ஆண்மை தவறேல் – 45 (Sex Stories In Tamil - Aanmai Thavarael 45)

Sex Stories In Tamil – “ப்ளீஸ் சிஸ்டர்.. என் வொய்ஃபையும் குழந்தையையும் எப்படியாவது காப்பாத்திடுங்க..!!”

ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நின்றிருந்த அந்த நர்ஸிடம், அசோக் கெஞ்சலாக சொன்னான். இவளிடம் கெஞ்சுவதில் எந்த பலனும் இல்லை என்று அவனுடைய புத்திக்கு தெரிந்திருந்தாலும், நிறைமாத கர்ப்பிணியான மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் கொண்டிருந்த, இப்போது பதைபதைத்துப் போய் இருந்த அவனது மனம், மூளை இட்ட கட்டளைகளை எல்லாம் மதிக்கவில்லை. கண்களும் அவனுடைய கட்டுப்பாடின்றி கண்ணீரை உகுத்தன.

“அழாதப்பா.. உன் பொண்டாட்டிக்கும், புள்ளைக்கும் ஒன்னும் ஆவாது.. ரெண்டும் நல்ல படியா பொழைச்சு வருவாங்க..!!”

ஆறுதல் சொன்ன, அந்த கரடு முரடான தோற்றம் கொண்ட ஆசாமியை அசோக் ஸ்னேஹமாக பார்த்து புன்னகைத்தான். பயத்திலும், படபடப்பிலும் இருந்தவனுக்கு அவருடைய வார்த்தைகள் மிக இதமாக இருந்தன. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஒருவித புது நம்பிக்கை அவனுக்குள் பிறக்க காரணமாய் இருந்தன அந்த வார்த்தைகள். மேலும் ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து..

“என் பேர் அசோக்.. என் வொய்ஃப் பேரு நந்தினி..!!” என்றான் அவரிடம்.

“அப்படியா..?? என் பொண்ணு பெரும் நந்தினிதான்..!!” அந்த ஆள் ஆச்சரியமாக சொன்னார்.

“ஓ..!! உங்க பேரு..??”

“சூசை..!!”

—————————

வெள்ளைத்துணி சுற்றப்பட்ட ஆண்குழந்தை கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு கிடக்க.. குழந்தையை சுற்றி அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். அசோக், நந்தினி, மஹாதேவன், கௌரம்மா, ராமண்ணா..!! யாரும் சப்தமே எழுப்பவில்லை. அனைவரும் அமைதியாக தாடையை சொறிந்தவாறு, ஏதோ தீவிர யோசனையில் இருந்தார்கள். அசோக்தான் திடீரென முதலில் கத்தினான்..!!

“ஆங்… நான் ஒரு பேர் சொல்றேன்.. எப்படி இருக்குன்னு எல்லாரும் சொல்லுங்க..!!”

“ம்ம்.. சொல்லு தம்பி..!!” – இது ராமண்ணா.

“என் பேரையும், நந்தினி பேரையும் மிக்ஸ் பண்ணி ஒரு பேர்..!!”

“ஆஹா.. நல்ல ஐடியாவாதான் இருக்கு.. என்னன்னு சொல்லு..!! – இது கௌரம்மா.

“ரொம்ப பொருத்தமான பேர் வேற..!!”

“ஐயோ.. இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா..??” – இது பொறுமையற்ற நந்தினி.

“ஆனந்த்..!!!!!” அசோக் சொல்லிவிட்டு,

“எப்படி இருக்கு..??” என்று எல்லோருடைய முகத்தையும் பார்த்தான்.

“வாவ்…!!! நைஸ் நேம்..!!!”

நந்தினி உட்பட அனைவருமே சந்தோஷத்தையும், திருப்தியையும் வெளிப்படுத்தினார்கள். மஹாதேவன் இப்போது பேரனை ஆசையாக அள்ளி எடுத்தார். கண்களில் நீர் பனிக்க, உணர்ச்சிவசப்பட்டுப் போய் குட்டிப்பையனை கொஞ்சினார்.

“ஆனந்த்..!!!! ஆனந்தத்தை அள்ளி கொண்டுவந்தவனாடா கண்ணா நீ..?? இனி இந்த வீட்டுல ஆனந்தத்தை தவிர வேற எதுவும் இல்லைன்னு சொல்ல வந்தவனாடா ராஜா..???”

f3

“ஐயோ.. வேணாம்த்தான்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..!!!” வந்தனா கெஞ்சினாள்.

“ஹையோ.. என்ன வந்தனா நீ..?? எல்லாம் உன் நல்லதுக்காகத்தான் பண்றோம்னு கூட.. ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேன்ற..??” அசோக் அவளை கன்வின்ஸ் செய்ய முயன்றான்.

“இப்போ எனக்கு கல்யாணத்துக்கு என்னத்தான் அவசரம்..?? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே..??”

“புரியாம பேசாத..!! இந்த மாதிரி ஒரு நல்ல சம்பந்தம் கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்.. ரொம்ப டீசன்டான ஃபேமிலி.. பையன் ரொம்ப நல்ல மாதிரியா தெரியிறான்.. நல்லா படிச்சிருக்கான்.. கை நெறைய சம்பாதிக்கிறான்..!!”

“ம்க்கும்.. எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா அவர் மூஞ்சியை பாத்தாத்தான் ரொம்ப பயமா இருக்கு.. ராஜ்கிரண் மாதிரி இருக்காரு அத்தான்..!!”

“ப்ச்..!! மூஞ்சியை பாத்துலாம் லைப் பார்ட்னர் டிஸைட் பண்றது ரொம்ப தப்பு வந்தனா..!! அப்டிலாம் பாத்திருந்தா.. உன் அக்காவுக்குலாம் கல்யாணம் நடந்திருக்குமான்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு..!!” மச்சினியை சமாதானம் செய்யும் சாக்கில், மனைவியை நக்கலடித்த அசோக்கை, நந்தினி திரும்பி பார்த்து உஷ்ணமாக முறைத்தாள்.

வந்தனாவின் கல்யாணம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்து ஒருநாள்..

“ரொ..ரொம்ப பயமா இருக்கு சகலை.. இ..இன்னைக்கு ஒருநாள் உங்க வீட்டுல படுத்து தூங்கிட்டு.. காலைல போறேனே..??” வந்தனாவின் கணவன் வாய் குழற கெஞ்சினான்.

“நோ நோ..!! வந்தனா வீட்டுல தனியா இருப்பா.. நீ வீட்டுக்கு கெளம்பிடு சகலை.. என்னை சிக்கல்ல மாட்டி விட்டுடாத..!!” காலியான விஸ்கி பாட்டிலை தூக்கி எறிந்தவாறே அசோக் சொன்னான்.

“இரக்கமே இல்லாம இப்படி சொல்றீங்களே.. குடிச்சுட்டு போனேன்னு தெரிஞ்சா.. என்னை வெரட்டி வெரட்டி அடிப்பா சகலை..!!”

“யோவ்.. பொலம்பாதையா.. பொண்டாட்டிதான..?? அடிச்சா வாங்கிக்கோ.. போ..!!”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! வாங்கிக்கிறேன்.. வாங்கிக்கிறேன்.. வேற என்ன பண்றது..?? ஆமாம்.. உங்களை ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்..!!”

“என்ன..??”

“தங்கச்சி மட்டுந்தான் இப்படியா.. இல்ல அக்காவுமா..??”

அவன் கேட்டு முடித்து வெகுநேரம் ஆகியும், அவனுடைய கேள்வி காதிலேயே விழாத மாதிரி, அசோக் வேறெங்கோ பார்வையை திருப்பிக்கொண்டு அமைதியாக இருக்க.. சிலவினாடிகள் அவனையே கேவலமாக பார்த்துவிட்டு.. ‘த்தூ..!!’ என்று மனதுக்குள் ரகசியமாய் துப்பிக் கொண்டான் அந்த ராஜ்கிரண்..!!

—————————

“கேடி சொல்டா கண்ணா..!! கே..டி..!! கே…. டி… கேடி..!! சொல்லு.. கேடி..!!”

பையனிடம் மிக சீரியஸாக நந்தினி சொல்லிக்கொண்டிருக்க, அவளையே ஓரக்கண்ணால் முறைத்துக் கொண்டிருந்த அசோக், இப்போது கையிலிருந்த புத்தகத்தை தூக்கி எடுந்துவிட்டு, மனைவி மீது பாய்ந்தான்.

“ஆஆஆஆஆஆவ்வ்வ்..!!!” என்று அவள் அலற அலற.. அவளுக்கு மூச்சு திணற திணற.. அவள் மீது படர்ந்து அவளை நசுக்கினான்..!!

“ஏண்டி.. கொழந்தைக்கு டாடி சொல்லிக் குடுடின்னா.. கேடின்னா சொல்லி குடுக்குற..??”

“ஹஹாஹஹாஹஹா…!! நான் சரியாத்தான் சொல்லிக் குடுக்குறேன்.. டாடியா நீங்க..? சரியான கேடி..!!”

அசோக் இப்போது கடுப்பானான். அவளுடைய நைட்டிக்குள் கை விட்டு, அவளுடைய தொடையில் நறுக்கென கிள்ளி வைத்தான். நந்தினி வலியில் துடித்தாள்.

“ஆஆஆ..!! தொடைல கிள்ளாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது.. வலிக்குது..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ…!!”

“ஆமாம் தொடைல கிள்ளுனா வலிக்கத்தான் செய்யும்.. கொஞ்சம் மேல ஏத்தி கிள்ளவா.. சொகமா இருக்கும்..!!” சொல்லிக்கொண்டே அசோக் தனது கையை சற்று மேலே நகர்த்த, நந்தினி..

“ச்ச்சீய்..!!!”

என்றவாறு பட்டென அவனுடைய கையை தட்டிவிட்டாள். தன் மீது படர்ந்திருந்த கணவனையே கொஞ்ச நேரம் காதலாக பார்த்தாள். அசோக்கும் அவளுடைய முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவளை பார்த்து குறும்பாக கண்சிமிட்ட,

“கேடி..!!!” என்றாள் நந்தினி வெட்கமும், சிரிப்புமாய்.

“கேயீ..!!!”

அந்தப்பக்கம் ஆனந்தும் அம்மா சொன்னதை ரிப்பீட் செய்துவிட்டு, எலிப்பற்களை காட்டி கெக்கலித்தான். Bra Kalattum Sex Stories In Tamil

f1 (1)

[ சுபம் ]

1 thought on “ஆண்மை தவறேல் – 45 <span class="desi-title">(Sex Stories In Tamil - Aanmai Thavarael 45)</span>”

Leave a Comment