மாமா மனைவி என் காதலி-2 (Mama Manaivi En Kathali 2)

This story is part of the மாமா மனைவி என் காதலி series

    பகுதி 2

    எனது மூத்த அக்கா எங்களது நட்பு நெருங்கி வருவதை மிகவும் எதார்த்தமாக கூறியதை தொடர்ந்து. நான் எங்களது குடும்ப வாட்ஸ்அப் குரூப்பில் மீண்டும் அவளிடம் நெருங்கி பேசுவதை மெது மெதுவாக குறைத்து கொண்டு வந்தேன். அவளும் மற்றவர்கள் கவனித்து கூறும் அளவிற்கு எங்கள் நட்பு வளர்ந்ததை புரிந்து கொண்டு.

    அதன் பிறகு மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்று அனைவரின் முன்னும் சற்று இடைவெளி கொண்டே பழகி வந்தாள். ஆனாலும் நேரில் சந்தித்துக்கொள்ளும் பொழுது எல்லாம் எங்கள் பேச்சு. சினிமா. நண்பர்கள்.

    பழைய வாழ்க்கை என்று அனைத்தை பற்றியும் சகஜமாக பேசிக்கொண்டு வந்தோம். இந்த நிலையில் அவள் பள்ளி. கல்லூரி நாட்களில் அவளுக்கு வந்த காதல் கடிதம் போன்றவற்றை என்னிடம் கூறும் அளவிற்கு எங்கள் நட்பு வளர்ந்து இருந்தது.

    மாதங்கள் நகர்ந்து ஓடின அவளுக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. அவள் அடுத்தவரின் மனைவி மற்றும் அவள் சுமப்பது இன்னொருவரின் குழந்தை என்பதை பற்றி எனக்கு கவலை இல்லாமல் எனக்கே குழந்தை பிறக்க போவது போல் மகிழ்ச்சியாக இருந்தேன்.

    அதை அவளும் அவ்வப்போது என்னிடமே கேட்பாள். மூத்த மற்றும் நடு அக்காவிற்க்கு குழந்தை பிறக்க போகும் போதும் இப்படி தான் நடந்து கொண்டாயோ என்று. அவர்களுக்கும் குழந்தை பிறக்கும் நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். ஆனால் எனது இந்த அதீத மகிழ்ச்சிக்கு காரணம் நீ எனக்கு உறவு மட்டும் அல்ல என்னுடைய நெருங்கிய தோழியாக இருப்பதால் தான் என்று கூறினேன்.

    அவளும் அதை மிகவும் மகிழ்ச்சியாக ஆமோதித்து கொண்டாள்.

    வளைகாப்பு க்கு சில நாட்களுக்கு முன்னால் அவளுக்கு திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்தநாள் வந்தது அவளுக்கு பிடித்த ஒயிட் ஃபாரஸ்ட் கேக் ஒன்று ஆர்டர் செய்து அவளுக்கு ஆச்சர்யம் அளித்தேன். மற்றவர்கள் முன்னிலையில் நான் வாங்கி வைத்த பரிசை கொடுத்தால் கண்டிப்பாக அது சர்ச்சைக்கு உரிய பேச்சாக மாறும் என்பதால் அடுத்தநாள் அதை தனியாக கொடுக்க நினைத்திருந்தேன்.

    அடுத்த நாளும் வந்தது என் அத்தை வீட்டிற்கு சென்றேன் எப்பொழுதும் அழைப்பு மணியையோ. யாரையும் வெளியே நின்று அழைக்கும் பழக்கம் இல்லாததால் எப்பொழுதும் போல் நான் நேராக வீட்டிற்குள் சென்று என் அத்தையிடம் டாலி இருக்கிறாளா என்று கேட்டேன்.

    அவர்களும் மேலே அவள் அறையில் இருக்கிறாள் என்று கூற சரி நான் சென்று பார்க்கிறேன் என்று கூறி மேலே சென்றேன். எனது அத்தை (அப்பாவின் அக்கா) மற்றும் எனது மூத்த அக்காவிற்கு வீட்டின் கீழே அறை இருந்தது. எனது நடு அக்காவுக்கும்.

    எனது காதலிக்கும் மாடியில் இருக்கும் முதல் மற்றும் இரண்டாவது அறை ஒதுக்க பட்டு இருந்தது. நான் முதல் அறையை தாண்டி இரண்டாவது அறைக்கு சென்ற பொழுது அறைக்குள் சத்தமாக பாட்டு ஓடும் சத்தம் கேட்டு கொண்டு இருந்தது. நான் ஓரிரு முறை கதவை தட்டிவிட்டு திறக்கவில்லை என்றதும் வெளியே மாடியில் சென்று கதவு திறக்கும் வரை காத்திருக்க எண்ணி சென்ற பொழுது.

    எதார்த்தமாக கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்த பொழுது தெளிவாக இல்லாமல் அவள் ஒரு முக்காலியின் மேல் ஏறி ஃபேனை சுத்தம் செய்து கொண்டு இருந்தது தெரிந்தது. உடனே பதற்றமாக அவள் பொதுவாக அனைவரின் அறை சாவி வைக்கும் இடம் எனக்கு தெரியும் என்பதால். அவளின் அறையை திறது அவளை திட்டிவிட்டு நான் உதவி செய்ய எண்ணி உள்ளே பார்த்த போது தான் எனக்கு அந்த அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது.

    அவள் மேலே ஏறியது பேனை சுத்தம் செய்ய அல்ல தற்கொலை செய்து கொள்ள எண்ணி கதவை பூட்டிவிட்டு இவ்வாறு செய்து இருக்கிறாள் என்று.

    எனக்கு என் உயிரே போய்விடும் போல பயமும். கண்மூடி தனமான கோபமும் வந்தது. இதை யாரும் பார்த்து விட கூடாது என்று எண்ணி உடனடியாக கதவை சாத்தி விட்டு அவளை காலோடு சேர்த்து தூக்கி பக்கத்து கட்டிலில் இருந்த மெத்தையின் மேல் மெதுவாக படுக்க வைத்து விட்டு.

    அவளை எதுவும் பேசவிடாமல் வேகவேமாக மேல் ஏறி அவள் ஃபேன் இல் கட்டி வைத்து இருந்த சேலை தலைப்பை அவிழ்த்துவிட்டு கீழிறங்கி கோபத்தில் அவள் கன்னத்தில் அரைந்து விட்டேன்.

    அழுக முற்பட்ட அவளை தடுத்து தயவு செய்து இங்கு நடந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறி அவளை கொஞ்சம் ஆசுவாசம் படுத்தி. தண்ணீர் குடுத்து என்ன நடந்தது என்று பொறுமையாக கூறும்படி சொன்னேன்.

    பிறகு அவள் பேச தொடங்கினாள். சில நாட்களாக அவளுக்கும் எனது மாமாவுக்கும் இடைய சண்டையாக இருப்பதாகவும். குழந்தை பிறக்கும் முன் இங்கு வர சொல்லி கேட்டால் அவர் இங்கு வேலை இருக்கிறது என்றும் என்னால் இப்போது வர முடியாது.

    குழந்தை பிறந்து நீ உனது அம்மா வீட்டில் இருந்து எங்கள் வீட்டிற்க்கு வரும் வரை என்னால் வர முடியாது என்று கூறிவிட்டார் என்று சொன்னால். மேலும் எப்பொழுது போன் செய்தாலும் வேறு யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பதாக கூறினாள்.

    நேற்று பிறந்த நாள் அன்று கூட ஒழுங்காக பேசவில்லை. சரி என்று இரவு சமாதானமாக பேசலாம் என்று போன் செய்தால் அவருக்கு அழைப்பு செல்ல வில்லை. ஒரு மணி நேரமாக சிங்கப்பூரில் இங்கு இருப்பதைவிட 2½ மணி நேரம் அதிகம் அப்படி இருக்க.

    நான் போன் செய்யும் பொழுது அங்கு இரவு 1 மணி அந்த நேரத்தில் யாருடன் ஒருமணி நேரம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும். என்று இன்று காலை கெட்ட பொழுது இப்படி என்னை தொல்லை பண்ணாம பேசாமல் செத்து தொலை என்று கூறிவிட்டார். அதனால் தான் இப்படி செய்ததாக கூறினாள்.

    எனக்கு என்ன சொல்வதன்றே தெரியவில்லை. எல்லாம் சரி ஆகிவிடும் என்று பொய்யாக ஆறுதல் கூறினேன் உன் குழந்தையை பற்றி யோசிக்காமல் இப்படி செய்கிறாய் என்று லேசாக கடிந்து விட்டு நடந்ததை மறந்து விடு இப்போது நான் வந்தது உனக்கு இந்த பிறந்தநாள் பரிசை குடுக்க தான்.

    நேற்று அனைவரின் முன்னும் குடுத்தால் பேசும் பொருள் ஆகிவிடும் என்பதால் தான் இப்போது குடுக்க வந்தேன். நல்ல வேலை நேற்றே தராமல் இருந்தேன் என்று கூறி அவள் கைகளில் கொடுத்தேன் அவள் லேசாக விரக்தி புன்னகை புரிந்து வாங்கி கொண்டு அப்படி என்ன இருக்கிறது என்று கேட்க.

    திறந்து பார் டாலி என்று பெயர் சொல்லி கூப்பிட்டு சிரிக்க வைக்க முயன்றேன். முயற்சி வீணாகவில்லை. புன்முறுவல் செய்து பிரித்து பார்த்தால் அவளுக்கு பிடித்த வயலேட் நிற சுடிதார் மற்றும் லெக்கிங்ஸ் இருந்தது. அவள் இது எனக்கு பிடித்த நிறம் சரியான நிறம் வாங்கி வந்து இருக்க டா என்று சிரித்து கொண்டு கூறினாள்.

    நான் எனக்கு தெரியும் உனக்கு பிடித்த நிறம் என்று கூற. ஆச்சர்யமாக பார்த்து எப்படி என்று கண்களால் வினவினாள். நான் பல முறை உன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் நீ பிடித்த பாடல் வரிகளை எழுதி வைக்கும் பொழுது ஒவ்வொரு தடவையும் அந்த வயலெட் நிற பின்னணி மட்டுமே வைப்பாய்.

    ஒரு சில தடவைக்கு பிறகு ஒவ்வொரு முறையும் நீ அந்த குறிப்பிட்ட நிறத்தை தேர்ந்து எடுத்து வைப்பதை கவனித்ததில் அது உனக்கு பிடித்த நிறமாக தான் இருக்கும். என்று எண்ணியாதக கூற என்னை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறாய் என்று கூறி நெகிழ்ந்து போனாள்.

    நான் நண்பர்கள் என்றால் அப்படிதான் என்று பொதுவாக கூறி முகம் கழுவி விட்டு ஓய்வெடுக்க சொல்லி செல்லும் முன் இனி எந்த பெரிய சண்டை வந்தாலும் இப்படி தவறான முடிவு எடுக்க கூடாது. என்று கூறி அவள் கையை எடுத்து என் தலைமேல் வைத்து இது என்மேல சத்தியம் என்று சொல்ல அவள் என் கண்களையே சற்று விநோதமாக பார்த்தால்.

    அவளுக்கு வளைகாப்பு நடந்தது வெளியே இருந்து புகைப்பட கலைஞர்கள் வந்து புகைப்படம் எடுத்து கொண்டு இருக்க. எனக்கும் புகைப்படத்தில் ஆர்வம் அதிகம் என்பதால் என் மொபைல் ஃபோனில் என்னால் முடிந்த கோணங்களில் எல்லாம் அவளை அழகாக படம் பிடித்து வைத்து கொண்டேன்.

    அவள் வளைகாப்பு முடிந்து அவள் அம்மா வீட்டிற்க்கு சென்றால்.

    இதற்கு இடையில் நாங்கள் குரூப் இல் பேசுவதை தவிர்த்து தனியாக சாட்டிங் செய்வதை வழக்கமாக மாற்றிக்கொண்டு பேசி வந்தோம்.

    அவளுக்கும் மாமாவுக்கும் இடையே இன்னும் சண்டை நீடிப்பதால் அவள் அவரிடம் பேசுவதில்லை. என்றும் அவராக போன் செய்தாள் மட்டும் பொதுவாக பேசி விட்டு வைத்து விடுவதாய் சொல்லி அதனால் இப்போது சண்டை இல்லாமல் சற்று இடைவெளி இருப்பதாக சொன்னால்.

    மேலும் குழந்தை பிறக்க போகும் நேரத்தில் அம்மா எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதால் ஃபோனில் பேசுவதை தவிர்த்து வருவதாக கூறினாள். உடனே நானும் போனை வைத்து விடுவதாக கிண்டலாக கூறினேன். அவள் உடனே உன்னிடம் பேசும் பொழுது தான் சற்று நிம்மதியாகவும்.

    மகிழ்ச்சி யாகவும் இருப்பதால் தான் உன்னிடம் பேசுகிறேன் என்னோட நிம்மதியை எடுத்துட்டு போறதா இருந்தா போ போன் ஐ வை என்று கூறினாள். நான் சரி மன்னித்து விடு என்று கூறி பேசினேன். அப்போது இவ்வளவு தெளிவாக இருக்கும் நீ ஏன் அவ்வாறு தற்கொலை முடிவு எடுத்தாய் என்று கேட்க.

    அதை பற்றி பிறகு சொல்வதாக சொன்னாள். சரி இப்போது உன் கணவன் உனக்கு போன் செய்து நீ பிஸியா இருக்கனு கேட்டா. என்ன பண்ணுவ நீயும் அப்படி சொல்லி தான கேள்வி கேட்ட னு சொன்னேன். நான் விளையாட்டாக அப்படி கேட்டு இருந்தாலும் அப்பொழுது தான் எங்கள் இருவருக்குமே அப்படி ஒரு பிரச்சினை வர வாய்ப்பு இருப்பதை குறித்து சந்தேகம் வந்தது.

    சரியென்று இருவரும் வாட்ஸ்அப் இல்லாத இன்னொரு மெசேஜ் அப்பிளிக்கேஷன் இன்ஸ்டால் செய்து கொண்டோம். அதில் இருவரும் உபயோகிக்கும் இரண்டாவது சிம் நம்பர் வழியாக பேச தொடங்கினோம். அப்பொழுது தான் நான் அடிக்கடி என் பெயரில் இருந்து ஃபோன் வந்தால்.

    உன் உறவினர்களே ஏதாவது நினைப்பார்கள் என்று கூறி என்னுடைய இரண்டாவது எண்ணை உனக்கு அடிக்கடி பேசும் தோழியின் பெயரில் பதிவிடும் படி கூறினேன் அவளும் அவ்வாறு செய்தாள்.

    இப்போது நாங்கள் சற்று கூடுதலாக போனில் பேசுவதை வழக்கமாக கொண்டோம். இன்று மீண்டும் என் அவ்வாறு கோழை தனமான முடிவு எடுத்தாய் என்று கேட்டேன்.

    அவள் எனது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் பற்றி நான் யாரிடமும் சொன்னது இல்லை இப்போது உன்னிடம் சொல்வதாக சொல்லி பேச தொடங்கினாள்.

    அவள் உறவு ஆண்களே அவளை சிறு வயதில் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முற்ப்பட்டதும். அதிலிருந்து மீண்டு காதல் வலையில் விழுந்து அவன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று உணர்ந்த சமயத்தில் தான் இந்த கல்யாணம் முடிவானதாக சொல்லி.

    இந்த எண்ணங்களில் இருந்து தப்பிக்க தான் தூரமாக வந்த வரணை ஒத்துக்கொண்டு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்ததாகவும். சில மாதங்களிலேயே அந்த நம்பிக்கை வீன் போகவும் அவ்வாறு ஒரு தவறான முடிவு எடுத்ததாக கூறினாள்.

    என் கண்கள் கலங்கி லேசாக குரல் தடுமாறியது அதை அவளும் உணர்ந்து இதற்காக ஏன் நீ அழுகிறாய் என்று கேட்க. நான் சமாளிப்பதற்காக ஏதோ சொல்லி பேச்சை மாற்றி. போன் கட் செய்து விட்டேன். என் மனதிற்குள் பல எண்ணங்கள் புயல்களாய் அடித்து கொண்டு இருக்க.

    பல துக்கங்களை சுமந்து கொண்டு இருக்கும் அவளை நானும் மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசி ஏமாற்றிக்கொண்டு இருப்பதை நினைத்து எனக்கே என்மேல் வெறுப்பாக இருந்தது.

    இதற்கும் மேல் அவளிடம் பொய்யாக நடிக்க மனம் இல்லாமல் அவளிடம் நான் அவளை காதலிக்கும் உண்மையை கூறிவிட முடிவெடுத்தேன்.

    திரும்ப அழைப்பதாக சொல்லி போன் கட் செய்ததில் இருந்து பல எண்ண போராட்டங்களுக்கு பிறகு மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் அவளுக்கு ஃபோன் செய்தேன்.

    அவள் அதை எடுத்து மிக எதார்த்தமாக சந்தேகமாக என்ன ஆச்சு உனக்கு இப்படி கட் பண்ணிட்டு திரும்ப கூப்பிட மாட்டியே னு என் கிட்ட கேட்டாள். அதற்கு நான் உன் கிட்ட ஒன்னு சொல்ல போறேன் அத நீ எப்படி எடுத்துக்க போற னு தெரியல னு சொன்னேன்.

    அவள் உன்கிட்ட நான் கோவிச்சுக்க என்ன இருக்கு. என்னோட கூட படிச்ச தோழி கிட்ட சொல்லாத சம்பவம் கூட உன்கிட்ட சொல்லி இருக்கேன் அந்த அளவுக்கு உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு னு சொன்னா. அதுக்கு நான் இந்த மொத்த நம்பிக்கையும் உடைஞ்சு போயிருமோ னு நான் பயப்படுற அளவுக்கு எந்த நிஜம் இருக்கும் னு சொல்ல. அவள் உண்மையான பதற்றத்தோடு அப்படி என்ன சொல்ல போற னு கேட்டா.

    நான் அவளை முதல் தடவை நம்ம பாத்த நாள் ஞாபகம் இருக்கா னு கேட்டேன் அவ ஆமா இருக்கு னு சொன்னாள். நான் என்ன ஞாபகம் இருக்கு னு கேக்க. நீ துங்கிட்டு இருந்த நான் மேடை ல பேசுற சத்தம் கேட்டு எழுந்துட்ட நான மனிச்சுகோங்க சொல்லிட்டு என் ரூம் க்கு போய்ட்டேன் னு சொல்ல உனக்கு அது ஒரு சாதாரண விஷயம் ஆன எனக்கு அப்படி இல்ல. இனமே நான் சொல்ல போற எதயும் நடுவுல நிப்பாட்டி கேள்வி கேட்காத.

    எல்லாம் சொல்லி முடிச்சதும் தான் நீ பேசணும்னு சொல்லிட்டு பேசினேன். நான் தூங்கிட்டு இருந்தப்போ உன்னோட குரல் ஒரு சின்ன குழந்தை மாதிரி அந்த குழந்தை கூட பேசுனது அவ்வளவு நல்லா இருந்துச்சு. உண்ண அதுக்கு முன்னாடி நான் பாத்ததே இல்ல.

    உன் நிச்சயதார்த்தம் ல எடுத்த போட்டோ கூட நான் பாக்கவே இல்ல அதனால நீ யாரு என்ன னு எனக்கு தெரியவே தெரியாது. உன்ன நான் பாத்தது ஒரு பத்து நொடி கூட இருக்காது. ஆன உன்னோட நெற்றி. நீளமான புருவம். பெரிய கண்ணு. அந்த கூர்மையான மூக்கு.

    கொஞ்சம் பெரிய தடித்த உதடு. னு ஒன்ன கூட நான் கவனிக்காம விடல. அப்புறம் உன்ன எப்போவும் இன்னைக்கு வரைக்கும் குரூப் ல யோ. நேர் க பேசுறப்போவோ அக்கா னு சொல்லி கூப்பிட்டதே கிடையாது. உன்கிட்ட பேசாம ஒதுங்கி தான் போவேன்.

    என்னைக்கு நீ உன்னோட ரூம் க்கு வந்தப்போ. எனக்கு அவ்வளவு வயசு ஆகல. நீ வா போ னு சொல்லு ஒன்னும் கவலை இல்ல னு சொன்னியோ அன்னைக்கு தான் உன்கிட்ட நான் இயல்பாகவே பேச ஆரம்பிச்சு இவ்வளவு நட்பா பேசுறேன்.

    ஆன என்னோட மனசுல சகோதர உணர்வோ இல்ல வெறும் நட்பு மட்டுமோ இல்ல இதுல காதல் தான் இருக்கு. இத உன்கிட்ட சொல்ல முடியாத சூழல் ல இவ்வளவு நாள் சொல்லல. ஆன உன்னோட வாழ்க்கை ல இவ்வளவு பிரச்சனை இருக்கு னு தெரிஞ்ச அப்புறம் உன்ன ஏமாத்தி உன்கிட்ட பேச எனக்கு மனசு வரல.

    என் மனசுக்கு உள்ள இப்படி ஒரு விசயம் இருக்கு. அதுக்காக என்ன மன்னிச்சிடு ஆன அத ஒரு. நாளும் உன்கிட்ட நான் தப்பா வெளி படுத்துனது கிடையாது. நான் பேசின ஏதாவது உன்ன காயப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடு னு சொன்னேன்.

    அவ என்ன சொல்ல போறா னு தெரியாம மனசுல இருந்த எல்லாம் அவகிட்ட சொல்லிட்டேன் னு நிம்மதி ல இருந்தேன்.

    ஆன அவளோட கொஞ்சநஞ்ச நிம்மதியும் கெடுத்து விட்டேன் னு எனக்கு அப்போ தெரியல.

    அவ என்ன சொல்லுறது னு தெரியாம இதெல்லாம் என் இவ்வளவு நாள் சொல்லாம இன்னைக்கு சொல்லுற னு கேட்டா.

    என் புருஷன் மேல எனக்கு இப்போ அவ்வளவா ஈடுபாடு இல்ல னு மத்த ஆம்பிளை மாதிரி நீயும் காதல் னு ஒரு பொய் நாடகம் போடுறியா னு இனிமேல் எனக்கு ஃபோன் பண்ணாத. மெசேஜ் பண்ணாத னு சொல்லி ஃபோன் வச்சுட்டு என்கூட பேசுறது இல்ல.

    நானும் அவ வார்த்தைக்கு மரியாதை குடுத்து அவளுக்கு போன் பண்ணுவதை சுத்தமாக குறைத்து விட்டேன். ஆனால் அவளுக்கு குழந்தை பிறக்க போவதால் அவள் மனதிற்கு அமைதி தரும் வகையில் இருக்கும் பாடல்கள். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான மெசேஜ் மட்டும் அவ்வப்போது அனுப்பி வந்தேன்.

    அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தான். கணவனுடன் சண்டை போன்றவற்றை மறந்து விட்டு முழு கவனத்தையும் குழந்தை மேல் வைக்க ஆரம்பித்து விட்டாள் எங்கள் குடும்ப குரூப்பில் அவளது மெசேஜ் அடிக்கடி வந்தது எப்பொழுதும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள்.

    மாதங்கள் உருண்டோடின அவளது கணவன் சிங்கப்பூரில் இருந்து வந்தான் அவன் குழந்தையின் மீது அதித அன்பு வைத்து இருந்தான். வீட்டிற்க்கு வந்த பிறகு எப்பொழுதும் குழந்தையுடன் நேரத்தை செலவழிப்பது. இரவு நேரங்களில் மட்டும் அவளுடன் உடலுறவு கொண்டு அவனுடைய சந்தோசத்தை மட்டும் அனுபவித்துக்கொண்டு இருதான்.

    அவளும் அவன் இப்பொழுது தான் குழந்தையை பார்ப்பதால் குழந்தையின் மீது உள்ள பிரியத்தால் தன்னை சரியாக கவனிக்காமல் இருப்பதாக நினைத்தாள். ஆனால் என் மாமனோ அவளை ஒரு மோகப்பொருளாக மட்டுமே பாவித்து வந்தான். பகல் நேரங்களில் குழந்தையுடன் கொஞ்சுவது. குடிப்பது இரவானால் அவளுடன் படுத்துவிட்டு தூங்குவது என்று மட்டுமே நாட்க்களை நகர்த்தி வந்தான்.

    இதற்கிடையே நானும் எப்பொழுதும் விடுமுறை தினங்களில் அங்கு செல்வது மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது என்று தான் இருந்து வந்தேன். மற்ற மாமனின் குழந்தைகள் என்னிடம் அட்டை போல் ஒட்டிக்கொண்டாளும்.

    நான் வரும் நேரங்களில் அவள் குழந்தையுடன் அவள் அறைக்குள் சென்று விடுவதாலும் மீதி நேரங்களில் என் மாமன் குந்தையை யாருக்கும் தராமல் கொஞ்சுவதாலும் அவன் மட்டும் என்னிடம் மட்டும் இல்லாமல் யாரிடம் சென்றாலும் அழுவதை நிறுத்துவதில்லை.

    காலங்கள் சுழன்றன என் தேவதையின் மகனும் வளர்ந்தான். என் மாமன் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு. குடிக்கு அடிமையானான். எப்பொழுதும் குடிப்பதும் அவளிடம் சண்டையிடுவது. இரவுகளில் அவளை அவளின் விருப்பம் இல்லாத நாட்களில் கூட அனுபவித்துவிட்டு இருந்தான்.

    அவள் படும் வேதனைகளை தாங்க முடியாமல் நானும் பல முறை அவளிடம் பேச முயற்சி செய்தேன். ஆனால் அவள் கணவனுக்கு மனதளவில் கூட தவறு செய்ய கூடாது என்று என்னை வலுக்கட்டாயமாக தவிர்த்து வந்தால். ஆனால் என் மனதில் பட்ட எண்ணங்களை அவளிடம் நான் எப்பொழுதும் மெசேஜ் இல் சொல்லிவிடுவேன்.

    அவள் இங்கு வந்து கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஓடி இருந்தன. அவள் குழந்தையும் 2¾ வயதை தொட்டிருந்தான். ஆனாலும் பிற ஆட்களுடன் பேசி வளராததால் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே வளர்ந்து வந்தான்.

    எனக்கு 25வது பிறந்தநாள் வந்தது ஒரு தினங்கள் முன்பே எங்கள் குரூப்பில் அக்காக்கள் இருவரும். எப்பொழுதும் குழந்தைகளை மட்டும் வெளியே அழைத்து சென்று செலவு குறைவாக செய்து chocolate வாங்கி கொடுத்து விடுகிறாய்.

    இம்முறை எங்கள் அனைவருக்கும் விலை உயர்ந்த chocolate வாங்கி தர வேண்டும் என்று கூறி என்னிடம் சீண்டிக்கொண்டு இருந்தனர். வேறு வழி இல்லாமல் எனது டாலி யும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு கடமைக்கு சீண்டினாள் நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

    எனது பிறந்த நாளும் வந்தது அனைவரும் ஒரே வீட்டில் வசித்தாலும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக chocolate வாங்கி வைத்து இருந்தேன். அப்பொழுது தான் எனது காதலியை அவளது அறைக்கு சென்று சந்திக்க முடியும் அப்படியாவது என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவாள் என்று அவ்வாறு முடிவு செய்து இருந்தேன்.

    அன்று எனது மூத்த அக்காவுக்கும் நடு அக்காவுக்கும் அவர்களுடைய பொருட்களை கொடுத்துவிட்டு கடைசியாக அவள் அறையை திறந்தேன். அவள் அவளுடைய மெத்தையில் கால்களை மடக்கி அதில் முகம் புதைத்து அழுது கொண்டு இருந்தாள்.

    நான் வரும் சத்தம் கேட்டதும் எழுந்து என்னை பார்த்ததும் சட்டென கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே வர சொன்னாள். நான் வந்ததும் குளியலறைக்கு செண்டு முகம் கழுவி வந்து எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கையை என்னிடம் நீட்டினாள்.

    நானும் கையை நீட்டி அவள் கையை பற்றி எதற்கு அழுது கொண்டு இருந்தாய் என கேட்டேன். அவள் உடனே இல்லை தூங்கிக்கொண்டு இருந்தேன் நீ வந்ததும் முகம் கழுவி வந்தேன் என்று கூற அவள் அழுது சிவந்த கண்களை நான் இமைக்காமல் பார்த்து உனக்கு நான் பிடிக்காதவனாக இருக்கலாம்.

    ஆனால் உனது வேதனையை சொல்லி அழ ஒரு நண்பனாக என்னை கற்பனை செய்து கொண்டு நடந்ததை கூறு. என்னால் உனக்கு நல்ல நண்பனாக கண்டிப்பாக இருக்க முடியும் எல்லாவற்றையும் உனக்குள் வைத்துக்கொண்டு உன்னை நீயே வருத்தி கொள்ளாதே என்று கூறினேன்.

    அவள் கண்களில் நீர் வழிய உன்னை நல்ல நண்பனாக எண்ணியே உன்னிடம் எல்லாவற்றையும் கூறினேன் ஆனால் நீயோ என்னை பார்த்த நொடியில் இருந்து காதலிப்பதாக கூறி என்னை அதிர்ச்சியில் தள்ளி விட்டாய்.

    எனது காதலனும் என்னை காதலின் பெயரை சொல்லி ஏமாற்றி விட்டான். உனது மாமாவோ என்னை வெறும் மோக பொருளாக மட்டும் பார்க்கிறார். இரவில் எனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் படுக்க வேண்டும் என்று தினம் தினம் மனதாலும் உடலாலும் வேதனை படுத்துகிறார். இப்படி சூழ்நிலையில் நீ இப்படி வயது. உறவு முறை என எதையும் யோசிக்க முடியாத அளவுக்கு என்மேல் அன்பை பொழிந்து என்னை காதல் செய்கிறாய்.

    சிறு வயது முதலே உண்மையான காதல் கிடைக்காமல் ஏன்கி தவித்த என்னால் நீ காட்டும் காதலை சமாளிக்க முடியாமல் என் மனதை ஏற்கனவே உன்னிடம் பறிகொடுத்து விட்டேன். எங்கு என்னையும் உன்னிடம் இழந்து விடுவேனோ என்று தான் உன்னை பார்ப்பதை கூட தவித்து வந்தேன். என்னை இழப்பதை விட எங்கு மற்ற ஆண்கள் போல் நீயும் உடலின் மோகம் தீர்ந்த பின் என்னை மறந்து விடுவாய் என்ற பயத்தில் தான் விலகி விலகி சென்றதாக கூறினாள்.

    என்னால் இந்த சமுதாயத்தை மீறி உன்னை காதலித்து கரம் பிடிக்க முடியாது. ஆனால் என்னை எப்பொழுதும் உண்மையாக ஒருவன் காதலித்து கொண்டு இருக்கிறான் என்ற மகிழ்ச்சி என் ஆழ் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.

    அதனால் தான் உன்னோடு பேசுவதில்லை ஆனால் நீ என்னை காதல் செய்கிறாய் என்று கூறிய சில நாட்களில் எனக்கும் உன்மேல் காதல் வந்து விட்டது என்று கூறினாள்.

    தன் மனதில் இருந்த அனைத்தையும் என்னிடம் கொட்டி விட்டு கண்களில் நீர் வழிய என்னை பார்த்து நின்று கொண்டு இருக்க. அவள் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் நானும் அவளுடன் சேர்ந்து கண்ணீர் சிந்திக்கொண்டு இருந்தேன்.

    அதை பார்த்த அவளும் எனக்காக மீண்டும் வருத்தப்பட்டு சொன்னாள் என்னால் உனக்கு காதலியாக இருக்க முடியாது. என்னை மறந்து விட்டு உனது வாழ்க்கையில் கவனம் செலுத்த சொன்னாள்.

    நான் அப்போது என்மேல் உனக்கு காதல் இருப்பதை ஒத்துக்கொண்டு விட்டாய். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள். நீ என்னை இப்படி ஒதுக்கி வைத்து உன் கணவனிடம் காதலை எதிர் பார்த்து இத்தனை வருடம் சுற்றி உறவுகள் இருந்தும் கணவன் அருகில் இருந்தும் தனிமையை மட்டுமே உணர்ந்து இருக்கிறாய்.

    நீ உன் குடும்பம் எதையும் விட்டு வர தேவை இல்லை என்னுடைய காதலை மட்டும் வெளிப்படுத்த எனக்கு அனுமதி கொடு. உன் கணவனுக்கு நீ உண்மையாகவே இரு உனக்கு தாலி கட்டிய கடனுக்காக உனது உடலையும் அவனுக்கே குடுத்து விடு ஆனால்.

    உனது மனதில் எல்லாம் என்னை பற்றிய நினைப்பு இருக்கிறது. அதனால் அந்த மனதை மட்டும் எனக்கே கொடுத்து விடு இந்த ஆயுள் முழுதும் நீ அனுபவிக்க முடியாமல் தவித்த காதலை நானே உனக்கு கொடுக்கிறேன். அதற்கு மட்டும் எனக்கு உரிமை கொடு என்று அவள் கண்ணை பார்த்து கேட்டேன். அவள் ஏதும் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள்.

    நான் அவள் அருகில் சென்று நான் உன் படுக்கையில் இடம் கேட்க இங்கே வரவில்லை. மாறாக உன் மனதில் இடம் கேட்கிறேன். உன் மனதில் நான் மட்டும் தான் இருக்கிறேன் அதை ஒத்துக்கொள். நீ உனது கணவனுக்கு மதிப்பளிக்க நினைக்கிறாய் அதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் எனக்கு சொந்தமான மனதை மட்டும் எனக்கு கொடுத்துவிடு என்று கேட்டேன்.

    அவள் எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்க நான் சரி நீண்ட நேரம் உனது அறைக்குள் இருக்கிறேன். மற்றவர்களுக்கு சந்தேகம் வரும் முன் நான் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு கதவில் கை வைத்து திறந்த பொழுது.

    என் தேவதை என் பின்னால் இருந்து என்னை இறுக்கமாக கட்டி அணைத்தாள்.

    Leave a Comment