அசோக் காலிங் அசோக் – 7 (Tamil Kamakathaikal - Ashok Calling Ashok 7)

Tamil Kamakathaikal – அவர் பரிதாபமாக சொன்னார். அவருடைய குரலிலேயே அவர் படும் கஷ்டம் எனக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் அவருக்கு என்ன பதில் சொல்வதென்றுதான் எனக்கு எதுவும் விளங்கவில்லை. ஒரு வழியாய் சாந்தமாக சொன்னேன்.

“ஓகே சீனியர்.. கொறைச்சிக்கிறேன்..!! நீ மேட்டருக்கு வா..!!”

1

“அ..அது.. அது.. இந்த மேட்டர்.. லே..லேகா சம்பந்தப்பட்டது..!!” அவர் தயங்கி தயங்கி சொல்ல, நான் ஆச்சரியமானேன்.

“லேகாவா..? லேகாவை உனக்கு தெரியுமா..?”

“தெரியுமாவா..? அவ கூடத்தான் இருபத்து நாலு வருஷமா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்குறேன் ஜூனியர்..!!”

அவர் சொன்னதைக் கேட்க எனக்கு எக்கச்சக்க சந்தோஷமாய் இருந்தது. நான் இப்போது புதிதாக உற்சாகம் கிளம்பியவனாய் கேட்டேன்.

“ஹையோ சீனியர்.. சொல்லவே இல்ல..!! ச்சே.. உன்கூட இவ்வளவு பேசிட்டு.. இந்த முக்கியமான மேட்டரையே கேட்காம விட்டுட்டனே..?? ம்ம்ம்ம்… அப்போ.. லேகாதான் நம்ம பொண்டாட்டியா..?”

“ச்சீய்… அசிங்கமா பேசாத ஜூனியர்..!!”

“அசிங்கமாவா..? நான் கரெக்டாத்தான பேசுறேன்..??”

“நீ சொன்னதுல பொருட்குற்றம் இல்ல.. ஆனா சொற்குற்றம் இருக்கு..!! ‘நம்ம பொண்டாட்டியா..?’ ன்னு நீ கேக்குறது நாராசமா என் காதுல விழுது..”

“அதானால என்ன சீனியர்.. நமக்குள்ளதான பேசிக்கிறோம்..? வேற யாராவது கேட்டாத்தான் தப்பா எடுத்துக்குவாங்க..!! ம்ம்ம்.. அப்புறம்.. நமக்கும் லேகாவுக்கும் எத்தனை கொழந்தைங்க பொறந்துச்சு..?”

“ஒரே ஒரு பையன்தான்..!!”

“ஓஹோ..? என்ன பண்றான் இப்போ..?”

“சந்திர மண்டலத்துல.. ஒரு சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்ணுறான்..!!”

“சந்திர மண்டலத்துலையா..? என்னய்யா சொல்ற..??” நான் நம்பமுடியாமல் கேட்டேன்.

“இதையே நம்ப மட்டேன்றியே.. அவன் யூ.கே.ஜி படிக்கிறதுக்கு யூ.கே போனான்னு சொன்னா.. நீ நம்புவியா..?”

“சத்தியமா நம்ப முடியலைய்யா..!!”

“ம்ம்ம்.. உலகம் இப்போ ரொம்ப சுருங்கிப் போச்சு ஜூனியர்..”

“ம்ம்ம்.. சரி சீனியர்..!! லேகாவைப் பத்தி ஏதோ மேட்டர்னு சொன்னியே.. என்ன அது..?”

“நான் சொல்றேன்.. ஆனா அவசரப் பட்டு என்னை நீ திட்டக் கூடாது..!!”

“சேச்சே.. அது உன்னைப் பத்தி தெரியிறதுக்கு முன்னாடி.. உன்னை லூசுன்னு திட்டிருப்பேன்.. அதுலாம் நீ மனசுள் வச்சுக்காத..!! இனிமே உன்னை நான் அந்த மாதிரி திட்ட மாட்டேன்..!! தைரியமா சொல்லு..!!”

“அ..அது.. அது..”

“ம்ம்ம்ம்…??”

“அ..அது.. அது வந்து..” சீனியர் தயங்கினார்.

“ம்ம்ம்.. சொல்லு சீனியர்.. ஏன் இப்படி தயங்குற..?” நான் அவரை தூண்டினேன்.

“லே..லேகாவை”

“ம்ம்.. லேகாவை..?”

“லேகாவை நீ கழட்டி விட்டுடனும்..!!”

என் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன சொல்லுகிறான் இந்த ஆள்..? சுய நினைவுடன்தான் சொல்கிறானா..? இல்லை போதையில் உளறுகிறானா..? திரும்ப ஒருமுறை கேட்டேன். இப்போது என் வார்த்தைகளில் எக்கச்சக்க டென்ஷன்..!!

“யோவ்.. என்னய்யா சொல்ற நீ..?”

“ஆ..ஆமாம் அசோக்.. லேகாவை நீ கழட்டி விடனும்..!! அவ நமக்கு வேணாம் அசோக்..!!”

சீனியர் தெள்ளத்தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்ல.. நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்..!!

2

நண்பர்களே..!! இந்த மூன்றாவது பாகம் நான் நினைத்த மாதிரி பெரியதாக தர முடியவில்லை..!! இருந்தாலும்.. காத்திருக்கும் வாசகர்களை ஏமாற்ற விருப்பம் இல்லாமல்.. எழுதிய வரையில் ஒரு எபிசோடாக தருகிறேன்..!! சற்றே அனுசரித்து இந்த பாகத்தை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..!! நன்றி..!!

எபிஸோட் – III

ஒரு ஃபிகரை உஷார் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? சொல்றேன்.. எல்லாம் கேட்டுக்குங்க..!! மொதல்ல டெயிலி குளிக்கணும்..!! காதலுக்கு கண்ணு வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா மூக்கு இருக்குது..!! அப்புறம் அந்த ஃபிகர் போற எடத்துக்குலாம் வோடஃபோன் நாய் மாதிரி பின்னாலேயே திரியணும்..!! அது அடிக்கிற மொக்கை ஜோக்குக்குலாம் வெக்கமே இல்லாம சிரிக்கணும்..!! பூ.. மழை.. கவிதை.. கழுதைன்னு அந்த ஃபிகருக்கு புடிச்சதுலாம் நமக்கும் புடிக்கும்னு மனசாட்சியே இல்லாம சொல்லணும்..!! முடிஞ்சா அந்த கழுதைல ரெண்டு.. ஸாரி.. கவிதைல ரெண்டு.. எழுதி நீட்டணும்..!! இன்னும் சொல்லிட்டே போகலாம்..!! மொத்தத்துல நாம ரொம்ப நல்லவன்ற மாதிரியே ஒரு ஸீன் போடணும்..!! ஒன்னு மட்டும் சொல்றேங்க.. நல்லவனா கூட இருந்திடலாம்.. ஆனா நல்லவன் மாதிரி ஸீன் போடுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..!!

மேல நான் சொன்னதுலாம் ஒண்ணுக்காவாத சப்பை ஃபிகரை கரெக்ட் பண்றதுக்கு..!! அந்த ஃபிகரு.. அட்டு பீஸா இல்லாம.. கொஞ்சம் அழகான பீஸா இருந்துட்டா.. அவ்வளவுதான்..!! அதை கரெக்ட் பண்ணி காதலிக்க வைக்கிறதை விட.. கர்நாடகாக்காரனை கரெக்ட் பண்ணி காவிரித்தண்ணியை வர வச்சுடலாம்..!! அவ்ளோ கஷ்டம்..!! நம்மோட சேர்ந்து இன்னும் பத்துப்பேரு.. டெயிலி காலைல எந்திரிச்சு குளிக்க ஆரம்பிச்சுடுவானுக..!! காப்பி அடிச்ச கவிதையை அந்த பீஸ்கிட்ட காட்டலாம்னு போனா.. நமக்கு முன்னாடியே நாலஞ்சு பேர் ஷோ ஓட்டிட்டு போயிருப்பானுக..!! ஹெவி காம்பட்டிஷனா இருக்கும்..!! எல்லாருக்கும் அல்வா கொடுத்து.. அந்த பீஸை நம்மைப் பாத்து ‘ஐ லவ் யூ..!!’ சொல்ல வைக்கிறதுக்குள்ள.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பா.. தாவு தீந்துடும்..!!

அப்புறம்.. கரெக்ட் பண்ணின பீஸ் நம்ம கையை விட்டுப் போகாம பாத்துக்குறது இருக்கே.. அது இதெல்லாம் விட பெரிய கஷ்டம்..!! ஆனா.. அது இந்த கதைக்கு தேவையில்லாததால.. கரெக்ட் பண்ற கஷ்டத்தோட நிறுத்திக்குவோம்..!!

என்னை காதலிக்கும் ஒரு ஜீவன் ஆக லேகா எனக்கு கிடைத்ததே எனக்கு அளவிலா சந்தோஷம்..!! அதிலும் அவள் தேவலோக அழகி (அவங்க பேரு ரம்பாவோ.. நமீதாவோல..?) ரேஞ்சுக்கு அம்சமாக இருந்தது எனக்கு டபுள் சந்தோஷம்..!! செருப்பு முதல் செல்போன் வரை அவளே எனக்கு செலவு செய்வது ட்ரிப்பில் சந்தோஷம்..!! அத்தனை சந்தோஷத்தையும் மொத்தமாக குழி தோண்டிப் புதைப்பது மாதிரி ‘லேகாவை கழட்டி விடவேண்டும்’ என்று அந்த ஆள் சொன்னது எனக்கு பயங்கர எரிச்சலை கிளப்பி விட்டது. அந்த எரிச்சலை அடக்க முடியாமலே கேட்டேன்.

“என்ன சீனியர்.. வெளையாடுறியா..?”

“வெளையாடுறனா..? சீரியஸா சொல்றேன் ஜூனியர்.. லேகாவை கழட்டி விட்டுடு..”

“யோவ்.. போய்யா..!! ரொம்ப கூலா வந்து அவளை கழட்டி விடுன்னு சொல்ற..? அதுலாம் முடியாது.. அவளை கரெக்ட் பண்றதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா..?”

“ஹாஹா..!! நீ என்ன கஷ்டப்பட்டேன்னு எனக்கு தெரியும் ஜூனியர்.. அந்த ஏழுமலையை எட்டி உதைச்சதை விட.. வேற என்ன பெருசா கஷ்டப்பட்டுட்டே..? அவளா வந்தா.. அவளா சிரிச்சா.. அவளா கைகொடுத்தா.. அவளா ஐ லவ் யூ சொன்னா..!! நீ என்ன பண்ணின..?”

“ம்ஹூம்.. அதுலாம் உன்கிட்ட சொல்லி புரிய வைக்க முடியாது..!! நான் அவளை சின்சியரா லவ் பண்றேன்.. உன் பேச்சை கேட்டு அந்த லவ்வுக்கு என்னால துரோகம் பண்ண முடியாது..!!”

“ஜூனியர்.. மொதல்ல நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! நான் உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்.. உனக்கு நான் கெடுதல் நெனைப்பேனா..? உனக்கு கெடுதல் பண்ணினா.. அது எனக்கு நானே கெடுதல் பண்ணிக்கிற மாதிரி..!! நீதான் நான்றதை ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு..!!”

“இருந்துட்டு போ.. நீதான் நானா இருந்துட்டு போ..!! ஆனா.. நான் ஒரு விஷயத்துல கமிட் ஆயிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்..!! அந்த லாஜிக் படி பாத்தா கூட.. உன் பேச்சை நான் கேட்க கூடாது..!!” நான் சீரியசாக சொல்ல,

“என்ன எழவெடுத்த லாஜிக்டா அது..? இங்க பாரு ஜூனியர்.. இந்த மாதிரி படத்துல வர்ற பன்ச் டயலாக்லாம் பேசி.. ஒரு பாழுங்கெணத்துல போய் விழுந்துடாத..!!” சீனியர் நக்கலடித்தார்.

“பாழுங்கெணறா..? யாரை சொல்ற நீ..?”

“லேகாவைத்தான்..!! சரியான ராட்சசி அவ..!! அவளை கட்டிக்கிட்டா.. உன் வாழ்க்கையே நாசமா போயிடும் ஜூனியர்..”

3

“சும்மா உளறாத சீனியர்.. லேகாவைப் பத்தி உனக்கு என்ன தெரியும்..?”

“ஹாஹா..!! நீ அவளை ஒருவருஷமா லவ்தான் பண்ணிருக்குற.. நான் அடிஷனலா.. அவ கூட இருபத்துநாலு வருஷம் குடும்பம் நடத்தி குப்பை கொட்டிருக்கேன்..!! எனக்கு அவளைப் பத்தி எல்லாம் தெரியும்.. உனக்குத்தான் அவளைப் பத்தி ஒரு எழவும் தெரியாது..!!”

“ஏன் தெரியாது.. நான் என் லேகாவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்.. அவளை பத்தி எல்லாம் தெரியும் எனக்கு..”

“ஓஹோ..? அப்போ நான் ஒரு கேள்வி கேக்குறேன்.. பதில் சொல்றியா..?”

“கேளு..”

“லேகாவுக்கு கராத்தே, குங்ஃபூ-லாம் தெரியும்.. அந்த மேட்டர் உனக்கு தெரியுமா..?”

“ம்ஹூம்.. தெரியாது..!!”

“கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுக்குவ..!!” சீனியர் பட்டென சொல்ல, திடுக்கென ஒரு பதற்றம் வந்து என்னை பற்றிக் கொண்டது.

“யோவ்.. எ..என்னய்யா சொல்ற..?” என் வாயிலிருந்து வார்த்தைகள் உதறலாக வெளிப்பட்டன.

“ஆமாம் ஜூனியர்.. சொன்னா நீ நம்பமாட்ட..!! கல்யாணம் ஆன நாள்ல இருந்தே ஆரம்பிச்சுட்டா.. காரணமே இல்லாம கன்னாபின்னான்னு அடி விழும்.. உப்புசப்பு இல்லாத மேட்டருக்குலாம் சப்புசப்புன்னு அறை விழும்..!! டெயிலி அடி உதைதான்..!! இருபத்து நாலு வருஷம்..!! ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்…!! அவகிட்ட அடிவாங்கி அடிவாங்கி.. என் உடம்புலாம் ரணரணமா ஆயிடுச்சு..!! கராத்தேலாம் பரவால ஜூனியர்.. கொஞ்சம் ப்ராக்டீஸ் எடுத்துக்கிட்டா.. சமாளிச்சுடலாம்..!! சில நேரங்கள்ல கையை முறுக்கிட்டு காட்டுத்தனமா அடிப்பா பாரு.. அதைத்தான் தாங்கிக்க முடியாது..!!” சீனியரின் குரலில் எக்கச்சக்க சோகம். பாவமாக இருந்தது.

“என்ன சீனியர்.. இப்படி பயமுறுத்துற..?”

“பயமுறுத்தலைப்பா.. உனக்கு ஃப்யூச்சர்ல வரப்போற ஃப்ராக்ச்சரைப் பத்தி சொல்றேன்..!! உனக்கு தம்மடிக்கிறது புடிக்கும்ல..?”

“ஆமாம்..”

“கல்யாணத்துக்கு அப்புறம் தம்மடிச்சா.. உன் நெஞ்சுலையே ஏறி மிதிப்பா..!!”

“ஐயையோ.. அப்போ தண்ணியடிச்சா..?”

“கு..” சீனியர் சொல்ல ஆரம்பிக்க,

“வேணாம் விடு.. எனக்கு புரிஞ்சு போச்சு..!!” என்றேன் நான் அவசரமாய்.

“ஐயையே.. நான் அதை சொல்லலை..!! ‘குடிக்கிறதைப் பத்தி கல்யாணத்துக்கு அப்புறம் நெனச்சே பாக்காதேன்’னு சொல்ல வந்தேன்..!!”

“ஓஹோ..????”

“மொத்தத்துல.. அவளை கல்யாணம் பண்ணிக்கிறதும் ஒண்ணுதான்.. கண்ணை தொறந்துக்கிட்டே கன்னி வெடி மேல காலை வைக்கிறதும் ஒண்ணுதான்..!! எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு.. ஒரே டெரர்ர்ரா இருக்கும் ஜூனியர்..!!”

சீனியர் அப்புறமும் கொஞ்ச நேரம் தன் மனைவியிடம் அடிவாங்கின கதையை விரிவாக.. அழுதுகொண்டே சொன்னார். அவர் சொன்னதெல்லாம் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நான் வேறு வழியில்லாமல் பொறுமையாக கேட்டுக் கொண்டேன். அவர் சொல்லி முடித்ததும் நான் அந்த கேள்வியை கேட்டேன்.

“ஒன்னு கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத..!! அவளோ கஷ்டப்பட்டு.. நீ எதுக்கு அவளோட குடும்பம் நடத்தனும்..? பேசாம டைவர்ஸ் பண்ணிட வேண்டியதுதான..?”

“ஏன்.. நான் உசுரோட இருக்குறது உனக்கு புடிக்கலையா..? நான் அவகிட்ட போய் டைவர்ஸ் கேட்டா.. ‘டை (die)’ மட்டுந்தான் கெடைக்கும்.. ‘வர்ஸ்’ கெடைக்காது..!!”

“ஐயையோ.. அவ்ளோ பெரிய ராட்சசியா..?” என்றேன் நான் போலி அதிர்ச்சியுடன்.

“ஆமாம் ஜூனியர்.. ஒரேடியா போட்டுத் தள்ளிடுவா..!!”

“ம்ம்ம்ம்.. நீ சொல்றதுலாம் நம்புறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சீனியர்.. அப்பாவியா இருக்குற என் லேகாவை.. அந்த மாதிரி அடங்கப் பிடாரியா, இமேஜின் கூட பண்ண முடியலை..!!”

“யார் அப்பாவி..? லேகாவா..? அவளைப் பத்தி என்ன தெரியும் உனக்கு..? அவ ரெண்டு வருஷம் படிச்ச காலேஜை விட்டுட்டு.. உன் காலேஜ்ல டைரெக்ட் தேர்ட் இயர் வந்து சேர்ந்தாளே.. அதுக்கு என்ன ரீசன்னு தெரியுமா..?”

“அந்த காலேஜ்ல ராகிங் தொல்லை ஜாஸ்தின்னு..”

“அதெல்லாம் சும்மா.. இவளை ராகிங் பண்றாங்களா..? இவ யாரையும் ராகிங் பண்ணாம இருந்தா சரிதான்..!! அவளோட ரவுடித்தனம் தாங்காம.. பழைய காலேஜ்ல இருந்து அவளை தொரத்தி விட்டுட்டாங்க..”

“ரவுடித்தனமா..? என்னய்யா சொல்ற..?” எனக்கு டென்ஷன் ஏறிக்கொண்டே சென்றது.

“பின்ன..? பழைய காலேஜ்ல ஏழெட்டு பேர் மண்டையை உடைச்சிருக்கா.. அவளைப் போய் அப்பாவின்ற..?”

“அவளைப் பாத்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியலையே சீனியர்..?”

“காரணம் இருக்கு ஜூனியர்.. உனக்கு அவளோட சுயரூபம் தெரியலை..!! அவ இப்போ ஒரு வருஷமா.. உடைக்காவிரதத்துல இருக்குறா.. அதான்..!!”

“என்னது..??? உடைக்காவிரதமா..??? உண்ணாவிரதம் தெரியும்.. அதென்ன உடைக்காவிரதம்..?”

“யார் மண்டையையும் ஒரு வருஷத்துக்கு உடைக்கிறது இல்லை’ அப்டின்னு ஒரு விரதம்..!!”

“என்னய்யா.. எல்லாம் புதுசு புதுசா சொல்ற..? எதுக்கு அப்படி ஒரு விரதம் இருக்குறா..?”

“சொல்றேன் ஜூனியர்.. இந்த வாரம் அவளுக்கு பர்த்டே வருது.. ஞாபகம் இருக்கா..?”

“ஆமாம்..”

“போன வருஷ பர்த்டே அதுவுமா.. அவளோட பழைய காலேஜ்ல பிரச்னை ஆயிடுச்சு..!! இவ ஒரு கம்ப்யூட்டர் மானிட்டரை தூக்கி.. ஒரு பையன் மண்டைல போட்டுட்டா..”

“என்னது..????? மானிட்டரைத் தூக்கி மண்டைல போட்டுட்டாளா..???” கேட்கும்போதே எனக்கு குலை நடுங்கியது.

“ஆமாம்.. அதனாலதான் அவளை காலேஜ்ல இருந்து தொரத்தி விட்டாங்க..!! அவ அப்பாவும், அண்ணனும் ‘நீ திருந்தவே மாட்டியா..?’ன்னு அவளை கன்னாபின்னான்னு திட்டிருக்காங்க..!!”

“ம்ம்ம்..”

“அப்போத்தான் அவ அண்ணன் அவளுக்கு ஒரு சேலன்ச் பண்ணிருக்கான்..”

“என்ன..?”

“இன்னும் ஒரு வருஷத்துக்கு யார் மண்டையையும் இவ உடைக்காம இருந்தா.. சொத்துல அவனோட ஷேர்ல பாதியை இவளுக்கு எழுதி வைக்கிறதா..!! இவளும் அந்த சேலஞ்சை அக்சப்ட் பண்ணிட்டு.. இப்போ..”

“உடைக்கா விரதத்துல இருக்குறா..!!”

“ஆமாம்..!!”

“ம்ம்ம்ம்.. ரொம்ப கேவலமான ப்ளாஷ்பேக்கா இருக்கு..!! சொத்துக்காக பலபேர் மண்டையை உடைச்ச கதைலாம் கேட்டிருக்கேன்..!! ஆனா.. யார் மண்டையையும் உடைக்காம விரதம் இருக்குறதை இப்போத்தான் கேள்விப்படுறேன்..!! ஆமாம்.. இந்த மேட்டர்லாம் உனக்கு எப்படி தெரியும்..!!”

“எல்லாம் அவளே சொன்னா..”

“அவளேவா..??”

“ஆமாம் ஜூனியர்.. இந்த பொறந்த நாளோட.. அவளோட அந்த விரதமும் முடியுது..!! அப்புறம் அவளோட கேரக்டர்லாம் கொஞ்சம் கொஞ்சமா உனக்கு தெரிய வரும்.. அப்போ இந்த மேட்டரும் ஒன்னு ஒன்னா வெளில வரும்..!!”

“ம்ம்ம்ம்.. என்னவோ போயா..!! நீ சொல்றதுலாம் நம்புற மாதிரியே இல்ல..!!” நான் இன்னும் நம்பிக்கை இல்லாமல் சொல்ல, சீனியர் கடுப்பானார்.

“அடப்பாவி.. விடிய விடிய கதை கேட்டு..”

“நயன்தாராவுக்கு பிரபுதேவா பெரியப்பான்னு சொல்றேன்றியா..?”

“அதை வேற மாதிரில சொல்வாங்க..?”

“நான் இப்படித்தான் சொல்வேன்..”

“அப்போ.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல..?”

“ஆமாம்..!!” Pundai Tamil Kamakathaikal

– தொடரும்

Leave a Comment