நெஞ்சோடு கலந்திடு – 25 (Tamil Sex Story - Nenjodu Kalanthidu 25)

Tamil Sex Story – “இ..இங்க பாரு திவ்யா.. அன்னைக்கு நான் அந்த மாதிரி எண்ணத்துல சொன்னது என்னவோ உ..உண்மைதான்.. ஆனா.. அப்புறம்..”

“அப்புறம் என்ன..?? திடீர்னு நல்லவனா மாறிட்டியோ..??”

“உனக்கு புரியலை.. அதுக்கப்புறம்.. அவர் திரும்ப வந்ததுக்கப்புறம்.. நான் நெஜமாவே உங்களை சேர்த்து வைக்க நெனச்சேன்..!!”

“பொய் சொல்லாத அசோக்..!!”

“ஐயோ.. இல்ல திவ்யா.. அதுதான் உண்மை..!!”

“இல்ல.. இல்ல..!! பொய்..!! நீ சொன்ன பொய்யெல்லாம் நான் கேட்டு ஏமாந்தது.. இன்னைக்கு மொட்டை மாடியோட போயிடுச்சு..!! எனக்கு எல்லாம் தெரியும்..!!”

“ப்ளீஸ் திவ்யா.. என்னை நம்பு.. நான் சொல்றது உண்மைதான்..!!” அசோக் கெஞ்சினான்.

“அப்புறம் ஏன் திருவிழா அன்னைக்கு அப்படி சொன்ன..?”

“எ..என்ன சொன்னேன்..?” அசோக் மிரட்சியாகவே கேட்டான்.

“திவாகர் சூசயிட் பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருந்தப்போ.. பட்டுன்னு காலை கட் பண்ணிட்டு என்னையும் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணினியே.. அது ஏன்..? ‘திவாகர் செத்து போயிடட்டும்.. நம்ம ரூட்டு கிளியர் ஆகும்..’னு ஒரு கேவலமான புத்திதான..?? ச்சை..!!!! உன் காதல் சக்சஸ் ஆகுறதுக்காக ஒரு உசுரை கொல்ல கூட தயங்காத பெர்வர்ட் நீ..!! அப்படி என்ன வெறி உனக்கு..??? அப்படி என்ன என் மேல வெறி உனக்கு..???”

திவ்யா ரவுத்திரமாக அலற, அசோக் அப்படியே மிரண்டு போனான். பேச்சிழந்தான். சிறு வயதில் இருந்தே அன்பில் நனைந்த வார்த்தைகளையே திவ்யாவிடம் இருந்து கேட்டறிந்த அசோக், இப்படி அவள் அமிலத்தில் தோய்ந்த வார்த்தைகளை அள்ளி வீச.. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய வேதனையில் வெந்து துடித்தான். அவனையும் அறியாமல் அவனது கண்கள் பொலபொலவென நீரை வடிக்க ஆரம்பித்தன.

“தி..திவ்யா.. நீயா இப்படி இல்லாம் பேசுற..? நா..நான் உன் அசோக் திவ்யா..!!” என்று பரிதாபமாக சொன்னான்.

“இல்ல.. நீ என் அசோக் இல்லை..!! என் அசோக் ரொம்ப நல்லவன்.. ரொம்ப ரொம்ப நல்லவன்.. என் பெஸ்ட் ஃபிரண்ட்..!! அவன் கொஞ்ச நேரம் முன்னாடி செத்து போயிட்டான்..!! நீ என் எதிரி.. உலகத்துலேயே நான் ரொம்ப ரொம்ப வெறுக்குற நம்பர் ஒன் எதிரி..!! ச்சை.. உன்கூட பேசுறதே பெரிய பாவம்..!! இனிமே பேச மாட்டேன்.. பேசவே மாட்டேன்..!! உன் மூஞ்சிலையே முழிக்க மாட்டேன்..!!”

“ஓ..!!! பே..பேச மாட்டியா.. என்கூட பேசகூட மாட்டியா திவ்யா..?”

“ஏன்.. என்னால உன்கூட பேசாம இருக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..?? என்னைப் பத்தி உனக்கு இன்னும் சரியா புரியலை..!! என்னை மாதிரி யாரையும் விரும்ப முடியாது.. அதே மாதிரி.. என்னை மாதிரி யாரையும் வெறுக்கவும் முடியாது..!! பதினஞ்சு வருஷமாச்சு.. உன் அக்காவோட பேசி..!! அவளாவது என் உடம்புல சூடு போட்டா.. நீ மனசை குத்தி கிழிச்சு தீயில தூக்கி போட்டுட்ட அசோக்..!!”

வெறுப்பாக சொன்ன திவ்யா மீண்டும் அந்த ட்ராயரில் பரபரவென்று எதையோ தேடினாள். அசோக் திக்கித்துப்போய் நின்றிருக்க, திவ்யா தேடியது சில வினாடிகளிலேயே அவளது கையில் சிக்கியது..!! அது.. மூன்று நாட்களுக்கு முன்பாக அவள் கழட்டி தூக்கி எறிந்த சிம் கார்ட்..!! உடனடியாய் அதை தனது செல்போன் கழட்டி செருகிக் கொண்டாள்..!! அணைந்திருந்த செல்போனை உயிர்ப்பித்துக்கொண்டே, அசோக்கிடம் திரும்பி ஆத்திரமாக சொன்னாள்..!!

“நான் என் காதலனோட பேசப் போறேன்.. கதவை மூடிட்டு நீ கொஞ்சம் வெளில போறியா..?? எனக்கு ப்ரைவசி வேணும்..!!”

அவ்வளவுதான்..!!! இதயத்தில் இடி விழுந்தாற்போல ஒரு நிலையை அசோக் அடைந்தான்..!!!! எந்திரம் மாதிரி திரும்பி அந்த அறையை விட்டு வெளியேறினான்..!! உயிரற்ற ஜடம் ஒன்று எழுந்து நடமாடுவது போல.. வீட்டு வாசலை நோக்கி நடந்தான்..!! எதிரே வந்த சித்ரா.. ‘தம்பி.. என்னாச்சுடா.. என்னாச்சு.. ஏன்டா ஒரு மாதிரி பாக்குற..?’ என்று கேட்டது அவன் காதில் விழவே இல்லை..!!

நிச்சயமாக இந்த அப்டேட் ஒரு வித்தியாசமான அப்டேட்டாக இருக்கும் நண்பர்களே..!! கதை சொல்லும் விதத்தில் ஒரு சிறிய புதுமையை முயற்சி செய்து பாத்திருக்கிறேன்..!! எல்லாம் எதற்காக..?? வாசிக்கும் உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுப்பதற்காகத்தான்..!! படித்து முடித்த பிறகு.. வாசித்த அனைத்தையும் ஒருமுறை ஒன்றுகூட்டி யோசித்துப் பாருங்கள்.. ஆரம்பத்தில் புரியாத சில விஷயங்கள்.. இப்போது புரிவது போல இருக்கும்..!! சரியா..?? வாருங்கள்..!!

அத்தியாயம் 26

நம்பிக்கை பற்றியும் , நம்பிக்கை துரோகம் பற்றியும் முன்பே சொன்னேன் அல்லவா..? அதை சற்று ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்..!! இப்போது அதை சார்ந்த வேறொரு உண்மையை எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன்..!!

மனித மனதில் நம்பிக்கையை விதைப்பது மிகவும் கடினம்..!! பொறாமையும், பழியுணர்வும், சுயநலமும், சூழ்ச்சியும் கொண்ட இந்த உலகத்தில்.. மனித மனதில் ஒருவர் மீதான நம்பிக்கையை விதைப்பது மிக மிக கடினம்..!!

சிறுவயதிலேயே திவ்யாவின் மனதில் அசோக் விதைத்த நம்பிக்கை விதை, வேரூன்றி வளர்ந்து ஒரு ஆலமரம் கணக்காக பிரம்மாண்டமாய் நின்றிருந்தது..!! ஆத்திரத்திலும், அவசரத்திலும், திவாகர் மீது இருந்த எரிச்சலிலும் அசோக் செய்த காரியம்.. ஒரே நொடியில் அந்த ஆலமரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது..!! நம்பிக்கையை உருவாக்குவது கடினமான காரியம் என்றால், உருவாக்கிய நம்பிக்கை உருக்குலைந்து போவது மிக மிக கொடுமையான விஷயம்..!! தனக்கு பிடித்த ஒருவருக்கு தன் மீதான நம்பிக்கை செத்து போய் விட்டது என்பதை அறிவது யாருக்குமே மிகுந்த வலியை தரக்கூடியது..!! அசோக்கிற்கு அதுதான் நிகழ்ந்திருக்கிறது..!!

அசோக் மிக மிக மோசமான மனநிலையில் இருந்தான். விரக்தியின் உச்சம் என்ன என்பதை முழுவதுமாய் உணர்ந்தான். எப்படி என்று உதாரணம் சொல்ல வேண்டுமானால்.. ‘சாலையில் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில், எதிரே வரும் லாரி தன்னை அடித்து தூக்கினால் கூட நன்றாக இருக்குமே’ என்றெல்லாம் அவனுடைய காயம்பட்ட மூளை, அறிவில்லாமல் சிந்தித்தது..!!

திவ்யாவுடைய இதய சிம்மாசனத்தில், ஒரு சக்கரவர்த்தி போல அவன் வீற்றிருந்தது அவனுக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்போது அவளுடைய கால் செருப்பில் படிந்திருக்கும் ஒரு தூசைப் போலவே தன்னை உணர்ந்தான். அந்த அளவுக்கு திவ்யாவின் வார்த்தைகள் அவனை சுய இரக்கம் கொள்ள செய்தன.

திவ்யாவின் சுடு சொற்கள் அவனுடைய இதயத்தை கீறி ரணமாக்கியது என்றால், இனிமேல் அவள் தன்னிடம் பேசப்போவதே இல்லை என்ற நினைவு அந்த காயத்தில் எப்போதும் வெந்நீர் தெளித்து வேதனையை இன்னும் அதிகமாக்கியது. அதுவுமில்லாமல் அடுத்தநாள் காலையில் அவன் அக்கா வீட்டிற்கு சென்றபோது, எதிர்ப்பட்ட திவ்யா அவனை ஒரு அற்பப்புழு மாதிரி பார்த்த பார்வை.. இதயத்தில் இரத்தத்தையும், கண்களில் கண்ணீரையும் கசிய செய்தது..!!

சாப்பிடுவதற்காக அக்கா வீட்டிற்கு செல்வதை முடிந்த அளவு தவிர்த்தான். எப்போதாவது செல்ல நேர்ந்தாலும், திவ்யா அங்கு இருக்க மாட்டாள் என்று தெரிய வந்தால் மட்டுமே சென்றான். எப்போதும் அன்பாகவே பார்க்கும் திவ்யாவின் கண்கள், இப்போது அருவருப்பான பார்வையை வீசுவதை அசோக்கால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. செல்வாவுடன் சேர்ந்துகொண்டு, புவனா மெஸ்ஸிலேயே பாதி நேரம் சாப்பிடுவான். மீதி நேரம் பட்டினிதான்..!! நொந்து போயிருந்த அசோக்கிற்கு செல்வாதான் மிகவும் ஆறுதலாக இருந்தார்.

திவ்யாவோ வேறு மாதிரி மனநிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் மீது வெறுப்பில் இருந்தாள். அவன்தான் நாடகமாடி, திவாகரை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டான் என்றே நம்பினாள். ‘அசோக்கை எவ்வளவு நம்பினோம்.. அவன் இப்படி செய்துவிட்டானே..’ என்ற வெறுப்புதான் அவளுடைய நெஞ்சில் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. அசோக்கை நம்பி திவாகரை நிறைய காயப்படுத்திவிட்டோமே என்று மனம் வருந்தினாள்.

திவாகருக்கு திவ்யா திரும்ப கால் செய்தபோது, அவன் வேண்டும் என்றே ரொம்பவும் பிகு செய்தான். ‘உன்னால் நான் எப்படி துடித்து போனேன் தெரியுமா..? வாழ்க்கையையே வெறுத்து விட்டேன்..!! இனி எனக்கு எதுவும் வேண்டாம்.. நான் இப்படியே இருந்து கொள்கிறேன்..!!’ என்றெல்லாம் சொல்லி, திவ்யாவின் குற்ற உணர்ச்சியை கொழுந்து விட்டு எரிய வைத்தான். திவ்யா அழுது புலம்பி, திவாகரின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடினாள். அதன் பிறகே அவளிடம் இயல்பாக பேச ஆரம்பித்தான்.

சித்ராவுக்கு அன்று அறைக்குள் நடந்த விஷயம் முழுவதுமாக தெரியாவிட்டாலும், என்ன நடந்திருக்கும் என்று எளிதாக யூகிக்க முடிந்தது. தம்பி மனம் காயப்பட்டிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள். அவனிடம் கேள்வி கேட்டு அந்த காயத்தை கிளற வேண்டாம் என்று நினைத்தாள். அவன் வீட்டிற்கு வருவதை தவிர்க்கவும், விட்டுப் பிடிக்கலாம் என்ற எண்ணத்துடன், பொறுமையாக இருந்தாள்.

கார்த்திக்கின் பாடுதான் ரொம்ப கஷ்டம்..!! வீட்டில் ஏதோ விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன என்று அவனால் உணர முடிந்தது. ஆனால் அது என்ன என்று சுத்தமாக அவனுக்கு விளங்கவில்லை. திவ்யாவும், அசோக்கும் திடீரென எலியும் பூனையுமாய் மாறிப்போனது ஏனென்று அவனுக்கு புரியவில்லை. அசோக்கிடமோ, தங்கையிடமோ அதுபற்றி கேட்டால்.. அவர்கள் கடித்து குதறி விடுவார்கள் என்று பயம்..!! மனைவியிடம் கேட்டால், அவளோ ‘உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்..?’ என்று யாரோ மூன்றாம் மனுஷனிடம் சொல்வது போல முகத்திலறைந்த மாதிரி சொன்னாள்.

அப்புறம் ஒரு பத்து நாட்களுக்கு மேற்சொன்ன நிலைதான்..!! அந்த பத்து நாட்களில் திவ்யாவிடம் பேசாமல் அசோக்கிற்கு பைத்தியம் பிடித்தாற்போல இருந்தது. திவ்யா தன்னை காதலிக்க வேண்டாம்.. தன்னை புரிந்துகொண்டு தன்னுடன் வந்து பேசிவிட மாட்டாளா என்றே ஏங்கினான்..!!

அவர்களது பிரிவு அசோக் அளவிற்கு திவ்யாவை பாதிக்கவில்லை என்றாலும், அவளும் அசோக்கின் இன்மையை உணராமல் இல்லை. அவள் பார்க்கும் பொருட்கள் எல்லாம், செல்லும் இடங்கள் எல்லாம் அவளுக்கு அசோக்கை நினைவு படுத்த தவறவில்லை. முதல் நாள் அசோக் எதிர்ப்பட்டபோது அவனை அருவருப்பாய் பார்த்து விரட்டினாள் எனினும், அடுத்த நாள் அதே நேரம் காலிங் பெல் சத்தம் கேட்டபோது, அசோக்காக இருக்குமோ என்று தன் அறையில் இருந்து எட்டிப் பார்த்து ஏமாந்தாள். ‘ஏன்டா அசோக் இப்படி பண்ணின.. ஏன்..? போடா..!!’ என்று மனதுக்குள்ளேயே அசோக்கை அடிக்கடி திட்டிக்கொண்டாள்.

அசோக்கும் திவ்யாவும் பிரிந்த பதினோராம் நாள்.. மாலை ஐந்து மணி..!!

திவாகர் அந்த அகலமான, ஆள்நடமாட்டமற்ற சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான். திவ்யாவுடைய கல்லூரி அவனுக்கு இடப்புறமாக கடந்து சென்றது. கல்லூரியை தாண்டியதும், காரின் வேகத்தை சற்றே குறைத்துக்கொண்டான். மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டே, சாலையின் இடப்புறமாக பார்வையை வீசிக்கொண்டே சென்றான். ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் அவ்வாறு கடந்ததும், தூரத்தில் ஒரு மரநிழலில் நின்றுகொண்டிருந்த திவ்யா கண்ணுக்கு அகப்பட்டாள்.

அவள் முன்பாக ஒரு மாருதி ஆல்ட்டோ நின்று கொண்டிருந்தது. இவன் அந்த காரை நெருங்க நெருங்கவே அந்த கார் கிளம்பி வேகமெடுத்து பறந்தது. திவ்யா முதலில் திவாகரின் காரை கவனிக்கவில்லை. கிளம்பிய காரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் எதேச்சையாக திரும்பி திவாகரின் காரை பார்த்தவள், அவசரமாய் தன் விழிகளை துடைத்துக் கொண்டாள். அவளுடைய உதட்டில் உடனடியாய் ஒரு செயற்கை புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. கதவு திறந்து காருக்குள் ஏறிக் கொண்டாள்.

“யார் அது திவ்யா..?” திவாகர் ஆர்வமாய் கேட்டான்.

“எது..??”

“அந்த கார்ல..?”

“ஓ.. அதுவா..? அ..அவ.. என் க்ளாஸ்மேட்..!!”

“என்னவாம்..?”

“ஏண்டி இங்க தனியா நிக்குறேன்னு கேட்டா.. பிரண்டுக்காக வெயிட் பண்றேன்னு சொன்னேன்.. போயிட்டா.. அவ்ளோதான்..!!”

“ஓ.. ஓகே ஓகே..!! ம்ம்ம்.. கெளம்பலாமா..?”

“ம்ம்..”

திவாகர் கியர் மாற்றி காரை கிளப்பினான். கழட்டியிருந்த குளிர் கண்ணாடியை மீண்டும் கண்ணுக்கு கொடுத்துவிட்டு, ஸ்டியரிங்கை வளைத்தான். அடுத்த பத்தாவது நிமிடம் அந்த பெரிய ஷாப்பிங் மால் முன்பாக கார் நின்றது. அது ஐந்து அடுக்குகள் கொண்ட, அரைவட்ட வடிவில் கட்டப்பட்ட ஷாப்பிங் மால்..!! சென்னையில் மிகவும் பிசியான அந்த சாலையில், ஆடம்பரமாய் முளைத்திருந்தது.

அந்த ஷாப்பிங் மாலின் கீழ்த்தளத்தில், கட்டிடத்துக்கு மையமாக ஒரு ஃபவுன்டைன்.. மேல் நோக்கி சரம் சரமாய் நீர் துப்பிக் கொண்டிருந்தது..!! அதை சுற்றி வெண்ணிற டேபிள்களும், டேபிளுக்கு நான்கு சிவப்பு நிற நாற்காலிகளுமாய் போடப்பட்டு.. அந்த திறந்த வெளி உணவகம்..!! வடக்கிந்திய சாட் உணவகம்..!! அங்குதான் திவ்யாவும் திவாகரும் சென்றார்கள்..!! ஃபவுன்டைன் அருகிலேயே ஒரு டேபிள் பிடித்து அமர்ந்து கொண்டார்கள். இருவரும் அமைதியாக மெனு கார்ட் புரட்டினார்கள்.

“டூ ப்ரெட் ரோல்.. ஒன் ஆலு டிக்கி.. டூ நிம்பு பானி..!!”

திவாகர் பேரரிடம் ஆர்டர் செய்ய, அவ்வளவு நேரம் மெனுகார்ட் புரட்டிய திவ்யா ஏமாற்றமாய் அவனுடைய முகத்தை ஏறிட்டாள். ‘என்ன சாப்பிடுகிறாய்..?’ என்று தனது விருப்பத்தை அவன் கேட்கவில்லையே என்ற ஏமாற்றம் அது..!! அசோக்கும் அவளும் தனியாக ரெஸ்டாரன்ட் சென்ற நினைவுகள், இப்போது ஏனோ பட்டென்று அவள் உள்ளத்தில் வந்து அலை அலையாய் மோதின..!!

“ப்ச்.. சைட் அடிக்கிறதுக்குத்தான் ரெஸ்டாரன்ட் வர்றியா நீ..? ஜொள்ளு வுட்டது போதும்.. இந்தப்பக்கம் திரும்பு..!!” திவ்யா அசோக்கின் தலையில் குட்டுவாள்.

“ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ… விட மாட்டியே நீ.. வில்லி..!!” அசோக் உச்சந்தலையை தேய்த்து விட்டுக் கொள்வான்.

“நான் ரோட்டியும், பன்னீர் பட்டர் மசாலாவும் ஆர்டர் பண்ணப் போறேன்டா.. உனக்கு என்ன வேணும்..??”

“ஆமாம்.. நான் என்ன ஆர்டர் பண்ணினாலும், கடைசில நீதான் அதையும் சேர்த்து நல்லா மொக்கப் போற.. ஏதோ ஒன்னு நீயே ஆர்டர் பண்ணித்தொலை..!!” என்று சலிப்பாக சொல்பவன், அடுத்த நொடியே

“ஹேய் திவ்யா.. அந்த பச்சை சல்வாரை பாரேன்..” என்று உற்சாகமாவான்.

‘என்னை காதலிக்கிறான் என்று நான் கொஞ்சம் கூட உணர முடியாதவாறு.. எப்படி எல்லாம் நடித்து ஏமாற்றிவிட்டான்..??’ திவ்யா பழைய நினைவு கலைந்து மீண்டாள். இப்போது திவாகர் திவ்யாவிடம் திரும்பினான். திவாகருக்கு திவ்யாவுடைய ஏமாற்றப் பார்வையின் அர்த்தம் புரியவில்லை. கேஷுவலாக கேட்டான்.

“ப்ரெட் ரோல் உனக்கு பிடிக்கும்ல திவ்யா..?”

“ம்ம்.. பி..பிடிக்கும்..” திவ்யா பொய் சொன்னாள்.

“ப்ரெட் ரோல்தான் இந்த ரெஸ்டாரன்ட்ல என்னோட ஃபேவரிட் தெரியுமா..?

“ஓ.!!”

“சாப்பிட்டிருக்கியா நீ..?”

“ம்ம்.. சாப்பிட்டிருக்கேன்..!!”

“ஹாஹா.. வேற எங்கயாவாது சாப்பிட்டிருப்ப..? இங்க சாப்பிட்டு பாரு.. அப்படியே அசந்து போயிடுவ..!!” என்று பெருமையாக சொன்னான்.

“இ..இல்ல.. இங்கதான் சாப்பிட்டிருக்கேன்..”

“இங்கயா..? அப்போ.. ஏற்கனவே இந்த ரெஸ்டாரன்ட்க்கு வந்திருக்கியா நீ..??”

“ம்ம்.. நானும் அசோக்கும் இங்க அடிக்கடி வருவோம்..!!”

அவ்வளவுதான்..!! திவாகர் பட்டென டென்ஷன் ஆனான். அவனுடைய புன்னகை முகம் உடனடியாய் ‘உர்ர்ர்..’ என்று இறுக்கமாகிப்போனது. திவ்யாவையே சில வினாடிகள் முறைத்து பார்த்தவன், அப்புறம்

“டேமிட்..!!” என்று கத்தியவாறு டேபிளை ஓங்கி குத்தினான்.

“எ..என்னாச்சு..?” என்றாள் திவ்யா பதற்றமாக.

“கொஞ்ச நேரம் கூட அவனைப் பத்தி பேசாம இருக்க முடியாதா உன்னால..?”

“ஸா..ஸாரி..” திவ்யா மெல்லிய குரலில் சொன்னாள்.

“ப்ச்.. பண்றதையும் பண்ணிட்டு என்ன ஸாரி..??”

“ஏ..ஏதோ வாய்தவறி..”

“வாய் தவறியா..?? பொய் சொல்லாத திவ்யா..!! கொஞ்ச நேரம் முன்னாடி கார்ல வரப்போ.. ‘டி நகர் போக பத்து நிமிஷம் ஆகும்’னு சொன்னா.. ‘இல்லை.. அசோக் கூட பைக்ல போயிருக்கேன்.. அஞ்சு நிமிஷம்தான் ஆகும்’னு சொல்ற..!! ட்ராபிக்ல நிக்கிறப்போ.. ‘நம்ம நாட்டோட பிரச்னைக்கு இந்த பாப்புலேஷன்தான் காரணம்’னு சொன்னா.. ‘ம்ம்.. அசோக் கூட அப்படித்தான் அடிக்கடி சொல்லுவான்’னு சொல்ற..!! அவன் பேரை சொல்லாம.. ஒரு அஞ்சு நிமிஷம்.. உன்னால என்கிட்டே பேச முடியாதா..?? என்ன நெனச்சுக்கிட்டு இருக்குற நீ..??”

“ப்ளீஸ்.. விட்ருங்க..” அவளுடைய குரல் இப்போது கெஞ்சலாக ஒலித்தது.

“அவனை உன்னால மறக்க முடியலைல..? எந்த நேரமும் அவன் நெனைப்பாவே இருக்கேல..?”

“ச்சே.. அ..அப்டிலாம் இல்லை.. நாங்க சின்ன வயசுல இருந்தே ஒண்ணா இருந்துட்டோம்.. இ..இப்போ திடீர்னு பேசாம இருக்குறது ஒரு மாதிரி இருக்கு.. வேற ஒன்னும் இல்ல..!! சீக்கிரமே அவனை சுத்தமா மறந்துடுவேன்..!!”

“இங்க பாரு திவ்யா.. அவன் உனக்கும், நம்ம காதலுக்கும் பெரிய துரோகம் செஞ்சவன்..!!”

“ம்ம்.. ஞாபகம் இருக்கு..!!”

“நீ அவனைப் பத்தி பேசுறது சுத்தமா எனக்கு புடிக்கலை..!!”

“சரி.. இ..இனி பேசலை.. மன்னிச்சுடுங்க..!!”

“டேமிட்..!! அவன் ஒரு வக்கிரமான புத்தி உள்ளவன்.. அவனைப்போய் இன்னும் நீ நெனைச்சுக்கிட்டு..” திவாகர் கோபமாக சொல்ல, திவ்யா இப்போது நெற்றி சுருக்கினாள்.

“என்ன பேசுறீங்க நீங்க..? அவனுக்கு என்ன வக்கிரமான புத்தி..?”

“நான் தற்கொலை பண்ணிக்க போனப்போ.. நான் சாகட்டும்னு நெனச்சவந்தான அவன் ..? உன் மேல அவனுக்கு இருந்த வெறில.. ஒரு உயிர் போனாக்கூட பரவாலைன்னு நெனச்சவந்தான..?”

“சேச்சே.. அப்படிலாம் அவனை நெனைக்காதீங்க.. ப்ளீஸ்..”

“நான் எங்க நெனைச்சேன்.. நீதான அன்னைக்கு அவனை அப்படி திட்டினதா சொன்ன..?”

“அ..அது.. அது அன்னைக்கு ஏதோ அவன் மேல எனக்கு இருந்த கோவத்துல.. ஒரு அவசரத்துல அப்படி எல்லாம் சொல்லிட்டேன்..!! ஆனா.. என் மனசார நான் அவனை அப்படி நெனைக்கலை..!! அன்னைக்கு நீங்க அவன்கிட்ட ஃபோன்ல பேசுனதை வச்சு.. நீங்க நடிக்கிறீங்கன்னு தப்பா நெனைச்சுட்டான்.. அதான் ஃபோனை கட் பண்ணிட்டான்.. மத்தபடி உங்க உயிர் போகனும்னுலாம் அவன் சத்தியமா நெனைச்சிருக்க மாட்டான்.. அப்படி எல்லாம் அவன் வக்கிர புத்தி புடிச்சவன் இல்ல..!!” Pundai Nakki Edukkum Tamil Sex Story

“ஓஹோ..??”

– தொடரும்

நெஞ்சோடு கலந்திடு – 25

Leave a Comment