மீண்டும் உன்னோடு நான் – 19 (Meendum Unnodu Naan 19)

This story is part of the மீண்டும் உன்னோடு நான் series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    “என்ன சொன்னிங்க?” மதி கேட்க

    “இல்ல பகல்ல கனவு கண்டா கூட பலிக்கும் சொன்னேன்..”

    “அப்படியா?”

    “ஆமா.”

    “அப்படி என்ன கனவு கண்டிங்க?” கேட்க

    “இதோ இப்ப உன் பர்த்டேக்கு கேசரி ஊட்டிவிட்ட மாதிரியே நாம லவ் பண்ணும் போது உன் பர்த்டே அன்னிக்கு ஊட்டிவிட்ட. அத தான் நெனச்சு பாத்திட்டு இருந்தேன்.. நெனச்சு பாக்க அவ்வளவு நல்லா இருந்துச்சு. நெஜத்துல நடக்குமா யோசிச்சிட்டு இருந்தேன்.”

    “நல்ல வேளை நெனச்சது நடந்திருச்சு” என்றேன்..

    “அய்யோ போங்க.. ரொம்ப மோசம்.. இன்னுமா அதெல்லாம் நியாபகம் வச்சியிருக்கீங்க.. ம்ம்.. பெரிய ஆளு தான்.” சொல்லிட்டு

    “சரி மீதி கேசரிய சாப்பிட்டுங்க” சொல்லிட்டு நகர ‘மதி’ என்றதும் என்னை விட்டு விலகி நகர்ந்து சென்றவள் திரும்பி பார்த்து

    “என்னங்க” என்றாள்..

    “இல்ல ஒன்னுமில்ல என்றேன்..” ஆனால் நான் மனதில் நினைத்து மீதியிருக்கும் கேசரியை அவளின் கையால் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் தோன்றியது. அதனால் அவளை கூப்பிட்டேன். பின் ஏதோ உணர்வு திடீரென வந்து மனதை மாற்றியதால் ஒன்றுமில்லை என சொல்ல வேண்டியதாக ஆயிற்று.. ஆனால் மதி நான் கூப்பிட்டதும் திரும்பி வந்து என் கையில் இருந்த கிண்ணத்தை வாங்கி
    “ம்ம் இந்தாங்க சாப்பிடுங்க” அவளே மீதியிருந்த கேசரியை குடுக்க ஆரம்பித்தாள்.. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. இத்தனை வருடங்கள் கழிந்தாலும் என் மனநிலைமை பற்றியும் நான் மனதில் நினைத்ததை சொல்லாமலே சரியாக கண்டுபிடித்துவிட்டாள்.. இது எப்படி சாத்தியம் என்பது அப்போதைக்கு புரியாத புதிராக இருந்தது. அந்த ஆச்சரியத்துடனே மீதியிருந்த கேசரியை மதியின் கையால் சந்தோஷமாக சாப்பிட்டேன்..

    “மதி எப்படி என் மனசுல நெனச்சத கரைக்டா கண்டுபிடிச்ச.?”

    “ஏன் உங்க மனசுல இருக்குறத என்னால கண்டுபிடிக்க முடியாதா என்ன?”

    “முடியும் தான் பட்.. அவ்வளவு எக்ஸ்ஆக்டா எப்படி?”

    “எப்படினா? உங்க ஆசையை நானா கண்டுபிடிக்கல. நீங்க தான் உங்க வாயால சொன்னிங்க.. அத வச்சு தான் கண்டுபிடிச்சேன்..”

    “ம்ம்.. சூப்பர்” சொல்ல

    “எது சூப்பர்?”

    “எல்லாமே தான்.. உன் ஃபைன்டிங் அப்பறம் உன் கேசரி எல்லாம் தான்.”

    “ஓ.. அப்படியா.. கேசரி இல்ல.. விரல்ல இருக்கிறத தான்.. வேணும்னா விரல்ல இருக்குறத சாப்பிட்டுகோங்க” மதி சொல்ல அவளை இன்னும் ஆச்சரியமாக பார்த்தேன்..

    “ம்ம்.. சீக்கிரமா சாப்பிடுங்க.. காஞ்சு போய்ட போகுது” சொல்ல மதியின் விரலில் ஒட்டியிருந்த கேசரி பருக்கைகளை காதலிக்கும் போது சப்பியது போலவே ஒவ்வொரு விரலையும் நிதானமாக சப்பினேன். அதே சமயம் விரலை அழுத்தமாக சப்பினேன்..

    “போதுமா?” மதி கேட்க தலை தூக்கி அவளை என்ன என்பது போல் பார்க்க

    “போதுமா?” கேட்டேன்..

    “நீ எத போதுமா கேட்ட தெரியல.. ஆனா எதுவா இருந்தாலும் போதாது எனக்கு.. இன்னும் வேணும் தான் தோணுது..”

    “தோணும்.. தோணும்.. சரி போதும் விடுங்க..” அவளின் கையை வாயில் இருந்து அவளாகவே எடுத்துக் கொண்டாள்.. பின் மதி

    “ரொம்ப நாள் கழிச்சு கோயிலுக்கு போகலாம் இருக்கேன்.. நீங்களும் வரிங்களா?” கேட்க எனக்கு அது அடுத்த ஆச்சரியமாக இருந்தது..

    “நா.. நா.. எப்படி மதி உன்கூட வர முடியும்.”

    “முடியும் நெனச்சா எல்லாமே முடியும்.. சரி வீட்டுக்கு போய் வேற நல்லா டிரஸ் போட்டு அப்படியே கால்டாக்ஸி புக் பண்ணிடுங்க..” ரொம்ப உரிமை எடுத்து ஏதோ அவளுடைய கணவனை போல் பேசினாள்.

    “கால்டாக்ஸி ஓகே.. ஆனா எங்க போறோம்..?”

    “அதான் சொன்னேன்னே கோவிலுக்கு.”

    “அதெல்லாம் சரி தான்.. கோவிலுக்கு பேரு.. ஏரியா இதெல்லாம் இல்லையா?”
    கேட்க

    “ஓ. அதுவா திருவேற்காடு போதுமா.. நீங்க ரெடி ஆகி உங்க வீட்டிலே இருங்க.. நா வரேன்..” சொல்லிட்டு அவளின் பெட்ரூமை நோக்கி நடந்தாள்.. நான் இந்த ஆச்சரியத்தில் இருந்து மீள முடியாமல் தடுமாறியபடி என் வீட்டிற்கு வந்து மதி சொன்னபடி ரெடியாகி அவளுக்காக காத்திருந்தேன்..

    மதி அடுத்த பத்து நிமிடத்தில் பச்சை நிற புடவையுடன் பளிச்சென்று முகத்தில் சிரிப்புடன் வந்தாள்.. வீட்டிற்குள் வந்ததும்.

    என்னை கிழக்கு பக்கமாக நிற்க சொல்ல நானும் அவள் சொன்னதினால் கிழக்கு பார்த்து நிற்க கண் இமைக்கும் நொடிக்குள் என் காலில் விழுந்து விட்டாள்.. மதி இப்படி ஒன்றை செய்வாள் என நான் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.. பின் சுதாரித்து

    “மதி என்ன பண்ற எந்திரி முதல்ல.”

    “நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க.. நா எந்திரிக்கிறேன்” என்றாள்..

    “நீ ரொம்ப வருசத்துக்கு கஷ்டம் இல்லாம சந்தோஷமா இருக்கனும்.” தலையில் கை வைத்து முழுமனதுடன் சொல்ல அவளும் சந்தோஷ முகத்துடன் எழுந்தாள்..

    “என்ன திடீர்னு இப்படியெல்லாம் பண்ற.. எனக்கு என்ன சொல்றது தெரியல..” என்றேன்.

    “இன்னிக்கு நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்.. நா சொல்றது கேட்டு அதுப்படி நடந்தா போதும். சரியா?”

    “ம்ம்.. மகாராணி நீங்களே சொன்ன பிறகு அதை மீற முடியுமா?”

    “சரி வாங்க போகலாம்.”

    “போலாம்.. ஆனா சேந்து வேணாமே.. தனிதனியா போகலாம்.. அதான் கொஞ்சம் உனக்கும் நல்லது நினைக்கிறன்.”

    “இன்னிக்கு நா சொன்னபடி தான் நடக்கனும்.. நாம ரெண்டு பேரும் சேந்து தான் போறோம்.. இது மகாராணியோட உத்தரவு” சொல்ல அந்த சமயம் பார்த்து என் மொபைல் அடித்தது.. அதை எடுத்து பேச

    “ஹலோ சார் கால்டாக்சி புக் பண்ணியிருந்தீங்கள.. நீங்க சொன்ன அபார்மெண்ட்க்கு வந்துட்டேன்..”டிரைவர் சொல்ல

    “ஓ.. அப்படியா.. இதோ வரேன்” சொல்லி காலை கட் பண்ணினேன்..

    “நட மதி வீட்டை பூட்டிட்டு வரேன்..”

    “அதலாம் முடியாது.. வீட்ட பூட்டுங்க.. நா வெயிட் பண்றேன்.” பிடிவாதமாக இருக்க இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ என மனதில் நினைத்தபடி வீட்டை பூட்டினேன்..

    காரில் போகும் போது கூட என் கை விரல்களுக்குள் கையை கோர்த்து பிடித்தபடி தான் வந்தாள்.. இன்று அவளின் செய்கைகள் எல்லாம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் நானாக கேட்டு அவளின் மனதை கஷ்டபடுத்திட கூடாது அமைதியாக இருந்தேன்..

    அதுவும் இல்லாமல் இன்று அவளின் பிறந்தநாள்.. அவளின் சந்தோஷத்தை கெடுக்க விரும்பவில்லை. மாறாக அவள் தான் அடிக்கடி என் முகத்தை பார்த்து சிரிப்பது என் கையில் முத்தமிடுவது என எதிர்பார்த்திடாத விஷயங்களை எல்லாம் செய்துக் கொண்டே வந்தாள்.. கோவிலுக்கு சாமி எல்லாம் கும்பிட்டு முடித்த பிறகு அந்த பிரகாரத்தின் உள்ளே உட்காந்திருந்தோம்.. அப்போது மதி

    “இன்னிக்கு தான் நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..”

    “ம்ம்.”

    “ஏன்னு கேக்கமாட்டிங்களா?” மதி கேட்க

    “சரி கேக்குறேன் ஏன் சொல்லு?”

    “ஏன்னா நீங்க மறுபடியும் என் வாழ்க்கையில வந்ததுனால தான்.”

    “ம்ம்.”

    “உங்கள மறுபடியும் பாப்பேன் நெனக்கல.. இப்படி உங்க கூட உட்காந்து பேசுவேன் நெனக்கல.. இதெல்லாம் நெனச்சு பாக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு..”

    “நானும் தான் இதெல்லாம் நடக்கும் நெனக்கல..”

    “உங்ககிட்ட ஒன்னும் சொல்லனும்.” என்றாள்..

    “ம்ம்.. சொல்லு மதி.”

    “ஆனா அத எப்படி சொல்றது தான் தெரியல.?”

    “ஏன் ஏதாவது உதவி தேவைபடுதா? சொல்லு பண்றேன்.”

    “அய்யோ அதெல்லாம் இல்லீங்க.. இது வேற?”

    “வேறனா பணம் ஏதாவது தேவைபடுவதா? சொல்லு தரேன்”

    “பணமெல்லாம் நெறலய இல்லைனாலும் தேவைக்கு போதும்ன்ற அளவுக்கு இருக்குங்க.. இது வேற ஒன்னு அதான் எப்படி சொல்றது தெரியல?” தயக்கத்துடன் சொல்ல

    “அப்படி என்ன சொல்ற போற? இவ்வளவு தயங்குற?”

    “இது தயக்கமா இல்லமா? இல்ல கூச்சமா? வெட்கமா? தெரியல. ஆனா ஏதோ ஒன்னு என்னைய சொல்ல விடாம தடுக்குது மட்டும் தெரியுது”

    “அப்படியா. சரி பொறுமையா உனக்கு எப்போ சொல்லனும் தோணுதோ அப்போ சொல்லு. ஒன்னும் பிரச்சனை இல்ல மதி” என்றேன்.

    “இல்ல.. இல்ல இன்னிக்கு அத சொல்லிடனும்.. அப்பதான் சரியா இருக்கும்.. சொல்ல வேண்டியத சொல்லிட்டா நானும் கொஞ்சம் நிம்மதியா சந்தோஷமாஇருப்பேன்.”

    “சரி அப்போ சொல்லு.”

    “என்ன சொல்றது தெரியல
    எப்படி சொல்றது தெரியல
    ஆனா சொல்ல நெனச்சத சொல்லிடனும்

    என்ன நெனச்சேன் சொல்லுங்க பாப்போம். சொல்லிவிட்டு என்னையும் என் கண்களை பார்க்க
    தெரியலையா? என அவளே பதிலையும் சொல்லிக் கொண்டு
    உங்கள தான் நெனச்சேன்..
    ஒரு காதலனாக..”

    “இனி வரும் எல்லா நாட்களிலும்
    நீயே
    எந்தன் மனதின் மகாராஜன்
    எந்தன் மகிழ்ச்சியின் மறுவுருவம்
    எந்தன் பூச்சூடிய மணவாழ்க்கையில் மீண்டும்

    உந்தன் கையால் பூச்சூட வந்த பூச்சரம்
    எந்தன் திலகமிட்ட நெற்றியில் மீண்டும்
    உந்தன் கையால் திலகமிட வந்த திலகம்
    எந்தன் நெஞ்சில் நடுவினில்
    உந்தன் உயிராக உறவை கொடுக்கும்
    உன்னத கயிற்றை உன் கையால் வாங்கி கொள்ள ஆசைபடுகிறேன்.”

    “ஆமா… அன்னைக்கு உங்க மனசுல இருக்குற காதலை நீங்க சொல்லிட்டிங்க. ஆனா உடனே என்னால உங்களோட காதலை ஏத்துக்க முடியல.. பதில் சொல்றேன் சொல்லி உங்கள காக்க வைக்கவும் விரும்பல. ஏன்னா என்னோட சூழ்நிலை அப்படி..

    சட்டுனு என்ன முடிவு எடுக்குறது எனக்கு தெரியல.. ஆனா இப்ப நா சொன்ன முடிவு நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான். எந்த சூழ்நிலையிலயும் இதிலருந்து பின் வாங்கமாட்டேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இந்த முடிவ மாத்திக்கமாட்டேன். இந்த முறை நீங்க தாராளமா உங்க மதிய நம்பலாம்.” என மதி அவளின் மனதில் இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டாள்..

    ஆனால் எனக்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. குழப்பத்துடன் உட்காந்திருப்பதை பார்த்துவிட்டு மதி

    “உங்க முகத்த பாத்த குழப்பத்துல இருக்குற மாதிரி தெரியுது. நா உங்க மனச குழப்பனும் நெனைக்கல.. அதையும் மீறி குழப்பிவிட்டதா நெனச்சீங்கனா என்னை மன்னிச்சிடுங்க..” என்று சொல்ல

    “இல்ல மதி அன்னைக்கு நீ இருந்த மனநிலையில தான் இப்ப நானிருக்கேன்.. உனக்கு என்ன பதில் சொல்றது எனக்கு தெரியல குழப்பமா இருக்கு.”

    “ம்ம்.. புரியுதுங்க.. அன்னைக்கு நீங்க சொன்னப்ப நான் வேணாம் சொல்லி என் தரப்ப நியாயபடுத்தினேன்.. இப்ப வேணாம் சொன்ன நானே வேணும் சொன்னது உங்களுக்கு குழப்பமா தான் இருக்கும்.. நீங்க நல்லா யோசிச்சு சொன்ன போதும்.. உங்க முடிவு எதுவாயிருந்தாலும் எனக்கு சம்மதம்தாங்க..”

    “ம்ம்.” மட்டும் சொல்ல

    “காதல சொன்னதும் ரொம்ப சந்தோஷபடுவீங்க தான் நெனச்சு தார் சொன்னேன். ஆனா அது இப்படி உங்கள இவ்வளவு குழப்பதுல விடும் சத்தியமா நா நெனைக்கல..”

    “சரி பரவாயில்ல.. நடக்குறது தான நடக்கும்.. நம்ம கையில என்ன இருக்கு.. சரி மதி கிளம்பலாமா?” கேட்க

    “ம்ம் போலாங்க மதி சொன்னதும் கால்டாக்சிக்கு புக் செய்துவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்தோம்.. என் மனம் இன்னும் அதே குழப்ப நிலையில் தான் இருந்தது.. ஆனால் மதியின் தலையில் பூ இல்லாததை கவனித்தேன்.. அவள் பூ வைக்கலமா? கூடாதா? என்பது கூட எனக்கு சரியாக தெரியவில்லை..

    அவளிடம் இதை கேட்க கூட ஒருமாதிரியாக தான் இருந்தது. அவள் வைக்க கூடாது என்றால் சங்கடபடுத்திவிட்டதாக ஆகிவிடும்.. அவளின் பிறந்தநாளன்று இது மாதிரி சங்கடத்தை குடுக்க கூடாது என உறுதியாக இருந்தேன். ஆனால் நானிருக்கும் நிலையை பார்த்துவிட்டு மதி

    “ஒன்னும் அவசரமில்லைங்க.. வீட்டுல போய் நல்லா யோசிச்சு சொன்னா போதும்ங்க..”

    “இல்ல அதெல்லாம் ஒன்னுமில்ல.. வேற ஒன்னு நெனச்சிட்டு இருந்தேன்.”

    “வேற என்ன நெனச்சீங்க..?”

    “இல்ல அத கேக்கலாமா என்னனு கூட சரியா தெரியல?”

    “அப்படி என்கிட்ட என்னத்த கேட்டிட போறீங்க? எதுவும் நெனக்காம மனசில பட்டத கேளுங்க.. தப்பா இருந்தாலும் பரவாயில்ல கேளுங்க..”

    “இல்ல.. அது வந்து…” தயங்க

    “ம்ம். கேளுங்க..”

    “இல்ல.. உன் தலையில பூ வைக்கலேயே அதான்..” இழுக்க மதி சிரித்துவிட்டாள்..

    “இதுக்கு தான் இவ்வளவு பயந்தீங்களா? நா கூட வேற ஏதாவது கேப்பீங்க நெனச்சேன்..”

    “பூ வாங்கி தர எனக்கு எந்த ஆம்பளையும் இல்ல.. அதனால தான் வைக்கல.. கொஞ்சம் விருப்பமும் இல்லாம இருந்துச்சு.”

    “ஓ..”

    “உங்களுக்கு ஆசைனா வாங்கி தாங்க. நா வச்சிக்கிறேன்..” மதி சட்டென்று யோசிக்காமல் சொல்ல

    “நிஜமா சொல்ற?” என்னையும் அறியாமல் கேட்க

    “ஆமாங்க.. நீங்க வாங்கி தந்தா வச்சிக்கிறேன்.. போதுமா?”

    “சரி வா வாங்கிதரேன்” என ஏதோ ஒரு ஆர்வத்தில் குருட்டு தைரியத்தில் சொல்லிவிட்டேன்.. மதியும் முகம் மலர்ச்சியுடன் என்னுடன் வர வெளியை இருந்த பூக்கடையில் ஒரு முழம் மல்லிகை பூ வாங்கி குடுத்தேன்.. அதை அவளின் தலையில் வைத்ததும் என் கண்களுக்கு மதி ஒரு எனக்கான முழுமையான காதலியாக தெரிந்தாள்..

    அதற்குள் கால்டாக்சியும் வர இருவரும் ஏறி வீட்டிற்கு வந்தோம்.. மதி அவளின் வீட்டிற்கு செல்லாமல் என்னுடன் என் வீட்டிற்கு வந்தாள்.. அவள் வந்ததை பார்த்ததும் என் பார்வையின் அர்த்தம் புரிந்துக் கொண்டு

    “ஏன் நா உங்க வீட்டுக்கு வர கூடாதா?” என நேரடியாக அவளின் மனதில் பட்டதை கேட்டுவிட

    “அதலாம் இல்ல வரலாம்.. வா என்றேன்..”

    மதி உள்ளே வந்து சோபாவில் உட்காந்திருந்தாள்.. அவளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து குடுக்க அதை வாங்கி குடித்தாள். நானும் அதே சோபாவில் அவளின் பக்கத்திலே உட்கார்ந்ததும் என் மடியல் படுத்தபடி உதட்டை கவ்வி பிடித்து உறுஞ்சினாள்..
    உதட்டை விடுவித்ததும்.

    “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? இல்ல இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி லிவ்விங் ரிலேஷன்சிப் இருக்கலாமா? உங்களுக்கு எது ஓகே சொல்லுங்க” என்ற பெரிய அதிர்ச்சி தந்தாள் மதி..

    மீண்டும் அவளோடு வருவேன்…

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் தெரிவியுங்கள்

    Leave a Comment