கனா கண்டேனடா Part 6 (Kana Kandenada 5)

This story is part of the கனா கண்டேனடா series

    நண்பர்களே… இது என் சொந்த அனுபவம் ஆதலால்… நான் ரசித்து அனுபவித்த விஷயங்களை நீங்களும் ரசித்து அனுபவிக்கவே நினைக்கிறேன்… இந்த கதை பல பாகங்களாக எழுதுவேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

    தங்களுடைய கருத்துக்களை [email protected] அனுப்புங்கள்.

    நான் அம்மாவின் அறைக்குள் நுழைந்தபோது மணி ஆறரை ஆகியிருந்தது. காலைக்குளிரிலும்
    உடல் வியர்வை பூத்து, சேலை முழுவதும் அவன் போட்டிருந்த ஹமாம் soap ம் என் வியர்வையும் கலந்த ஒரு வித சுகந்த வாசனையாக இருந்தது.

    நல்ல வேளையாக அம்மா இன்னும் தூக்கம் விட்டு எந்திரிக்கவில்லை. அவள் இந்த வாசனையை கண்டுபிடித்துவிடுவாள். நேராக குளியலறை நோக்கி பூனை போல் நடந்தேன். புது nighty ஒன்றை பீரோ வில் இருந்து எடுத்து, புது உள்ளாடைகளையும் எடுத்துக்கொண்டேன். குளியலறை தாழிட்டு, சேலையை அவிழ்த்து கொடியில் போட்டேன். வியர்வையில் உள்பாவடையும் நனைந்திருந்தது. அதை அவிழ்த்து, bucket ல் தண்ணீர் ஊற்றி முக்கினேன்.

    இத்தனை நாள்களில் இப்படி என்றுமே வியர்ததில்லை. என்னையே நான் அதிசயமாக பார்த்தேன். கல்லூரி நாட்களில் சக தோழிகளுடன் கூடல் பற்றின விவாதங்களிலும், கிசுகிசுக்களிலும், இந்த உடல் உஷ்ணம் வியர்வை பற்றி எவளுமே பேசியதில்லை.

    வியர்வையில் ஊறியிருந்த ஜாக்கெட் ஐயும் உள்பாவடையுடன் நீரில் முக்கினேன். bra ஜட்டி யுடன் shower ல் நின்றேன். வியர்வையில் குளித்து உஷ்ணமாக இருந்த எனக்கு, என் மேனியில் விழுந்த ஒவ்வொரு நீர்த்துளியும் பனித்துளியாக தோன்றியது. என் மேனியில் விழுந்த நீரை ஒரு கையில் பிடித்து வியர்வை பூத்திருந்த அக்குளில் ஊற்றினேன்…
    bra வையும் ஜட்டியையும் உருவி அதே bucket ல் போட்டு shower ல் நிற்க உடலின் உஷ்ணம் குறைவதை உணர்ந்தேன்.

    அவன் அணைத்தபோது பின்னிடுப்பில் பதிந்த அவன் நகத்தின் தடம் குளிர்நீரில் லேசான எரிச்சலை தந்தது. அவன் அணைப்பின் அழுத்தத்தில் என் மேனி puncture ஆகிவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு அழுத்தம். ‘வலிக்கிறது’ என்று சொல்ல நா எழாமல், சப்த நாடியும் அடங்கி அவனின் அணைப்புக்கு அடிமையாகி இருந்த நொடிகள் அவை. ‘இந்த மனுசனை எப்படி தான் தாங்கபோறியோ காவ்யா…’ என்று மனம் என்னை கிண்டல் அடித்தது…

    அரைமணி நேர குளியலில், உடல் நன்று குளிர்ந்திருந்தது. தலையில் துண்டை சுற்றி, புதிதாய் எடுத்து வந்திருந்த உள்ளாடைகளையும், nighty ஐயும் அணிந்துகொண்டு அறைக்குள் நுழைந்தேன்..
    தாலிக்கொடியின் தங்கம் சில்லென மார்பில் உரச, எடுத்து வெளியில் போட்டுக்கொண்டேன். சாமி படத்தை கும்பிட்டு கும்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டேன். மனம் லேசாக பதறியது. கொஞ்சம் அவசரப்பட்டு தவறு செய்துவிட்டோமோ என்று. ‘ என்ன மன்னிச்சுடு சாமி’ என்று மனதில் உருகி வேண்டினேன்.
    அம்மாவுக்கும் அப்பாவுக்கும் coffee போட்டு ரெடி ஆக வைக்க, ஒரு ஏழேகால் மணிக்கு அம்மா எழும்பினாள்.
    “மாப்ளைக்கு coffee குடுத்தியா” எழுந்ததும் கேட்டாள்.

    ஒரு மணிநேரத்துக்கு முன்னர் நடந்ததை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது. லேசாக சிரிப்பு முகத்தில் தெரிய, “குடுத்தேன் மா” என்று சொல்லி வெடுக்கென்று திரும்பிக்கொண்டு சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.

    காலை உணவுக்கு கீழே இறங்கி வந்தான்… அம்மா வும் அப்பாவும் சாப்பிட்டு முடித்திருந்தனர். நானும் படியில் பார்க்க, கண்கள் இரண்டும் சந்தித்துக்கொண்டன. கண்களாலேயே சிரித்தோம். அவரே என் அருகில் அமர்ந்தார். அவருக்கு இட்லி எடுத்து வைக்க, நான்கு போதும் என்றார். ‘ஏன்????’ என்று கண்ணாலேயே கேட்க, ‘போதும்….’ என்று கண்ணாலேயே சைகை காட்டினார்.

    என் கை முட்டியால் அவர் arms ல் குத்த, அவர் என் உள்தொடையில் கிள்ளினார். வெயில் படாத என் மேனியில் அவன் விரல் பட, என் மேனி முழுவதும் மின்னல் வெட்டி மறைந்தது. நல்ல வேளையாக, அப்பாவோ அம்மாவோ அருகில் அமர்ந்திருக்கவில்லை. மேனியில் தோன்றிய மின்னல் மறைந்து வெட்கம் பரவியிருந்தது. வேண்டுமென்றே ஒரு chair தள்ளி உட்கார்ந்துகொண்டு அவனுக்கு வாயால் ஒழுங்கு காட்டினேன். என்னை பார்த்து ஒரு கண்ணை மட்டும் சிமிட்டினான், நான் clean bowled ஆனேன்.

    இதற்கு மேல் அவன் கண்கள் பார்க்க எனக்கு தைரியம் வராமல். தட்டை மட்டும் பார்த்து வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிக்கும் வரை எவ்வளவோ முயன்றும், இந்த முகம் வெட்கத்தை வெளிக்காட்டிக்கொண்டிருந்தது. அவர் சாப்பிட்டு முடித்தபின், வேண்டுமென்றே பயப்படுவது போல் பாவ்லா காட்டி தள்ளி நின்று அவர் தட்டை எடுத்தேன்.. அதை பார்த்து அவர் சிரித்தார்… என் அறையை கடந்து அவர் மாடிப்படி செல்லும்போது, “பாய்..” என்றார்.. நானும் சிரித்துக்கொண்டே, “பை” என்றேன்.

    அறைக்குள் நுழைந்ததும், செல்போன் ல் மெசேஜ் வந்தது.
    “ஹாய் பொண்டாட்டி”..
    “ஹாய் புருஷா..” முதன்முதலாக அழைத்தேன்… காலையில் அவன் செய்த கட்டிப்பிடி வைத்தியம் கூட காரணமாக இருக்கலாம். எங்களுக்குள் இருந்த நாணம் சுவர் காணாமல் போய், அன்யோன்யம் பிறந்திருந்தது..
    “ஒரு டீ கிடைக்குமா?”

    “ஒரு 5 mins வெயிட் பண்ணுங்க, மில்க் இருக்கா ன்னு பாத்து சொல்றேன்”
    “black டீ கூட ஓகே தான்”
    “ஹ்ம்ம்… சரி.. 5 mins கொண்டு வரேன்..”
    அம்மாவிடம் சென்று, “அவருக்கு ப்ளாக் டீ வேணுமாம் மா…” என்றேன்..
    “போட்டு எடுத்துட்டு போ டி…” என்றாள்

    ஐந்து நிமிடத்தில், போட்டு சுவை பார்த்தேன். இனிப்பு சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் மாடிப்படி ஏறி அவர் அறையில் எட்டிப்பார்க்க, அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.
    “ஹ்ம்ம் ம்ம்…” தொண்டையை செருமினேன்..
    என்னை பார்த்து சிரித்தார். “வா காவ்யா… உன்னை பாக்கணும் போல இருந்திச்சா அதான் டீ கேட்டேன்” என்றார் குறும்பாக.

    “அடப்பாவி…” வாயில் கை பொத்தி சிரித்தேன்… “நாளன்னிலேருந்து எப்போ வேணா பாக்கலாம்.. சரியா..”
    என்னையுமறியாமல் அவன் மேலிருந்த உரிமையில் வார்த்தைகள் ஒருமையாய் மாறியிருந்தன.
    “அப்படியா… ” அவர் முகம் வாடியது

    “அப்போ டீ வேண்டாமா…?” வேண்டுமென்றே topic ஐ மாற்றினேன். என் காதலனை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால். எனக்கல்லவோ danger…
    “வா குடிக்கலாம்…” சிரித்தார்..
    ஒரு சிப் அருந்தி, கையில் கப் ஐ தந்தார். நானும் ஒரு சிப் அருந்தினேன்…

    “ஆமா, காலைல பண்ணின கட்டிப்பிடி வைத்தியம் பிடிச்சிருந்துச்சா?” குறும்பாக சிரித்துக்கொண்டே கேட்டான்.
    அவன் கேட்டதும் எனக்கு வெட்கம் தாளவில்லை… முகம் மலர.. முப்பத்திரண்டு பல்லும் தெரிந்தது. முகம் மறைக்க என்னிடம் சேலை தலைப்பும் இல்லை துப்பட்டாவும் இல்லை.. என்னால் முடிந்தது என் இடது கையால் என் முப்பத்திரண்டு பல்லையும் மறைப்பது மட்டுமே.

    ஆதரவாக தோளில் கை வைத்தான்.. அவன் ஆள்காட்டி விரல் என் தோளின் nighty மூடாத பாகத்தில் எதேச்சையாக உரச, என் உடல் சிலிர்த்து விம்மியது. என் கண்களை பார்த்து சிரித்தான்..
    ‘ஏன் டா என்னை சிரித்து சிரித்து out ஆக்குகிறாய்’ என்று மனதில் தோன்றியது.
    நான் comfortable ஆக இல்லை என்பதை புரிந்த அவன், “வா.. கொஞ்சம் நேரம் உக்காந்துக்கலாம்..” என்று என் கைகளை கோர்த்து அமர வைத்தான்.

    நான் கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும், கோர்த்துக்கொண்ட கைகளை விலக்காமலே கேட்டான், “நான் ஒன்னு கேட்டேனே?”…
    “வலிச்சுது….” அவன் முகம் பார்க்க வெட்கம் அனுமதிக்கவில்லை என்றாலும், என் வலிக்கு அவன் எப்படி எதிர்வினையாற்றுகிறான் என்று பார்க்க ஆவலாய் ஓரக்கண்ணில் பார்க்க, ஒரு கணம் அவன் திகைத்து அதிர்ந்து போனதை உணர முடிந்தது. எனக்கு வலித்தததை பார்த்து அவன் feel செய்வது தெரிந்தது.
    அவன் feel பண்ணுவதை பார்த்து, ‘சொல்லியிருக்க வேண்டாமோ ?’ என்று தோன்றியது.
    ஒரு இரண்டு நொடி கடந்திருக்கும்… குரல் செருமினான்.. “ஒரு sorry.. ஒரு thanks..”
    “எதுக்கு?”

    “sorry.. உன்ன வலிக்கிற மாதிரி கட்டிபிடிச்சதுக்கு…”.. “thanks.. நீ அதை மனச விட்டு comfortable ஆ என்கிட்ட சொன்னதுக்கு..”
    நான் முகம் மலர்ந்தேன்… என்னவரின் மேல் மரியாதை கூடியது.. ‘எந்த வீட்டில் கணவனும் மனைவியும் sorry ம் thanks ம் சொல்லி பழகுகிறார்களோ, அந்த வீடு தான் சொர்க்கம்’ என்று எங்கேயோ வாசித்த நினைவு.
    “hey.. அது பரவால பா”… நான் அவனை comfortable ஆக்க.. கோர்த்திருந்த கைகளை இறுக்கினேன்…
    அவன் முகத்தில் புன்முறுவல், ‘இது போதும் எனக்கு’ என்று தோன்றியது…
    எந்திரிக்க மனமில்லாமல் கட்டிலை விட்டு எந்திரிக்க.. கேட்டான்.. “சரி.. வலிக்காம ஒரு தடவ கட்டிபிடிசுக்கலாமா?”

    எனக்கு சிரிப்பு தாளவில்லை… “வேண்டாம்.. வேண்டாம்..” சிரித்துக்கொண்டே சொன்னேன்..
    “ஒரே ஒரு தடவ செல்லம்…” கொஞ்சி கெஞ்சினான்.
    அவன் அப்படி சொன்னது பிடித்திருந்தது.. மட்டுமல்ல, எனக்கும் அப்போது ஒரு அணைப்பு தேவைப்பட்டது.
    “சரி.. ஒரே ஒரு தடவ…” பொய் சொன்னேன்…

    மெல்ல இழுத்து மடியில் அமர வைத்தான்.. நான் பதறி எழும்பினேன்.. “அய்யய்யோ”
    “என்ன மா”
    “நான் போறேன்”.. குறும்பாக அவன் கண்களை பார்த்து சொன்னேன்..
    “hey sorry sorry..” என் கைகளை கோர்த்தான்

    ‘நான் கோவமா கெளம்புறேன்’ style ல், கோர்த்துக்கொண்ட அவன் கைகளையும் விடாமல், அந்த இடத்தை விட்டும் நகராமல் நின்றேன்.
    இந்த கணத்தில் அவன் அணைப்பு எனக்கு கண்டிப்பாக தேவைப்பட்டது.
    அவன் மெல்ல படுக்கையிலிருந்து எழுந்து என்னை அணைக்க, நான் கண்களை மூடிக்கொண்டேன்.

    ஒரு புறாவை கைகளில் பொத்திப்பிடிப்பது போல, என்னை மென்மையாக அணைத்திருந்தான். மென்மையான அழுத்தம். ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் அவள் கணவனிடம் கிடைக்க ஏங்கும் அணைப்பு இது. அவன் வலது கை என் இடது காதை மென்மையாக தடவி பிடிக்க.. என் உடல் திடீரென்று கண்டடைந்த இன்பத்தில் இனி என்னென்ன இருக்குமோ என்று ஏக்கத்திலும் கேள்வியிலும் லயித்திருக்க… மென்மையான என் இடக்கன்னத்தில்.. “இச்….” மீண்டும் உடல் அதிர்ந்து வெட்டியது. கால்கள் வலுவிழக்க, அவன் மேலேயே சாய்ந்துகொண்டேன். என் மார்புக்கூடுகள் அவன் நெஞ்சில் மென்மையான அழுத்தம் தர, அவன் உதடு nighty மறைக்காத தோள் பாகத்தில் பட.. உடல் மீண்டும் வெட்டி அதிர்ந்தது.

    “காவ்யா…” கீழிருந்த அம்மா அழைக்க..
    “ஐயோ …” என்று நான் சுயநினைவுக்கு வந்து விலகினேன்..
    கண்ணாடியில் முகம் பார்த்து தலைமுடியை சரி செய்தேன், முகம் வியர்த்திருந்தது…
    கண்ணாடியில் அவன் என் முகத்தை ஏக்கத்தோடு பார்க்க..

    நான்.. “போயிட்டு வரேன்.. bye” என்று சொல்லி குறும்பாக அவன் வயிற்றில் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு ஓடினேன்…
    அவன் “ஆ…” என்று அலற.. வாசல் சென்று அவனை திரும்பி பார்த்து சிரித்தேன்.. ‘bye’ சன்னமாக சொல்லிவிட்டு கீழே இறங்கினேன்…

    கன்னிக்கு கிடைக்கும் முதல் முத்தம் எப்போதுமே சுவையானது…. வாழ்வில் மறக்கவே முடியாதது.
    எங்களை அறியாமலேயே நாங்கள் முதலிரவுக்கு தயாராகிக்கொண்டிருந்தோம்…

    Leave a Comment