச்சு விடுறேன் லா சொல்லுவானுக. எல்லாம் பொய், ஏமாத்துற பசங்க.

    நான் : அப்பப்பா, ஏன் இவ்ளோ கோபம். சரி நான் உனக்கு கை பிடிச்சு விடுறேன்.

    சுபா : ஒன்னும் தேவ இல்ல. ஹ்ம்ம்ம்… (கையை வேகமாக பிடிங்கி தள்ளி அமர்ந்தாள்).

    “சரி சரி கோவிச்சிக்காதிங்க, சாரி” என்று கூறிக் கொண்டே சுபாவின் வலது பிடித்து மெதுவாக மசாஜ் செய்தேன். சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு “போதும்” என்று சிறு வெட்கத்துடன் மீண்டும் என் கையுடன் பின்னிக் கொண்டு நெருங்கி அமர்ந்தாள். அப்படியே அமர்ந்து கொண்டு பேசியதில் நேரம் போனது தெரியவில்லை.

    நேரம் அப்போது 6 ஆகியிருந்தது “தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, ஒசூர், பெங்களூர் வழியாக மைசூர் வரை செல்லும் தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் நடைமேடை எண் இரண்டிற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்ற அழைப்பு எங்களது உரையாடலை கலைத்தது. பிறகு நாங்கள் இரண்டாம் நடைமேடைக்கு வந்து சேர்ந்தோம். “டிரெய்ன் வர எப்படியும் டென் மினிட்ஸ் ஆகும், அதுவர அங்க உக்காரலாம் வாங்க” என்று அழைத்து சுபாவை இருக்கையில் அமர வைத்து நானும் அமர்ந்தேன்.

    இன்னும் சிறிது நேரத்தில் நான் சுபாவை பிரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தவித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் சுபா சகஜமாக என்னிடம் அவளுடைய குடும்பம் பற்றி கூறிக் கொண்டு இருந்தாள். அப்போது அவள் “இந்த செய்ன நான் இப்ப தான் ரீசன்டா வாங்குனேன், நல்லா இருக்கா” என்று அவளது மார்புக்கு நடுவில் புதைந்திருந்த டாலரை எடுத்து எனக்கு காட்டினாள்.

    ஆனால் என் கண்களோ அவளது மார்பு பள்ளத்தையும், வெள்ளை நிற உள்ளாடையையும் தான் பார்த்தது. நான் பார்ப்பதை சுபாவும் பார்த்துவிட்டால் என்பதை அவளது செயலும் மௌனமும் எனக்கு புரியவைத்தது. சுபா தன் சட்டையை இழுத்து அவளது கழுத்து வரை மறைக்க, நான் சட்டென திரும்பினேன். ஒரு நிமிட நிசப்த நிலைக்கு பிறகு, நான் சுபா பக்கமாக திரும்பினேன்.

    சுபா அப்போது என்னை பார்த்துக் கொண்டு இருந்ததால் நான் திரும்பியதும் எங்கள் பார்வை மீண்டும் மோதிக் கொண்டது. மீண்டும் சுபாவின் கண்களில் அதே காதல் மற்றும் காமத்தின் கலவையை கண்டேன். நான் அசைவில்லாமல் சுபாவை பார்த்துக் கொண்டு இருக்க, சுபாவின் ஒரு கை என் கை மீது பட்டது. அவளது கை பட்டதும் என் ரத்தம் சூடேறி இதயம் ஓடும் சப்தம் எனக்கு கேட்டது. அப்போது சுபாவின் உதடுகள் என் உதடுகளை நெருங்கி வருவதை உணர்ந்தேன், ஆனால் என் மனதில் சிறு சலனம்………..

    அப்போது எங்களுக்குள் நடந்த அனைத்து விழியங்கலையும் ஹ்ம்ம்ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ஆஆஅ ஸ்ஸ்ஸ்ஸ் ஊஊஉ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ம் ம் ம் ம் ம் ம் ஊஊஉ ஊஊஉ ம் ம் ம் ம் ம் ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் உம்ம்ம் என்று முனங்களுடன் இருக்கும், அதை அடுத்த பாகத்தில் படிக்க மறவாதீர்கள்.

    தொடரும்……………. நன்றி வணக்கம்.

    உங்களது கருத்துக்களை nellaichandhru@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நன்றி

    Leave a Comment