கனா கண்டேனடா Part 9 (Kana Kandenada 9)

This story is part of the கனா கண்டேனடா series

    ஒரு வழியாக மேலே ஏறி மூச்சு வாங்கினேன்… சாத்திரங்களை தூக்கி போட்டு என்னவனுக்காக எதுவும் செய்யும் மனநிலையிலேயே இருந்தேன்… இனிமேல் இவன் தான் எனக்கு சாமி தெய்வம் எல்லாம்..
    “கொஞ்சம் நேரம் உக்காந்துக்கலாமா?” மூச்சிரைக்க கேட்டேன்..

    “ஹ்ம்ம் உக்காந்துக்கலாமே..” வார்த்தையில் லேசாக குதுகலம் தெரிந்தது.
    பரணின் ஓரத்தில் லேசான ஒரு திட்டு இருந்தது…
    ஒருவர் மட்டுமே அமரமுடிந்த திட்டு அது.. இதில் எங்கு அமர்வது… காலை சூரியன் ஓட்டின் வழியே ஆங்காங்கே ஊடுருவி பாய… மெல்லிதான சூடு பரண் எங்கும் பரவிக்கிடந்தது..
    யார் அமர்வது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க…
    “pls நீங்களே உக்காந்துக்கொங்க…” அவர் முகத்தை பார்த்து சொன்னேன்..
    “அப்போ நீ…”

    “நான் நின்னுக்குறேன்..”
    “வேண்டாம்…”
    “அப்போ கீழே உக்காந்துக்குறேன்…”
    “சரி வா உக்காரலாம்…” தரையில் உட்கார அமர்ந்தார்..
    “ஆ.. டிரஸ் அழுக்காயிடும்..”

    “உனக்கு nighty அழுக்காகாதா…” மெல்லிய புன்னகையோடு கேட்டார்…
    இவர் என் மேல் காட்டும் அன்பு எனக்கு உள்ளூர சந்தோசம் தந்தது…. அவரை விட்டு தள்ளி உட்கார வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கவில்லை… ஆனால் அவரை தரையில் உட்கார வைக்க எனக்கும் மனம் வராத காரணத்தினாலேயே இவ்வளவும் செய்தேன்.. இனி வேறு வழியில்லை.. காதல் ஒரு பருவப்பெண்ணை என்னென்ன பாடுபடுத்துகிறது…

    பரண் மேல் வேறு ஏதாவது வேஸ்ட் துணி இருக்குமா என்று தேடினேன்… அப்பாவின் கிழிந்த பழைய லுங்கி இருந்தது.. அதை எடுத்து அவரிடம் காட்டினேன்… தொடைச்சிட்டு உக்காந்துக்கலாம்… புன்னகைத்து.. thumbs up காட்டினான்..

    வெயில் விழாத ஒரு மூலையில் நாங்கள் இருவரும் கால் நீட்டி அமரும் அளவுக்கு தூசியை தொடைத்தேன்.. லுங்கியை ஓரமாக வைத்துவிட்டு.. இருவரும் அமர்ந்தோம்..

    நாங்கள் அமர்ந்த இடம் வெயிலின் கீற்றுகள் விழாததால்.. வெப்பத்திலும் ஒரு குளிர்மை தெரிந்தது.
    அவருக்கு வலது பக்கத்தில் அமர்ந்து அவர் முகத்தை பார்க்க.. என் கண்களை பார்க்க திராணி இல்லாதவரை போன்று.. என் கண்களை நேராக பார்க்காதவராய், “உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் காவ்யா… ஒவ்வொரு நிமிஷமும் மிஸ் பண்ணினேன்…” அவர் குரல் இடறியது..
    “hey.. ஒண்ணுமில்லப்பா.. அதான் இப்போ இங்க இருக்கேன் ல..”

    ஆண்கள் missing என்பதை என்னவென்று அர்த்தம் கொள்கிறார்கள் என்றே எனக்கு தெரிந்திருக்கவில்லை.. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் மனவியல் ரீதியிலான வித்தியாசங்களில் இதுவும் ஒன்று. இன்றும் அந்த சந்தேகம் இருக்கவே செய்கிறது..

    நான் சொன்ன பிறகும்.. அவர் ஆருதலடைந்தது போல் தெரியவில்லை. என் தோளும் அவர் தோளும் மென்மையாக அழுந்தியிருக்க, அவர் கைகளை கோர்த்தால் கொஞ்சம் சமாதானமடைவாரோ என்று தோன்றியது. ஆனால் நானாக எப்படி கோர்ப்பது.. பெண்ணாயிற்றே… தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறதல்லவா…
    “இப்போ பரவாயில்லே…” மிக நீண்ட மௌனத்திற்கு பின் அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை.
    ‘பரவாயில்லை என்றால் சந்தோஷமாக இல்லையா..’ மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
    குழந்தையின் பசியாற்றாத தாயின் மனம் எவ்வாறு நொடிந்து போகுமோ, அந்த அளவு என் மனமும் என் கணவரின் மனநிலையை அறிந்து கவலையடைந்தது.

    தைரியமாக அவர் வலதுகையை என் இடக்கையால் கோர்த்தேன்.. “என்னாச்சுங்க…..”
    “I love you காவ்யா…” என்று வலதுபக்கம் சாய்ந்து என் இடது தோளில் மென்மையாக உதடுகளால் அழுத்தி ஆழமான ஒரு முத்தம் தந்தான்… முத்தத்தின் அழுத்தம் என்னை திக்குமுக்காட செய்தாலும், அவனுக்கு இப்போது என்ன வேண்டும் என்பது எனக்கு தெளிவானது..
    அவனுக்கு இப்போது என் அருகாமை தேவைப்படுகிறது… அரவணைப்பு தேவைப்படுகிறது… என் காதல் தேவைப்படுகிறது.

    இன்னொரு முத்தம் அதே இடத்தில்… இந்தமுறை என்னையறிமாமலேயே என் நரம்புகள் புடைக்க என் உடல் முறுவலித்தது. ஒரு நிமிட நரம்பின் முறுக்கல்கள் இளக, அவன் காதில் கிசுகிசுத்தேன்.. “I love you மாமா”.
    காதல் நரம்புகள் எல்லாம் ரத்தத்தால் நிறைய.. உடல் உஷ்ணமடைய துவங்கியது இருவருக்கும்.. அவர் கழுத்தில் வியர்வை அரும்புகள் முளைக்க, என் அக்குளிலும் வியர்வை துளிர்விடுவதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

    திடீரென கோர்த்திருந்த என் கைகளை பிரித்தவன் கைகளை உயர்த்தினான். நான் கேள்வியோடு அவன் கண்களை நோக்க, தன் வலது கையால் என்னை சுற்றி வளைத்துப்பிடித்தான். என் உடலெல்லாம் வெடித்துக்கிளம்பிய ஹார்மோன்கள் என் கன்னத்தில் சிவப்பாய் படிந்து, வெட்கமாய் வெளிப்பட்டன…
    அவன் வலதுகை இப்போது என் வலது இடுப்பில் படிந்தது.

    ஆண் வாசம் படாத என் பொன்மேனிக்கு ஆணின் மென்மையான அழுத்தமே மிகப்பெரிய சுகத்தையும் அவஸ்தையையும் தருகிறது.. என்னை சேர்த்தணைக்க சிறு பலத்துடன் அவன் என் இடுப்பை அணைக்க, எனக்கு சகலமும் வியர்த்துப்போனது..
    அவன் வாய்க்கு பக்கத்திலிருந்த என் பஞ்சு கன்னத்தில் பல் படாமல் கவ்வ.. நான் என்னை இழந்து கண்கள் செருகினேன்.
    என் முகத்தை திருப்பி மறு கன்னத்தையும் கவ்வ, என் மென்னுடல் என் காதலனால் ஆக்கிரமிக்கப்படுவதை ரசித்தேன்..

    நான் கிறங்கி அவன் நெஞ்சில் முகம் புதைக்க, என் அகன்ற மென்மார்புக்கூடுகள் அவன் நெஞ்சில் அடைக்கலம் புகுந்திருந்தன.
    என் கன்னம் வருடிய அவன் உதடுகள், என் உதட்டை உரச, நான் அரைமயக்க நிலையிலிருந்து கண் திறந்தேன்… என் நிலையை உணர்ந்தவளாய் என் வலதுகையால் அவன் நெஞ்சை அழுத்தி அவன் நெஞ்சில் தஞ்சமடைந்திருந்த என் மார்புக்கூட்டை மெல்ல விடுவிக்க முயன்றேன்..
    எவ்வளவு நேரம் கடந்திருந்தது என்று தெரியவில்லை, என் nighty வியர்வையில் பூத்திருந்தது. நானும் பூத்திருந்தேன்.. நல்ல களைப்பு, வலது கால் மடக்கி, இடது கால் நீட்டியிருக்க, nighty இடது கால் முட்டி வரை நகர்ந்திருந்தது.

    என் பார்வை அங்கே போவதை உணர்ந்த அவர், என் முடிகளற்ற கால்களை பார்த்து “கால் ரொம்ப அழகா இருக்கு காவ்யா” என்றார்.
    வெட்கச்சிரிப்பு என் முகத்தில் படர, nighty ஐ இழுத்து விட்டேன்..
    “தொட்டு பார்க்கவா?” ஏக்கத்தோடு கேட்டார்.

    ஒரு கணம் அவர் கண்களை பார்த்தேன். அவ்வளவு ஏக்கம் தெரிந்தது.
    “நைட்” மெல்ல சொன்னேன். சொன்ன பிறகு… ‘ஐயோ.. நானா சொன்னேன்’ என்று நாக்கை கடித்துக்கொண்டேன்..

    “அப்போ.. நைட் என்னென்ன தொட்டு பார்க்கலாம்…” கிண்டலான காதலுடன் என்னை கேட்க, என்னை வெட்கம் பிடுங்கி தின்றது..

    மிகவும் யோசித்து.. “இப்போ எதுவும் வேண்டாம்..” என்றேன் சிரிப்போடு.
    “ஏன்??” வினவிக்கொண்டே அவன் இடது கையை என் வயிற்றில் மெல்ல அழுத்த, என் நாக்கு சுழன்று போனது. வார்த்தைகள் வெளியே வரவில்லை.
    “ச்.. ச்… சும்மா…”

    “சும்மா எல்லாம் முடியாது…”
    அவன் அருகாமையும், அணைப்பும், அவன் ஆண்மையின் வாசமும் இன்னும் கொஞ்சம் நேரம், இன்னும் கொஞ்சம் தூரம் என்று என் மனதை அலைபாய விட்டன.
    “மென்மையான என் வயிற்றை தடவிய அவன் கைகள், என் தொப்புளை சுற்றி மையம் கொள்ள, அவன் கைகளை பிடித்துக்கொண்டேன்… “pls பா.. நைட் பாத்துக்கலாம்..”
    “அதான் ஏன்?”
    “time ஆகியிருக்கும்”

    அவன் மொபைல் எடுத்து பார்க்க, 12.15 pm ஆகியிருந்தது. அப்பா வரும் நேரம். ‘நல்ல வேளை’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
    விலக மனமிலாமல் அவன் என்னை விட்டு விலக, வியர்வையில் ஊறி nighty ல் ஒட்டியிருந்த தூசிகளை தட்டிவிட்டேன்.

    “நல்ல வேளை ரூம் ல் ac போட்டாச்சு.” சிரித்துக்கொண்டே என்னை பார்த்து கண்ணடித்தான்.
    அதன் அர்த்தம் புரிந்த நானும் சிரிக்க, மெல்ல இருவரும் கீழே இறங்கினோம்.
    தாம்பத்ய உறவின் பால பாடங்களை சுகித்ததை போல் உணர்ந்த எனக்கு, இன்னும் சந்தேகங்கள் வலுத்தன, ‘இரவு தீர்த்துக்கொள்ளலாம்’ என்று மனதில் சிரித்துக்கொண்டேன்.

    “அவளது பார்வையிலும் பேச்சிலும் தெறிக்கும் சில துளிகள் ஆண்மையை ரசித்து..
    அவளுள்ளே கிளர்ந்தெழும் பெண்மையில் மூழ்கிவிடத்தான் துடிக்கிறான்..” – எங்கோ படித்த கவிதை
    இன்றிரவு மணம் வீசுவேன்….

    தங்களுடைய கருத்துக்களை [email protected] அனுப்புங்கள்.

    Leave a Comment