மீண்டும் உன்னோடு நான் – 6 (Meendum Unnodu Naan 6)

This story is part of the மீண்டும் உன்னோடு நான் series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    கோமதியின் கண்கள் கலங்கியதும் என் மனமும் கலக்கமடைந்தது. உடனே

    “இல்ல மதி அது வந்து” தயங்க (அவளை மதி என்று தான் அழைப்பேன்.)

    “அதலாம் நா ஒன்னும் நெனக்கலிங்க.. ஏதோ உணர்ச்சி வசபட்டு கண்ணுல தண்ணி வந்திடுச்சு..”

    “இல்ல நா தான் தேவையில்லாம ஏதோ பேசி உன்ன கஷ்டபடுத்திட்டேன்.”

    “அய்யோ அப்படிலா இல்லிங்க.. நீங்க எதுவும் பண்ணலிங்க..”

    “எதுவும் பண்ணலேனா ஏன் கண்ணு கலங்கனும்..”

    “அதலாம் ஒன்னுமில்ல” சொன்னாலும் கண்ணில் வடிந்த நீர்த்துளி அவளின் கவலையை காட்டிக் கொடுத்துவிட்டது.

    “ஒன்னுமில்ல நீ தான் சொல்ற. ஆனா உன் கண்ணு உன் மனசுல இருக்குற உண்மையை சொல்லுது பாரு..”

    “நீங்க பேசுனதுல எந்த வருத்தம் இல்லீங்க.. நா குடுத்திட்டு போன கஷ்டத்துக்கு முன்ன இதெல்லாம் ஒன்னுமில்ல.. நா விட்டுட்டு போனப்பவும் இப்படி தான் உங்க மனசும் கஷ்டபட்டு இருக்கும். ஏன் சொல்ல போனா இத விட கூட இருந்திருக்கலாம்..

    அந்த வலிக்கு எந்த மருந்து போட்டாலும் சரியாகாது தெரியும்ங்க.. ஆனா ஒன்னும் மட்டும் உண்மைங்க ஏன் ஊரு விட்டு நைட்டோட நைட்டா போனோம் எனக்கே தெரியல” சொன்னதும் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

    “நீ என்ன சொல்ற.?” அதிர்ச்சியும் ஆச்சிரியமும் மாறாமல் கேட்க

    “ம்ம். ஆமாங்க.. ஏன் போனோம் இந்த நாள் வரை எனக்கு காரணம் தெரியாது. நானும் வீட்டுல எவ்வளோ தடவ கேட்டு பாத்தேன். பதிலே சொல்ல.. சும்மா கேட்டு தொல்லை பண்றேன் மாப்பிள்ளை பாத்து கல்யாணத்த பண்ணி அனுப்பிட்டாங்க. உங்க கூட எப்படி பேசுறது தெரியல.” ரொம்ப கவலையோடு சொல்ல அவளின் மீது இருந்த காலமும் வருத்தமும் காணாமல் போனது.

    “என்ன நடக்கனும் காலம் தீர்மானிச்சு இருக்கோ அத தான் நடக்கும். நம்ம கையில என்ன இருக்கு.. நம்ம காதல் சேர கூடாது இருந்திருக்கு.. அவ்வளவு தான்” பெருமூச்சு விட்டு சொல்ல கோமதி அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

    “என்ன மதி அமைதியா இருக்க?” கேட்டதும் சுயநினைவுக்கு வந்து

    “ஒன்னுமில்ல.. சரி நீங்க வந்ததுல இருந்து எதுவுமே சாப்பிடல அட்லீஸ்ட் ஏதாவது குடிங்க.” கெஞ்சுவது கேட்க என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் இருந்தேன்..

    “நீ சாப்பிட்டியா?” அவளை பார்த்து கேட்க

    “இல்ல இனி தான். இப்ப தான் குளிச்சிட்டு வந்தேன். நீங்க வந்திட்டிங்க..”

    “சரி நீ மொதல்ல சாப்பிடு.. நா இப்படியே கிளம்புறேன்.” என்றதும் அவளின் மலர்ச்சியான முகம் வாடி சுருங்கியது. அதனாலே அவளிடம்

    “சரி உன் கையால ஒரு கிளாஸ் தண்ணீ குடு போதும்” என்றதும் வாடிய முகம் மீண்டும் மலர்ச்சியானது..

    “இருங்க தண்ணீ வேணாம்.. உட்காருங்க பால் காய்ச்சி எடுத்து வரேன்” வேகமாக கிச்சனை நோக்கி நடந்தாள். அவள் நடந்து செல்லும் போது ஈரமான முடியில் சுற்றியிருந்த துண்டு கீழே விழுந்தது. அதை கண்டுக் கொள்ளாமல் பால் காய்ச்ச சென்றாள்..

    அவளின் தலையில் இருந்த துண்டிலிருந்து வந்த அவளின் சியக்காய் நறுமணமும், சோப்பு நறுமணமும் நாசிக்குள் சென்று என்னை ஏதோ செய்தது.

    என்னையும் அறியாமல் எழுந்து சென்று கீழே விழுந்து கிடந்த அந்த ஈரமான துண்டை எடுத்து கையில் வைத்து அதிலிருந்து வந்த நறுமணத்தை ஆழமாக முகர்ந்து பார்த்தேன். அந்த நறுமணமே இன்னும் அவள் பெண்மையுடன் இருக்கிறாள் என்பதை தெளிவாக காட்டியது.

    அந்த நறுமணத்தால் என் உடம்பில் காம உணர்ச்சிகள் எல்லாம் தாறுமாறாக சுரந்து ஆண்மை விறைக்க செய்தன. நான் கட்டியிருந்த வேட்டியில் அப்படியே தெளிவாக தெரிந்தது. அந்த சமயம் பார்த்து கணபதி கையில் பால் டம்ளருடன் வந்தாள்.

    நானிருக்கும் நிலையை பார்த்தால் ஏதாவது நினைத்து கொள்வாள் என தெரிந்ததும் கையில் இருந்த துண்டை மடியில் வைத்து அந்த சமயத்திற்கு கொஞ்சம் அட்ஜட்ஸ் செய்து கொண்டேன்.

    “இந்தாங்க பால் குடிங்க” கையில் டம்ளரை நீட்ட அதை வாங்கும் போது என் விரல்கள் அவளின் கையில் பட்டதும் மீண்டும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஓர் உணர்வு.

    அவள் என்னிடம் டம்பளரை குடுத்துவிட்டு ஒரு தட்டில் நான்கு பால் பனியாரத்தை சாப்பிடுவதற்கு கொண்டு வந்து என் முன்னால் உட்கார்ந்து சாப்பிட்டாள். அவள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டே அவள் காய்ச்சி குடுத்த பாலை குடித்துக் கொண்டிருந்தேன்.

    என்னுடைய நினைவுகள் அப்படியே கொஞ்சம் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.. நாங்கள் காதலிக்கும் நாட்களில் இவளிடம் முலையை காட்ட சொல்லி எவ்வளவு முறை கெஞ்சியிருக்கிறேன்.. என் கெஞ்சிலின் பலனாக ஜாக்கெட்டோடு தொட்டு பார்க்க விடுவாள்.. அதை மீறி எதுவும் செய்ய விட்டதில்லை. அவளிடம் பலமுறை

    “உன் மடியில படுத்து பால் குடிக்கனும் போல இருக்கு.. எப்ப தான் தருவ எனக்கு” கேட்டிருக்கிறேன்.

    “ம்ம்.. இப்ப முடியாது..”

    “இப்ப ஏன் முடியாது. அதான் மடியில படுத்திருக்கேன்ல.. நீ மனசு வச்சு நெனச்சா குடுக்கலாம்..”

    “இப்பவே பால் வேணும்னா மாட்டு மடியில கறந்தா வரும் அத குடிச்சுக்கோங்க..”

    “மாட்டு பால் வேணாம்.. எனக்கு மனைவி கோமதி பால் தான் வேணும்..”

    “கோமதி பால் வேணும்னா கழுத்துல தாலி கட்டுங்க.. டெய்லி மடியில படுக்க வச்சு பால் குடுப்பா..”

    “ஓ.. இப்ப கிடையாதா” அவள் தாவணி விலகி ஜாக்கெட்க்குள் அடைந்திருக்கும் முலையை பார்க்க கையை தட்டிவிட்டு

    “கல்யாணம் பண்ற வரைக்கும் தப்பு எதுவும் பண்ணாம நல்ல சமத்து பையான இருக்கனும் சரியா” சொல்லி முடியை கோதி நெத்தியில் முத்தமிட்டாள். அந்த பழைய காதல் நினைவுகள் எல்லாம் மனதில் வந்து சென்றன..

    இந்த நினைவுகள் மீண்டும் நினைத்து பார்க்க உடம்பில் சற்று அடங்கியிருந்த காம உணர்ச்சிகள் மீண்டும் கிளம்பி என்னை ஏதோ செய்தன. நீண்ட நேரம் இந்த நினைவுகளில் மூழ்கியிருந்ததால் பாலை குடிக்காமல் வைத்திருப்பதை பார்த்த கோமதி,

    “என்னங்க பால குடிக்காம கையிலே வச்சியிருக்கீங்க.” கேட்டதும்

    “எனக்கு இந்த பால் வேணாம்.. உன்னுடைய பால் தான் வேணும். கிடைக்குமா? என்று தான் கேட்க தோன்றியது. பின் இருந்தாலும் நாகரிகம் கருதி கேட்காமல் அமைதியாக இருந்துவிட்டேன்..

    “பால்ல வேற எதுவும் போட்டு தரட்டுமா?” கேட்டதும் சுயநினைவுக்கு வந்து

    “இல்ல மதி வேணாம்” சொல்லி அவள் குடுத்த பாலை ஒரே மூச்சில் குடித்து முடித்தேன்.. பால் காலி ஆனதும் கையில் இருந்த டம்ளரை வாங்கிக் கொண்டு கிச்சனுக்குள் சென்றதும் ஹாலில் இருந்தபடியே அவளிடம்

    “நா கிளம்புறேன் மதி” என்றதும்..

    “அட இருங்க இதோ வந்துட்டேன்” சொல்லி கையில் ஒரு சிறிய டப்பாவுடன் வந்தாள்.. என்னை நோக்கி வந்தவள்

    “இந்தாங்க இது உங்களுக்கு தான்.”

    “என்னது இது?” கேட்க

    “இப்ப சாப்பிட்ட பால் பணியாரம் தான்ங்க.. உங்களுக்கு பிடிக்குமே அதான் டப்பால போட்டு குடுக்குறேன். வீட்டுல வச்சு சாப்பிடுங்க” என்னை நோக்கி நீட்டினாள். அவளை நோக்கி உள்ளங்கை நீட்ட அந்த டப்பாவை வைக்க என்னையும் அறியாமல் டப்பாவோடு சேர்த்து அவள் கையையும் பிடித்துவிட்டேன்..

    இத்தனை வருடங்கள் கழித்து இன்று தான் சில வினாடிகள் அவளின் கதகதப்பை உள்ளங்கையில் உணர்ந்திருக்கிறேன்..

    நான் காதலிக்கும போது உணர்ந்த அந்த கதகதப்பு இன்னும் அவளின் கையில் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் மாறவே இல்லை. சில வினாடிகள் அவளின் கதகதப்பை உணர்ந்திருப்பேன். பின் மதியே சுதாரித்து மனம் கோணாதபடி நாசுக்காக என் கையில் இருந்து அவளின் கையை விடுவித்து கொண்டாள்.

    மதியின் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் அவளிடம்

    “அடுத்து எப்போ?” கேட்டேன்

    “என்ன கேக்குறீங்க புரியல.?”

    “இல்ல நம்ம அடுத்த சந்திப்பு எப்ப” கேட்டேன்..

    “அதுவா.?” இழுக்க

    “ம்ம். அதுதான்..”

    “அது எப்போ தெரியலிங்க. இது மாதிரி அடிக்கடி சந்திச்சு பேசுறது சிக்கல் தான்.. ஏதோ ஏதேர்ச்சியா நேத்து பாத்தோம்.. அதனால இன்னிக்கு பாக்க வந்திங்க எனக்கும் இது சந்தோஷம் தாங்க.. ஆனா அடிக்கடி சந்திச்சா சரி வருமா தெரியலிங்க.. உங்களுக்கே புரியும் நெனக்கிறீங்க” சொன்னதும் என் சப்த நாடியும் அடங்கிவிட்டது.

    ஒரு பெண்ணால் இத்தனை வருடங்கள் கழித்து சந்தித்த காதலனிடம் இப்படி கூட பேச முடியுமா என யோசித்து பார்த்தேன். சிறிது நேரத்திற்கு முன் அவளை நினைத்து உணர்ச்சியில் முறுக்கேறிய ஆண்மை இப்போது அவளது பேச்சால் வருந்தி சுருங்கியது.. அடுத்து அவளிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினேன்.. அவள் வீட்டை விட்டு கிளம்பும் போது

    “என்னை மன்னிச்சிடுங்க. என் நிலைம அப்படி” என்றாள்.. அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் அவளை கடந்து கனத்த மனதுடன் வீட்டுக்கு வந்தேன்.

    வீட்டிற்குள் நுழைந்ததும் மதி குடுத்த டப்பாவை ஓரமாக வைத்துவிட்டு என் நிலையை நினைத்து பார்த்தேன். வருத்தமாக இருந்தது. காலம் போன கடைசியிலாவது காதலித்த பெண்ணை பார்க்க முடிந்ததே என கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. அது காலத்திற்கு பிடிக்கவில்லை போலும்..

    இப்போது அதற்கென்று ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. இந்த காலம் தான் இவளை காட்டியது. அதே காலம் தான் இப்போது சந்திக்கவும் விடாமல் செய்கிறது.

    மறுபடியும் காலம் தன் ஜாலத்தை என்னிடம் காட்டிவிட்டது. காலம் முழுவதும் தனியாகவே இருந்து தனிமையில் வாட வேண்டும் என காலம் தீர்மானித்து இருந்தால் அதை மாற்றி எழுத என்னால் தான் முடியுமா? கண்டிப்பாக முடியாது என நானாக எனக்குள் வருத்தபட்டுக் கொண்டிருந்தேன்.

    அந்த சமயம் பார்த்து என் மனச்சாட்சி வந்து பேச ஆரம்பித்தது..

    “இப்ப என்ன ஆச்சு. இப்படி உட்காந்திருக்க” கேள்வி கேட்டதும் வாயை திறக்கலாம் நினைத்து திறக்கும் தருவாயில் மனசாட்சி என்னை தடுத்து நிறுத்தி..

    “நீ என்ன சொல்ல போறேன் தெரியும்.. இத்தன வருஷம் கழிச்சு பாத்த காதலியை அடிக்கடி பாக்க முடியலியே நெனக்கிற அதான” மிக சரியாக கேட்க

    “ஆமாம்” என்பது தலையை ஆட்ட..

    “மிலிட்டரில இருந்தனு பேரு.. ஒரு மில்லிமீட்டர் அளவுக்கு கூட உனக்கு அறிவே இல்ல” சொன்னதும் கடுப்பாகி

    “யாரு எனக்காக அறிவில்ல.. தேவையே இல்லாம இப்படி லூசு மாதிரி வந்து பேசிட்டு இருக்க பாரு உனக்கு தான் அறிவே இல்ல” சொல்ல

    “எனக்கு அறிவில்லாய.. நீ வேணா பாரு.. நா சொல்றத செஞ்சா உன் வாழ்க்க மாறி நல்லா இருக்கும்..”

    “அப்படி என்ன பெருசா சொல்லிட போற.. சரி சொல்லு..”

    “மொத நா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு..”

    “ம்ம் கேளு..”

    “இப்ப போய் பாத்தியே அது யாரு..”

    “அது மதி.. நா காதலிச்சவ..”

    “ம்ம்.. நீ காதலிச்ச ஆனா கல்யாணம் பண்ணியா?”

    “இல்ல பண்ணல?”

    “அவ தான் ஊர விட்டு சொல்லாம போய்ட்டாலே.. பின்ன எப்படி பண்றது..?”

    “அவ குடும்பத்தோட சூழ்நிலை என்னவோ போய்ட்டா. நீ அவள தேடிட்டு போனியா?” மனசாட்சி கேட்க

    “இல்ல போகல..”

    “ஏன் போகல?” எதிர் கேள்வி கேட்க எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருவேளை அவளை தேடி போயிருந்தால் அவளை பார்த்திருக்க முடியும். கல்யாணமும் செய்திருக்க முடியுமா என்று கூட மனதில் யோசனைகள் எழுந்தன.. நான் அமைதியாகவே இருக்க
    மனசாட்சியே திரும்பி

    “ஒரு ஆண் உன்னாலே ஒரு பிரச்சனை வந்ததும் அதை எதிர்த்து போராட்ட முடியாம அப்படியே இருந்திட்ட.. நீ அடுத்து எப்போ சந்திக்கலாம் கேட்டதும் இப்படி தான் மதிக்கும் எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு போராட்டம் மனசுக்குள்ள ஓடிட்டு இருக்கும்.. எப்பவும் சுயநலமா உன்னோட பார்வையில இருந்து மட்டும் பார்க்காத..”

    “இப்ப நா என்ன பண்ணட்டும்” கேட்க

    “மொதல்ல மனச போட்டு குழப்பிகாம இருக்க பழகு.. அதுவே பாதி பிரச்சனை முடிச்சு கொடுத்திடும்..”

    “நானா ஏதோயோ போட்டு குழப்பிக்கல.. என் வாழ்க்கையில நடக்குறது நெனச்சு தான் மனச போட்டு குழப்பிட்டே இருக்கு..”

    “அது உன்னோட மனபிரம்மை. எல்லாமே காலம் வந்து உனக்கு செய்து குடுக்காது.. நீயும் கொஞ்சம் முயற்சி பண்ணனும்.. இல்லைனா இப்படி கால காலத்துக்கு குழம்பிட்டு இருக்க வேண்டிய தான்..”

    “சரி.. இப்ப நா என்ன பண்ணனும் அத மட்டும் சொல்லு..”

    “அடுத்த சந்திப்பு நீ தான் உருவாக்கனும்.. இப்ப போய் சந்திச்சதுக்கு காரணம் இல்ல.. ஆனா அடுத்தடுத்து சந்திக்க போறதுக்கு ஒரு காரணம் கண்டிப்பா இருக்கனும்.. அதான் நல்லது. கேட்ட சரியான காரணத்த சொல்லி தப்பிச்சுக்கலாம். புரியுதா?..”

    “ம்ம்.. அடுத்த தடவ எந்த காரணத்த சொல்லி அவள சந்திக்க குழப்பாம இருக்க..”

    “இன்னுமா புரியல உனக்கு.” மனசாட்சி கேட்டதும்..

    “இல்ல நா இருக்குற குழப்பமான மனநிலையில என்னால யோசிக்க முடியல. நீயே சொல்லிடு..” சொன்னதும்

    “அடப்பாவி உன் கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா.. உன் காதலி சந்திக்க உன் மனசாட்சிகிட்ட ஐடியா கேக்குற மொத ஆளு நீயாதான்டா இருப்ப..”

    “சரி.. இந்த வயசுல போய் அடுத்த ஆள்ட்ட ஐடியா கேக்க முடியுமா? அதனால நீயே சொல்லிடு..”

    “நா சொல்லமாட்டேன்.. வேணா ஒரு ஹின்ட் மாதிரி தரேன்.. நீ கண்டுபிடிச்சு அத எப்படி கரெக்டா யூஸ் பண்ணனுமோ பண்ணிக்கோ..”

    “சரி சொல்லு.”

    “இப்ப சொல்லமாட்டேன்.. அடுத்த பகுதியில சொல்றேன்..” என்றது என் மனசாட்சி..

    மீண்டும் மனசாட்சியோடு வருவேன்..

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்…

    Leave a Comment