மலரே என்னிடம் மயங்காதே – 11 (Tamil Hot Sex Stories - Malarae Ennidam Mayangathae 11)

Tamil Hot Sex Stories – “நா..நான் இன்னொன்னு சொல்லணும்..!! என்னடா சின்னப்பையன் இவன்.. இவன்லாம் நமக்கு அட்வைஸ் சொல்றானேன்னு நெனைக்க கூடாது..”

“ம்ம்.. சொல்லு..”

1

“மலர் உங்கமேல உயிரையே வச்சிருக்காங்க ஸார்.. அவங்க எங்கிட்ட பேசினதை வச்சுதான் இதெல்லாம் சொல்றேன்..!! நீங்க உங்க மனசை மாத்திக்கிட்டு.. மலரையே மேரேஜ் பண்ணிக்கிறதை பத்தி.. கொஞ்சம் யோசிக்கணும்..!! அவங்களை மாதிரி ஒரு நல்ல வொய்ஃப் உங்களுக்கு கிடைக்க மாட்டாங்க..!!”

ஷ்யாம் அப்புறமும் நிறைய பேசிக்கொண்டிருந்தான். மலருடைய அருமை பெருமைகள்.. அவள் என் மீது வைத்திருக்கும் எல்லையில்லா காதல்.. அபி மீது அவள் கொண்டிருக்கும் விலைமதிப்பில்லா தாயன்பு..!! அவளை நான் மணந்து கொள்வதால் விழையப்போகும் நன்மைகள்.. கிடைக்கப்போகும் சந்தோஷங்கள்.. மற்றவர்களுடைய மனநிம்மதி..!! நான் அவன் சொன்னதெற்கெல்லாம் எரிச்சலுடன் ‘உம்..’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

ஏற்கனவே என் மனதுக்குள் ஏராளமான குழப்பங்கள்..!! இதில் இந்த ஷ்யாம் வேறு புதிதாய் எதை எதையோ சொல்லி.. மேலும் குழப்பினான்..!! நான் அதற்கப்புறமும் ஒரு கட்டிங் வாங்கி தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டேன். உடம்பு முழுவதும் எக்கச்சக்கமாய் போதை.. மனம் முழுவதும் டன் டன்னாய் குழப்பங்கள்..!! பாரை விட்டு வெளியே வந்தோம்.

பாருக்கு உள்ளே இருக்கும் வரை வெளியே நடந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் தெரியவில்லை. வெளியே வந்ததும்தான் அதன் வீரியம் புரிந்தது..!! நகரவே முடியாத மாதிரி மக்கள் கும்பல் கும்பலாய், நெருக்கம் நெருக்கமாய் நின்றிருந்தார்கள். சாலையின் இருபுறமும் இப்போது குழல்விளக்குகள் பளிச்சென எரிந்து.. பகல் பொழுது போல ஆக்கி வைத்திருந்தன. ‘விஷ்… விஷ்…’ என்று வான வெடிகள் மேலே செல்லும் சப்தமும், பின்பு ஆகாயத்தில் ‘டமால்.. டமால்..’ என வெடித்து சிதறும் சப்தமும்..!! ஒலிப்பெருக்கியில் LR ஈஸ்வரியின் கணீர் குரலில் அம்மன் பாடல்..!!

எனக்கு பட்டென புரிந்து போனது..!! அந்த திருவிழா..!! ஒரு வருடம் முன்பு.. என் கயல் என்னை விட்டுப் போனாளே.. அன்று என் கவனத்தை சிதற வைத்ததே.. அதே திருவிழா..!! என் வாழ்வின் உச்சபட்ச சோகத்தை நான் சந்தித்தேனே.. அந்த சோக நினைவுகளுடன் பின்னிப்பிணைந்து கிடக்கும் திருவிழா..!!

எனக்கு இப்போது தலை ‘விர்ர்ர்ர்…’ என சுழல ஆரம்பித்தது. ஒரு வருடத்துக்கு முந்தைய நினைவுகள் ‘பளீர்.. பளீர்..’ என என் மூளையை தாக்கின. கண்களின் பார்வை மங்குவது போல ஒரு உணர்வு.. மயக்கம் வரும்போல் தோன்றியது..!! அங்கிருந்து உடனே அகன்று விட வேண்டும் என்று நினைத்தேன்..!! வெடிச்சத்தமும், தூரமாய் கேட்ட செண்டை மேளங்களின் முழக்கமும், என் செவிப்பறையை இரக்கமே இல்லாமல் தாக்கின. நான் இரண்டு கைகளாலும் காதை இறுக மூடிக்கொண்டேன்.

“ஸார்… என்ன ஸார் ஆச்சு..??” ஷ்யாம் கேட்டபடி, தடுமாறிய என் தோளை பிடித்தான்.

“ஷ்..ஷ்யாம்.. ஷ்யாம்..” எனக்கு வாய் குழறியது.

“சொல்லுங்க ஸார்…”

“சீ..சீக்கிரம் இங்க இருந்து கெளம்பிடலாம்..”

“ஏன் ஸார்.. என்னாச்சு..?”

“எ..எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. ம..மயக்கம் வர்ற மாதிரி..”

“ஓ..ஓகே ஸார்.. கெளம்பிடலாம்..”

“கா..கார் அந்தப்பக்கம் நிறுத்திருக்கேன் ஷ்யாம்..”

“ம்ம்.. வாங்க ஸார்.. ரோட் க்ராஸ் பண்ணிடலாம்..”

“ம்ம்ம்..”

2

ஷ்யாம் என் கையை பிடித்து அழைத்து சென்றான். ‘கொஞ்சம் வழி விடுங்க.. வழி விடுங்க ப்ளீஸ்..’ என்று கும்பலை விலக்க முயன்றான். ஆனால் யாரும் அவ்வளவு எளிதாக எங்களுக்கு வழிவிட்டு விலகவில்லை. கும்பலுக்குள் நுழைந்து.. ஒவ்வொருவராக விலக்கி.. முண்டியடித்து.. அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் தள்ளிவிடப்பட்டு..!! ஒரு கட்டத்தில் ஷ்யாம் என் கையை பிடித்திருந்த பிடி விலகியது. தலையை சுற்றி பார்த்தேன். கும்பலுக்குள் எங்கு சென்றான் என்று தெரியவில்லை. தடியாய் இருந்த ஒரு ஆள் என் முதுகை பிடித்து தள்ளினான்..!! உள்ளே சென்றிருந்த விஸ்கி வேறு என் கால்களை பிண்ணிக்கொள்ள செய்தன..!! நான் தடுமாறினேன்..!!

எந்தப்பக்கம் செல்கிறோம் என்று தெரியாமலே கும்பலை விலக்கி விலக்கி.. நெரிசலில் இருந்து விடுபட முயன்றேன். செண்டை மேளங்களின் சத்தம் இப்போது வெகு அருகே கேட்டது. இடியென இறங்கி என் காதைப் பிளந்தது..!! வான வெடிகளின் ஓசையும், கரகாட்டம் ஆடுபவர்களின் சலங்கை ஒலியும் கூட, என் காதை குண்டூசி புகுந்தது போல துளைத்தன..!! ஒரு வழியாய் நெருக்கியடித்து நெரிசலில் இருந்து விடுபட்டபோது, நான் நடு ரோட்டில் வந்து நின்றிருந்தேன். நிமிர்ந்து பார்த்தேன்..!!

எதிரில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.. பல்லக்கில் அம்மன் வீற்றிருந்தாள்..!! ‘இன்னும் பத்து நாள்தான் அசோக்.. நாம மூணு பேராயிடுவோம்..’ கயல் கண்களில் கனவுடன் சொன்னாள்..!! பல்லக்கின் இருபுறமும் செண்டை மேளங்கள் ‘திடும் திடும்’ என முழங்கியபடி வந்தன..!! ‘ஓகே.. நூறு முத்தம்.. லிப்ஸ்ல.. போதுமா..??’ காதலாக கயலின் குரல்..!! ‘ஜல்.. ஜல்.. ஜல்..’ என சலங்கை ஒலிக்க, தலையில் கரகம் சுமந்து இரண்டு பேர் ஆடி வந்தார்கள்..!! ‘ஆஆஆஆவ்வ்… உன் பையன் உதைக்கிறான்டா..’ கயல் கத்தினாள்..!! சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள் நாக்கு சுழட்டி குழவை இட்டார்கள்..!! கயல் படிக்கட்டில் கடகடவென உருண்டாள்..!! அலகு குத்திக்கொண்டு.. விழிகளை அகலமாய் திறந்துகொண்டு.. நாக்கை நீளமாய் வெளியே துருத்திக் கொண்டு.. சிலர் சாமியாடினார்கள்..!! சிறகொடிந்த பறவையாய்.. உடலெல்லாம் வெடவெடக்க.. காதலும், ஏக்கமுமாய் பார்த்தபடி.. உதடுகள் துடிதுடிக்க ‘அசோக்..’ என்று கயல் அழைத்தாள்..!!

அவ்வளவுதான்..!! அதற்கும் மேலும் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை..!! இரண்டு கைகளாலும் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டேன்..!! எலக்ட்ரிக் ஷாக் வைத்தது போல மூளை துடித்தது.. செயலிழந்து போனது போல தோன்றியது..!! வெடித்து விடும்போல் இருதயம் கிடந்தது பதறியது..!! உடனே சாலையை கடந்து அந்தப்பக்கம் சென்று விட வேண்டும் என்று நினைத்தேன்.. நடந்தேன்..!! ஆனால் அதற்குள்.. எனது இமைகள் செருகிக்கொள்ள, கண்கள் இருண்டன..!! கால்கள் வலுவிழந்து தள்ளாடின..!! நான் நிலைகுலைந்து சரியவும், எதிரே வந்த ஒரு கார் என் மீது மோதி என்னை தூக்கி எறியவும் சரியாக இருந்தது..!!

எசகு பிசகாய் என் வலது கை எதிலோ சென்று இடிக்க, உள்ளே ஏதோ முறிந்தது..!! எனது நெற்றி எதன் மீதோ சென்று ‘நச்ச்ச்..’ என்று மோதியது..!! தூக்கி எறியப்பட்டு.. தார்ச்சாலையில் விழுந்து கடகடவென உருண்டேன்..!! முகம், கை, கால் எல்லாம் ரோட்டில் கிடந்த கல்லில் உராய்ந்து.. தோல் சிராய்க்கப்பட்டு.. திகுதிகுவென எரிந்து..!! உடலெங்கும் உச்சபட்ச வலி..!! அலறக்கூட அவகாசம் இன்றி நான் மயங்கிப் போனேன்..!! ‘ஸார்.. ஸார்.. ஸார்..’ என்று ஷ்யாம் கத்துவது மட்டும், எங்கோ தூரமாய் கேட்டது..!!

3

டியர் ஃப்ரண்ட்ஸ்..!! இது அஞ்சாவது எபிசொட்..!! அடுத்த எபிசோட்ல கதை முடிஞ்சிடும்..!!

இந்த எபிசோட்ல உங்களுக்கு ஒரு குயிஸ்: இந்த எபிசொட்ல வர்ற நாலு ஸீன்ல, ஒரு ஸீனை.. நான் ஒரு தமிழ் படத்துல இருந்து.. உருவிருக்கேன்னு சொல்லலாம்.. இல்ல.. இன்ஸ்பயர் ஆகி எழுதிருக்கேன்னும் சொல்லலாம்..!! பிரச்னை அது இல்ல..!! அது எந்த ஸீன், அது எந்த தமிழ் படம்.. அப்படின்னு முதல்ல கண்டு பிடிச்சு சொல்றவங்களுக்கு.. தக்க சன்மானம் (வேற என்ன.. வீணா போன ரெப்சு, நாசமா போன பாராட்டு..) வழங்கப்படும்..!!

ஒரே ஒரு ரூல்தான் : நான் நெனச்சிருக்குற ஆன்சரை சொல்லணும்.. என்னையும் அறியாம ஒன்னு ரெண்டு டயலாக், வேற ஏதோ படத்துல வந்த டயலாக்கா இருக்கலாம்.. அதெல்லாம் சொல்லப்படாது..!! ஓகேவா..??

எபிஸோட் – V

அன்று இரவு நடந்தவை எல்லாம் அரைகுறையாகத்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மூளை ஏடுகளில் பதிந்து போயிருக்கும் விஷயங்களை முடிந்த அளவு சேகரித்து சொல்கிறேன். எனக்கு சுய நினைவு வருவதும், பின் நினைவு தப்பி மயக்கமுறுவதும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தன. கண் மூடினால் கயலின் புன்னகை முகமும், கண் விழித்தால் மலரின் கண்ணீர் முகமுமே, திரும்ப திரும்ப விழித்திரையில் விழுந்து கொண்டிருந்தன. குழப்பமான கனவுகள் வேறு இடை இடையே..!!

டாக்டர் எழுதி தந்த மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு ஷ்யாம் அவசரமாக ஓடியது ஞாபகம் இருக்கிறது..!! ‘கொஞ்சம் வலிக்கும்.. பொறுத்துக்கங்க..’ என்று கையுறை மாட்டிக்கொண்டே ஒரு நர்ஸ் சொன்னது நன்றாக நினைவிருக்கிறது..!! ‘என்னைக்கும் என்கூடதானடா வருவ..? இன்னைக்கு மட்டும் ஏண்டா தனியா போன..?’ என்று பன்னீர் அழுகையின் இடையே அரற்றியது கனவில்லை என்று நினைக்கிறேன்..!! ‘எனக்கு எதுவும் வேணாம் ஷ்யாம்.. நீங்க சாப்பிட்டு வாங்க..’ என்று மலர் மூக்கை விசும்பிக்கொண்டே சொன்னது, நான் பாதி மயக்கத்தில் இருந்தபோது நிகழ்ந்தது..!! அபி அர்த்த ராத்திரியில் ‘வீல்….’ என அலறி, அசந்து தூங்கிய என்னை விழிக்க வைத்ததும் மறந்து போகவில்லை..!!

விழித்துக்கொண்டதும்.. உடலெங்கும் ஏறியிருந்த வலியின் தீவிரம் உணர்ந்தேன். வலி தந்த வேதனையில் உழன்றேன். சுயநினைவு முழுமையாய் திரும்பாமல்.. சுவாதீனமும் இல்லாமல்.. கனவில் கண்ட பிம்பங்களின் தாக்கத்தில்.. ‘கயல்.. மலர்.. அபி..’ என மாறி மாறி ஏதோ பேரை சொல்லி.. புலம்பினேன்..!! தரையில் டவல் விரித்து படுத்திருந்த பன்னீருக்கு என் புலம்பல் ஒலி கேட்கவில்லை..!! சேரில் அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த மலர், தன் உதடுகளை கடித்து முயன்றும் அடங்காமல், அவள் கண்களில் நீர் வெளிப்பட்டு கொட்டின..!!

நான் படும் வேதனையை நெடுநேரம் காண சகியாத மலர், அபியை தூக்கிக்கொண்டு வெளியே எழுந்து ஓடினாள்..!! வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே வெளிர் நீல உடை அணிந்த நர்ஸுடன் வந்து சேர்ந்தாள்..!! அந்த நர்ஸ் வலி நீக்கும் மருந்தை.. ஊசியை செருகி.. என் உடலுக்குள் செலுத்த.. ஓரிரு நிமிடங்களியே நான் நிம்மதியாய் உறங்கிப் போனேன்..!! ஆழ்ந்த உறக்கம்..!!

அடுத்த நாள் காலை எனக்கு விழிப்பு வந்ததுமே.. அனிச்சையாக எனது இடது கை கயலின் படத்தை தேடியது..!! கண்களை திறக்காமேல் கைப்பற்றினேன் அந்த படத்தை..!! இமைகளை திறந்து என் இதயராணியின் முகத்திலே விழித்தேன்..!!

ஒரு சில வினாடிகளுக்கு அப்புறந்தான்.. நான் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருக்கிறேன் என்ற உண்மையே எனக்கு உறைத்தது..!! அப்படியானால்.. இந்தப்படம் இங்கே எப்படி வந்தது..??? அதிர்ச்சியும் திகைப்புமாய் திரும்பினேன்..!! அங்கே.. கனிவும், கருணையுமாய் மலர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவள்தான் இதை செய்திருக்கவேண்டும் என உடனடியாய் எனக்கு புரிந்து போனது..!! அதற்குள் அவளே..

“காலைல அப்பா வீட்டுக்கு போயிட்டு வந்தார்.. எந்திரிச்சதும் நீங்க அக்கா போட்டோ தேடுவீங்கன்னு தெரியும்.. அதான் எடுத்துட்டு வர சொன்னேன்..” என்று ஒரு மாதிரி உலர்ந்து போன குரலில் சொன்னாள்.

அந்த நொடியில்.. எந்த மாதிரி உணர்ச்சிகளுக்கு நான் உள்ளாகியிருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..? ‘என் மீது இவளுக்கு இவ்வளவு அன்பா..?’ என உருகிப்போனேன்..!! எந்த அளவுக்கு என் உணர்வுகளை புரிந்து வைத்திருப்பவள் என்றால்.. இந்தமாதிரி ஒரு காரியத்தை மலர் செய்திருப்பாள்..?? நேற்று என் வார்த்தைகளால் சுடப்பட்டு.. அவள் வடித்த கண்ணீர்.. இப்போது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது..!! உடலை விட மனம் இப்போது நூறு மடங்கு அதிகமாக வலித்தது..!! Kundi Thadavum Tamil Hot Sex Stories

– தொடரும்

Leave a Comment