மலரே என்னிடம் மயங்காதே – 7 (Tamil New Sex Stories - Malarae Ennidam Mayangathae 7)

Tamil New Sex Stories – அவள் சொல்லிவிட்டு கேசுவலாக மீண்டும் பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தாள். நான் எரிச்சலானேன்.

“புத்தியே இல்லையா உனக்கு..?”

“ஆமாமாம்.. இருந்தா ஏன் உங்களை லவ் பண்ண போறேன்.?” அவள் வாய்க்குள் முணுமுணுத்ததை என்னால் யூகிக்க முடிந்தது.

“என்னது..????”

1

நான் முகத்தை சுருக்கியவாறு கேட்க, அவள் பாத்திரத்தை படார் என்று வாஷ் பேசினுக்குள் போட்டுவிட்டு, பட்டென என் பக்கம் திரும்பினாள். எரிச்சலாக கேட்டாள்.

“ப்ச்.. இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்..?”

“என் மேல அப்படி என்ன உனக்கு லவ்வுன்னு தெரியனும்..”

“அதான் நேத்தே சொன்னனே.. புரியலையா உங்களுக்கு..?”

“எ..என்ன..?”

மலர் இப்போது அமைதியானாள். வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டாள். சில வினாடிகள் எங்கேயோ வெறித்து பார்த்துவிட்டு, பின்பு மீண்டும் என் முகத்தை பார்த்தாள். இப்போது அவளுடைய அந்த காந்தப் பார்வை..!! என் கண்களில் புகுந்து, இதயத்தை வருட முயலும் காதல் பார்வை..!! அவள் குரலில் இருந்த எரிச்சல் சுத்தமாய் காணாமல் போய், மிகவும் கனிவுடன் பேசினாள்.

“இங்க பாருங்கத்தான்.. அக்கா மாதிரி ஒரு அதிர்ஷ்டக்காரி இருக்க முடியாது.. அதேபோல அவளை மாதிரி ஒரு துரதிர்ஷ்டக்காரியையும் பார்க்க முடியாது..!! நீங்க புருஷனா கெடைச்சது அவளோட அதிர்ஷ்டம்.. ஆனா ரொம்ப நாள் அந்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியாம போனது.. அவளோட துரதிர்ஷ்டம்..!!”

“கயல் கிடைச்சதுக்கு நான்தான் மலர் கொடுத்து வச்சிருக்கணும்..”

“ஹ்ஹா.. பொண்டாட்டி இருக்குறப்போவே அவளுக்கு துரோகம் பண்ண சான்ஸ் தேடுற ஆம்பளைங்களுக்கு மத்தில.. அக்கா போனப்புறமும் அவ நெனைப்பிலேயே வாழ்றீங்க..!! நீங்க கெடைச்சதுக்கு அக்காதான்-த்தான் கொடுத்து வச்சிருக்கணும்..!! அவளோட கெட்ட நேரம்.. கொஞ்ச நாள்லயே உங்களை விட்டு போயிட்டா..!!”

“……..”

“அக்கா விட்ட எடத்துல இருந்து நான் ஆரம்பிக்கணும்னு.. ஆசைப்படுறேன்..!! அவகிட்ட இருந்து நழுவுன அந்த அதிர்ஷ்டம்.. என் கைல விழாதான்னு ஏங்குறேன்..!! ப்ளீஸ்த்தான்.. என்னை புரிஞ்சுக்குங்க.. என் காதலை ஏத்துக்கங்க.. உங்க காயத்துக்கு நான் மருந்தா இருப்பேன்..!! ப்ளீஸ்..!!”

அவள் கண்கள் கலங்க உருக்கமாக சொன்னாள். அதை கேட்டு நான் இளகிக்கொண்டு இருக்கும்போதேதான், கொஞ்சம் கூட என் மனதை படிக்காதவளாய் அந்த வார்த்தைகளை சொன்னாள். அவ்வளவு நேரம் அவளுக்காக உருகிக் கொண்டிருந்தவனை, உடனடியாய் உக்கிரமாய் மாற்றிய வார்த்தைகள்..!! மேலே அவள் சொன்னதை தொடர்ந்து அதே ஃப்ளோவில் சொன்ன வார்த்தைகள்..!!

“அக்கா இடத்துல நான் இருக்குறேன்.. அவளை விட நான் உங்களை நல்லா பாத்துப்பேன்…!!”

அவ்வளவுதான்.. எங்கிருந்துதான் எனக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்ததோ..!! பெரிய குரலில் கத்தினேன்..!!

“வாயை மூடு..!! கயலை மறக்கடிக்கிற எந்த காரியத்தையும் நான் பண்ணுறதா இல்ல..!! அவளோட இடம்.. இன்னொரு பொண்ணுக்கு கெடைக்கவே கெடைக்காது..!! அதை மொதல்ல புரிஞ்சுக்கோ.. நீ நெனைக்கிறதுலாம் நடக்காது மலர்..!!”

இப்போது அவளும் எரிச்சலானாள். அவ்வளவு தூரம் அவள் உருகியும், நான் உஷ்ணமான வார்த்தைகளை கொட்ட, அவளும் இப்போது கோபமாய் சீறினாள்.

“அப்போ.. நீங்க நெனைக்கிறதும் நடக்காது..!!” சொல்லிவிட்டு வாஷ்பேசினில் கிடந்த பாத்திரத்தை எடுத்து பரபரவென தேய்க்க ஆரம்பித்தாள்.

“நான் என்ன நெனைக்கிறேன்..?”

“என் மனசு மாறிடும்னு நெனைக்கிறிங்கல்ல..?”

“நீ மாத்திக்கோ மாத்தாம போ.. அதைப்பத்தி எனக்கு கவலை இல்ல..”

“அப்புறம்..??”

“இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க..”

“அதுக்கு..??”

“அவங்க வந்துட்டு போகுறவரை கொஞ்சம் ஒழுங்கா நடந்துக்கோ..”

“என்னால முடியாது..!! அவங்களை வரவேணாம்னு சொல்லிடுங்க..!!”

“கடைசி நேரத்துல எப்படி வரக்கூடாதுன்னு சொல்றது..?”

2

“ஆரம்பத்துல வர சொல்றப்போ எங்கிட்ட கேட்டுட்டா வர சொன்னீங்க..? இதை மட்டும் வந்து கேக்குறீங்க..? ஒருவாரமா அவர்ட்ட சொல்லிட்டு இருக்குறேன்.. வேணாம் வேணாம்னு..!! இப்போ என்னை வந்து குறை சொன்னா..??”

“எப்போ உனக்கு இவ்வளவு திமிர்த்தனம் வந்துச்சு மலர்..??”

“நான் பேசுறது திமிரா தெரியுதா உங்களுக்கு..? இங்க பாருங்கத்தான்.. மனசுல உங்களை வச்சுக்கிட்டு.. இன்னொருத்தனுக்கு காபியை நீட்டி.. காட்சிப்பொருள் மாதிரி அவன் முன்னால என்னால நிக்க முடியாது..!! நெனச்சுப்பாக்கவே அருவருப்பா இருக்கு எனக்கு..!!”

“ஏன்.. எதையுமே புரிஞ்சுக்காம பேசுற நீ..?”

“நான் என்ன புரிஞ்சுக்கலை..?”

“அந்தப்பையன் உன்னை பாக்குறதுக்காக.. லீவ்லாம் போட்டுட்டு.. ஹைதராபாத்ல இருந்து வர்றான்..”

“தேவலோகத்துல இருந்து குதிச்சே அவன் வரட்டுமே.. என்ன இப்போ..?”

“ப்ச்..!! ரொம்ப நல்ல பையன் மலர்.. எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. கை நிறைய சம்பாதிக்கிறான்..!!”

“கடவுளாவே இருக்கட்டும், கவலை இல்லைன்றேன்.. என்ன பேசுறீங்க நீங்க..?”

“இப்டி எதுத்து எதுத்து பேசிட்டு இருந்தா.. அப்டியே அறைஞ்சிடுவேன் மலர்..” சொன்னவாறு நான் கையை ஒங்க,

“அறைங்க.. ஆத்திரம் போற வரை நல்லா அறைஞ்சிட்டு போங்க..” அவள் கன்னத்தை திருப்பி, நான் அறைவதற்கு வாட்டமாய் காட்டினாள்.

“ச்சை..!! பைத்தியம்தான் புடிச்சிருக்கு உனக்கு..!!”

“ஆமாம்.. பைத்தியந்தான்..!!”

“முடிவா என்னதான் சொல்ற..?”

“என் முடிவை எப்போவோ சொல்லிட்டேன்..!!”

“எனக்கு அதுலாம் தெரியாது.. ஈவினிங் அவங்க வர்றப்போ.. நீ ரெடியா இருக்கணும்.. அவ்ளோதான்..!! இல்லனா.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!”

ஆத்திரமாய் சொல்லிவிட்டு நான் கிச்சனை விட்டு வெளியே வந்தேன். கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி நடந்தேன். “இருங்கத்தான்.. சாப்பிட்டு போங்க..” காதில் வந்து விழுந்த.. கவலை தோய்ந்த மலரின் வார்த்தைகளை.. கண்டுகொள்ளாமல்.. கதவை அறைந்து சாத்தி வெளியேறினேன்.

அன்று மதியம் மூன்று மணிக்கெல்லாம் நானும் பன்னீரும் ஆபீசில் இருந்து காரில் கிளம்பினோம். மலர் அடித்த கூத்துக்களை பற்றி, பன்னீரிடம் நான் மூச்சு விடவில்லை. பஸ் ஸ்டாண்ட் சென்று பெண் பார்க்க வந்தவர்களை பிக்கப் செய்து கொண்டோம். முகுந்த், வைபவ், அவர்களுடைய அம்மா, முகுந்தின் மூன்று வயது குட்டிப்பெண்.. என நான்கு பேராய் வந்திருந்தார்கள். எல்லோரும் கலகலப்பாய் ஏதோ பேசிக்கொண்டே வர.. எதிலும் கலந்து கொள்ள முடியாமல்.. எண்ணம் முழுவதும் கவலையும் குழப்பமுமாய் நான் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன்..!!

வீட்டை அடைந்த போது ஐந்து மணியை நெருங்கியிருந்தது. கதவை திறந்துவிட்ட மலர், என்னை ஒரு முறை முறைத்துவிட்டு, உள்ளறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள். வந்தவர்களை சோபாவில் அமர செய்து, அவர்களுக்கு இனிப்பு, காரம் எடுத்துக் கொடுக்குமாறு பன்னீரிடம் பார்வையாலேயே உணர்த்திவிட்டு, நான் மலர் இருந்த அறையை நோக்கி நடந்தேன்.

மலர் அபியுடன் கவலையே இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். அபியை சுற்றி கலர் கலராய், குட்டி குட்டியாய், பிளாஸ்டிக் பந்துகள் இறைந்து கிடந்தன. அதற்கு நடுவில் ஒரு பெரிய கண்ணாடி பவுல் இருந்தது. ‘இந்த பால்-டா கண்ணா.. இந்த பால்..’ என்று மலர் ஒவ்வொரு பந்தாக விரல் நீட்ட, அபி தன் பிஞ்சுக்கையால் அவள் சொன்ன பந்தை, சரியாக பொறுக்கி பவுலில் போட்டுக் கொண்டிருந்தான். நான் வந்தது நின்றதை இருவரும் கண்டு கொள்ளவே இல்லை. விளையாட்டை தொடர்ந்தார்கள். நான் கொஞ்ச நேரம் மலரையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் பொறுமையில்லாமல், குரலில் கடுகடுப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னேன்.

“என்ன பண்ணிட்டு இருக்குற நீ..?”

“என்ன பண்ணிட்டு இருக்குறானா.. பாத்தா தெரியலை..? என் பையனோட வெளையாண்டுக்கிட்டு இருக்குறேன்..!!” மலர் கிண்டலான குரலில் சொன்னாள்.

“ப்ச்.. வெளையாண்டது போதும்.. எந்திரிச்சு வா.. அவங்க வந்துட்டாங்க..!!”

“அவங்க வந்தா..? அதுக்கு நான் என்ன பண்ணுறது..?”

“முகத்தை கழுவிக்கோ.. லைட்டா பவுடர் போட்டுக்கோ.. ஏதாவது பட்டுப்புடவையை கட்டிக்கிட்டு.. வந்தவங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வா..”

“அது என்னால முடியாது..!! வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க..!!”

3

அவள் அலட்சியமாய் சொல்ல, எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. எக்கச்சக்கமாய் எரிச்சல் அவள் மீது..!! சத்தம் போட்டால் ஹாலில் இருப்பவர்களுக்கு கேட்டுவிடப் போகுது என்று.. குரலில் மட்டும் கோபத்தை குழைத்துக் கொண்டு.. கிசுகிசுப்பாகவும் கடுமையாகவும் சொன்னேன்..!!

“மலர்..!! நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல..!! என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்குற உன் மனசுல..??”

மலர் இப்போது நிமிர்ந்து என் முகத்தை பார்த்து முறைத்தாள். அவளுடைய பார்வையில் அப்படி ஒரு உஷ்ணம்..!! சீற்றமாக சொன்னாள்.

“ஓ..!! என் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்கேன்னு தெரியனுமா..?? ஓகே.. சொல்றேன்..!! வாங்க..!!”

என்றவள் அவசரமாய் எழுந்தாள். ஒரு கையில் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டாள். இன்னொரு கையால் எனது கையை இறுக்கமாக பற்றி, என்னை இழுத்து சென்றாள். ‘ஏய்.. மலர்.. என்ன பண்ற நீ..?’ என்று நான் பதறிக் கொண்டு இருக்கும்போதே, என்னை கொண்டு போய் ஹாலில் நிறுத்தினாள். காபிக்காக ஹாலில் காத்திருந்தவர்கள் நிமிர்ந்து, கலவரமாக எங்கள் இருவரையும் பார்த்தார்கள். பன்னீர் எதுவும் புரியாமல் திகைப்பாய் எங்களை ஏறிட்டார். மலர் படபடவென உரத்த குரலில் அவர்களை பார்த்து பேச ஆரம்பித்தாள்.

“நீங்கதான் என்னை பொண்ணு பார்க்க வந்தவங்களா..?? எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. என்னை நீங்க பொண்ணு பாக்க வந்ததுல எனக்கு இஷ்டம் இல்ல..!! இதோ நிக்கிறாரே.. இவர் பேர் அசோக்.. என் அத்தான்.. இவரைத்தான் நான் விரும்புறேன்.. கட்டிக்கிட்டா இவரைத்தான் கட்டிக்கணும்னு முடிவோட இருக்குறேன்.. இவர்தான் என் புருஷன்னு மனசுக்குள்ள இவரோட குடும்பம் நடத்திட்டு இருக்குறேன்..!! கைல இருக்குறது இவருக்கும் என் அக்காவுக்கும் பொறந்த குழந்தை.. இப்போ என் குழந்தை ஆயிடுச்சு.. நான்தான் இவனுக்கு அம்மா..!! இந்த வீடு.. என் புகுந்த வீடு.. என் புருஷன் இருக்குற வீடு.. அப்டி நெனச்சுத்தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. இந்த வீட்டை விட்டு வேற எங்கேயும் வர்ற மாதிரி எனக்கு ஐடியா இல்ல..!! எல்லாரும் சிரமப்பட்டு இங்க வந்துருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.. உங்களோட சிரமத்துக்குலாம் நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்..!! என்னை மன்னிச்சிடுங்க..!!”

மலர் பேச பேச.. அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனார்கள். நடப்பதை எல்லாம் நம்ப முடியாமல் திகைப்பாய் பார்த்தார்கள். ஸோஃபாவில் இருந்து மெல்ல ஸ்லோ மோஷனில் எழுந்தார்கள். பன்னீர் உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார். மாப்பிள்ளை பையன் பாதி கடித்திருந்த பால்கோவாவை பட்டென தட்டில் போட்டான். பேசக் கூட நா எழாதவர்களாய், அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். எனக்கோ பன்னீருக்கோ அவர்களை தடுக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. முகுந்த் மட்டும் என்னை ஏறிட்டு..

“என்ன அசோக் இது.. இதுலாம் முன்னாடியே சொல்றது இல்லையா..?” என்று சலிப்பாய் சொல்லி, என்னை தலை குனிய வைத்தான்.

அவர்கள் அந்தப்பக்கம் சென்றதுதான் தாமதம்.. இந்தப்பக்கம் மலருடைய கன்னத்தில் ‘பொளேர்ர்..!!’ என்று ஒரு அறை விழுந்தது..!! எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாத பன்னீர்தான், இப்போது ரவுத்திரமாயிருந்தார். மகளை கை நீட்டி அறைந்திருந்தார். கன்னத்தில் அறை விழுந்த வேகத்தில் மலர் ஸோபாவில் சென்று பொத்தென்று விழுந்தாள். நடப்பதை உணர்ந்துகொண்டு நான் சுதாரிக்கும் முன்பே, பன்னீர் தன் புறங்கையை இன்னொரு முறை வீச.. மலருடைய இன்னொரு கன்னமும் ‘பளார்ர்ர்…’ என அறை வாங்கி சிவந்தது.

“ஐயோ.. என்ன பன்னீர் நீ..? அவதான் அறிவில்லாம நடந்துக்குறான்னா.. நீயும்..?” சொன்னவாறே நான் பன்னீரை வளைத்து பிடித்து தடுத்தேன்.

“விடு அசோக்கு.. ரொம்ப செல்லம் கொடுத்து.. கொடுத்து.. கொழுப்பு ஏறிப் போச்சு இவளுக்கு.. திமிர் புடிச்ச கழுதை..!!”

பன்னீரை தடுத்து நிறுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. அவரை சமாளித்து சமாதானப் படுத்துவதற்குள், நான் திணறிப் போனேன். ஆனால் கன்னத்தில் விழுந்த அறைக்காக, மலர் கொஞ்சம் கூட கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை. நினைத்ததை சாதித்துவிட்ட திருப்திதான் அவளுடைய முகமெங்கும் நிறைந்து கிடந்தது. எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து மட்டும், கண்ணீர் பொலபொலவென வடிந்து கொண்டிருந்தது. அவளோடு சேர்ந்து இப்போது அபியும் அழ ஆரம்பிக்க, மலர் அவனை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளுடைய கண்கள் இப்போது அதிகப்படியான நீரை கொட்ட ஆரம்பித்தன.

அடுத்த நாள் மதியம், என்னை சாப்பாட்டுக்கு அழைக்க பன்னீர் வரவில்லை. 12.45 வரை காத்திருந்துவிட்டு, நான் என் கேபின் விட்டு வெளியே வந்தேன். ஃப்ளோரில் பன்னீரை காணவில்லை. குழப்பத்துடனே நடந்து கேண்டீன் சென்றேன். அங்கேயும் அவரை காணவில்லை. எதிரே வந்த ஒரு தொழிலாளியிடம்,

“பன்னீரை பாத்தியா..?” என்று கேட்க, அவன்

“கேண்டீன் பின்னால நிக்கிறாரு ஸார்..” என்றுவிட்டு போனான்.

நான் கேண்டீன் பின்பக்க கதவை நோக்கி நடந்தேன். கதவு திறந்து வெளியே சென்றேன். புளிய மரத்துக்கு கீழே புகை விட்டவாறு நின்ற பன்னீர், பார்வைக்கு கிடைத்தார். நான் மெல்ல நடந்து அவரை நெருங்கினேன். நேற்று சம்பவத்திற்கு பிறகு இப்போதுதான் அவரிடம் பேசுகிறேன்.

“சாப்பிடலையா..?” என்றேன்.

“பசிக்கல..” என்றார் வெறுமையான குரலில்.

“ஒரு தம் கொடு..”

“நீ சாப்பிடலையா..?”

“எனக்கும் பசிக்கலை..”

பன்னீர் இப்போது நிமிர்ந்து என்னை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தார். பின்பு மேல் சட்டையிலிருந்து அந்த கோல்ட் பில்டர் பாக்கெட்டை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் ஒரு சிகரெட்டை மட்டும் உருவிக் கொண்டேன். உதட்டில் பொருத்திக் கொண்டேன். அவர் கையிலிருந்த சிகரெட்டை வாங்கி, எனது உதட்டில் இருந்த சிகரெட்டின் தலையில் நெருப்பு வைத்தேன். இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக புகை விட்டுக் கொண்டிருந்தோம். பின்பு பன்னீரே மெல்லிய குரலில் ஆரம்பித்தார்.

“எனக்கு இன்னும் ஒரு மாசம் டைம் கொடு அசோக்கு..”

“எதுக்கு..?” நான் புரியாமல் கேட்டேன்.

“நான் என் பொண்ணை கூட்டிக்கிட்டு.. என் வீட்டுக்கே போயிர்றேன்..!! இப்போவே சொன்னா.. வீட்டுல குடியிருக்குறவங்க.. ஒரு மாசத்துல காலி பண்ணிடுவாங்க..!!” அவர் சொன்னதை கேட்டு நான் திகைத்தேன்.

“எ..என்ன பேசுற நீ..? இப்டிலாம் பேசாத பன்னீர்.. அப்புறம் நான் கடுப்பாயிடுவேன்..!!”

“ச்சே.. நான் அதுக்காக சொல்லல அசோக்கு..”

“நீ எதுக்காகவும் சொல்ல வேணாம்.. எதுக்காகவும் என்னை விட்டு பிரியவும் வேணாம்..!! நீ எப்போவும் என் கூடத்தான் இருக்கணும்..!! புரியுதா..?”

“இவ்ளோ நடந்தப்புறம் நான் எப்படி உன்கூட இருக்க முடியும்..? இனிமேலும் நாங்க உன் வீட்டுல இருக்குறது நல்லது இல்ல அசோக்கு..”

“ஐயோ.. நீ என்னை விட்டு போறதால.. எந்த பிரச்னையும் சால்வ் ஆகப் போறது இல்ல பன்னீர்..!!”

“அப்புறம்..?? வேற என்ன பண்ணலாம்னு சொல்ற..??”

“அவ புத்தி இல்லாம இப்டிலாம் நடந்துக்குறா.. லவ்வு அது இதுன்னு பைத்தியம் மாதிரி உளர்றா..!! அவளை அடிச்சுலாம் திருத்த முடியாது.. அன்பா பேசித்தான் அவளை நம்ம வழிக்கு கொண்டு வரணும்..!! இதுலாம் தப்புன்னு நீ அவளுக்கு சொல்லி புரிய வை.. அவளை கண்டிச்சாலே எல்லாம் சரியா போயிடும்.. அவ மனசை நிச்சயமா நம்மால மாத்த முடியும்..!!” நான் சொல்லிக்கொண்டிருக்க, பன்னீர் இப்போது தன் நெற்றியை சுருக்கினார்.

“ஓ..!! நீ அப்டி நெனச்சுக்கிட்டு இருக்கியா..??” என்று அவர் சொன்னது எனக்கு புரியவில்லை. Sunni Sappum Tamil New Sex Stories

– தொடரும்

Leave a Comment