நெஞ்சோடு கலந்திடு – 22 (Tamil Kamakathaikal - Nenjodu Kalanthidu 22)

Tamil Kamakathaikal – “உங்க சொந்த ஊர் மதுரைப்பக்கம் இல்ல.. திவ்யா ஊர்ப்பேர் என்னவோ சொன்னாளே..?”

“புளியங்குளம்..!!”

“ஆஆஆங் .. புளியங்குளம்.. புளியங்குளம்..!! எனக்கு.. மடப்புரம்..!! திருத்துறைப்பூண்டி பக்கத்துல..!!”

“ஓ..!!

“சின்ன வயசுலேயே அப்பா, அம்மா போயிட்டாங்க அசோக்..!! அஞ்சாறு வயசு இருக்கும்.. அனாதையா விட்டுட்டு போயிட்டாங்க..!! அப்போ இருந்தே நான் மெட்ராஸ்தான்..!! பெரியப்பா வீடு மாதவரத்துல இருக்குது.. அங்கதான் தங்கிருந்தேன்.. அவர்தான் என்னை படிக்க வச்சாரு..!!”

“ம்ம்ம்..”

“பெரியப்பாவுக்கு பழைய பேப்பர் பிசினஸ்.. அவர் என் படிப்புக்கு பண்ணின செலவை விட.. நான் அவருக்கு உழைச்சு சம்பாதிச்சு குடுத்த காசு பலமடங்கு இருக்கும்..!! சின்ன வயசுல.. இந்த ஏரியாவுல ஒரு தெரு விடாம.. பேப்பர் பொறுக்கிருக்கேன்..!! ஹாஹா… Can you believe that..??? வெல்டிங் ஷாப்ல வேலை பாத்திருக்கேன்.. டீக்ளாஸ் கழுவிருக்கேன்.. கட்டிட மேஸ்திரிகிட்ட காலால மிதி வாங்கிருக்கேன்..!! ரொம்ப கஷ்டம் அசோக்..!! ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுதான் இன்னைக்கு இந்த நிலைமைல இருக்கேன்..!!”

“ம்ம்.. கிரேட்..!!”

“தேங்க்ஸ்..!! இதெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்றேன்னு தெரியுமா..?”

“உ..உங்களை பத்தி நான் தெரிஞ்சுக்கணும்.. அதுக்காகத்தான..?”

“அது மட்டும் இல்ல.. இன்னொரு விஷயத்தை நீ நல்லா புரிஞ்சுக்கணும்.. அதுக்காகவுந்தான்..!!”

“எ..என்ன புரிஞ்சுக்கணும்..?”

“எனக்கு ஜெயிக்கிறது புடிக்கும்..!! இதுவரை நான் தொட்டது எல்லாம் சக்சஸ்தான்..!! I know how to win..!!” திவாகரின் குரலில் ஒரு கர்வம் பொங்கியது.

“ஓ..!!”

“சின்ன வயசுல இருந்தே என் மனசுக்குள்ள எப்போவுமே ஒரு வெறி உண்டு அசோக்.. ஜெயிக்கணும்ன்ற வெறி.. நெனச்சதை அடைஞ்சே தீரணும்ன்ற வெறி..!!” திவாகர் சொல்ல சொல்ல, அசோக் அவனையே மிரட்சியாக பார்த்தான்.

“ம்ம்ம்..”

“இப்போ கொஞ்ச நாளா.. மனசுக்குள்ள.. புதுசா ஒரு வெறி கிளம்பிருக்கு.. திவ்யாவை அடைஞ்சே தீரணும்ன்ற வெறி..!! அந்த வெறி.. என்னை அப்படியே ஆட்டிப் படைக்குது அசோக்..!!”

சொல்லிவிட்டு திவாகர் அசோக்கை பார்த்து புன்னகைத்தான். திவாகரின் கண்களில் மின்னிய ஒரு குரூரம்.. அவனது அழகான புன்னகைக்கு அடியில் மறைந்து கிடந்த அந்த கொடூரம்..!! அசோக் உண்மையிலேயே மிரண்டு போனான்..!! திவாகரோ அசோக்கின் முகமாற்றத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தான்..!!

“நான் ஆன்லைன்ல.. நெறைய பொண்ணுக கூட பேசிருக்கேன் அசோக்.. அது என்னோட ஹாபி மாதிரி.. ஜஸ்ட் ஃபார் ஃபன்.. நத்திங் சீரியஸ்..!! ஒரு ரெண்டு வாரம் பேசுவேன்.. அப்புறம் அவங்களே வந்து பிங் பண்ணினா.. நான் பிஸியா இருக்கேன்னு.. ஜஸ்ட் லைக் தேட் அவங்களை அவாய்ட் பண்ணிடுவேன்..!! ஆனா.. திவ்யாவை என்னால அப்படி அவாய்ட் பண்ண முடியலை.. ஆக்சுவலா அந்த விஷயத்துல உனக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்..!!”

“எ..எனக்கா..?” அசோக் புரியாமல் கேட்டான்.

“ஆமாம்.. நீதான் அந்த ஃபோட்டோ எடுத்தியாமே..?? திவ்யா அந்த ஃபோட்டோவை எனக்கு அனுப்பின அன்னைக்குல இருந்து ஆரம்பிச்சதுதான் அந்த வெறி.. அவளை அடைஞ்சே ஆகணும்ன்ற வெறி..!!”

“ஓ..!!”

“வாவ்..!!!! என்ன ஒரு அழகுடா சாமி..!!!! இந்த திவ்யா பொண்ணு இவ்வளவு அழகா..?? இவ கூடவா இத்தனை நாளா பேசிட்டு இருந்தோம்..? இத்தனை நாளா சும்மா பேசிட்டு மட்டும் இருந்துட்டமே..’ அப்டின்னு..!!! நான் ஆரம்பத்துல சில ட்ரிக்லாம் பண்ணிப்பார்த்தேன் அசோக்.. திவ்யா அதுக்குலாம் மசியலை..!! அப்புறந்தான்.. நான் அவளை காதலிக்கிறதா சொன்னேன்.. நான் நெனச்ச மாதிரியே திவ்யா அழகா என் ப்ளான்க்குள்ள வந்து லாக் ஆகிக்கிட்டா..!! ஹாஹா.. ஹாஹா..!!”

“அ..அப்போ நீங்க திவ்யாவை லவ் பண்றேன்னு சொன்னது பொய்யா..?”

“ஃப்ராங்கா சொல்லப்போனா.. எனக்கு தெரியலைன்னுதான் சொல்லணும்.. அது லவ்வா என்னன்னே எனக்கு தெரியலை..!! ஆனா.. இப்போதைக்கு அவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டு குடும்பம் நடத்துற மாதிரித்தான் என்னோட ப்ளான்..!! ப்ராமிஸ்..!! ட்ரஸ்ட் மீ..!!”

“ம்ம்ம்..!!”

“ம்ம்ம்ம்.. எல்லாம் என் ப்ளான் படி ஸ்மூத்தா போயிட்டு இருந்தது அசோக்.. அப்போத்தான்.. எங்க இருந்த வந்த நந்தி மாதிரி நீ என் விஷயத்துல மூக்கை நொழைச்ச..!! அந்த ட்ரிங்க்ஸ் மேட்டர்ல நான் திவ்யாவை கன்வின்ஸ் பண்ண ரொம்பவே கஷ்டப்பட்டேன்.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..!! ஆக்சுவலா.. அந்த மேட்டர்ல எனக்கு உன்மேல ரொம்ப ரொம்ப கோவம் அசோக்..!! என்னதான் இருந்தாலும் நீ அப்படி பண்ணிருந்திருக்க கூடாது..!!”

“நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. உ..உங்களை பிரிக்கிறது என்னோட இன்ட்டென்ஷன் இல்ல..!!”

“ஏதோ ஒன்னு.. விடு.. ஆனா அதுவும் நல்லதுக்குத்தான்.. அந்த மேட்டர்னாலதான் அடம்புடிச்ச திவ்யாவை என்னால ஐ லவ் யூ சொல்ல வைக்க முடிஞ்சது..!! அதுக்காகவும் நான் உனக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்..!!”

“உங்க தேங்க்ஸை நீங்கள் வச்சுக்கோங்க..!! ஆமாம்.. இப்போ எதுக்கு இதெல்லாம் எங்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க..??” அசோக் இப்போது சற்றே எரிச்சலாக கேட்டான்.

“இரு இரு… மேட்டருக்கு வர்றேன்..!! ம்ம்ம்ம்.. எப்படி சொல்றது… திவ்யா எனக்கு எவ்வளவு முக்கியம்னு சொன்னேன் இல்லையா..? அவ எனக்கு கிடைக்கிறதுல.. நடுவுல நீ ஒரு பிரச்னையா இருக்கப்போறேன்னு எனக்கு தோணுது..!! ஒருவேளை நீ ஒரு பிரச்னையா இல்லாம கூட இருக்கலாம்.. Who knows..?? But.. I don’t want to take risk..!! ஐ ஆம் எ பிசினஸ்மேன்.. பிசினஸ்னா ரிஸ்க் எடுத்துத்தான் ஆகணும்னு எல்லாம் சொல்வாங்க.. ஆனா என்னோட பிசினஸ் ஸ்ட்ரேட்டஜி என்னன்னு உனக்கு தெரியுமா அசோக்..? Elimination of Risk..!! That’s what exactly I’m doing now..!! I want to eliminate you..!!”

“எ..எனக்கு புரியலை..!!”

“புரியிற மாதிரியே சொல்றேன்..!! நீ திவ்யாவோட பழகுறது எனக்கு சுத்தமா புடிக்கலை.. அவளை விட்டு நீ விலகிடனும்..!! திவ்யா ஏதோ சொல்லிட்டு இருந்தா.. உனக்கு ஏதோ வெளிநாடு போற ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்குறதா..!! நெஜமா அது..??”

“ம்ம்ம்..”

“என்னைப் பொறுத்தவரை உனக்கு அது ஒரு பெஸ்ட் ஆப்ஷன்..!! கொஞ்ச நாள் நீ வெளிநாட்டுல போய் இருந்துட்டு வா.. அட்லீஸ்ட் நான் நெனச்ச மாதிரி எல்லாம் நடந்து முடியிறவரை..!!”

“ஓ..!! நான் போகமாட்டேன்னு சொன்னா..??”

“சிம்பிள்..!! எனக்கு உன்மேல கோவம் வரும்..!! அது உனக்கு நல்லது இல்ல..!!”

“என்ன பண்ணுவீங்க..?”

“நானே திவ்யாவை உன்கிட்ட இருந்து பிரிப்பேன்.. அவளாவே உன்னை வெறுத்து ஒதுக்குற மாதிரி செய்வேன்..!!”

“ஹ்ஹா..”

“என்ன.. நக்கலா சிரிக்கிற..? என்னால முடியாதுன்னு நெனைக்கிறியா..?”

“நிச்சயமா உங்களால முடியாது..!!”

“பார்க்கலாம்..!! நான் அல்ரெடி அந்த வேலையை எல்லாம் ஆரம்பிச்சுட்டேன்.. உன்னை பத்தின தப்பான அபிப்ராயத்தை கொஞ்சம் கொஞ்சமா அவ மனசுக்குள்ள திணிச்சுட்டு இருக்கேன்..!! ‘அசோக்குக்கு என் மேல ஏதோ பொறாமை.. நம்ம பிரிக்க ப்ளான் பண்றார் திவ்யா..’ அந்த மாதிரி..!! ‘ஏன்னே தெரியலை.. அவனுக்கு உங்களை புடிக்கலை.. உங்களை அவன் புரிஞ்சுக்கவே மாட்டேன்றான்..’ இது திவ்யா இன்னைக்கு காலைல எங்கிட்ட விட்ட டயலாக்..!! ம்ம்ம்ம்.. உனக்கு இப்போ ரெண்டு ஆப்ஷன் இருக்கு அசோக்..!! ஒன்னு.. திவ்யா உன் மேல வச்சிருக்குற மதிப்பு கொஞ்சமும் குறையாம.. நீ வெளிநாடு போயிடுறது..!! ரெண்டு.. இங்கயே இருந்து.. அவ உன் மேல வச்சிருக்குற மதிப்பை இழந்து.. ஒரே வீட்டுக்குள்ள இருந்தும் அவ கூட பேச முடியாம போயிடுறது..!! ரெண்டுல எதை நீ சூஸ் பண்ண போற..?”

“என்ன.. என்னை மிரட்டுறீங்களா..?”

“ஹாஹா.. நான் எங்க மிரட்டுறேன்..? ஐ ஆம் எ பிசினஸ்மேன்.. உன்கிட்ட ஒரு டீல் பேசிட்டு இருக்கேன்.. உனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுத்திருக்கேன்..!!”

“உங்களோட ரெண்டு ஆப்ஷனுமே எனக்கு பிடிக்கலை மிஸ்டர் திவாகர்..!! நான் மூணாவது ஆப்ஷன் சூஸ் பண்ணப் போறேன்..!!”

“ஹாஹா.. அதென்ன மூணாவது ஆப்ஷன்..??”

“உங்க பேச்சுல இருந்தே தெரியுது.. நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு..!! உங்களை மாதிரி ஒரு ஆளைக் கட்டிக்கிட்டு.. திவ்யா சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்ல..!! அதனால..”

“என்ன பண்ணப் போற..?”

“உங்களைப் பத்தி அவகிட்ட சொல்லப் போறேன்..!!”

“ஹாஹா..!! இப்போ நான் பேசுனதெல்லாம் அவகிட்ட போய் சொல்லப் போறியா..? அப்படின்னா.. அதோட இதையும் சேர்த்து சொல்லு.. நான் இதுவரை ஒரு ஏழெட்டு பொண்ணுகளோட செக்ஸ் வச்சிருக்கேன்..!! உண்மை.. அதையும் அவகிட்ட போய் சொல்லிப்பாரு..!! அவ நம்பமாட்டா அசோக்.. அப்படியே ஒருவேளை நம்பி.. எங்கிட்ட வந்து கேட்டாலும்.. நான் அப்டிலாம் சொல்லவே இல்லைன்னு சத்தியம் செஞ்சு அவளை சமாளிச்சுடுவேன்..!! திவ்யாவை எப்படி டீல் பண்றதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அவளை எப்படி என்கிட்டே ஐ லவ் யூ சொல்ல வச்சேன்னு பார்த்தேல..? I know.. I know everything about her..!! இந்த மேட்டரை போய் அவகிட்ட சொன்னா.. அதை வச்சே உன் இமேஜை டேமேஜ் பண்ணிக்காட்டவும் என்னால முடியும்.. பாக்குறியா..?”

திவாகர் சவாலாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பேரர் வந்து அவன் முன்பாக பில் புக்கை நீட்டினான். பில்லை பார்க்காமாலே.. திவாகர் பர்ஸ் திறந்து கிரெடிட் கார்ட் எடுத்து அவனிடம் நீட்டினான். அவன் வாங்கிக்கொண்டு அந்தப்புறம் நகர்ந்ததும், கோப்பையில் மிச்சமிருந்த விஸ்கியை ஒரே மடக்கில் விழுங்கினான். நிமிர்ந்து அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தான்.

இப்போது அசோக்கும் மிச்சம் இருந்த விஸ்கியை எடுத்து மொத்தமாய் உள்ளே ஊற்றிக் கொண்டான். ப்ளேட்டில் இருந்த சிப்சை எடுத்து கடித்துக்கொண்டே, திவாகரை பதிலுக்கு முறைத்தான்.

கார்ட் வாங்கிக்கொண்டு சென்ற பேரர் திரும்ப வந்தான். புக்கை நீட்டினான். திவாகர் அதை திறந்து, பாக்கெட்டில் இருந்த பேனாவை உருவி, ட்ரான்சாக்ஷன் ஸ்லிப்பில் கையொப்பம் இட்டான். பர்ஸ் திறந்து வெங்கடேசனுக்கு டிப்ஸ் எடுத்து வைத்தான். ஒரு சிகரெட் எடுத்து உதட்டில் பொருத்தி பற்ற வைத்து, அதிலிருந்து குபுகுபுவென கிளம்பிய புகையை அசோக்கின் முகத்தில் ஊதினான்.

“நீ சாப்பிட்டதுக்கும் சேர்த்து நான் பில் பே பண்ணிட்டேன் அசோக்.. நீ பே பண்ண தேவையில்ல..!!” என்றான். உடனே அசோக் ஒருகணம் குழம்பிப்போனான். சற்றே எரிச்சலாக கேட்டான்.

“நீ..நீங்களா..? ஏன்..?”

“Its ok.. Treat this as my Treat..!!”

“நோ நோ..!! எனக்கு உங்களோட ட்ரீட் தேவையில்ல.. நான் பணம் தர்றேன் வாங்கிக்கோங்க..!!” அசோக் பர்ஸ் திறந்து பணம் எடுக்க,

“பரவால அசோக்.. பணத்தை உள்ள வை..!! என்னோட டீல் உனக்கு ஓகேவான்னு மட்டும் சொல்லு..!!”

1

அசோக் இப்போது எதுவும் பேசாமல் திவாகரைப் பார்த்து முறைத்தான். அப்புறம் பர்ஸிலிருந்து மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து, அவன் முன்பாக தூக்கி போட்டான். திவாகர் சற்றே கிண்டலாக கேட்டான்.

“இதுக்கு என்ன அர்த்தம்..?”

“உங்க டீல் எனக்கு ஓகே இல்லைன்னு அர்த்தம்..!!”

“அப்போ திவ்யாவை விட்டு நீ விலகமாட்ட..?”

“அது என்னால முடியாது..!!”

“ஹாஹா.. அப்போ உன்கிட்ட இருந்து திவ்யாவை நான் பிரிக்க வேண்டி இருக்கும்..!!”

“அது உங்களால முடியாது..!!”

அசோக் உறுதியாக சொல்ல, திவாகர் இப்போது அசோக்கை முறைத்துப் பார்த்தான். டேபிளில் கிடந்த பணத்தை அள்ளி தன் பர்ஸில் திணித்துக் கொண்டான். எழுந்து கொண்டான். டேபிளில் கை ஊன்றி குனிந்து, தனது முகத்தை அசோக்கின் முகத்துக்கு அருகே கொண்டு சென்று, சவால் விடும் குரலில் சொன்னான்.

“முடிச்சுக் காட்டுறேன்.. I know how to do it.. I know everything..!!” சொல்லிவிட்டு நகர முயன்றவனை,

“ஒரு நிமிஷம் மிஸ்டர் திவாகர்..!!”

என்று அசோக் அழைத்து நிறுத்தினான். திவாகர் நின்று ‘என்ன..?’ என்பது போல அசோக்கை திரும்பி பார்க்க, இப்போது அசோக் சோபாவில் இருந்து எழுந்தான்.

“டோன்ட் ஃபர்கெட் யுவர் பென்..!!”

என்ற அசோக், திவாகர் டேபிளில் மறந்து விட்டிருந்த அந்த பேனாவை எடுத்து அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் செருகி வைத்தான். திவாகர் எரிச்சலாக அவனை பார்த்துக் கொண்டிருக்க, அசோக் இதழில் அழகாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னான்.

“இப்போ.. அடிக்கடி ஏதோ சொல்லிட்டு இருந்தீங்களே.. என்னது அது..?? ஆங்.. ‘I know everything..!!’ ம்ம்ம்… உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கலாம் திவாகர்.. ஆனா ஒரு விஷயத்தை பத்தி உங்களுக்கு சரியா தெரியலை.. அது தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் இப்படிலாம் என்கிட்ட பேசிருக்க மாட்டீங்க..!! ஆனா.. கூடிய சீக்கிரம் அதைப் பத்தி நல்லா தெரிஞ்சுப்பீங்க..!!”

“என்ன அது..?” திவாகர் சற்றே எகத்தாளமாக கேட்க,

“திவ்யா என் மேல வச்சிருக்குற நம்பிக்கை..!!”

அசோக் திவாகரின் கண்களை கூர்மையாக பார்த்து சொன்னான். சொல்லிவிட்டு ஒரு நொடி கூட தாமதியாமல், திரும்பி விறுவிறுவென நடந்து, அந்த பாரை விட்டு வெளியேறினான். Pundai Nakkum Tamil Kamakathaikal

– தொடரும்

2 thoughts on “நெஞ்சோடு கலந்திடு – 22 <span class="desi-title">(Tamil Kamakathaikal - Nenjodu Kalanthidu 22)</span>”

Leave a Comment