அன்புள்ள ராட்சசி – பகுதி 45 (Tamil Sex Story - Anbulla Ratchashi 45)

Tamil New Sex Stories – வடபழனி NGO காலனி மெயின் ரோட்..!! வளர்ந்து அடர்ந்திருந்த பச்சை மரங்கள்.. வழிநெடுக தார்ச்சாலைக்கு குடைவிரித்திருந்தன..!! கிளைகளையும், இலைகளையும் ஊடுருவ முடியாத சூரியக்கதிர்கள்.. செறிவற்ற வெளிச்சத்தையே செல்கிற பாதையில் தெளித்திருந்தன..!! மத்தியில் வெண்ணிறப்பட்டை இழைக்கப்பட்ட கருஞ்சாலையின் தேகம் எங்கும்.. மஞ்சள் நிறத்திலான இலைதழைகள் மண்டிப்போய் கிடந்தன..!! சன்னமாய் புகை துப்பியவாறே அசோக்கின் பைக்.. சரக்கென அச்சாலையில் சீறியபோது.. பதறிப்போன மஞ்சள் இலைகள்.. பறந்து சிதறி.. பாதையில் இருந்து விலகி வழிவிட்டன..!!

வண்டியின் வேகத்தை அதிகம் குறைக்காமல்.. வலதுபுறம் செல்கிற சாலையில் அசோக் திரும்பினான்..!! எதிர்பாராத விதமாய் ஒரு ஆட்டோ.. எதிர்ப்புறம் இருந்து வெளிப்படவும்.. ஷகிரா இடுப்பசைப்பது மாதிரியான ஒரு லாவகத்துடன்.. பைக்கை நெளித்து சுளித்து வளைத்து.. ஆட்டோவின் மூக்குரசி முத்தமிடுவதை இறுதி நொடியில் தவிர்த்தான்..!! சடனாக பிரேக்கிட்ட ஆட்டோ ட்ரைவர்.. சத்தமாய் உதிர்த்த கெட்ட வார்த்தை.. காற்றோடு கலந்து காதில் விழுவதற்குள்.. காத தூரம் பறந்திருந்தான்..!!

அடுத்த இரண்டாம் நிமிடத்தில்.. அசோக்கின் பைக் அந்த தெருவுக்குள் நுழைந்தது..!! அப்படி நுழைந்ததுமே.. அந்த தெருவில் நிலவிய ஒருவித அமைதியை.. அசோக்கால் உடனடியாக உணர முடிந்தது..!! வீதியின் இருபுறமும் கோடிகளை தின்று கொழுத்துப் போயிருந்த வீடுகள்..!! எல்லா வீடுகளுக்கு முன்பாகவும், ஏதாவது ஒரு காஸ்ட்லி கார் மினுமினுப்புடன் நின்றிருந்தது..!! அந்த வீடுகளை விடுத்து வெளிப்பட்டிருந்த மனித தலைகள்.. கேட்டுக்கருகே கொத்துக்கொத்தாய் குழுமியிருந்தன.. கிசுகிசுப்பான குரலில் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தன..!!

தூரத்தில் ஒரு காவல்த்துறை வாகனம்.. ஈச்சமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது..!! தெருவுக்குள் நுழைந்த அடுத்த நொடியே.. அந்த வாகனத்தை கவனித்துவிட்ட அசோக்.. அதை நோக்கித்தான் தனது வண்டியையும் செலுத்தினான்..!! அந்த வாகனத்துக்கு அருகாகவே.. தனது பைக்கையும் பார்க் செய்தான்..!! ஈச்சமரத்துக்கு எதிர்ப்புறம் இருந்த வீடு.. அடர்பச்சையும் இளமஞ்சளுமான வர்ணப்பூச்சோடு.. அழகோடும் கம்பீரத்தோடும் காட்சியளித்தது..!! அந்த வீட்டு கேட்டுக்கருகிலும்.. கிசுகிசுப்பு பேச்சுடன் ஒரு சிறு மனித கும்பல்..!! அசோக் அந்த வீட்டை நோக்கி நடந்தான்..!!

கும்பலோடு கும்பலாய் இரண்டு கான்ஸ்டபிள்களும் நின்றிருந்தார்கள்..!! தங்களுக்குள் பேசிக்கொண்டு நின்றிருந்தவர்களில்.. தனசேகரன் என்ற பெயர்ப்பட்டயத்தை மார்பில் தாங்கியிருந்த ஒரு கான்ஸ்டபிள்.. அசோக் அவர்களை நெருங்குவதை கவனித்ததும் பேச்சை நிறுத்தினார்.. நெற்றியை சுருக்கியவர், அசோக்கை ஏறிட்டு வித்தியாசமாக பார்த்தார்..!! அவரது பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட அசோக்.. அவனாகவே..

“எஸ்பி ஸாரை பாக்கணும்..!!” என்றான்.

“நீ யாரு..??”

“என் பேரு அசோக்.. ஆர்காட் ரோட்ல அட்வர்டைஸ்மன்ட் ஏஜன்சி வச்சிருக்கேன்..!!”

“ஓ..!! என்ன விஷயமா அவரை பாக்கணும்..??” கேட்டுவிட்டு தனசேகரன் அசோக்கை கூர்மையாக பார்க்க, அவனிடம் இப்போது மெலிதான ஒரு தயக்கம்.

“அ..அது.. அது கொஞ்சம் பர்சனல் ஸார்..!!”

அசோக் சொன்ன பதிலில்.. அந்த தனசேகரன் சற்று எரிச்சல் ஆகி இருக்கவேண்டும்.. அது அவரது குரலிலேயே தெளிவாக தெரிந்தது..!!

“பர்சனலா..?? ஏன்யா.. பர்சனல் விஷயம் பேசுற எடமா இது..?? க்ரைம் ஸ்பாட்டுயா.. உள்ள விசாரணை நடந்துட்டு இருக்குது.. இங்க ஆளாளுக்கு டென்ஷன்ல இருக்குறோம்.. நீ என்னடான்னா..?? போ போ.. போயிட்டு மத்தியானத்துக்கு மேல ஸ்டேஷன்ல வந்து பாரு..!!”

“இ..இல்ல ஸார்.. அவருக்கு என்னை நல்லா தெரியும்.. நான் வந்திருக்கேன்னு அவர்ட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்..!!”

“ப்ச்.. சொல்றேன்ல.. இங்கல்லாம் இப்படி வந்து பாக்க கூடாதுயா.. நீ மத்தியானத்துக்கு மேல..”

“ஹையோ.. என்னை இங்க வர சொன்னதே அவர்தான் ஸார்..!!” அசோக் சற்றே சலிப்பாக சொல்ல, தனசேகரனின் முகத்தில் இப்போது ஒரு வியப்பு.

“என்னது.. அவர்தான் வர சொன்னாரா..??”

“ஆமாம்..!! நீங்க உள்ள போய்.. அவர்ட்ட கொஞ்சம் சொல்றீங்களா.. ப்ளீஸ்..!!”

அசோக் பொறுமையற்ற குரலில் சொன்னான். தனசேகரன் இப்போது ஒருமாதிரி அவஸ்தையாக நெளிந்தார். அவருடைய குரலிலும் ஒருவித தடுமாற்றம்.

“எ..எங்களை வெளில நிக்க சொல்லிருக்காருயா.. உ..உள்ள போனா திட்டுவாரு..!!” தனசேகரன் அவ்வாறு தயக்கமாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,

“தனசேகர்..!!!!” என்று வீட்டுக்குள் இருந்து ஒரு தடித்த குரல் ஒலித்தது.

அந்த குரலை கேட்டதுமே மூன்று பேரும் உடனடியாய் திரும்பி, வீட்டுக்குள் பார்வையை வீசினார்கள். அங்கே கான்ஸ்டபிள் கனகராஜன் நின்றுகொண்டிருந்தார். இவர்கள் திரும்பிப் பார்த்ததும்,

“ஸாருக்கு தெரிஞ்ச பையன்தான்.. உள்ள அனுப்பு..!!” என்றார்.

அசோக் இப்போது தனசேகரனை ஏறிட்டு ஏளனமாய் ஒரு பார்வையை வீசினான். அதற்கு மேலும் அவருடைய அனுமதி தேவையில்லை என்பதை உணர்ந்தவன், அவரது பதிலுக்காக காத்திராமல் அவரை கடந்து சென்றான். வீட்டுக்குள் நுழைந்தவன், அங்கு நின்றிருந்த கனகராஜனுடன் சேர்ந்துகொண்டான். அவர் திரும்பி உள்ளறைக்கு நடக்க, அசோக் அவரை பின்தொடர்ந்தான்.

“என்னய்யா.. ஃபோன் நம்பரை வச்சு, அந்த பொண்ணு அட்ரஸ கண்டுபுடிச்சிட்டீங்களா..??” கனகராஜனின் குரலில் ஒருவித எள்ளல் தொனித்தது.

“அ..அதைப்பத்தி பேசுறதுக்குத்தான்.. ஸார் வர சொல்லிருக்காரு..!!” அசோக் அடக்கத்துடனே அவருக்கு பதில் சொன்னான்.

“ஹ்ம்ம்..!! உன்னை சொல்றதா.. இல்ல.. உனக்கு ஒத்து ஊதுற அவரை சொல்றதான்னு தெரியல..!! அந்தப்பொண்ணு மேல இவ்வளவு பைத்தியமா இருக்கியே.. உன் லவ்வு மேட்டர்லாம்.. உன்னை பெத்து வளத்தவங்களுக்கு தெரியுமா..??”

“ம்ம்.. தெரியும்..!! அவங்களுக்கும் தெரியும்.. அவங்களை பெத்து வளத்தவங்களுக்கும் தெரியும்..!! ஏன் கேக்குறீங்க..??”

அசோக் அவ்வாறு இயல்பாக கேட்க.. இப்போது கனகராஜனின் முகத்தில் ஒரு பெருத்த ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது..!! காதல் என்ற பெயரில்.. வீட்டை ஏமாற்றுகிற விடலைப்பையன் என்பது.. அசோக்கைப் பற்றிய அவரது அனுமானமாக இருந்திருக்கும் போலிருக்கிறது..!!

“ஒ..ஒன்னுல்ல.. சு..சும்மா கேட்டேன்..!!” என்று தடுமாற்றமாய் சமாளித்தார்.

வெளிப்புற கட்டமைப்பை போல.. அந்த வீட்டின் உட்புற வடிவமைப்பும்.. அழகும் ஆடம்பரமும் மிகுந்ததாகவே இருந்தது..!! வெல்வெட் துணியாலான தரைவிரிப்புகள்.. தேக்கு மரத்தாலான அறைகலண்கள்.. இத்தாலித்தோல் போர்த்திய சாய்விருக்கைகள்.. கண்ணாடி ஸ்படிகம் பொதிந்த சாண்ட்லியர் விளக்குகள்..!! ஏலத்தில் வாங்கப்பட்ட எழில்மிகு அரியவகை ஓவியங்கள்.. உட்புற சுவர்களை அலங்கரிக்க உபயோகமாகியிருந்தன..!! அறைக்குள் இருந்த அத்தனை பொருட்களுமே.. அந்த வீட்டு உரிமையாளனின் செல்வச்செழிப்பை செப்பின.. பணச்செறிவை பறைசாற்றின..!!

ஆனால்.. வெளிப்புறத்தைப்போல வீட்டுக்குள் அதிக ஆள் நடமாட்டம் இருக்கவில்லை..!! ஹாலில் மட்டும்.. கன்னத்தில் கைவைத்தவாறு வீட்டு வேலைக்காரியும்.. கைகளை கட்டியவாறு கார் ட்ரைவரும் நின்றிருந்தனர்..!! ஹாலை கடந்து சென்ற கனகராஜன்.. வலது புறம் இருந்த அந்த அறையை அடைந்ததும் திரும்பினார்.. திரும்பியவர் வாசலிலேயே தயங்கி நின்றுகொண்டார்..!! அவருக்கு பின்பக்கமாக வந்து சேர்ந்த அசோக்.. ஆர்வமான ஒரு பார்வையை அந்த அறைக்குள் வீசினான்.. உள்ளே கண்ட காட்சியில் உடனே அதிர்ந்துபோய்.. மூச்சை சற்றே இழுத்து பிடித்துக் கொண்டான்..!!

மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த ஆள்.. முன்பாக கிடந்த கண்ணாடி மேஜை மீது.. முதுகு குப்புற கவிழ்ந்திருந்தான்..!! முகத்தை பக்கவாட்டில் திருப்பி புதைத்து.. மூச்சு நின்று போய் இறந்து கிடந்தான்..!! முரட்டு மீசை.. கனத்த தேகம்.. மூக்கிலிருந்து வழிந்து உறைந்துபோன ரத்தம்.. மூடாத இமைகளுடன் நிலைகுத்திய பார்வை..!! அந்த கண்ணாடி மேஜையில்.. வெண்ணிறத்திலான ஒருவகை பொடி சிந்திக் கிடந்தது.. வெப்பத்தில் கருகிப் போன வெள்ளி தேக்கரண்டி ஒன்று.. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட உயர்ரக மதுபுட்டி ஒன்று.. அதனருகில் நேற்றிரவு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தி.. இப்போது உருகி, உயிர் தீர்ந்து, உறைந்து போயிருந்தது.. மேஜையில் கவிழ்ந்திருந்த அந்த ஆளைப்போலவே..!!

இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றியிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. இவர்களுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தார்.. மஃப்டி உடையில்தான் இருந்தார்..!! காவல்த்துறை தடவியல் பிரிவை சேர்ந்த, நான்கு பேர் கொண்ட குழு.. அந்த அறைக்குள் இருந்த பொருட்களை ஆய்வு செய்துகொண்டிருந்தது..!! அவர்களுள்.. கண்ணாடியும் கையுறையும் அணிந்திருந்த ஒரு தடயவியல் நிபுணர்.. கால்களை மடக்கி தரையில் மண்டியிட்டு.. அந்த கண்ணாடி மேஜை நோக்கி குனிந்திருந்தார்..!! கையிலிருந்த ஒரு சிறிய தகரத்தகடால்.. அந்த வெண்ணிற பவுடரை கொஞ்சம் அள்ளினார்.. விரலால் தொட்டு நாவால் சுவைத்துப் பார்த்தார்..!! ஓரிரு வினாடிகள்.. பிறகு தலையை சுழற்றி ஸ்ரீனிவாச பிரசாத்தை ஏறிட்டவர்..

“Coke..!!”

என்றார் அழுத்தம் திருத்தமாக. அதைக்கேட்டதுமே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் இருந்து ஒரு சலிப்பான பெருமூச்சு வெளிப்பட்டது..!!

“ப்ச்.. ஆரம்பிச்சிடுச்சு.. தலைவலி..!!”

சொல்லிக்கொண்டே தலையை பரபரவென சொறிந்து கொண்டார்..!! அந்த தடவியல் நிபுணர் இப்போது மெல்ல மேலெழுந்தார்.. உயிரை விட்டிருந்த அந்த ஆளை உன்னிப்பாகப் பார்த்தவாறே.. கையுறைகளை கழட்டியபடியே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொன்னார்..!!

“ஆக்சிடண்டல் டெத் மாதிரிதான் தோணுது எஸ்பி.. எதும் ஃபோர்ஸ் பண்ணதுக்கான சிம்ப்டம்ஸ் இல்ல.. ஓவர்டோஸ் ஆகி உயிரை விட்ருக்கணும்..!! ட்ரக்ஸ் ப்ளஸ் ஆல்கஹால்..!! ஹ்ம்ம்.. உள்ள என்னென்ன வெடிச்சதோ தெரியல.. மூக்குல இருந்து ரத்தம் கொட்டிருக்கு..!!”

“ம்ம்..!!”

“Overall.. It looks pure accidental to me..!!”

“இப்போவே எந்த முடிவுக்கும் வந்துட வேணாம் பார்த்தி.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும்.. பாத்துக்கலாம்..!!”

அமர்த்தலாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், அடுத்த நொடியே சரக்கென திரும்பினார். வாசலில் நின்றிருந்த கனகராஜனையும் அசோக்கையும் பார்த்ததும், அவரிடம் மெலிதாக ஒரு திகைப்பு. ஆனால் உடனடியாய் அந்த திகைப்பை சமாளித்துக் கொண்டவர்,

“ஒரு அஞ்சு நிமிஷம் அசோக்..!!”

என்று அசோக்கை பார்த்து ஒரு இதமான புன்னகையை வீசினார். பிறகு கனகராஜனை ஏறிட்டவர், முகத்தில் இன்ஸ்டன்டாக ஒரு கடுமையை வரவழைத்துக்கொண்டு,

“வேன் என்னாச்சு கனகு..??” என்றார்.

“வந்துக்கிட்டு இருக்கு ஸார்.. இப்போத்தான்..”

கனகராஜன் பதற்றத்துடன் சொல்லி முடிப்பதற்கு முன்பே.. அவருடைய பதிலில் ஆர்வம் இல்லாதவர் போல.. ஸ்ரீனிவாச பிரசாத் படக்கென திரும்பி உள்ளே நடந்தார்..!! ஒருகணம் குழம்பிய கனகராஜன்.. பிறகு அவசரமாக நகர்ந்து அவரை பின்தொடர்ந்தார்..!! என்ன செய்வது என்று புரியாத அசோக்கும்.. கனகராஜனின் பின்னால் நடந்தான்..!!

விடுவிடுவென நடந்த ஸ்ரீனிவாச பிரசாத் பக்கத்து அறையை அடைந்தார்.. அவருக்கு பின்னாலேயே, கனகராஜனும் அசோக்கும்..!!

பக்கத்து அறைக்குள் அந்தப்பெண் அமர்ந்திருந்தாள்.. அழகாக இருந்தாள்.. முப்பதுகளின் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு வயது இருக்கலாம்.. முகத்தில் ஒருவித அசாத்திய அமைதி..!! அவளது கையில் பால்சாதம் நிரம்பிய கிண்ணம்.. மடியில் அவளுடைய ஐந்துவயது பெண்குழந்தை..!! இவர்கள் வாசலில் வந்து நின்றதை அந்தப்பெண் கவனிக்கவில்லை.. குழந்தைக்கு சாதம் ஊட்டுவதில் குறிப்பாக இருந்தாள்..!! அந்தக்குழந்தை சாதத்தை அசைபோட்டவாறே.. வாயிடுக்கில் பாலும், வார்த்தைகளில் மழலையும் வழிந்தோட.. அம்மாவை கேட்டது..

“ஸ்கூலுக்கு போகலைன்னா மிஸ் திட்டுவாங்களே..??”

“இல்லடா.. மிஸ் திட்டமாட்டாங்க..!! மம்மி.. மிஸ்ட்ட பேசிட்டேன்..!! சுஜிக்குட்டி.. மண்டே ஸ்கூலுக்கு வந்தா போதும்னு மிஸ் சொல்லிட்டாங்க..!!”

“நெஜமா..??” அந்தக்குழந்தையின் கண்களில் ஒரு சந்தோஷ மின்னல்.

“ம்ம்.. நெஜமா..!!” அந்தப்பெண்ணின் இதழ்களில் ஒரு வறண்ட புன்னகை.

அப்பா இறந்துபோன விஷயம், அந்தக்குழந்தைக்கு இன்னும் தெரியாது போலிருந்தது.. இப்போதுதான் தூக்கத்திலிருந்தே விழித்திருக்கும் போல தெரிந்தது..!! கண்களில் ஒருவித சோர்வுடனும்.. ‘இன்று பள்ளிக்கு செல்கிற தொல்லை இல்லை’ என்ற மகிழ்ச்சியுடனும்.. அம்மா ஊட்டிய பால்சாதத்தை விழுங்கிக்கொண்டிருந்தது..!!

இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் ‘ம்க்கும்’ என்று மெலிதாக தொண்டையை செரும.. அந்தப்பெண் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தாள்..!! இவர்கள் மூன்று பேரையும் வாசலில் கண்டதும்.. ‘என்ன..’ என்பது போல கேள்வியாக பார்த்தாள்..!!

“கொஞ்சம் பேசணும்..!!” என்றார் ஸ்ரீனிவாச பிரசாத்.

“உ..உள்ள வாங்க..!!” என்றாள் அவள்.

ஸ்ரீனிவாச பிரசாத் மட்டும் அறைக்குள் நுழைய.. அசோக்கும் கனகராஜனும் வாசலுக்கு அருகிலேயே நின்றுகொண்டார்கள்..!! உள்ளே சென்ற ஸ்ரீனிவாச பிரசாத்.. அந்தப்பெண்ணுக்கு அருகே கிடந்த இன்னொரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.. மென்மையான குரலிலேயே ஆரம்பித்தார்..!!

“இது.. ஜஸ்ட் ஃபார்மல் என்கொய்ரிதான் மிஸஸ் தேவராஜ்.. நீங்க ஒன்னும்..” ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அந்தப்பெண் இடைமறித்து,

“நிர்மலா..!!” என்றாள்.

“வாட்..??” ஸ்ரீனிவாச பிரசாத் புரியாதவராய் நெற்றி சுருக்கினார்.

“என் பேர் நிர்மலா.. அப்படியே என்னை கூப்பிடலாம்..!!”

அந்தப்பெண் இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு, குழந்தையின் வாயில் சாதத்தை திணித்தாள். ஸ்ரீனிவாச பிரசாத் ஒருசில வினாடிகள் ஒருவித திகைப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் ஒரு பெருமூச்சுடன், அந்த திகைப்பை சமாளித்துக்கொண்டு சொன்னார்.

“ஓகே.. மிஸஸ் நிர்மலா.. இ..இது.. இது ஜஸ்ட் ஃபார்மல் என்கொய்ரிதான்.. நீங்க எதும் டென்ஷன் ஆகிக்க வேணாம்னு சொல்ல வந்தேன்..!!”

“இல்ல.. டென்ஷன் ஆகல..!! கேளுங்க..!!”

“உ..உங்க ஹஸ்பண்டுக்கு எத்தனை நாளா இந்தப்பழக்கம் இருக்கு..??”

“குடிப்பழக்கம் கல்யாணம் ஆன நாள்ல இருந்தே இருக்கு..!! இப்போ ஒரு ரெண்டு வருஷமாத்தான்.. இதுலாம்..!!”

“ம்ம்..!! அவர் கன்ஸ்யூம் பண்ணிருக்குறது.. கொக்கைன்’ன்னு சொல்ற ஒருவகை போதைப்பொருள்..!! கேள்விப்பட்ருக்கீங்களா..??”

“இ..இல்ல.. கேள்விப்பட்டது இல்ல..!!”

“ரொம்ப காஸ்ட்லி.. ஒரு சின்ன பொட்டலமே இருபதாயிரம், முப்பதாயிரம் ஆகும்..!! இங்க சென்னைல அவ்ளோ ஈஸியா கெடைச்சிடாது.. ஸவ்த் அமெரிக்கால இருந்து ஸ்மக்ள் பண்ணி.. மும்பை, டெல்லி மூலமாத்தான் சென்னைக்கே வந்தாகனும்..!!”

“ஸோ..??”

“நத்திங்.. இந்த ட்ரக்ஸ்லாம் சென்னைல புழக்கத்துல இருக்குதுன்ற ந்யூஸே.. எங்க டிப்பார்ட்மண்ட்டுக்கு பெரிய தலைவலியான சமாச்சாரம்..!! மீடியாக்கு தெரிஞ்சா சொல்லவே வேணாம்.. ஒரு வழி பண்ணிடுவாங்க..!! It’s a serious issue for us Mrs.Nirmala..!! என்ன சொல்ல வரேன்னு புரியுதா..??”

“பு..புரியுது..!!”

“ம்ம்..!! அவருக்கு இந்த ட்ரக்ஸ்லாம் எப்படி கெடைக்குதுன்னு.. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..??”

ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கவும், நிர்மலா இப்போது பட்டென அமைதியானாள். சிலவினாடிகள் சாதத்தை பிசைந்துகொண்டே, சற்று யோசித்தாள். பிறகு பிசைந்த சாதத்தை சுஜிக்கு தந்தவாறே, மெலிதான குரலில் சொன்னாள்.

“எனக்கு அந்த ஆள் பேர்லாம் தெரியாது.. ஆனா.. அந்த ஆள் மூலமாத்தான் இவருக்கு இதெல்லாம் கெடைக்குதுன்னு மட்டும் நல்லா தெரியும்..!! அப்பப்போ இங்க வருவான்.. இவரும் அவனுக்கு அப்பப்போ பணம் குடுக்குறதை நான் பாத்திருக்கேன்..!! நேத்து கூட.. இவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல அந்த ஆள் பைக்ல இங்க வந்தான்.. இவர் வாசலுக்கே போய் அவன்ட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தாரு..!! அனேகமா.. அந்த கருமத்தை குடுக்குறதுக்குத்தான் அவன் வந்திருக்கணும்..!!” Pundai Tamil New Sex Stories

– தொடரும்

Leave a Comment