முழுமையான உடலுறவு – என்னுடைய பார்வையில் (Muzhumayana Udaluravu Ennudaya Parvayil)

வணக்கம். நான் உங்கள் முகிலா. முந்தைய பதிவிற்கு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. இந்த பகுதியில் முழுமையான உடலுறவு என்ன என்பதை எனக்கு தெரிந்த தகவல்களை கொண்டு எழுதி உள்ளேன். நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அன்றைய படிக்காத மற்றும் குறைவாக படித்த மனிதர்கள் இருந்த காலகட்டத்திலும் சரி, இன்றைய படித்த பண்முகத்தோடு இருக்கும் நவீன காலகட்டத்துலும் சரி, உடலுறவு என்பது ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்படுகிறது. உடவுறுவு என்பது ஆண்களுக்கான ஒன்றாக கருதப்படுகிறது.

ஆண்களின் உணர்ச்சியை மட்டும், வெளிப்படுத்தவும், வெளிக்காட்டவும் உடலுறவை ஒரு பொருட்டாக பயன்படுத்தி வருகின்றனர்.

உடலுறவு என்பது, ஆண்களின் உணர்ச்சியை, பெண்களிடம் காட்டி, ஆண்களின் உணர்ச்சியை மட்டும் போக்கி கொள்ளக்கூடிய ஒரு சமுதாய சம்பிரதாய முறையாகவே இன்னும் இருக்கிறது. இதை நினைத்தால் ஒரு பக்கம், படித்தும், இன்னும் அறிவை பயன்படுத்தாமல் அறியாமையில் இருப்பது நினைத்து, எத்தனை காலம் ஏமாற்ற போகிறார்கள் மற்றும் ஏமாற போகிறார்கள் என்பது தெரியவில்லை..

உடலுறவு என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் இடையே மனம் ஒத்து நடக்க கூடிய ஒரு நிகழ்வு தான். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் மனநிலை, உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் அதைபற்றி கவலைபடாமல், அதற்கு மதிப்பு குடுக்காமல், உடலுறவை மேற்க்கொண்டால் அது ஒரு வித கற்பழிப்பு தான்.

ஆண்களை போலவே பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. அதைபற்றி தெரிந்து கொள்ள நினைத்த மற்றும் தெரிந்து கொண்ட ஆண்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கின்றனர். ஆண்கள் தங்களின் இச்சைகளை தீர்த்துக் கொள்ள பெண்களிடம் வருவது போல்..

பெண்களும் இச்சைகள் வரும் போது ஆண்களை அணுகினால், அதை ஆண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்கும் தங்கள் இச்சைகளை தீர்த்துக் கொள்ள உரிமை உண்டு. அதை ஆண்கள் புரிந்து, அவர்களுக்கு உண்மையான முழு மனதோடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உடலுறவு என்பது வெறும் இச்சைகளை தீர்த்து கொள்ள மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ள செய்யக்கூடிய ஒரு சம்பிரதாய முறை மட்டும் அல்ல. அது உடலும், மனமும் இணைந்து ஒரே கோட்டில் முழு மனதுடன் பயணித்து, செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சி தான் என்பது பலருக்கும் தெரியாத மற்றும் அறியாத ஒன்று..

நம்மில் பலருக்கு மனதை ஒரு நிலை படுத்த யோகா செய்ய சொன்னால் முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் உடலுறவை செய்யும் போது சில நிமிடமோ அல்லது மணி நேரமோ கவனம் சிதறாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி நம்மால் செய்ய முடிகிறது.. அது தான் இதன் மகதத்துவமோ அல்லது கடவுளின் படைப்போ தெரியவில்லை.

அன்றும் சரி, இன்றும் சரி, திருமணம் முடிந்து, கணவன் மனைவியாக பல ஆண்டு காலம் வாழ்ந்து, இல்லற சுகம் அனுபவிக்கும் பலரிடம், இத்தகைய குறைபாடு இன்றளவு வரை இருக்க தான் செய்கிறது. அதற்கு காரணம் மனம் விட்டு பேசாமை மற்றும் சில பெண்கள் தங்களின் ஆசைகளை வெளிப்படுத்தாமை தான் காரணமாக அமைக்கிறது.

இதை தவிர செக்ஸ் பற்றி உடல் மற்றும் மனம் ரீதியாக சரியான புரிதல் இல்லாமல் இருப்பது கூட ஒரு காரணமாக அமைகிறது.. இன்றைய அதிக வேகமான காலகட்டத்தில், ஒரு கணவன், மனைவி மனம் நினைவுடன், திருமணம் மற்றும் இல்லற வாழக்கையை வாழ்க்கிறார்களா.? என்றால் இல்லை.. அதனால் தான் 60 முதல் 70% வரை மனிதர்கள் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கின்றனர்.

திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, இனி திருமணம் செய்ய போகும் ஆண் மற்றும் பெண் மனித உணர்வுகள், உறவுகள் பற்றி தெரிந்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.. ஆண் மற்றும் பெண் இருவருமே தங்களுக்குள் நன்றாக பேசி பழகி ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக் குடுத்து சென்றால் மட்டுமே இதற்கு தீர்வு..

சமீப காலத்தில் ஆண்கள், பெண்களின் காம உணர்வை தூண்டு விட்டு அதை முழுமையாக பூர்த்தி செய்யாமலே பாதி உணர்விலே விட்டு செல்கிறார்கள். அவர்களிடம் வார்த்தை அளவில் கூட தீர்ப்தியா? என்று கேட்பது இல்லை.

ஒரு பெண் எப்படி ஆணின் காம உணர்வை முழுமையாக மதித்து, அதற்கு முழு ஒத்துழைப்பு தந்து, அவர்களுக்கு முழு சுக சந்தோஷத்தை தருகிறாளோ அதை போல் ஒவ்வொரு ஆணும் தன்னையே நம்பி இருக்கும் பெண்ணுக்கும் செய்ய வேண்டும்.

என்ன தான் காதல் அல்லது பெற்றோர் பார்த்து நிச்சியக்கபட்டு செய்யபட்ட திருமணமாக இருந்தாலும் இந்த குறைப்பாடு இன்றளவும் இருக்கதான் செய்கிறது. ஆண்கள், பெண்களிடம் முழுமையான சுகம் அனுபவிக்கும் போது.. பெண்கள், ஆண்களிடம் முழுமையான சுகம் அனுபவிக்க முழு உரிமையும் உண்டு.. ஆனால் பெண்கள், ஆண்களை காம சுகத்திற்கு முதலில் அழைத்தால் அது இந்த சமுதாயத்தை பொறுத்தவரையில் அது குற்றம்..

உண்மையில் ஆண்களை விட பெண்களுக்கு தான் காம உணர்வு மற்றும் உணர்ச்சிகள் அதிகம். ஆனால் இதை இந்த சமுதாயத்தில், முழுமையாக வெளிப்படுத்த அங்கீகாரம் இன்றளவும் குடுக்கவில்லை. இயற்கையில் ஆண்களை விட பெண்களுக்கு தான் காம உணர்வு மற்றும் உணர்ச்சிகள் தூண்டக்கூடிய மற்றும் அதை வைத்து அதிக இன்பம் அனுபவிக்கும் வகையில் உடலமைப்பு இருக்கிறது..

அதற்கு சான்றாக.

1. பெண்ணின் மார்பகம்.
2. பெண் உறுப்பு.
3. கிளிட்ரோஸ் (பெண் உறுப்பில் இருக்கும் ஒரு பகுதி).

இந்த மூன்று உறுப்புகள் மூலம் தனித்தனியாக அதிகபடியான இன்பத்தை ஒரு பெண்ணால் அடைய முடியும்.

ஆனால் ஆண்கள் தங்களின் ஆண்குறி மூலம் மட்டுமே இன்பத்தை காண முடியும்.

இரண்டாவது ஒரு பெண் ஒரு முறை உச்சகட்டத்தை அடைந்த பின்னும் எந்த ஒரு இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து பலமுறை உச்சகட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்களால் அப்படி முடியாது. ஒரு ஆண் ஒரு முறை உச்சகட்டத்தை அடைந்தால் அவனால் அடுத்த முறைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

இந்த மூன்று உறுப்புகள் இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் இதன் மூலம் இன்பம் காண்பது மிக குறைவு தான்.
அதற்கு காரணம்.

1. பெண்ணின் உணர்ச்சியை தூண்டும் உறுப்புகளை பற்றியும் அதை எப்படி கையாள்வது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது.

2. பெண்களுக்கு ஏற்படும் குறைப்பாடுகளை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாமை மற்றும் அதை பற்றி அறியாமை.

பெண்ணுடைய செக்ஸ் உறுப்புகளும் அதை தூண்டும் முறைகளும்

1. பெண்ணின் மார்பகம்

பெண்ணின் மார்பகம் சிறிதாக இருந்தாலும், அல்லது பெரிதாக இருந்தாலும், அதை சரியான முறையில் தூண்டுவதன் மூலம் பெண்ணை இன்பமும், கிளர்ச்சியும் அடைய செய்து உச்சகட்டம் வரை கொண்டு செல்லலாம்.

உடலுறவில் ஈடுபட போகிறோம் என்ற எண்ணம் வந்த உடனே பெண்ணின் மார்பகம் பெரிதாகிறது. மார்பக காம்புகள், அதிக உணர்ச்சினால் விறைத்து நிற்கும். சில பெண்கள் மார்புகளை, ஆண்கள் நாக்கினால் வருடினால் அல்லது சுவைத்து தூண்டுவதன் மூலம் உச்சகட்டத்தை அடைகின்றனர்.

சில பெண்கள் தங்கள் மார்புகளை ஆண்கள் தொட்டு கசக்கினால் எரிச்சல் அடைவார்கள். ஏன்னென்றால் ஆண்கள், தங்களின் இச்சைகளை வெளிப்படுத்த மற்றும் தங்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு பெண்களின் மார்புகளை கையாள்வார். பெண்கள் தங்களுக்கு எரிச்சல் ஏற்படாதவாறு எவ்வாறு மார்பகத்தை கையாள வேண்டும் என்பதை தெரியபடுத்தினால் நல்லது.

2. கிளிட்ரோஸ்

பெண்ணின் மற்ற உறுப்புகளை விட இந்த கிளிட்ரோஸ் சாதாரணமாக அதிகமாக தூண்டபட்டு பெண்கள் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர். சைக்கிள் அல்லது வண்டி ஓட்டும் போது அல்லது தையல் மெஷின் தைக்கும் போது சில சமயங்களில் தூண்டபட்டு கிளர்ச்சி அடைகின்றனர்.

செக்ஸ் விளையாட்டு ஆரம்பித்ததும் ஒரு மனைவி கணவனிடம் கிளிட்ரோஸை தூண்டுமாறு சொல்லலாம். அதை ஆண்கள் தங்கள் கை விரல்கள் மூலம் மற்றும் நாக்கின் மூலம், பெண்ணின் உணர்ச்சியை தூண்டி, கிளர்ச்சி ஏற்படுத்தலாம். சில நிமிடங்கள் தொடர்ந்து தூண்டுவதன் மூலம் பெண்ணை உச்சகட்டம் அடைய செய்யலாம்.

3. பெண் உறுப்பு.

இதன் மூலம் ஒரு பெண்ணின் உணர்ச்சியை தூண்டுவது பெரும்பாலனோருக்கு தெரிந்த ஒன்று தான். பல்வேறு நிலை மற்றும் மாற்றங்கள் மூலம் அதிகபடியான இன்பத்தை பெண்ணுக்கு ஏற்படுத்த தர முடியும். ஆண் உறுப்பு, பெண் உறுப்பின் சுவர்களில் உரசி உராய்வை ஏற்படுத்துவதன் மூலமே பெண்கள் உச்சகட்டத்தை அடைகின்றனர்.

அதிலும் எல்லா பெண்களும் உச்சகட்டத்தை அடைகின்றார்களா என்றால் இல்லை. அதற்குள் ஆண்கள் உச்சகட்டத்தை அடைந்து விடுகின்றனர். சில பெண்களின் உடலுறவு, எந்த முறையிலும் உச்சகட்டம் அடையாமலே முடிந்துவிடுகிறது. அதற்கு காரணம்

1. பெண்களின் உச்சகட்டம் பற்றி தெரியாமை.
2. போதிய நேரம், இட வசதியின்மை.
3. பெண் உறுப்பு தூண்டபடுவதற்கு முன்பே உடலுறவை முடித்து கொள்ளுதல்.
4. உடலுறவில் விருப்பம் இல்லாமை.
5.தனிமை இல்லாமல் குழந்தைகளை உறங்கிய பின் ஒரே அறையில் உடலுறவு கொள்வது.
6. கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை.

ஆண்கள் எப்படி தங்களின் ஆண்குறி முழு விறைப்பை அடைந்ததும், பெண்குறிக்குள் செலுத்த தயார் ஆவது போல், பெண்குறியையும் கண்டிப்பாக தயார் செய்த பிறகே, அதற்குள் ஆண்குறியை விட வேண்டும்.. பெண்குறி வறட்சி நிலையில் இருக்கும் போது ஆண்குறி செலுத்தினால் பெண்களுக்குள் எரிச்சல் ஏற்படுமே தவிர, சுகம் எப்போதும் கிடைக்காது. அப்படி அவர்கள் மனதை மாற்றி சுகம் அனுபவிக்க நினைக்கும் முன்பே, அனைத்தும் முடிந்துவிடும். அவர்களுக்கு 1% சுகம் கூட அனுபவித்து இருக்கமாட்டார்கள்.

ஆண்கள் மற்றும் பெண்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பிறப்பு உறுப்பை கண்டிப்பாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெண்கள் கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் மட்டும் சுத்தமாக பார்த்து கொண்டால் போதும் என்று நினைப்பது தவறு.. ஆண் பெண் இருவருக்குமே நுண்ணுயிரி மற்றும் பூஞ்சைகள் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

பெண்ணுறுப்பை தயார் செய்வது :

1. ஒவ்வொரு ஆணும் மனைவியின் பெண்ணுறுப்பை புகழ வேண்டும். அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியாக பெண்ணுறுப்பு இருக்காது. ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசமாக தான் இருக்கும். சிலருக்கு மெல்லியதாக மிகவும் ஒட்டி போய் இருக்கும். சிலருக்கு சதைபற்றுடன் சுழை போல் இருக்கும். சிலருக்கு அகன்று விரிந்து இருக்கும். எந்த மாதிரியாக இருந்தாலும் கண்டிப்பாக அதை பற்றி புகழ வேண்டும். முதல் இரவில் செக்ஸ் செய்யும் போது மட்டுமல்ல, அதை தொடர்ந்து எப்போது செய்தாலும் எத்தனை முறை செய்தாலும் புகழுங்கள்.

2. பெண்ணுறுப்பை தடவி கொடுங்கள். அது மிகவும் மென்மையான மற்றும் அதிக உணர்ச்சிகள் நிறைந்த பகுதி. அதை கசக்கி பிழியாமல் மெதுவாக வருடி கொடுங்கள். பெண்ணுறுப்பில் பிளந்து கை பட்டும் படாமலும் தடவுவது மிக சிறந்தது.

3. பெண்ணுறுப்பை இளக்கம் அடைய செய்தல். முன் கூறிய இரண்டிலும் சில பெண்களின் உறுப்பு ஈரம் அடைந்து இளக ஆரம்பித்திருக்கும். சில பெண்களுக்கு அதிக நேரம் எடுக்கும். அப்படி இருக்கும் பெண்களுக்கு பெண்ணுறுப்பை நாக்கு மற்றும் விரலினால் வருடினால் உறுப்பு இளக ஆரம்பிக்கும். அவர்களுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

செக்ஸில் நான்கு நிலைகள் உள்ளன..
1. உணர்வடைதல்
2.செயல்படுத்துதல்
3.விந்து வெளியேறும் நிலை.
4. மன அமைதி.. (ரிலாக்ஸ்)

உணர்வடைதல் என்பது உணரச்சி தூண்டுதல் அதை பற்றி ஏற்கெனவே சொல்லிவிட்டேன்.

செயல்படுத்துதல் என்பது ஆண்குறியை பெண்ணுறுப்புக்குள் நுழைத்து இயங்க ஆரம்பிக்கும் நிலை.. ஆண் நுழைத்து இயங்க ஆரம்பித்த பிறகு குறைந்த பட்சம் 4முதல் 5 நிமிடங்களுக்கு பிறகே விந்தை வெளியேற்ற வேண்டும். அது தான் சரியான மற்றும் ஆரோக்கியமான உடலுறுவு ஆகும். அதற்கு முன்னரே ஒரு வேலை விந்து வெளியேறினால் அது குறைப்பாடு தான். இந்த குறைப்பாடு இப்போது பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கிறது.

அதற்கு முதல் காரணம் அதிகமான உணர்ச்சிவசப்படுதல்.. பெண்ணுறுப்பை பார்த்ததும் உணரச்சி வசப்பட்டு உள்ளே நுழைத்ததும் விந்தை வெளியேற்றிவிடுகிறார்கள். அதை தவிர அதிக புகைபிடித்தல் மற்றும் மதுபழக்கம், அதிக நேரம் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று அடுத்தவர் கூறும் வயாக்ரா மாத்திரை அல்லது ஏதாவது கீரிமை தடவி தடவினால் முதலில் பலன் குடுப்பது போல் தெரியும்.

பின்னாளில் அது, அதன் வேலையை கண்டிப்பாக காட்டிவிடும்.. அதிகபடியான வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான ரத்த ஓட்டம் ஏற்பட்டு, பின்னாளில் நரம்பு மண்டலம் பாதிப்புக்கு உள்ளாகும்.

கீரிம் ஏதாவது தடவினால் ஆண்குறி விறைப்பு தன்மை இல்லாமல், உறுப்பை மழுங்க செய்துவிடும். அதனால் இயற்கையாக முறையில் உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள். உடல் சார்ந்த பிரச்சினைகள் எதும் இருந்தால் மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.

விந்து வெளிபடும் நேரத்தில், மனதை வேறு ஏதாவது ஒன்றில் செலுத்தி அதை கட்டுபடுத்துங்கள். முத்தம் குடுப்பது, மார்பை தொட்டு விளையாடுவது, அதை சப்புவது போன்றவற்றில் கவனம் செலுத்தி பின் உங்கள் மீண்டும் இயக்கத்தை ஆரம்பிங்கள்.. உறுப்பு விறைப்பு குறையாமல் பார்த்து கொள்வது அவசியம்..

உடலுறவில் மனதை மிகவும் ரிலாக்ஸாக வைத்து கொள்வது அவசியம். செக்ஸில் ஈடுபடும் போது அதிக ஆக்ரோஷம், ஆவேசம் இல்லாமல் மிகவும் நிதானமாக இயல்பாக செய்ய வேண்டும். செக்ஸில் உடலை விட மனமே அதிக பங்கு வகிக்கிறது. அதிகபடியான ஆவேசத்தை குறைத்தாலே மனம் அமைதியடைகிறது. இதனால் நேரத்தை நீட்டித்து உடலுறவில் ஈடுபட முடியும்.

குறைந்தபட்சம் இரண்டு முறை கட்டுபடுத்தியபின் விந்தை பெண்ணுறுப்புக்குள் செலுத்துங்கள்.

கடைசியாக மன அமைதி.. உடலுறவு முடிந்த பின் ஆணுக்கு உணர்ச்சிகள் சில வினாடிகளிலே அடங்கிவிடும். ஆனால் பெண்ணுக்கு அப்படி இல்லை. உணர்ச்சிகள் அடங்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். அப்படி இருக்கும் நேரத்தில் அவர்களின் உடலை வருடி கொடுத்து மன ஆறுதல் குடுக்கும் விதமாக பேசினால் நன்றாக இருக்கும். இது ஆண்களின் மீது நன்மதிப்பை ஏறபடுத்தும்.

பெண்ணுறுப்பை இறுக்கமாக வைத்திருக்கும் முறை..

சுக பிரசவத்திற்கு பிறகு பெண்ணுறுப்பில் யோனி தசைகள் தொய்வு அடைந்து இருக்கும். அதை இறுக்கமாக்க உடலுறவில் ஈடுபட வேண்டும். உடலுறவில் ஈடுபடும் போது உணர்ச்சியில் யோனி தசைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இழுக்கபட்டு தசைகள் வலுவடையும்.

உடலுறவினால் ஏற்படும் நன்மைகள்.

1. வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும். அதனால் பல நன்மைகள் இருக்கின்றன.

2. அழகான பொழிவுடன் கூடிய முகத்தோற்றத்தை பெறலாம். இதனால் இளம் வயதில் முதுமை தோற்றம் அடைவதை தவிர்க்க முடிகிறது.

3. உடலில் உள்ள தசைகளை வலுபெற உதவிகிறது. இதனால் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க முடிகிறது.

4. உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடுவதால் உங்களால் எளிதாக ஜிமில் அதிக நேரம் உடற்பயிற்சி ஈடுபட முடிகிறது.

5. இறுதியாக அதிக மன அழுத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை மறக்காமல் கமெண்டில் அல்லது [email protected]ல் தெரியபடுத்துங்கள்.

நன்றி.

அன்றும் இன்றும் என்றும் காமத்தை ரசிக்கும் முகில்.

குறிப்பு..

சிலர் என்னை இந்த தளத்தில் கதை எழுதும் முகிலன் என்று நினைத்து கொள்கிறீர்கள். அது முற்றிலும் தவறு என்பதை தெரியபடுத்தி கொள்கிறேன்..

Leave a Comment