கண்ணாமூச்சி ரே ரே – 2 (Sex Stories In Tamil - Kannamoochi Rae Rae 2)

Sex Stories In Tamil – வார்த்தைகளில் வெளிப்படாத ஒருவகை அர்த்தம்.. குறிஞ்சியின் அந்த கூர்மையான பார்வையில் வெளிப்பட்டது..!! தீர்த்தபதியாலும் அந்த அர்த்தத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.. அவனையும் அறியாமல் அவனது தலை கவிழ்ந்துகொண்டது.. இப்போது சற்றே கம்மலான குரலில் சொன்னான்..!!

22

“மன்னிச்சுடு குறிஞ்சி.. இப்படி ஆகும்னு நான் எதிர்பாக்கல..!!”

“ப்ச்.. தப்பு பண்ணிட்டிங்க.. பெரிய தப்பு பண்ணிட்டிங்க..!!”

சலிப்பாக சொன்ன குறிஞ்சி, அந்த தகரப்பெட்டியில் தொடர்ந்து எதையோ தேடினாள்.. பிறகு மரத்தாலான அந்த சிறிய பெட்டியை உள்ளிருந்து வெளியே எடுத்தாள்.. சிறுக சிறுக சேர்த்த சில நகைகள் அடங்கிய பெட்டி..!! பச்சை நிறத்தாலான ஒரு துணியை கட்டிலில் விரித்து, அதன் மையமாக அந்த பெட்டியை வைத்தாள்.. கூரையில் தொங்கிய பானைக்குள் கைவிட்டு பணமுடிப்பை வெளியே எடுத்தாள்.. கொடியில் தொங்கிய சில உடைகளை அள்ளிக்கொண்டாள்..!! அவ்வளவையும் அந்த பச்சைத்துணியால் சுற்றி சிறு மூட்டையாக்கினாள்.. முதுகுக்கு குறுக்காக அந்த மூட்டையை அணிந்துகொண்டாள்..!!

“இந்தா.. இதையும் வச்சுக்கோ..!!”

அணிந்திருந்த பொன் நகைகளை கழற்றியிருந்த தீர்த்தபதி.. அவற்றை உள்ளங்கையில் வைத்து குறிஞ்சியிடம் நீட்டினான்..!! அவனை கூர்மையாக ஏறிட்ட குறிஞ்சி.. தலையை மெலிதாக அசைத்து ‘வேண்டாம்’ என்று மறுத்தாள்..!! அவன் மீதிருந்த பார்வையை விலக்காமலே.. அலமாரியில் இருந்து அந்த குறுவாளை எடுத்து தன் இடுப்பில் செருகிக் கொண்டாள்..!! ‘உன்னால் எனக்கு எத்தனை இடர்பாடுகள் பார்..’ என்பது மாதிரி இருந்தது அவள் தீர்த்தபதியை பார்த்த பார்வை..!!

“நேரம் ஆயிட்டு இருக்கு குறிஞ்சி.. எந்த நேரமும் அவங்க இங்க வரலாம்.. நீ சீக்கிரம் புறப்படு..!!”

தீர்த்தபதி சொல்ல, குறிஞ்சி நீளமாக ஒரு பெருமூச்சினை வெளிப்படுத்தினாள்.. சாளரத்தின் வெளியே சடசடத்த மழையை ஒருமுறை திரும்பி பார்த்தாள்.. கட்டிலில் கிடந்த அந்த சிவப்பு நிற அங்கியை கையில் எடுத்தாள்.. தனது உடலை முழுதும் போர்த்தும்படியாக தலையை சுற்றி அணிந்து கொண்டாள்.. கழுத்துப் பகுதியில் இருபுறமும் தொங்கிய நாடாக்களை சரக்கென இழுத்து முடிச்சிட்டாள்.. அவசரமாய் வாசலை நோக்கி நடந்தாள்..!!

தீர்த்தபதி பின்தொடர வீட்டிலிருந்து வெளிப்பட்டாள்..!! கும்மிருட்டு.. ஜிவ்வென்று கொட்டுகிற மழை.. மின்னல் வெளிச்சத்துடன் இடிமுழக்கம்.. ஏதோ ஒரு காட்டு விலங்கின் தூரத்து ஓலம்..!! மழையில் நனைந்து நடந்த குறிஞ்சி.. தலைகுனிந்து தயாராய் நின்றிருந்த அந்த குதிரையை நெருங்கினாள்.. அதன் முதுகில் கைபதித்து லாவகமாக மேலேறினாள்..!!

“பார்த்து கவனமா போ குறிஞ்சி..!!”

கனிவுடன் சொன்ன தீர்த்தபதியை ஒருகணம் சலனமில்லாமல் பார்த்தாள்..!! பிறகு.. குதிரையின் கடிவாளத்தை பிடித்து சரக்கென இழுத்தவள்.. ‘ஓவ்’ என்று சப்தமெழுப்பியவாறு கால்களை விரித்து குதிரையின் விலாப்பகுதியை உதைக்க.. அது உடனடி வேகமெடுத்து ‘விர்ர்ர்ர்ர்’ என்று கிளம்பியது..!! மழை நீரின் அடர்த்தியையும் மீறி, எதிர்க்காற்றின் அசுர வேகத்தில்.. அவள் அணிந்திருந்த சிவப்பு அங்கி உயரெழும்பி பறந்தது..!! ‘தடக்.. தடக்..’ என குளம்படி ஓசையுடன் பறந்து செல்கிற குதிரையை.. பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் தீர்த்தபதி..!!

குறிஞ்சியின் குதிரை அந்த இடத்தை விட்டு கிளம்பிய சில நொடிகளிலேயே.. வேறு திசையில் இருந்து அதே ‘தடக்.. தடக்..’ ஓசையுடன் நான்கு குதிரைகள் வந்தன.. கடிவாளம் இழுக்கப்பட்டு குறிஞ்சியின் வீட்டின் முன்பாக வந்து நின்றன..!! குறிஞ்சியை இழுத்து செல்ல இத்தனை சீக்கிரம் வருவார்கள் என்று தீர்த்தபதி சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. குழம்பிப் போனான்..!! கையிலிருந்த நகைகளை உடனே பின்புறமாக மறைத்தவன்..

“அ..அவளை இழுத்து செல்லத்தான் நானும் வந்தேன்.. அதற்குள்ள விஷயம் தெரிஞ்சு அவ தப்பிச்சுட்டா..!!”

என்று தடுமாற்றமாக சொன்னான்..!! தொடர்ந்து.. அவள் சென்ற திசையென தவறான திசையை காட்ட எண்ணி அவன் கையை உயர்த்துகையிலேயே..

“அதோ.. அங்க போறா பாரு..!!”

குதிரையில் வந்தவர்களில் ஒருவன்.. குறிஞ்சி சென்ற திசையை சரியாக கண்டறிந்து கொண்டான்..!! சற்றும் தாமதியாமல்.. நால்வரும் அதே திசையில் தங்கள் குதிரைகளை முடுக்கி விரைந்தனர்..!! ‘குறிஞ்சி இந்த ஊரை விட்டு சென்றால் போதும்’ என்று எண்ணியிருந்த தீர்த்தபதியின் நெஞ்சில் இப்போது ஒருவித கலக்கம்.. குற்ற உணர்வு ஒன்று அவனுடைய மனதில் மெலிதாக பரவ ஆரம்பித்தது..!!

23

கடும் மழை பொழிகிற மலைப்பிரதேசம்.. கரி பூசிவிட்ட மாதிரியாக அடர்இருள்.. நெருக்கமாய் வளர்ந்திருக்கிற காட்டுமரங்கள்.. அதற்குள்ளே வளைந்து நெளிந்து செல்கிற குறுகலான சாலை..!! அந்த சாலையில்.. சிவப்பு நிற அங்கி காற்றில் படபடக்க.. வெள்ளை நிற குதிரையில் குறிஞ்சி பறந்து கொண்டிருந்தாள்..!! சிறிது தூர இடைவெளியில்.. இன்னும் நான்கு குதிரைகளில்.. புவனகிரியின் ஆட்கள் அவளை விரட்டிக் கொண்டிருந்தனர்..!!

குறிஞ்சி குதிரையேற்றம் அறிந்தவள் என்றாலும், கைதேர்ந்தவள் என்று சொல்ல முடியாது..!! பின்தொடர்ந்து சென்றவர்களுக்கோ அது அன்றாட பணியும் பயிற்சியுமாக இருந்தது..!! குறிஞ்சிக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்துகொண்டே வந்தது..!!

குதிரையை விரட்டிக்கொண்டே.. குறிஞ்சி தலையை மெல்ல திருப்பி பின்னால் பார்த்தாள்..!! துரத்துபவர்கள் இப்போது தனக்கு இன்னும் நெருக்கமாக வந்திருப்பதை அறிந்ததும்.. அவளுக்குள் ஒரு நடுக்கம் பரவியது..!! மாட்டிக்கொள்வோமோ என்பது மாதிரியான ஒரு பயம்.. அவளுடைய மனதினை வந்து கவ்விக்கொண்டது..!! குதிரையின் வயிற்றை உதைத்து.. அதனை வேகம்கொள்ள தூண்டினாள்..!!

இடைவெளி நிறைய குறைந்து போனதும், நால்வரில் ஒருவன் திடீர் முடிவெடுத்தான்.. கையிலிருந்த வேல்க்கம்பை சுழற்றி, காற்றில் சரக்கென வீசினான்..!! மழைநீரை கூர்மையாக கிழித்து பறந்த அந்த வேல்க்கம்பு.. சரியாக சென்று குறிஞ்சியின் தோள்ப்பட்டையில் சதக்கென்று பாய்ந்தது..!!
“ஆஆஆஆஆஆ…!!!!”

குருதி பீய்ச்சியடிக்க அலறிக்கொண்டே குறிஞ்சி ஒருபக்கமாக சரிந்தாள்.. சமநிலை கிடைக்காத குதிரையும் அவளுடன் சேர்ந்து சரிந்தது..!! குதிரை சென்ற வேகத்துக்கு.. குறிஞ்சி தரையில் தூக்கி விசிறப்பட்டாள்..!! கல்லிலும் முள்ளிலும் காட்டுச்செடியிலும் கடகடவென உருண்டவள்.. கரும்பாறை ஒன்றில் சென்று நச்சென்று மோதவும்.. கண்கள் செருக சுய நினைவை இழந்தாள்..!! விரட்டி வந்தவர்கள் குதிரையின் வேகத்தை குறைத்து தரையில் குதித்தனர்..!!

அதே நேரத்தில்.. தீர்த்தபதி தனது நண்பன் முத்தழகனின் வீட்டில் இருந்தான்..!! குறிஞ்சியை விரட்டிக்கொண்டு அந்த நால்வரும் சென்றபிறகு.. தனது குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பியவன்.. நேராக நண்பன் வீட்டில்தான் வந்து நின்றான்..!!

வீட்டுக்குள்ளே.. கடும்குளிருக்கு கம்பளி போர்த்தியவாறும்.. காய்ந்துபோன தொண்டையுடன் ‘லொக் லொக்’ என்று இருமியவாறும்.. கட்டிலில் படுத்திருந்தாள் அந்த பெண்மணி.. முத்தழகனின் தாய்..!! தன்னை பெற்றெடுத்த தாயை சிறுவயதிலேயே இழந்திருந்த தீர்த்தபதி.. தனக்கு கடவுள் அளித்த இன்னொரு தாயாக கருதுபவள்..!!

“அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு..??” தீர்த்தபதி கேட்க,

“அப்படியேதான் இருக்கு..!!” கவலையாக பதில் சொன்னான் முத்தழகன்.

தீர்த்தபதி இப்போது நடந்து சென்று அந்த அம்மாவை நெருங்கினான்.. கட்டிலுக்கு குனிந்து அவளுடைய கையை வாஞ்சையாக பற்றிக்கொண்டான்..!! இமைகளை மெல்ல பிரித்து அவள் இவனை பார்க்க.. இவன் அவளை பாசமிகு பார்வை ஒன்று பார்த்தான்..!!

முத்தழகனின் தந்தை ஒரு சுகபோகி.. குறிஞ்சியின் அழகில் அவருக்கு ஒரு மயக்கம்..!! குடித்தது சூதாடியது போக தனது வருமானத்தின் ஒரு பெருமானத்தை.. குறிஞ்சியின் அழகை சுகிப்பதற்கென்று செலவழிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.. குறிஞ்சியின் குடிலிலேயே பெரும்பொழுதை கழித்தார்.. கட்டிய மனைவியை உதாசீனப்படுத்தியே வந்தார்..!!

நண்பனின் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளை மட்டுமே தீர்த்தபதியால் செய்ய முடிந்தது.. கணவனின் போக்கை கண்டு நண்பனின் அம்மாவுக்கு ஏற்பட்ட மனநோயை தீர்க்க, தீர்த்தபதிக்கு வழியேதும் தெரியவில்லை..!! ‘இது மனதில் உண்டான காயம்.. மருந்துக்கு குணப்படாது..’ என்று மருத்துவர் சொன்னது இன்னமும் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது..!! அம்மாவின் மனநோய் நீங்கவேண்டும் எனில்.. குறிஞ்சி இந்த ஊரில் இருக்கக்கூடாது என்பதை சிலநாட்கள் முன்புதான் நன்கு புரிந்து கொண்டிருந்தான்..!!

24

இப்போது.. அந்த அம்மாவின் கையை இதமாக தடவிக் கொடுத்தவாறே.. உலர்ந்து போன குரலில் சொன்னான்..!!

“உங்ககிட்ட சொன்னதை செய்து முடிச்சுட்டேன் அம்மா..!! இனிமே அவ இந்த ஊர்ல இருக்க மாட்டா.. அவளால உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.. உங்க கணவர் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டார்..!! உங்களுக்கு சீக்கிரமே சரி ஆகிடும் அம்மா.. கவலைப்படாதீங்க..!!”

தீர்த்தபதி அவ்வாறு சொன்னதை கேட்டதும், அந்த பெண்மணியின் கண்களில் ஒரு மின்னல் கீற்று.. உதடுகள் பிரித்து பலவீனமாக ஒரு நன்றிப்புன்னகையை உதிர்த்தாள்..!! உள்ளுக்குள் அரித்த குற்ற உணர்வை மறைத்துக்கொண்டு.. தீர்த்தபதியும் பதிலுக்கு புன்னகைத்தான்..!!

அடுத்தநாள் காலை..

காதுகளுக்கு உகாத ஓசையுடன் கதவு திறக்கப்பட.. கதிரவனின் வெளிச்சம் குறிஞ்சியின் முகத்தில் படர்ந்தது..!! இரவு முழுதும் தூங்காத அவளது விழிகள்.. அதிகாலையில்தான் சற்று அயர்ந்திருந்தன..!! அவளது நெற்றியிலிருந்தும் தோள்ப்பட்டையிலிருந்தும் வழிந்து உறைந்து போயிருந்த ரத்தத்தில் ஈக்களின் ரீங்காரம்..!! இமைகளை வெளிச்சத்துக்கு சுருக்கியவள், பிறகு கண்களை மெல்ல திறந்து பார்த்தாள்.. இரண்டு ஜோடி கால்கள் அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது..!! உடனே விருட்டென்று எழுந்து அமர்ந்தாள்.. கைகள் இரண்டையும் தன் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள்..!!

அவளுடைய கால்களில் ஒன்று இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்தது.. மேலாடையற்ற முதுகுப்புறத்தில் ஆங்காங்கே ரத்த விளாறுகள்.. கீழாடை கூட கிழிந்து கந்தலாகி போயிருந்தது..!! கன்னத்தில் காய்ந்துபோன கண்ணீர் தடம்.. சிவந்த உதடுகளின் ஒரு ஓரம், காயத்தில் கருத்து தடித்து போயிருந்தது..!! இரவு முழுவதும் நான்கைந்து மனித மிருகங்களால், பாலியல் ரீதியான சித்திரவதைகளை அனுபவித்து இருந்ததில்.. அவளுடைய உடலும் மனதும் சோர்ந்து போயிருந்தன..!!

“எழுந்திருடி வேசை..!!” வந்தவர்களில் ஒருவன் குறிஞ்சியின் தலைமுடியை கொத்தாகப் பற்றி மேலே தூக்க,

“ஆஆஆஆஆஆஆஆ..!!” வேதனையில் துடித்தவாறே அவள் மேலெழுந்தாள்.

அகழியில் மிக உயரமான இடம்.. உச்சிமலை எனப்படுகிற இடம்..!! வானை முட்டுவது போல நிற்கும் உச்சிமலையின் முகடு.. கடந்து செல்கிற மேகத்திரள்கள் சிறிது நேரம் தங்கியிருந்து.. தழுவி முத்தமிட்டிருந்து.. பிறகு பிரிய மனமில்லாமலேயே அந்த மலைமுகட்டை பிரிந்து செல்வன..!! உச்சிமலையின் ஒருபுறம்.. பச்சை பசேலென மரங்களுடன் கூடிய அடர்காடு..!! மறுபுறம்.. கரடுமுரடான கரும்பாறைகளுடன் கூடிய பள்ளத்தாக்கு.. உளி கொண்டு செதுக்கியது மாதிரி செங்குத்தான பள்ளத்தாக்கு.. ஆயிரத்து ஐநூறு அடிக்கும் அதிகமான அதல பாதாள வீழ்ச்சி..!! அந்தமலையின் அடிவாரத்தில் இருக்கிற சமவெளி நிலத்தில்.. அழகு வாய்ந்த குழலாறு ஓடும்..!! சமவெளியில் சலனமில்லாமல் ஓடுகிற குழலாறு.. சற்று தூரம் சென்றதும் சரேலென அருவியாய் வீழும்.. காடு மலை கடந்து போய் கபினியாற்றில் கலக்கும்..!!

ஊருக்குள்ளிருந்து உச்சிமலைக்கு செல்கிற சாலையும் சற்று கரடு முரடானததுதான்.. வீதியின் ஒருபுறம் ஆங்காங்கே குடிசைகள்.. மறுபுறம் நிலைக்குத்தான மலைச்சரிவு..!! காற்று இப்போது பலமாக வீசிக்கொண்டிருக்க.. காய்ந்த சருகுகள் வீதியில் பறந்துகொண்டிருந்தன..!! அந்த வீதியில்தான் குறிஞ்சி இழுத்து செல்லப்பட்டாள்..!! மேலாடையற்ற திறந்த மார்புகள்.. இடுப்புக்கு கீழே பெயருக்கு ஒட்டிக் கொண்டிருக்கிற கீழாடை..!! இரவு முழுதும் காலை பிணைத்திருந்த இரும்பு சங்கிலி.. இப்போது அவளது கைகளை பின்புறமாக இணைத்து பிணைத்திருந்தது..!! தளர்ந்துபோன கால்களுடன் தள்ளாடி தடுமாறி நடந்தாள்..!! வீசியடித்த காற்றுக்கு அவளுடைய கருங்கூந்தலும் கீழாடையும் தடதடத்துக் கொண்டிருந்தன..!!

வீதியின் ஒருபுறம் நின்று வேடிக்கை பார்க்கிற ஊர்மக்களை.. மூக்கு நுனியில் ஊசலாடுகிற ரத்ததுளியுடன் பார்த்தாள் குறிஞ்சி..!! இந்த ஊருக்குள் முதல்முதலாய் அடியெடுத்து வைத்த அந்த நிகழ்வு.. அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது..!! மாலைக்கழுத்தும், மஞ்சள் தாலியுமாய்.. தகரப்பெட்டியும், சுருட்டிய பாயுமாய்.. கணவனின் தோள் உரசி, கனவுகள் சுமந்த கண்களுமாய் நடந்து வந்த ஞாபகம்..!! அப்போதும் இப்படித்தான் வேடிக்கை பார்த்தனர் இந்த ஊர்மக்கள்..!! Mulai Kasakkum Sex Stories In Tamil

– தொடரும்

Leave a Comment