அவளும் பெண் தானே – 4 (Avalum Pen Thane 4)

This story is part of the அவளும் பெண் தானே series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி..

    கதையின் நாயகன் பார்வையிலிருந்து கதை நகர்க்கிறது..

    மறுநாளை காலையில் எனக்கு மேலே இருந்த வீட்டின் ஓடு வழியே வந்த சூரிய வெளிச்சம் என் கண்ணில் பட்டு கூச எனக்கு போதையும் தூக்கமும் தெளிந்து கண்ணை மெதுவாக திறந்து பார்த்தேன். கண்ணில் சூரிய வெளிச்சம் பட மீண்டும் கண்ணை மூடி படுத்திருந்தேன்.

    அப்போது என் உடம்பிலும் சூரிய வெளிச்சம் பட்டு உடம்பு சூடானதை உணர்ந்த பின்பு தான் உடம்பில் துணி இல்லாமல் இருப்பதை உணர்ந்து கண்ணை திறந்து எழுந்து பார்த்தேன். நான் நினைத்த மாதிரியே என் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக இருந்தேன்.

    கண்ணை நன்றாக திறந்து சுற்றிலும் பார்த்தேன். அப்போது தான் நான் ஒரு வீட்டில் இருப்பதையே உணர்ந்தேன்.. அங்கிருந்த கயிற்றில் நான் கட்டியிருந்த கைலியும் போட்டியிருந்த சட்டையும் இருந்தது. அதை எடுத்து உடம்பில் உடுத்திய பிறகு கிளம்பலாம் என காலடி எடுத்து வைக்கும் போது காலடியில் என் மொபைல் மற்றும் பணமெல்லாம் இருந்தது.

    ரூபாய் நோட்டுகள் எல்லாம் நன்றாக காய்ந்து இருந்தது. அதை எடுத்து பையில் வைத்தபடி இது யாருடைய வீடு இங்கு எப்படி வந்தேன். நேற்று என்ன நடந்தது என பல கேள்விகளுடன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இருப்பது போல் தெரியவில்லை. அதனாலே பிறகு வந்து பார்த்துக் கொள்ளலாம் என அங்கிருந்து கிளம்பி என் வீட்டுக்கு வந்தேன்..

    என் பூர்விக வீட்டின் வாசலில் அந்த வீட்டை பராமரித்துக் கொண்டிருக்கும் ஆயா எனக்காக உட்கார்ந்திருந்தாள். அவள் எவ்வளவு நேரம் எனக்காக உட்காந்திருக்கிறாள் என தெரியவில்லை. இருந்தாலும் என்னை பற்றி நினைக்கும் ஜீவன்களில் இவரும் ஒருவர். அவளை பார்த்தாலும் எதுவும் பேசாமல் கடந்து செல்லும் போது ஆயாவை.

    “ஏன்யா இப்படி இருக்க.? ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்தவன்” என சொல்லும் போதே என் மனதில் அந்த காட்சிகள் எல்லாம் வந்து போயின.

    “இப்ப இப்படி இருக்கியே ராசா. அவளுக்கு தான் உன்னோட வாழ குடுத்து வைக்கலேயே. அதுக்கு யார் என்னய்யா பண்ண முடியும்.? வேற ஒரு கல்யாணத்த பண்ணிக்கய்யா எல்லாம் சரியா போய்டும்” என எல்லோரையும் போல் ஆயாவும் அவள் பங்குக்கு வார்த்தைகளை அள்ளி வீசினாள்.

    ஆனால் அதை கண்டுக் கொள்ளாமல் உள்ளே நுழைந்து பின்புறமாக சென்று குளிக்க ஆரம்பித்தேன். உடலில் உள்ள சோர்வு போக தண்ணீரை ஊற்றி குளித்தேன். அப்போது தான் ஒன்றை கவனித்தேன்.

    என்னுடைய உறுப்பை சுற்றியிருந்த மொட்டின் இடைவெளியில் விந்து படிந்திருந்தது. நேற்று இரவு என்ன நடந்திருக்கும் என யோசித்து பார்க்க ஆரம்பித்தேன். நான் போதையில் இருந்ததால் என் நினைவுக்கு எட்டிய வரை எதுவும் தெரியவில்லை.

    ஒரு வேளை போதையில் நேற்றி இரவு படுத்திருந்த வீட்டில் இருந்த யாரிடம் தவறாக நடந்துக் கொண்டோமா என மீண்டும் யோசித்து பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் என்ன நடந்தது என தெரியவில்லை. நான் தான் போதையில் யாருடனோ வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்திருக்கிறேன். அதனால் தான் இந்த விந்து கரை படிந்திருக்கிறது.. இதனை நினைத்தபடியே குளித்து முடித்து விட்டு வெளியே வந்தேன்.

    ஆயா ஒரு தட்டில் சூடான இட்லியும் மீன் குழம்பு ஊற்றி எடுத்திட்டு வந்தாள். அந்த மீன் குழம்பின் வாசனைக்கே பசி வயிற்றை கிள்ளியது. உடனே உட்காந்து சாப்பிட ஆரம்பித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இது மாதிரியான சுவையான சாப்பாட்டை சாப்பிடுகிறேன். வயிற்று பசி அடங்கும் வரை மனநிறைவாக சாப்பிட்டு எழுந்தேன்.. நான் வெளியே கிளம்பும் போது ஆயா.

    “ராசா ஒரு ஆம்பள வெளியே கிளம்பும் போது கூப்பிட கூடாது தான். இருந்தாலும் இந்த கிழவி மனசு தாங்காம தான் கூப்பிடுறேன்” சொல்ல ஆயாவை திரும்பி பார்த்தேன்..

    “இன்னிக்காவது ராத்திரி வீட்டுக்கு வந்திடுயா.?” சொல்ல அதற்குள் பல அர்த்தங்கள் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

    “சரி ஆயா.. வர பாக்கிறேன்” சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். என் வண்டியை காணவில்லை. அப்போது தான் நேற்று காலை ஒயின் ஷாப்க்கு சென்றது நியாபகம் வர வேகமாக அங்கு போய் பார்த்தேன். வண்டி ஒயின் ஷாப்பில் இருந்து கொஞ்சம் தூரத்தில் கீழே விழுந்து மழையில் நனைந்தபடி இருந்தது. அதை எடுத்து அங்கையே நிறுத்திவிட்டு ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

    ஆற்றில் நீர் அடித்துக் கொண்டு ஓடியது. அங்கிருந்த கரையில் கசங்கிய சேலையுடன் ஆற்றையே வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவள் என்னை பார்க்கவில்லை. நான் தான் அவளை பார்த்தேன். அவள் கருப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு கலை அவள் முகத்தை பார்க்கும் போது தெரிந்தது. அவளையே பார்த்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அவள் திரும்பி என்னை பார்த்து தயக்கத்துடன் புன்னகைத்தபடி

    “இப்ப நல்லா தெளிவா ஆகிட்டிங்க போல” சொல்ல நேற்று இவளுடைய வீட்டில் தான் இருந்திருக்கிறோம் என எனக்கு புரிந்துவிட்டது. இதுவரை அவளை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்த நான் இப்போது அவளை பார்ப்பதற்கே சங்கடமாக இருந்தது. அவளின் முகத்தை பார்க்காமல் தலையை குனிந்தபடி இருந்தேன்.. மீண்டும் அவளே தான் பேச்சை தொடங்கினாள்..

    “என்ன எதுவும் பேசாமலே இருக்கீங்க?” ஏதோ பல நாட்கள் என்னுடன் பழகியவள் போல உரிமையாக பேசினாள். ஆனால் நான் தான் அவளின் முகத்தை பார்த்து பேச முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இருந்தேன்.

    “என்ன சார் அமைதியாவே இருக்கீங்க. நேத்து நைட் எல்லாம் நல்லா பேசினிங்க. இப்ப என்ன ஆச்சு எதுவும் பேசமாட்றீங்க.?”

    “நல்லா பேசினான? என்ன பேசினேன்.?”அவளின் முகத்தை பார்க்காமல் தயக்கத்தோடு கேட்க.

    “ஏன் சார் உங்களுக்கு தெரியாத என்ன பேசினிங்கனு?”

    “இல்ல தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் நிச்சியமா தெரியும்?”

    “அப்படி என்ன தெரியும் சார்?” உதட்டை விரித்து சிரித்து கையால் மூடியபடி கேட்க.

    “நேத்து நைட் என்ன நடந்தது மட்டும் தெரியும்?” சொல்ல அவளின் குரலும் சற்று தடுமாறியது.

    “தெரியுமா?” குரலில் ஒரு நடுக்கத்தோடு கேட்க.

    “ம்ம். தெரியும்” சொல்லி விட்டு.

    “என்னைய மன்னிச்சிடு” சொல்லி நகர ஆரம்பித்தேன். அப்போது அவளும்.

    “சார் என்னையும் மன்னிச்சிடுங்க.” என்றாள்.

    “நீ இல்ல நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க?” ஒரு தயக்கத்தோடு கேட்டேன்.

    “இல்ல நேத்து நடந்ததுக்கு தான்.”

    “அதுவா? அது பரவாயில்ல. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க.?” சொல்லிவிட்டு நகரும் போது அவளே மீண்டும்

    “உங்களுக்கு எதும் முக்கியமான வேலை இருக்கா?” அவள் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் இங்கு மட்டும் இருக்க கூடாது என முடிவு செய்து.

    அவளிடம், “ஆமா ஒரு முக்கியமான வேலை இருக்கு” சொல்லிவிட்டு அங்கிருந்து அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக நடந்து ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்து ஒரு பியர் மற்றும் ஒயின் வாங்கினேன். கடையின் வாசலிலே நின்று வாங்கிய பியரை மட்டும் குடித்துவிட்டு அப்படியே மெதுவாக மீண்டும் ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

    அவள் அங்கிருக்க வாய்ப்பில்லை என நினைத்துபடியே நடந்தேன். ஆனால் நானொன்று நினைக்க விதி ஒன்று நினைத்திருக்கிறது. அவள் அங்கு தான் இருந்தாள். ஆனால் அவள் இருந்த கோலத்தை பார்த்தவுடன் போதையில் மீண்டும் காம உணர்ச்சிகள் நரம்புகளில் வழியாக உயிர்தெழ ஆரம்பித்தது.

    அவள் கட்டியிருந்த சேலையை கலட்டி ஆற்றின் கரையில் வைத்துவிட்டு வெறும் பாவடை மட்டும் கட்டிக் கொண்டு நீரில் மூழ்கி நனைந்த உடம்புடன் மேலே எழுந்தாள். அவளின் நனைந்த பாவடை உடம்போடு ஒட்டியிருக்க அதில் அவளின் உடல் வனைப்பு எல்லாம் அப்படியே தெரிந்தது.

    அதனாலே அவள் இருக்கும் பக்கம் செல்லாமல் வேறு பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

    ஆனால் நீரில் நடக்கும் போது காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். கையில் இருந்த பாட்டிலையும் பார்க்க தவறவில்லை.. உடனே

    “சார் சொன்ன முக்கியமான வேலை இது தானா?” கிண்டலடிக்கும் தோணியில் கேட்க அது நான் இருக்கும் மனவேதனையில் எனக்கு கடுப்பாக தான் இருந்தது. அவள் சொன்னதற்கு எந்த பதிலும் சொல்லாமல் நீரில் இறங்கி ஓரமாக நடந்தே அக்கரைக்கு சென்றேன். கரையில் உட்கார்ந்து கொண்டு வாங்கிய ஒயினை எடுத்து யூஸ் அன் த்ரோ டம்பளரில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்து குடிக்க பாதி பாட்டிலுக்கு மேல் காலியானது.

    நான் மிதமான போதையில் இருந்தேன். அப்போது அவள் குளித்து முடித்து என்னை நோக்கி வந்தாள். அவள் அதே ஈரமான பாவடையில் அதற்கு மேல் அந்த கசங்கி சுருங்கிய புடவையை மேலே சுற்றி மறைத்தபடி வந்தாள். அவளை அந்த கோலத்தில் மீண்டும் பார்த்ததில் எனக்கு மீண்டும் இறங்கியிருந்த காம உணர்வுகள் உயிர் பெற ஆரம்பித்தன. ஆனால் நேற்று நடந்த மாதிரி நடந்து விட கூடாது என உறுதியாக இருந்தேன்.

    “ஹலோ சார் தெளிவா இருக்கீங்களா?” அவள் கேட்பது என் காதில் விழ

    அதற்கு நான் “ம்ம் என்ன சொல்லு?” கரகரத்த குரலில் சொல்ல

    “இல்ல கொஞ்சம் உங்ககிட்ட பேசனும்.. அதான் நிதானத்துல இருக்கீங்களா?” கேட்டேன்..

    “நா எப்படி இருந்தா என்ன நீ என்ன சொல்லனுமோ சொல்லிட்டு கிளம்பு” சொல்ல

    “இப்ப நீங்க நிதானத்துல இல்ல. அப்பறம் நிதானத்துல பாத்தா சொல்றேன் சார்.” என்றாள்.

    “ஓ.. அப்படியா.. அப்போ சரி”

    அவள் மீண்டும் “என்னை மன்னிச்சிடுங்க சார்” சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு விறுவிறுவென்று நடந்து சென்றாள். அவள் சொன்னதையோ அல்லது சென்றதை பற்றியோ கவலைபடாமல் மீதியிருந்த ஒயினை காலி செய்தேன். அங்கிருந்து போதையில் வண்டியை எடுத்துக் கொண்டு மெதுவாக ஓட்டி சென்றேன். திடீரென்று போதையில் வண்டியோடு டமால் என விழுந்த சத்தம் மட்டும் கேட்டது.

    அடுத்து கண்ணை திறந்து பார்க்கும் போது மீண்டும் நேற்று படுத்திருந்த அதே வீட்டில் காலை ஒரு சிறிய கட்டுடன் படுத்திருந்தேன். காலையில் சிறிது நேரத்திற்கு முன் பார்த்த அந்த பெண் இருக்கிறாளா என கண்ணை சுழற்றி பார்த்தேன். ஆனால் அவள் வீட்டில் இல்லை. பின் மெதுவாக படுத்திருந்த கட்டிலை விட்டு காலை தூக்கி கீழே வைக்கும் போது காலில் சுரிரென்று வலி ஏற்பட்டது.

    அந்த வலியோடு வெளியே வந்து அவள் எதுவும் இருக்கிறாளா என பார்த்தேன். வெளியில் போட்டியிருந்த கல்லில் உட்கார்ந்து கொண்டு கையில் ஒரு ஆட்டுக்குட்டியை வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். அவளை கூப்பிடலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன்.

    பின் அவளுக்கு இனியும் தேவையில்லாத சிரமத்தை குடுக்க வேண்டாம் என முடிவு செய்து மணியை பார்க்க மாலை ஆறுக்கு மேல் ஆகியிருந்தது. பின் ஆயா சொன்னது நியாபகத்திற்கு வர அடிப்பட்ட காலோடு வண்டியை மெதுவாக ஸ்டார்ட் செய்ய அந்த சத்தம் கேட்டு திரும்பி

    “ஹலோ என்ன இன்னிக்கு சீக்கிரமே தெளிஞ்சிட்டிங்க போல” கேட்டாள். அது அக்கறையில் கேட்டாளா? இல்லை கிண்டலுக்காக கேட்டாளா? என தெரியவில்லை. அவள் கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக குடுத்துவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஆனால் காலில் ஏற்பட்ட அடியால் என்னால் அடுத்து ஒரு அடி கூட வண்டியை ஓட்டி செல்ல முடியவில்லை.

    நடந்து செல்வதற்கும் வழியில்லை. என்ன செய்வது என தெரியாமல் வண்டியை வைத்துக் கொண்டு நிற்க பாரம் தாங்காமல் மீண்டும் கீழே விழ செல்லும் போது மீண்டும் அவள் தான் வந்து என்னையும் வண்டியையும் கை தாங்கலாக பிடித்து வண்டியை ஓரமாக சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்று கட்டிலில் உட்கார வைத்தாள்.

    “ஏன் சார் இப்படி பண்றிங்க.? அதான் கால்ல அடி பட்டியிருக்குல.. கொஞ்சம் இருந்து போனா தான் என்ன?” அவள் பேச

    அதற்கு நான், “இல்ல எதுக்கு தேவையில்லாத சிரமத்தை மத்தவங்களுக்கு குடுத்திட்டு தான்..”

    “உங்கள மாதிரி ஒருத்தருக்கு உதவி பண்ணது எனக்கு சந்தோஷம் தான் சார். அதனால நீங்க கவலைபடாம இங்க வலி குறையுற வர இருந்திட்டு போகலாம்.” அவள் பெருதன்மையுடன் சொல்ல நேற்று நடந்ததை நினைக்கும போது எனக்கே என் மீது வெறுப்பு தட்டியது.

    அவள் தான் மீண்டும் “என்ன சார் திரும்பி யோசனையில இருக்கீங்க போல” கேட்க.

    “ம்ம்.. இல்ல.. இல்ல அதலாம் இல்ல..” சொல்ல மீண்டும் நானே.

    “இல்ல.. நேத்து நடந்தது தெரியாம நடந்திருச்சு.. போதையில என்ன பண்ணினேன் எனக்கே தெரியல.. அதனால என்னை மன்னிச்சிடு” சொல்ல அவளின் முகம் மாறியது.. பின் சுதாரித்து

    “இல்ல சார் நா தான் உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லனும்.?”

    “என்ன உண்மை?” நான் கேட்க.

    “இல்ல நேத்து என்னைய நீங்க எதுவும் பண்ணல. நா தான் உங்கள புத்தி பேதலிச்சு போய் பண்ணி தொலைச்சிட்டேன்.”

    இனியும் அவள் வருவாள்…

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் செல்லுங்கள்.