உன்னைச் சுடுமோ என் நினைவு -4 (Unnai Sudumo En Ninaivu 4)

This story is part of the உன்னைச் சுடுமோ என் நனைவு series

    அதன்பின் இரண்டு நாட்கள் கிருத்திகா நிருதியின் கண்ணிலேயே படவில்லை. அது ஒரு வகையில் அவனுக்கு ஆறுதலாகக் கூட இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து அவன் வேலை முடிந்து வீடு திரும்பியபோது கிருத்திகா அவள் வீட்டுக்கு முன் நின்றிருந்தாள். காதில் போனை வைத்து சன்னக் குரலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். அவன் பக்கம் திரும்பி அவனை ஒரே ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் திரும்பி நின்று கொண்டாள். நைட்டிக்கள் தளும்பும் அவளின் பின் எழில் மேடு பள்ளங்களை ஏக்கத்துடன் ஒரு பார்வை பார்த்து விட்டு நெஞ்சில் நிறைந்த ஏமாற்றத்துடன் தன் வீட்டுக்குள் போனான் நிருதி.. !!

    அதன் பின் மீண்டும் அந்த வார ஞாயிற்றுக் கிழமை காலை பதினொரு மணிக்கு நிருதியின் வீட்டுக்கு வந்தாள் கிருத்திகா. மெரூன் கலரில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் நெஞ்சில் சுருக்கென ஒரு முள் குத்துவதைப் போலிருந்தது. சோபாவில் உட்கார்ந்து காமெடிச் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த அவனை ஓரக் கண்ணால் ஒரு சைடு பார்வை பார்த்து இதழோரப் புன்னகை சிந்தியபடி துணி துவைப்பதில் பிஸியாக இருந்த அவன் மனைவியிடம் போய் பேசினாள். பத்து நிமிடங்கள் கழித்து அவனிடம் வந்தாள்.

    “ப்ரீயா?” என்று சன்னமாக அவனைக் கேட்டாள்.
    “…. ” அவன், அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை.
    “அலோ.. அண்ணா.. உங்களைத்தான்” கொஞ்சம் அழுத்திச் சொன்னாள்.

    டிவியில் இருந்து பார்வையை மாற்றி அவளைப் பார்த்தான். அவள் பார்வையில் லேசான முறைப்பு தெரிந்தது.
    “என்ன?”
    “இன்னிக்கு ப்ரீயானு கேட்டேன்”
    “என்கிட்டயா கேக்குற?”
    ”பின்ன.. இங்க வேற யாரு இருக்கா?”
    “என் கூடல்லாம் பேசுவியா நீ?”
    “என்ன சினிமா டயலாக்கா?” டிவியைப் பார்த்து விட்டு “ஈவினிங் டைம் எங்கம்மா உங்களை எங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க” என்றாள்.
    “எதுக்கு? ”
    “அக்காகிட்ட சொல்லியிருக்கேன். கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. பை..” அவள் சொல்லி முடிக்கும் முன் அவன் மனைவி தொடை தெரிய தூக்கி சொருகிய ஈர நைட்டியுடன் வந்தாள்.
    “என்னங்க.. இவளை இன்னிக்கு பொண்ணு பாக்க வராங்களாம்”
    “என்னது..?” திகைத்தான். “பொண்ணு பாக்க வராங்களா?”
    “இதுக்கு நீங்க ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க..? இவளை லவ் பண்றீங்களா என்ன?” என்று அவன் மனைவி கிண்டல் செய்து சிரித்தாள்.

    “அக்கா…” என்று சிணுங்கினாள் கிருத்திகா. “இந்த சிடு மூஞ்சியை உங்களாலயே சகிக்க முடியலேனு சொல்றீங்க. இதுல நான் லவ் வேற பண்றேனா என்ன?”
    “அடி.. நீ பண்ண மாட்டேனு தெரியும்டி. ஆனா இந்த மூஞ்சிக்கு உன் மேல ஏதாவது ஒரு பீல் இருந்தா.. ?”
    ”அடிப் பாவிகளா.. ஒரு சின்ன ஷாக் ரியாக்சனுக்கு இவ்வளவு விவாதமா?” என்றான்.
    “அப்ப ஏன் ஷாக்கானீங்க?”
    “இவளுக்கு ஏதோ ஜாதக தோசம். இப்ப கல்யாணம் பண்ணா ரெண்டு தாலி யோகம்ன்றதால லேட் மேரேஜ்தான் பண்ணனும்னு இதுதான் சொல்லுச்சு அது ஞாபகம் வந்துச்சு..”
    “அப்படியாடி?”
    “ஆமாக்கா.. எங்கம்மா எனக்கு ஜாதகம் பாத்துட்டு வந்து அப்படித்தான் சொன்னாங்க. ஆனா.. இன்னிக்கு என்னை பொண்ணு பாக்க வரவங்க அதை நம்பல. ஜாதகமே பாக்க வேண்டியதில்ல. எங்களுக்கு பொண்ணை புடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லிட்டாங்க” என்று சிரித்தபடி சொன்னாள் கிருத்திகா.
    “அப்ப.. ஆல்ரெடி உன்னை பாத்துட்டாங்களா?” என்று நிருதி கேட்டான்.
    “எங்க சொந்தக் காரங்கதான். அம்மாவை பாக்க ஆஸ்பத்திரி வந்தாங்க.. அங்க என்னை பாத்து அவங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.. அதான்.. இன்னிக்கு வீட்டுக்கு வராங்க..”
    “ஓகே.. வாழ்த்துக்கள். ”
    ”தேங்க்ஸ்.. !!”

    மாலையில் கிருத்திகாவைப் பெண் பார்க்க வந்தார்கள். நிருதிக்கு அங்கு போக விருப்பம் இல்லைதான். ஆனால் அவன் மனைவி அவனை வற்புறுத்தி அழைத்துப் போய் விட்டாள். மாப்பிள்ளை பையன் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். ஆனால் அவளை விட உயரம் கொஞ்சம் குள்ளமாக இருந்தான். லேசாக தொப்பை போட்டு குண்டாக இருந்தான்.

    கிருத்திகா நன்றாக மேக்கப் செய்திருந்தாள். அவன் மனதில் ஏற்கனவே ஆசையைத் தூண்டி விட்டிருந்த அவளின் இளம் பருவ அங்க லாவண்யங்கள் இப்போது இன்னும் பல மடங்கு ஆசையை அவன் மனதில் பெருகச் செய்தது.

    கண்களால் மாப்பிள்ளை பையனைக் காட்டி நிருதியுடம் கேட்டாள் கிருத்திகா.
    ‘மாப்பிள்ளை எப்படி? ‘
    ‘சூப்பர் ‘ என்று நெக்கல் சிரிப்புடன் தலையாட்டினான்.
    ‘தேங்க்ஸ்’ என்று உதடுகளைச் சுழித்தாள்.

    கிருத்திகாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது. திருமணப் பேச்சு வார்த்தை எல்லாம் நல்ல விதமாகவே நடந்து முடிந்தது. அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ஜோசியரிடம் போய் திருமண நாள் குறித்துக் கொள்வதென முடிவானது.. !!

    அன்றிரவு எட்டு மணிக்கு நிருதி வெளியே போய் சரக்கடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது கிருத்திகா அவன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து அவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாள். மாப்பிள்ளை வந்து போனபின் அவன் மீதிருந்த அவள் கோபம் குறைந்து போயிருந்தது. அவன் பாத்ரூம் போய் முகம் கழுவி உடை மாற்றி வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்தான். கிருத்திகாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்.. !!

    “அப்பறம் புதுப் பொண்ணு” என்றான்.
    “சொல்லுங்க ணா?”
    “செட்டில்தான்”
    தலையாட்டிச் சிரித்தாள். “மாப்பிள்ளை எப்படி இருக்கார்ணா?”
    “ஜம்முனு இருக்கான். உனக்கேத்த ஜோடி” நெக்கலை மறைத்துச் சொன்னான்.

    உடனே அவன் மனைவி குறுக்கிட்டாள்.
    “நீங்க யாரை சொல்றீங்க?”
    “மாப்பிள்ளை பையனடி”
    “அவன் இவளுக்கு ஏத்த ஜோடியா?” அவன் மனைவி முறைத்தாள்.
    “அப்புறம் இல்லையா?”
    “உங்க கண்ணை தொறந்து நல்லா பாத்திங்களா அவனை? இவ ஹைட்டு என்ன.. அவன் ஹைட்டு என்ன? இவளை விட பையன் கூளை..”
    “அப்படியா கிருத்தி?” கிருத்திகாவைச் சீண்டினான்.
    “ஆமாண்ணா.. என்னை விட கொஞ்சம் ஹைட் கம்மிதான்” என்று சிரித்தபடி சொன்னாள்.
    அவன் மனைவி “அப்பறம் இவளை விட கொஞ்சம் குண்டா இருக்கான். இப்பவே லேசான தொப்பை..” என்று அடுக்கினாள்.
    “ஏய் லூஸு.. அது எப்படி இருந்தா உனக்கென்ன அவனை கட்டிட்டு வாழப் போறது கிருத்திகா. கட்டிக் போறவளுக்கு புடிச்சிருக்கு. அது போதுமானது. தேவை இல்லாத பேசி நீ அவ மனசையும் சேந்து கெடுக்காத”
    “நான் கெடுக்கல. அவளேதான் இதெல்லாம் பீல் பண்ணி பேசினா?” என்றாள் அவன் மனைவி.

    கிருத்திகாவைப் பார்த்தான். அவள் லேசான வெட்கத்துடன் தலையாட்டினாள்.

    “ஏன்.. உனக்கு அவனை புடிக்கலியா?”
    “புடிச்சிருக்குணா.. சும்மா.. ஜோடிப் பொருத்தம் பத்திலாம் பேசிகிட்டிருந்தோம்”
    “அப்ப உனக்கு ஓகே தான?”
    “ம்ம்.. எனக்குலாம் ஓகேதான். ஒரே பையன். நல்ல வேலை. நல்ல சம்பளம். சொந்த வீடு.. ஆளும் பாக்க மோசமில்ல. கொஞ்சம் ஹைட் மட்டும் என்னை விட கம்மி அவ்வளவுதான். அப்படி அவங்க நெனச்சா என்னை கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க.. எங்க வீட்லயும் எல்லாருக்கும் ஓகேதான்”
    “அப்ப லைப் செட்டில்தான்?”
    ”ம்ம்” தலையாட்டி “உங்கள மாதிரி குடிகார அண்ணா இல்ல” என்று சிரித்தாள்.
    ”ஆமா.. கல்யாணத்துக்கு முன்ன எல்லா பசங்களும் நல்லவனுகதான். கல்யாணம் ஆகட்டும். அப்பறம் பாரு..”
    “எல்லாருமே உங்கள மாதிரி இருக்க மாட்டாங்க தெரிஞ்சுக்கோங்க. இந்தக்கா செரியில்ல. உங்களை போனா போகுதுனு விட்டுட்டாங்க அதனாலதான் நீங்க இப்படி குடிச்சிட்டு சேட்டை பண்றீங்க.. நானாருந்தா வாய் வாயே தட்டியே குடியை நிறுத்தியிருப்பேன்”
    “நீயி?”
    “ஆம்மா..”
    “வாயி வாயா தட்டி?”
    “தட்றதா.. சூடு கூட வெப்பேன். வாயில..” என்று கிண்டல் சிரிப்பைக் காட்டினாள்.

    அவன், அவள் உதட்டில் முத்தமிட்டது நினைவில் வந்து சட்டென ஒரு நொடி அவளைச் சிலிர்க்க வைத்தது. அந்த நொடி தன்னையும் மீறி அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.. !!

    Leave a Comment