ஐ ஹேட் யூ பட் – 14 (Tamil New Sex Stories - I Hate You But 14)

Tamil New Sex Stories – கோவிந்த் சீரியசாக சொல்லிவிட்டு தட்டில் கிடந்த சிக்கனை எடுத்து கடிக்க ஆரம்பித்தான். ஹரி அவனையே கடுப்புடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை அப்படியே அப்ப வேண்டும் போல ஹரிக்கு ஒரு ஆத்திரம். அசோக்தான் ஹரியை அடக்கினான்.

முதலில் விஸ்கி வந்தது. மூவரும் எடுத்து சிப்ப ஆரம்பித்தார்கள். அப்புறம் ஆவி பறக்கிற காடை ஃப்ரையை இரண்டு பிளேட்டுகளில் கொண்டு வந்து வைத்த பேரரிடம், மேலும் இரண்டு நாட்டுக்கோழி வறுவல் ஆர்டர் செய்தான் கோவிந்த். பேரர் சென்றதும் அசோக் கோவிந்திடம் சற்றே சலிப்பாக சொன்னான்.

“ஹேய் கோவிந்த்.. தேவை இல்லாம நெறைய ஆர்டர் பண்றன்னு நெனைக்கிறேன்..!!”

“ப..பரவால பாஸ்.. எல்லாம் நல்லா சாப்பிடுங்க..!! ட்ரிங்க்சும் இன்னும் எவ்வளவு வேணுமோ வாங்கி குடிங்க..!! செலவை பத்தி கவலைப்படாதீங்க.. இன்னைக்கு என்னோட ட்ரீட்..!!”

“ட்ரீட்டா..?? சேச்சே.. அதுலாம் ஒன்னும் வேணாம்பா.. மூணு பேரும் ஷேர் பண்ணிக்கலாம்..!!” அசோக் அவசரமாய் சொன்னான்.

“நோ வே..!! இன்னைக்கு நா..நான்தான் பே பண்ணுவேன் பாஸ்..!! ஐம் வெரி வெரி ஹேப்பி டுடே… ஸோ.. ஐ வில் பே..!!”

“ஹாஹா..!! ஹேப்பியா..?? ஏன்..??”

அசோக் மெலிதான சிரிப்புடன்தான் அவ்வாறு கேட்டான். ஆனால் கோவிந்தோ பட்டென சீரியசாகிப் போனான். முகத்தை ஒருமாதிரி சோகமாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

“ஏனா..?? என்ன பாஸ் இப்படி கேட்டுட்டீங்க..?? நான் இந்த க..கம்பெனிக்கு வர்றதுக்கு முன்னாடி அஞ்சு வருஷம் இன்னொரு கம்பெனில வேலை பாத்திருக்கேன்.. இப்போ இங்க வந்தும் ஒரு வருஷம் ஆவப் போகுது..!! இத்தனை வருஷத்துல என்னை யாருமே கூ..கூப்பிட்டது இல்ல பாஸ்..!!”

“எதுக்கு..??”

“தண்ணியடிக்கிறதுக்கு..!!”

“ஓ..!!”

“ம்ம்..!! தண்ணியடிக்க மட்டும் இல்ல.. எதுக்குமே யாரும் என்னை கூப்பிட மாட்டாங்க..!! எப்போவுமே நான் தனியாதான் போவேன்.. தனியாதான் வருவேன்..!! யாருக்குமே என்னை புடிக்காது பாஸ்.. என்னை பிரண்டுன்னு சொல்லிக்கிறதுக்கே யாரும் விரும்ப மாட்டாங்க..!!” கோவிந்த் பரிதாபமாக சொன்னவிதம் அசோக்கின் மனதை கஷ்டத்துக்கு உள்ளாக்கியது.

“ஹேய்.. கோவிந்த்.. என்னப்பா இது..? ஏன் இப்படிலாம் பேசுற..??”

“ஹையோ.. நான் சொன்னது உ..உண்மைதான் பாஸ்..!! பட் டுடே ஐம் வெரி ஹேப்பி..!! என்னையும் மதிச்சு.. தண்ணியடிக்க கூப்பிட்டீங்க பாத்தீங்களா.. என்னை உங்க பிரண்டா ஏத்துக்கிடீங்க பாத்திங்களா.. ஐம் வெரி ஹேப்பி.. வெரி வெரி ஹேப்பி..!! உங்க ரெண்டு பேரையும் என் லைஃப்ல என்னைக்கும் மறக்க மாட்டேன்..!!”

தழதழத்த குரலில் சொல்லி முடித்த கோவிந்த், உடனே அருகில் இருந்து விஸ்கியை எடுத்து கொஞ்சம் உறிஞ்சிக் கொண்டான். காடையை எடுத்து கடித்து குதறினான். அசோக் அவனையே பாவமாக பார்த்துக்கொண்டிருக்க, அவனுக்கு அருகே அமர்ந்திருந்த ஹரி இப்போது அசோக்கின் புஜத்தை சொறிந்தான். திரும்பி பார்த்த அசோக்கிடம், கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

“என்னடா மச்சி இவன்.. சரக்கடிக்கிற நேரத்துல சந்தானம் மாதிரி சந்தோஷமா இருக்குறதை விட்டுட்டு.. சேரன் மாதிரி சென்ட்டியை போட்டுட்டு இருக்குறான்..!!”

“ப்ச்.. சும்மா இருடா..!!” அசோக்கும் கிசுகிசுத்தான்.

“முடியலைடா.. ரொம்ப சொறியுறான்டா..!!”

ஹரி கோவிந்த் மீது கடும் எரிச்சலில் இருந்தான். எந்த நேரமும் அவன் மீது பாய்ந்துவிடுபவன் மாதிரி கோபத்தில் இருந்தான். அசோக்தான் ஹரியை அவ்வப்போது அடக்கி வைத்தான்.

நான்காவது ரவுண்டும் முடிந்தது. மூவரும் தட்டில் மிச்சமிருந்த நாட்டுக்கோழி வறுவலை கொஞ்சம் கொஞ்சமாய் காலி செய்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் கோவிந்த் சொன்னான். தனது தலை நிலைகொள்ளாமல் தடுமாற, பேச்சு குழற சொன்னான்.

“ரெண்டு மூணு நாளா மனசு ரொம்ப க..கஷ்டமா இருந்தது பாஸ்.. இன்னைக்குத்தான் நிம்மதியா இருக்கு..!!”

“ஓ.. அப்படி என்ன மனசு கஷ்டம் உனக்கு..??” அசோக் தெரிந்து கொண்டே கேட்டான்.

“என்ன பாஸ் தெரியாத மாதிரி கேக்குறீங்க..?? அதான்.. அந்த ஆ..ஆன்சைட்..!! ஏமாத்திட்டாங்க பாஸ் என்னை.. மறுபடியும் ஏமாத்திட்டாங்க..!!”

“ஹேய்.. கோவிந்த்..!!”

“ஆன்சைட் குடுக்குறேன்.. ஆன்சைட் குடுக்குறேன்னு.. அந்த பாலா எனக்கு நல்லா அல்வா கிண்டி குடுத்துட்டாரு பாஸ்..!!”

“விடு கோவிந்த்.. அந்த ஆள் என்ன பண்ணுவாரு..?? ப்ரியாதான் வேணும்னு க்ளையன்ட்டே கேட்டிருக்காங்க.. இவங்க என்ன பண்ண முடியும்..??”

“ஹ்ம்ம்.. நீங்க சொல்றதும் சரிதான்..!! எனக்கு நேரம் சரியில்லை.. அதான் இப்படிலாம் நடக்குது..!! அப்படி நெனச்சுக்க வேண்டியதுதான்..!!”

சொல்லிவிட்டு கோவிந்த் சோகமாக தலையை கவிழ்த்துக் கொண்டான். அசோக் கொஞ்ச நேரம் அவனையே அமைதியாக பார்த்திருந்துவிட்டு, அப்புறம் மெலிதான குரலில் கேட்டான்.

Siddharth Narayan Latest New Wallpapers in 180 Movie

“கோவிந்த்.. உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நெனைக்க மாட்டியே..??”

“ஹ்ம்ம்.. கேளுங்க பாஸ்..!!”

“ஆன்சைட் போகணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்குறது சகஜம்தான்.. ஆனா நீ மட்டும் ஏன் இப்படி போயே ஆகணும்னு வெறியா இருக்குற..??”

அசோக் அந்த மாதிரி கேட்கவும், இப்போது கோவிந்த் பட்டென அமைதியாகிப் போனான். அந்தக்கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அவனது திடீர் திகைப்பில் இருந்தே புரிந்தது. அசோக்கையும் ஹரியையும் மாறி மாறி ஒருவித பரிதாபப் பார்வை பார்த்தான். அப்புறம் கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு கேட்டான்.

“உங்க ரெண்டு பேர்ல யாராவது ஆ..ஆன்சைட் போயிருக்கீங்களா..??”

கோவிந்தின் கேள்விக்கு ஹரி இப்போது பதில் சொன்னான்.

“ஹ்ஹ.. நாங்களும் உன்னை மாதிரிதான்.. ஆன்சைட்லாம் போனது இல்ல.. சேந்ததுல இருந்து இங்கதான் சேரை தேச்சுட்டு இருக்கோம்..!!” ஹரி இளித்தவாறே சொல்ல,

“நான் ஆன்சைட் போனது இல்லைன்னு உங்களுக்கு யார் சொன்னது..??”

கோவிந்த் பட்டென கேட்டான். அவன் அந்த மாதிரி கேட்கவும், ஹரியும் அசோக்கும் அதிர்ந்து போனார்கள். கோவிந்த்தின் முகத்தையே திகைப்பாக பார்த்தார்கள். அசோக்தான் முதலில் கேட்டான், அவன் கொண்டிருந்த ஆச்சரியம் விலகாமலே.

“ஹேய்.. அப்போ நீ ஏற்கனவே ஆன்சைட்லாம் போயிருக்கியா..??”

“ம்ம்.. போயிருக்கேன்.. ஒரே ஒரு தடவை..!!”

“எங்க..??”

“யூ.எஸ்.. மினியாபொலிஸ்..!!”

“ஓ..!! அப்புறம் என்ன.. அதான் ஏற்கனவே போயிருக்கேல.. அதுக்கப்புறமும் ஏன் ஆன்சைட் மேல உனக்கு இப்படி ஒரு வெறி..??”

“ஹ்ம்ம்.. சொல்றேன்.. அதுக்கு முன்னாடி நான் ஆன்சைட் போன கதையை சொல்றேன்..!! கொஞ்ச நாள் முன்னாடி இந்த கம்பனில என்னை ஆ..ஆன்சைட் அனுப்புறேன் சொல்லிட்டு, மும்பையோட திரும்ப வர சொன்னாங்கல்ல..?? அந்த கதையை விட இந்தக்கதை காமடியா இருக்கும்..!! சொல்லவா..??”

“ஹ்ம்ம்.. சொல்லு..!!”

“ஆன்சைட் போக எல்லாருக்குமே ஆசை இருக்கும்னு கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னீங்கல்ல..?? ஒருவருஷம் முன்னாடி.. எனக்கு அந்த ஆசை கூட இல்ல பாஸ்..!! இங்க மாதிரிதான் என் பழைய கம்பனிலயும்.. பயங்கர ஹார்ட் வொர்க் பண்ணுவேன்.. ராத்திரி பகல்னு பாக்காம, ஆ..ஆபீசே கதின்னு கெடப்பேன்..!! என் ஹார்ட் வொர்க் பாத்து.. என் மேனேஜர் எனக்கு சப்போர்ட் பண்ணி.. என்னை ஆன்சைட் அனுப்ப சூஸ் பண்ணாங்க..!! எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல.. ஆனா என் மேனேஜர் நீதான் சரியான ஆள்னு சொன்னாரு.. கம்பல் பண்ணாரு.. நானும் அக்சப்ட் பண்ணிக்கிட்டேன்…!! ஒரு டபுள் மைன்டோடவே மினியாபொலிஸ்ல போய் இறங்குனேன்..!!”

“எ..எப்போ..??”

“போன வருஷம் மார்ச்..!! புது ஊர்.. புது எடம்.. புது ஆளுங்க.. அங்க போனதுமே அவங்களோட நான் ஒ..ஒட்டாத மாதிரி ஒரு ஃபீல் எனக்கு வந்துடுச்சு..!! முதல் நாள் ஆபீஸ் போனேன்.. ஒரு பெரிய ஹால்ல ஒரு மீட்டிங்.. ஒரு இருபது இருபத்தஞ்சு பேரு இருந்தானுக.. எங்க அப்ளிகேஷன் பத்தி டெமோ கொடுக்கணும்..!!”

“ஹ்ம்ம்…!!”

“எனக்கு நேச்சராவே கொ..கொஞ்சம் இன்ஃபீரியாட்டி காம்ப்ளக்ஸ் பாஸ்.. நாம பேசுற இங்க்லீஷ் கரெக்டான்னு ஒரு பயம் எப்போவும் இருந்துக்கிட்டே இருக்கும்..!! அதில்லாம அந்த புது அட்மாஸ்பியர்.. தஸ்புஸ்னு புரியாம பேசுற அமெரிக்காகாரனுக சுத்தி உக்காந்துட்டு இருக்கானுக..!! எனக்கு வேற அப்போ ரொம்ப வா..வாய் திக்கும்..!! அன்னைக்கு எனக்கு என்ன ஆச்சுன்னே இப்போ வரைக்கும் சுத்தமா புரியலை பாஸ்.. பே..பேச்சே வரலை எனக்கு.. ஏதேதோ உளர்றேன்.. திக்கு திக்குன்னு திக்குறேன்..!! சிம்பிளா சொல்லனும்னா.. சொ..சொதப்பிட்டேன் பாஸ்.. சொதப்பு சொதப்புன்னு சொதப்பிட்டேன்!! ஒரு ரெண்டு நிமிஷம் பாத்துட்டு.. எல்லாமே எந்திரிச்சு போயிட்டானுக..!!”

“ஓ..!! ஷிட்..!!” அசோக் நிஜமான வருத்தத்துடன் சொன்னான்.

“எவ்வளவோ கெஞ்சுனேன் தெரியுமா.. இன்னொரு சான்ஸ் கொடுங்கன்னு..!! அவனுககிட்டையும் சரி.. இவனுககிட்டையும் சரி..!! யாருமே நான் கெஞ்சுனதை மதிக்கலை.. அடுத்த நாளே என்னை இன்டியா அனுப்பி வச்சுட்டாங்க.. எனக்கு பதிலா வேற ஒரு ஆளை திரும்ப ஆன்சைட் அனுப்பினாங்க..!!”

சொல்லிவிட்டு கோவிந்த் அமைதியானான். அவனுடைய பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது. வலி மிகுந்த பழைய நினைவுகளில் அவன் மூழ்கிப் போயிருக்கிறான் என்று தெளிவாக தெரிந்தது. கேட்டுக்கொண்டிருந்த அசோக்கிற்கு மிகவும் கஷ்டமாகிப் போனது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என ஆச்சரியமுற்றான். கோவிந்துக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அவனுடைய கையை அழுத்தி பற்றிக் கொண்டான். கோவிந்த் மேலும் தொடர்ந்தான்.

“என் பழைய கம்பெனில.. சும்மாவே என்னை யாரும் மதிக்க மாட்டாங்க பாஸ்.. அந்த பிரச்னைக்கு அப்புறம்.. எனக்கு இருந்த கொ..கொஞ்ச நஞ்ச மதிப்பும் சுத்தமா போயிடுச்சு..!! அந்த ப்ராஜக்ட்ல இருந்து என்னை தூக்கிட்டாங்க.. என்னை கம்பல் பண்ணி அனுப்பின மேனேஜரே ‘என்னால எதுவும் செய்ய முடியலை கோவிந்த்..’னு கையை விரிச்சுட்டாரு..!! கூட வேலை பாக்குறவங்க எல்லாம் என்னை முன்னாடி விட்டு பின்னாடி கே..கேலி பண்ணுவாங்க..!! ரிஜக்டட் பீஸ்.. ரிட்டர்ன் ஸ்டேட்மன்ட்’ன்லாம்.. எனக்கு நிக்நேம் வச்சிருந்தாங்க..!!”

“ஹ்ம்ம்…!!”

“அவங்கதான் என்னை புரிஞ்சுக்கலைன்னா.. என் அ..அப்பா கூட என்னை புரிஞ்சுக்காம கேவலமா பேசிட்டாரு பாஸ்..!! சொந்தக்காரனுக இன்னொரு பக்கம்.. ஏதோ எழவு விழுந்த மாதிரி.. போன் பண்ணி போன் பண்ணி துக்கம் விசாரிச்சாங்க..!! அந்த கொஞ்ச நாள் நான் பட்ட கஷ்டம்.. ரொம்ப கொடுமை..!! என் அம்மாதான் அப்போலாம் எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்தாங்க..!!”

“ஹ்ம்ம்…!!”

“என்னை அவங்க திரும்ப அனுப்பின அன்னைக்கு முடிவு பண்ணினது பாஸ்.. மறுபடியும் ஆ..ஆன்சைட் போகணும்னு..!!! புரியுதா..??”

“பு..புரியுது..!!”

“ஹ்ம்ம்.. போகணும்.. இன்னும் ஒரே ஒரு தடவையாவது ஆன்சைட் போகணும்..!! நான் யார்னு ப்ரூவ் பண்ணனும்.. மத்தவங்களுக்காக மட்டும் இல்ல.. எனக்கே நான் யா..யார்னு ப்ரூவ் பண்ணி காட்டனும்..!!” அவ்வாறு சொல்லும்போது கோவிந்தின் குரலில் அபப்டி ஒரு உறுதி.

“கண்டிப்பா..!!” அசோக்கும் இப்போது உணர்ச்சிவசப்பட்டவனாய் சொன்னான்.

“இப்போ ஸ்பீச் தெரபிலாம் போய்.. திக்குறது ரொம்ப கம்மி ஆயிடுச்சு.. இங்க்லீஷ் கம்யூனிகேஷன் கூட நல்லா இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டேன்..!! என்னை ப்ரூவ் பண்றதுக்கு ஆ..ஆப்பர்ச்சூனிட்டிதான் இன்னும் கெடைக்கலை..!!”

“கவலைப்படாத கோவிந்த்.. கூடிய சீக்கிரம் உனக்கு சான்ஸ் கிடைக்கும்.. எல்லாருக்கும் நீ யார்னு ப்ரூவ் பண்ணத்தான் போற..!!”

அசோக் நம்பிக்கையூட்டும் விதமாக சொல்ல, கோவிந்தும் அவனை நன்றியுடன் பார்த்தான். மனதில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கூர்ந்து கவனிக்கிற அளவுக்கு ஒரு புத்தி தெளிவு அசோக்கிற்கு அப்போது இல்லை. இரண்டு நாட்கள் முன்புவரை கோவிந்தை தனக்கு போட்டியாக எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவனே ‘கோவிந்திற்கு ஆன்சைட் செல்லும் வாய்ப்பு சீக்கிரம் அமையாதா..?’ என நினைக்கிற அளவுக்கு அவனது மனநிலை மாறி இருக்கிறது..!! இன்றைய மனித வாழ்க்கையே இப்படி புரிந்து கொள்ளாமல் போட்டி போட்டுக்கொண்டு மகிழ்ச்சியை இழக்கிற மடத்தனம் என்பதை அப்போது அவன் உணரவில்லை..!!

கோவிந்த் சொன்ன விஷயங்களின் தாக்கத்தில் மூழ்கிப் போயிருந்த அசோக், சற்று தாமதமாகத்தான் தனக்கருகே கேட்ட அந்த சத்தத்தை கவனித்தான். சீரியல் பாக்கிற பெண்கள் மூக்கை விசும்புகிற மாதிரியான ‘ம்ஹ்.. ம்ஹ்..’ என்று சத்தம். திரும்பிப் பார்த்தால், ஹரிதான் துக்கம் தொண்டையை அடைக்க விசும்பிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கோவிந்தையே ‘பே..’ என்று பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தன. அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

“டேய்.. என்னடா ஆச்சு..??” என்று ஹரியை உலுக்கினான்.

“வழி விடுடா மச்சான்..!!” என்றான் ஹரி சோபாவில் இருந்து எழுந்தவாறே.

“எதுக்குடா..??”

“ஏய்.. வழி விடுன்னு சொல்றேன்ல..??”

அசோக் ஒதுங்கிக்கொள்ள, ஹரி தட்டு தடுமாறி நகர்ந்து சோபாவின் எதிர்ப்பக்கம் சென்றான். சென்றதுமே கோவிந்தை தோளோடு சேர்த்து கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான். ஹரிக்கு போதை ஓவர் ஆகிவிட்டது என்று அசோக்கிற்கு புரிந்து போனது. ஆனால் கோவிந்திற்கு அது புரியவில்லை. ஏனென்றால் அவனுக்கும் ஓவராகி போயிருந்தது. இருவரும் போதையின் உச்சத்தில் வாய் குழறவே பேசிக்கொண்டார்கள். ஹரி புலம்பினான்.

“மச்சான்.. மச்சான்.. சாரிடா மச்சான்..!!”

ஹரி ஏன் திடீரென ஒப்பாரி வைக்கிறான் என்று அசோக்கிற்கும் புரியவில்லை. கோவிந்திற்கும் புரியவில்லை. அழுகிற ஹரியிடம் கோவிந்த் குழப்பமாய் கேட்டான்.

“பாஸ்.. எ..என்ன ஆச்சு பாஸ்..??”

“அடிடா மச்சான்.. என்னை அடிச்சுடுடா..!!” கெஞ்சினான்.

“ஹையோ.. எதுக்கு பாஸ் அடிக்க சொல்றீங்க..??”

“நீ எவ்வளவு நல்லவன்டா மச்சான்.. எப்படி ஒரு லட்சியத்தோட வாழ்ந்துட்டு இருக்குற.. உன்னைப்போய் நான் தப்பா நெனச்சுட்டண்டா..!! என்னை அடிச்சுடுடா மச்சான்..!!”

புலம்பிய ஹரி, கோவிந்தின் கையை பற்றி தன்னை தானே அறைந்து கொள்ள முயன்றான். கோவிந்த் பதறிப்போய் அவனிடமிருந்து தன் கையை பறித்துக் கொண்டான்.

“ஐயோ.. என்ன பாஸ் பண்றீங்க.. விடுங்க..!!”

“பரவாலடா மச்சான்.. அடிடா.. நீ என்னை அடிக்கிறதுல தப்பே இல்ல..!! ஆனா.. ஒன்னு மட்டும் சொல்றேண்டா.. நீ கண்டிப்பா ஆன்சைட் போறடா.. நான் போக வைக்கிறேண்டா..!! அந்த பாலா நாய் மட்டும் நெக்ஸ்ட் டைம் உன்னை ஏமாத்தட்டும்.. அவனை நான் போட்டுத்தள்ளுறனா இல்லையான்னு பாருடா..!!”

“அச்சசோ.. அப்டிலாம் பண்ணிடாதீங்க பாஸ்.. எனக்காக நீங்க எந்த கஷ்டமும் படக்கூடாது.. அதை என்னால தாங்கிக்க முடியாது..!!” கோவிந்தும் போதையில் பாசக்காரப்பயல் ஆகியிருந்தான்.

“ஐயோ.. ஐயோ.. நீ எவ்வளவு நல்லவனா இருக்குறடா கோவிந்து.. உன்னை போய் நான் என்னன்னமோ சொல்லிட்டனடா..??”

“அப்படி என்ன பாஸ் சொல்லிட்டீங்க..??” கோவிந்த் கேஷுவலாக கேட்க,

“தர்பூஸ் தலையன்லாம் சொல்லி உன்னை திட்டிருக்கண்டா மச்சான்..!!”

ஹரி போதையிலும், பாசத்திலும் உளறிவிட்டான். அவன் அடிக்கிற கூத்தில் நொந்து போய் அசோக் தன் தலையை பிடித்துக் கொண்டான். கோவிந்தோ முகமெல்லாம் அஷ்டகோணலாகிப் போய் கேட்டான்.

“தர்பூஸ் தலையனா..???? நானா..????”

கோவிந்த் முகத்தை சுளிக்கவும்தான், தான் உளறிக்கொட்டியதையே ஹரி உணர்ந்துகொண்டான். நாக்கை கடித்துக் கொண்டான். ஆனால் அந்த போதையிலும் உடனே சுதாரித்துக் கொண்டு, நிலைமையை சமாளிக்கும் விதமாக..

“மச்சான்.. இதுக்கெதுக்குடா நீ இவ்ளோ ஃபீல் பண்ணுற..?? இப்போ.. இந்த தர்பூஸ் இருக்கே.. அது எவ்வளவு நல்ல பழம் தெரியுமா..? வைட்டமின் ஏ, பி, ஸின்னு எல்லாமே இருக்குது மச்சான் அதுல..!! உடம்புக்கு குளிர்ச்சி.. ஹார்ட் ப்ராப்ளம், டயபடிஸ் ப்ராப்ளதுக்குலாம் ரொம்ப நல்லது..!! அதை வெட்டிப்பாத்தா செக்க செவேல்னு என்ன அழகா இருக்குது..?? உலகத்துல தர்பூஸ் மாதிரி ஒரு சூப்பரான பழம் வேற எதுவுமே இல்லைடா மச்சான்..!!”

“ம்ம்ம்..”

“ஆக்சுவலா உன் தலை தர்பூஸ் மாதிரி இருக்குறதுக்கு நீ ரொம்ப பெருமைப்பணும்டா மச்சான்.. ரொம்ப பெருமைப்படணும்..!!”

“ஓ..!!” ஹரியின் விளக்கத்தில் கோவிந்த் ஓரளவு திருப்தி அடைந்தவனாகவே காணப்பட்டான். ஆனால் ஹரி அதன்பிறகும் அவனை விடவில்லை.

“சொல்லுடா மச்சான்.. பெருமைப்படுறேன்னு சொல்லுடா.. ப்ளீஸ்டா..!!”

“ம்ம்.. பெருமைப்படுறேன் பாஸ்..!!”

“குட்.. வெரி குட்.. ஐ லைக் யூ..!! இது மட்டும் இல்லடா மச்சான்.. இன்னும் நீ நெறைய மேட்டருக்காக பெருமைப்படணும்..!!”

“இன்னுமா..??”

“ஹ்ம்ம்.. இந்த பனங்கொட்டை இருக்குலடா மச்சான்.. பனங்கொட்டை..??”

ஹரி சொல்லிக்கொண்டிருக்க, அதற்குள்ளாக பேரர் வந்து அசோக்கிடம் பில்புக்கை நீட்டியிருந்தான். அசோக் அதை வாங்கி ஹரியின் தலையிலேயே ஓங்கி அடித்தான். அவன் ‘ஆஆஆ..’ என்று கத்தியவாறு திரும்பி பார்க்க, அசோக் அவனிடம் முறைப்பாக சொன்னான்.

“த்தா.. விடுடா.. ஒருத்தன் சிக்கிட்டா போதுமே..!!” என்றவன், பிறகு கோவிந்தை ஏறிட்டு குரலை இதமாய் மாற்றிக்கொண்டு சொன்னான்.

“இங்க பாரு கோவிந்த்.. இனி உனக்கு யாரும் இல்லைன்னு நீ ஃபீல் பண்ணாத.. நாங்கல்லாம் இருக்கோம்.. ஓகேவா..?? இன்னைல இருந்து நீயும் எங்கள்ல ஒரு ஆள்..!! இந்தா.. உன் விருப்பப்படி.. நீயே இன்னைக்கு பில் பே பண்ணு..!!” என்று பில்புக்கை கோவிந்திடம் நீட்டினான். Sunni Oombum Tamil New Sex Stories

– தொடரும்