ஐ ஹேட் யூ பட் – 30 (Latest Tamil Sex Stories - I Love U But 30)

Latest Tamil Sex Stories – “ஆமாம்..!! நீங்..” அசோக் முடிப்பதற்கு முன்பே

“ஹலோ தம்பி.. எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா..??” அடுத்த முனை அவசரப்பட்டது.

“நான் நல்லாருக்குறது இருக்கட்டும் ஸார்.. மொதல்ல நீங்க யார்னு சொல்லுங்க..!!”

“ஹாஹா.. என்னை ஞாபகம் இல்லையா தம்பி..??”

“ப்ச்.. ஃபோன்ல உங்க வாய்ஸ் மட்டுந்தான் ஸார் வரும்.. மூஞ்சிலாம் வராது..!!”

“ஹாஹா.. நல்லா தமாஷா பேசுறீங்க..!! ரெண்டு வாரம் முன்னாடி நாம ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம்.. இப்போ ஞாபகம் வருதா..??”

“ச..சந்திச்சுக்கிட்டோமா..?? இ..இல்லைங்க.. எ..எனக்கு சரியா..” இப்போது அசோக் குழப்பத்தில் தடுமாற,

“ந.. ஞா..ப்ப்.. பா..க்க்…” அடுத்த முனையில் வாய்ஸ் ப்ரேக் ஆனது.

“ஸார்.. உங்க வாய்ஸ் ப்ரேக் ஆகுது.. !!”

“நா.. பா..க்க்… ஞா..ப்ப்.”

“ஹலோ.. ஹலோ.. இங்க கொஞ்சம் சிக்னல் வீக்கா இருக்கு.. ஒரு நிமிஷம் இருங்க.. நான் வெளில வர்றேன்..!!”

அசோக் சேரில் இருந்து எழுந்து கொண்டான். வெளியில் சென்று பேசிவிட்டு வருவதாக ப்ரியாவிடம் சைகை செய்தான். அவளும் ‘போய் பேசி விட்டு வா..!!’ என்று அனுமதி அளிப்பது போல இமைகளை மெல்ல மூடி திறந்தாள். அசோக் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அந்த அறையை ஒட்டியே இருந்த எக்ஸிட் கதவுக்கு ஐடி கார்டை காட்ட, அது பட்டென்று திறந்து கொண்டது. வெளிப்பட்டு பால்கனிக்குள் பிரவேசித்தான்.

“ஹ்ம்ம்.. இப்போ சொல்லுங்க ஸார்..!!”

“என் பேர் வரதராஜன் தம்பி.. ரெண்டு வாரம் முன்னாடி நாம சந்திச்சுக்கிட்டோம்.. நான் தவறவிட்ட தாலிச்சரடை திரும்ப எங்கிட்ட கொண்டு வந்து குடுத்தீங்களே.. இப்போ ஞாபகம் வருதா..??” அந்தப்பக்கம் வரதராஜன் சொல்ல, இங்கே அசோக்கிற்கோ பயங்கர ஆச்சரியம்.

“அட.. நீங்களா ஸார்..??? நான் யாரோன்னு நெனச்சு.. ஹாஹா..!! ஹ்ம்ம்.. நல்லா ஞாபகம் இருக்கு.. சொல்லுங்க ஸார்.. எப்படி இருக்கீங்க..??”

“நான் நல்லாருக்கேன் தம்பி.. நீங்க எப்படி இருக்கீங்க..??”

“நானும் நல்லா இருக்கேன் ஸார்..!! வாட் எ சர்ப்ரைஸ் திஸ் இஸ்..?? நீங்க எனக்கு கால் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல..!! அதுசரி.. என் நம்பர் எப்படி உங்களுக்கு கெடைச்சது..??”

“சொல்றேன் தம்பி.. அதுக்கு முன்னாடி உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்..!!”

“எ..என்ன..??”

“உ..உங்க அண்ணனும் அண்ணியும் உங்களுக்கு ஒரு பொண்ணு பாத்தாங்கல்ல..?? அ..அந்தப்பொண்ணு வேற யாரும் இல்ல தம்பி.. என் மகதான்..!!” வரதராஜன் தயங்கி தயங்கி சொல்ல, அசோக்கை ஒருவித ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் தாக்கின.

“ஓ..!!”

“நேத்து உங்க அண்ணன் உங்களோட ஃபோட்டோ அனுப்பினதும்தான்.. நீங்கதான் பையன்னு எனக்கு தெரியவந்தது..!!”

வரதராஜன் சொல்லிமுடித்து அமைதியாக இருக்க, அசோக்கிற்கு இப்போது என்ன பேசுவதென்றே புரியவில்லை. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை அவன் எதிர்பார்த்திரவே இல்லை. ஒருவித அவஸ்தை உணர்வுடன் தலையை சொறிந்தவன், அப்புறம் சற்றே வருத்தமான குரலில் சொன்னான்.

“ஸார்.. எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலை..!! நான் சும்மா வெளையாட்டுக்கு சொன்னதை.. என் அண்ணன் சீரியஸா எடுத்துக்கிட்டு.. எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டான்.. ஆனா நான்..”

“ம்ம்.. அண்ணன்ட்ட பேசினேன் தம்பி.. அவர் சொன்னாரு.. உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு..!! ஆனா.. எனக்கு அப்படியே விட்டுட மனசு இல்ல..!! நீங்க எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்குறதால.. உங்ககிட்ட கொஞ்சம் பேசிப்பாக்கலாம்னு தோணுச்சு.. அதான் அண்ணன்கிட்ட உங்க நம்பர் வாங்கி..”

“எங்கிட்ட பேசுறதுக்கு என்ன ஸார் இருக்குது..??”

“இல்ல தம்பி.. நீங்கதான் பையன்னு தெரிஞ்சதும், நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுதுன்னு ரொம்ப நிம்மதியா இருந்தது..!! ஆனா இப்போ..”

“ஹ்ம்ம்..!!”

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க தம்பி.. உங்க மனசுல ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தா.. தயங்காம எங்கிட்ட சொல்லுங்க..!! எனக்கு என் பொண்ணு வாழ்க்கைதான் ரொம்ப முக்கியம்..!!”

“ஹையோ.. என்ன ஸார் நீங்க..?? அப்படிலாம் எதுவும் இல்ல..!! இந்த பிரச்னையே வேற..!!”

“வேற என்ன தம்பி பிரச்னை..?? எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க..!!” வரதராஜன் தயங்காமல் கேட்டுவிட, அசோக்தான் சற்று தடுமாறினான். அப்புறம் தயங்கி தயங்கியே சொன்னான்.

“நா..நான்.. நான் வேற ஒரு பொண்ணை ரொம்ப நாளா லவ் பண்றேன் ஸார்.. அதான் பிரச்னை..!!”

“ஓ..!!” வரதராஜனின் குரலில் ஒருவித ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.

“டைம் எல்லாம் கரெக்டா செட் ஆறப்போ.. நானே வீட்ல சொல்லலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ளே அவங்க அவசரப்பட்டு.. பொண்ணு பாக்க ஆரம்பிச்சு.. அதான் இந்த தேவையில்லாத கன்ஃப்யூஷன்லாம்..!!”

“ஹ்ம்ம்.. புரியுது தம்பி.. இது நான் கொஞ்சம் எதிர்பார்த்ததுதான்..!!”

“எ..என்ன எதிர்பார்த்தீங்க..??”

“ஒருவேளை காதல் விவகாரமா இருக்குமோ.. அதான் கல்யாணம் வேணாம் சொல்றீங்களோன்னு..!!”

“ஹ்ம்ம்.. ஆமாம் சார்.. அதான் இந்தக் கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொன்னேன்..!! இந்த விஷயம் இன்னும் எங்க வீட்டுக்கு தெரியாது.. ப்ளீஸ் ஸார்.. நீங்க எதுவும் சொல்லிடாதீங்க..!!”

“இல்ல தம்பி.. நான் சொல்லல.. எனக்கெதுக்கு அந்த வேலை..!!”

“ஹ்ம்ம்… அப்புறம்.. நீ..நீங்க.. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க ஸார்.. உங்க பொண்ணுக்கு என்னை விட நல்ல மாப்ளையா கெடைப்பான்..!!” அசோக் அவருக்கு ஆறுதலாக சொன்னான்.

“ஹாஹா.. சரி தம்பி.. உங்க வாக்கு பலிக்கட்டும்..!!”

வரதராஜன் ஒரு மாதிரியான விரக்தி சிரிப்புடன் சொன்னார். அசோக் அதற்குமேல் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக இருக்க, சில வினாடிகளில் வரதராஜனே ஆரம்பித்தார்.

“வீட்ல சீக்கிரம் சொல்லிடுங்க தம்பி.. லேட் பண்ணாதீங்க.. உங்களுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல..?? வீட்ல எல்லாரோட சம்மதத்தோடவும்.. அந்தப்பொண்ணு கூடவே உங்க கல்யாணம் நடக்கனும்னு.. நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்..!!”

“தேங்க்ஸ் ஸார்.. சீக்கிரமே சொல்லிடுறேன்..!! கல்யாணத்துக்கு உங்கள கண்டிப்பா கூப்பிடுவேன்.. நீங்களும் மறக்காம வந்துடனும்..!!” அவர் மகளுடைய திருமணத்திற்கு அவருக்கே அழைப்பு விடுத்தான் அசோக்.

“ஹாஹா.. கண்டிப்பா தம்பி..!! நானும் என் பொண்ணு கல்யாணப் பத்திரிகை உங்களுக்கு அனுப்புறேன்.. நீங்களும் கட்டாயம் கலந்துக்கனும்..!!” வரதராஜனும் நடக்கப்போவது புரியாமல் பேசினார்.

“ஓகே ஸார்.. கண்டிப்பா வர்றேன்..!!”

“ஹ்ம்ம்.. பொண்ணு கொஞ்சம் குண்டா இருந்தாலும்.. நல்ல முக லட்சணம்தான் தம்பி.. உங்களுக்கு நல்ல பொருத்தமாதான் இருந்தது..!!” வரதராஜன் திடீரென சொன்னார்.

“யா..யாரை சொல்றீங்க..??” அசோக் குழப்பமாக கேட்டான்.

“அதான் தம்பி.. அன்னைக்கு உங்ககூட வந்த பொண்ணு.. அந்தப் பொண்ணைத்தான நீங்க விரும்புறீங்க..??”

வரதாராஜன் செண்பகத்தை மனதில் நினைத்துக்கொண்டு அந்தக்கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அந்தக் கேள்வியை அசோக் சரியாக புரிந்துகொள்ள முடியாத வகையில், அவனுக்கு பின்பக்கமாக இருந்து வந்த அந்த ‘லொட்.. லொட்..’ சப்தம் அவனுடைய கவனத்தை சிதற செய்தது. அசோக் திரும்பி பார்த்தான். கண்ணாடி தடுப்புக்கு அந்தப்பக்கமாக ப்ரியா நின்றுகொண்டிருந்தாள். ‘என்னாச்சு..?? சீக்கிரம் வா..!!’ என்பது போல பொறுமையற்றவளாய் இவனைப்பார்த்து சைகை செய்தாள். இவனும் ‘இரு.. இரு.. இதோ வந்துடறேன்..’ என்பது மாதிரி சைகையாலே அவளுக்கு பதில் சொல்லிவிட்டு, சற்றே பரபரப்பு தொற்றிக்கொண்டவனாய் மீண்டும் ஃபோனுக்கு காது கொடுத்தான்.

“என்ன தம்பி.. நான் சொன்னது கரெக்ட்தான..??” வரதராஜன் கேட்க,

“ஆங்.. கரெக்ட்தான் ஸார்..!!” அசோக் அவனையும் அறியாமல் அவனுக்கே ஆப்பு வைத்துக் கொண்டான்.

“ஹாஹா.. கரெக்டா கண்டுபுடிச்சிட்டேன் பாத்தீங்களா..??” வரதராஜன் பேசியதை கவனிக்காமல், அசோக் இப்போது அவசரமாக..

“ஸார்.. எனக்கு இங்க கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.. நாம இன்னொரு நாளைக்கு பொறுமையா பேசலாமா.. ப்ளீஸ்..??” என்றான்.

“தம்பி தம்பி.. ஒரே ஒரு நிமிஷம்.. உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. என் பொண்ணு கூட உங்க கம்பனிலதான்..” வரதராஜன் ஆரம்பிக்க, அசோக் அவரை இடைமறித்தான்.

“ஸார்.. ப்ளீஸ் ஸார்.. என் பாஸ் என்னை இங்க கூப்பிட்டுட்டே இருக்குறா.. அவ சரியான லூஸு ஸார்.. என்னைக்காவதுதான் அவளுக்கு மூளைலாம் ஒழுங்கா வேலை செய்யும்..!! இன்னைக்குத்தான் கொஞ்சம் புத்தி சுவாதீனத்தோட பேசுறா.. இப்போ நான் போகலைன்னா.. அப்புறம் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுனாலும் ஏறிரும்..!! சரியா.. நாம இன்னொரு நாள் பேசலாம்.. பை..!!”

“ஹாஹா.. சரி தம்பி.. இன்னொரு நாள் பேசலாம்..!!”

அசோக் காலை கட் செய்தான். ஐடி கார்ட் ஸ்வைப் செய்து மீண்டும் உள்ளே சென்றான். ப்ரியா மீட்டிங் அறைக்குள் சென்று அமர்ந்திருந்தாள். அசோக்கும் அந்த அறைக்குள் நுழைந்தான். அவள் முகத்தில் எரிச்சல் கொப்பளிக்கும் என்று எண்ணியிருந்த அசோக் ஏமாந்து போனான். ப்ரியா இன்னும் அதே முக மலர்ச்சியுடனும், இதழ் புன்னகையுடனுமே அமர்ந்திருந்தாள். இவனை பார்த்ததும்..

“யார் ஃபோன்ல..??”

“அது ஒரு பெருசு.. செம ப்ளேட் போட்டுருச்சு..!!” சொல்லிக்கொண்டே அசோக் அவளுக்கு எதிரே அமர்ந்தான்.

“ஹ்ம்ம்.. ராங் நம்பர் மாதிரி ஆரம்பிச்ச..?? அப்புறம் பாத்தா சிரிச்சு சிரிச்சு ரொம்ப நேரம் பேசிட்டு இருக்குற..??”

“ஹாஹா.. ராங் நம்பர் இல்ல.. தெரிஞ்சவர்தான்..!! சரி அவரை விடு.. நம்ம மேட்டருக்கு வா..!! ஹ்ம்ம்ம்… எங்க விட்டோம்..?? ஆங்.. எதுக்கு உன் மேல எனக்கு கோவமான்னு கேட்ட..??”

“நான் கேட்டதுக்கு காரணம் இருக்கு அசோக்.. அதை அப்புறம் சொல்றேன்..!!”

“ஏன்.. இப்போ சொன்னா என்ன..??”

“ப்ச்.. அப்புறம் சொல்றேன்றன்ல.. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..!!”

ப்ரியா சொல்லவும், அசோக் சில வினாடிகள் அவளுடைய முகத்தையே அமைதியாக பார்த்தான். மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் நெற்றியை சுருக்கி யோசிப்பது மாதிரி பாவ்லா செய்துகொண்டே ஆரம்பித்தான்.

“ஹ்ம்ம்.. என்ன சொல்றது..?? கோவம் கொஞ்சம் இருக்கு.. ஆனா..”

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் பேச்சுக்கு மீண்டும் ஒரு இடையூறு..!! இந்தமுறை இவர்கள் அமர்ந்திருந்த அறைக்கதவு ‘லொட்.. லொட்..’ என்று தட்டப்பட்டது. இருவரும் தலையை திருப்பி பார்த்தார்கள். வெளியே கவிதா நின்றுகொண்டிருந்தாள். ப்ரியா ‘உள்ள வா..’ என்பது போல சைகை செய்ய, அவள் கைப்பிடி திருகி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“என்ன கவிதா..??” ப்ரியா கேட்டாள்.

“உன் மொபைல் அங்க அடிச்சுட்டே கெடக்குது ப்ரியா.. அதான் சொல்லலாம்னு வந்தேன்..!!”

“ஓ.. மொபைலை ரூம்லேயே விட்டு வந்துட்டனா.. ச்ச..!!” ப்ரியா தலையில் தட்டிக்கொண்டாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

“ஹேய்.. வெயிட் பண்ணு அசோக்.. இதோ வந்துடறேன்..!!” என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றாள்.

ஓட்டமும் நடையுமாக சென்று தனது அறைக்குள் நுழைந்தாள். டேபிள் மீது அலறிக்கொண்டிருந்த செல்போனை அவசரமாய் எடுத்து கால் பிக்கப் செய்தாள். காதில் வைத்துக் கொண்டதுமே,

“சொல்லுங்க டாடி..!!” என்றாள்.

“என்னம்மா.. வேலையா இருந்தியா..??” அடுத்த முனையில் வரதராஜனின் குரல் சோர்வாக ஒலித்தது.

“கொஞ்சம் வேலைதான்.. பரவால சொல்லுங்க..!! என்ன.. திடீர்னு கால் பண்ணிருக்கீங்க..??”

“அ..அது.. அது வந்து..” அவர் தயங்கினார்.

“ஹ்ம்ம்.. சொல்லுங்க டாடி..!!”

“எ..எப்படி அதை சொல்றதுன்னு எனக்கு தெரியலைம்மா.. சொல்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு..!!” அப்பாவின் குரலில் ஒரு அதீத கவலை தொனிக்க,

“என்னாச்சு டாடி..??” ப்ரியா இப்போது சற்றே கலவரமாய் கேட்டாள்.

“நே..நேத்து சொல்லிட்டு இருந்தன்ல.. அ..அந்த எடம் நமக்கு அமையலம்மா..!!” வரதராஜன் தயங்கி தயங்கி சொன்னார்.

“எ..என்ன டாடி சொல்றீங்க..??”

“ஆமாம்மா.. பையன் வீட்டுக்கு நேராவே போயிட்டு வர்றேன்னு காலைல சொல்லிருந்தன்ல..?? கொஞ்ச நேரம் முன்னாடி.. வரலாமான்னு கேக்குறதுக்காக பையனோட அண்ணனுக்கு கால் பண்ணினேன்.. அவரு ‘வரவேணாம்.. இந்த சம்பந்தம் அமைய நாங்க குடுத்து வைக்கலை..’ன்னு சொல்லிட்டாரு..!!”

“ஏ..ஏன் அப்டி சொன்னாரு..??” எகிறுகிற இதயத்துடிப்புடன் ப்ரியா கேட்டாள்.

“என் தம்பிக்கு உங்க பொண்ணை புடிக்கலைன்னு சொன்னாரு..!!” வரதராஜன் சொல்ல, ப்ரியாவின் இதயத்தை இப்போது பக்கென்று ஒரு பயம் வந்து கவ்வியது.

“அ..அவன்.. அவன் என் ஃபோட்டோ பாத்தானாமா..??” வார்த்தைகள் அவளிடம் இருந்து தடுமாற்றமாய் வெளிப்பட்டன.

“அது தெரியலைம்மா.. ஆனா.. அவர் ஏன் உன்னை புடிக்கலைன்னு சொன்னாருன்னு.. எனக்கு தெரிஞ்சு போச்சு..!!”

“ஏ..ஏன்..??” ப்ரியா குழப்பமும் கவலையுமாய் கேட்டாள்.

“அந்த தம்பி வேற ஒரு பொண்ணை விரும்புதும்மா.. அது அவங்க வீட்டுக்கு இன்னும் தெரியாது.. அதான் எல்லா கொழப்பமும்..!!”

“அ..அதெப்படி உங்களுக்கு தெரியும்..??”

“அந்த தம்பிதான்மா சொல்லுச்சு..!! அவங்க அண்ணன்ட்ட நம்பர் வாங்கி.. இப்போத்தான் அந்த தம்பிட்ட பேசினேன்..!!”

“இப்போவா..????”

“ஆமாம்மா.. பேசி முடிச்சுட்டு உடனே உனக்கு ஃபோன் அடிக்கிறேன்..!!”

வரதராஜன் சொல்ல, ப்ரியா கண்களை சுருக்கிக்கொண்டு, தனது நெற்றியை பற்றி பிசைந்தாள். ‘அப்படியானால்.. சற்றுமுன் அசோக்கிற்கு வந்த கால் அப்பாவிடம் இருந்தா..?? அவன் ப்ளேடு, பெருசு என்று சொன்னதெல்லாம் அப்பாவைத்தானா..??’

“ந..நல்லா தெளிவா கேட்டீங்களா டாடி..?? வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னானா..??” ப்ரியா நெஞ்சில் வேதனையும் குரலில் நப்பாசையுமாய் கேட்டாள்.

“ஆமாம்மா.. தெளிவா கேட்டுட்டுத்தான் சொல்றேன்.. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கத்தான அந்த தம்பிக்கு நான் ஃபோனே பண்ணினேன்.. அதை தெளிவா கேக்காம இருப்பனா..?? அந்தப்பொண்ணை கூட நான் பாத்திருக்கேன்மா..!!”

“எ..எந்தப் பொண்ணை..??” ப்ரியா உதறலாக கேட்டாள்.

“அந்த தம்பி விரும்புற பொண்ணைம்மா..!! அன்னைக்கு அவர்கூட ஒரு பொண்ணு பைக்ல வந்தான்னு சொன்னேன்ல.. அந்தப் பொண்ணுதான்..!! அந்தப்பொண்ணைத்தான் அவர் ரொம்ப நாளா விரும்புறாராம்..!!”

வரதராஜன் சொல்லிக்கொண்டே போக.. ப்ரியா இப்போது அப்படியே நொறுங்கிப் போனாள்..!! அவளுடைய இதயத்தில் யாரோ ஈட்டியை பாய்ச்சியது மாதிரி இருந்தது அவளுக்கு..!! கால்கள் வலுவிழந்து போனவளாய் பொத்தென்று சேரில் அமர்ந்தாள்.

‘அவ்வளவுதானா..?? அவன் எனக்கு இல்லையா..?? வேறொருத்திக்கு சொந்தமானவனா என் அசோக்..?? எல்லாம் முடிந்து போயிற்றா..?? என் காதலுக்கு நேர்ந்த கதி இதுதானா..?? இத்தனை நாளாய் கண்ட கனவெல்லாம் கானல் நீரா..??’

ப்ரியாவுக்கு கண்களில் பொசுக்கென்று கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. உதடுகளை கடித்து அவள் கட்டுப்படுத்த முயன்றும், உடைப்பெடுத்து கன்னம் வழியாக ஓடியது. அவள் அவசரமாய் அந்த கண்ணீரை தன் புஜத்தில் துடைத்துக் கொண்டாள். மூக்கை ஒருமுறை உறிஞ்சிக் கொண்டாள்.

அசோக்கின் மீது இப்போது அவளுக்கு வேறொரு விதமான கோவமும் திடீரென வந்தது. ‘இத்தனை நாளாய் யாரையோ காதலித்துக் கொண்டு.. அந்த விஷயத்தை கூட என்னிடம் சொல்லவில்லையே அவன்..?? என்னை காதலியாக நினைக்கத்தான் அவனுக்கு மனதில்லை என்றால்.. நல்ல தோழியாக கூட அவன் என்னை கருதவில்லை போலிருக்கிறதே..?? அப்படி கருதியிருந்தால் அவனுடைய காதலை பற்றி என்னிடம் மறைத்திருப்பானா..?? எனக்கு தெரியாமல் எந்த பெண்ணை அப்படி ரகசியமாக காதலிக்கிறான்..?? ஒருவேளை.. ஒருவேளை..’ ப்ரியாவின் மனதில் ஒரு குறுகுறுப்பு எழ,

“அ..அந்தப்பொண்ணு எப்படி இருந்தா டாடி..??” தன் அழுகையை மறைத்துக்கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.

“நல்லா குண்டா இருந்ததும்மா.. அவரை மாமா மாமான்னு கூப்பிட்டுச்சு..!!”

‘சந்தேகமே இல்லை.. செண்பகமேதான்..!! காதலிக்கிறார்களா இருவரும்..?? மாமா மாமா என்று அவள் அவனிடம் குழையும்போதே எனக்கு புரிந்திருக்க வேண்டும்..!! ச்சே.. எவ்வளவு ஏமாளியாக இருந்து விட்டேன்..??’ ப்ரியா அவ்வாறு வேதனையாக நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வரதராஜன் ஒரு பெருமூச்சுடன் சொன்னார்.

“ஹ்ஹ்ம்ம்ம்.. ஒருவேளை நீ அந்த தம்பியை சந்திச்சு பேச நெனச்சிருக்கியோன்னு தோணுச்சுமா ப்ரியா.. தேவை இல்லாம இன்னொரு கொழப்பம் வரவேணாம்னுதான் இப்போ அவசரமா உனக்கு ஃபோன் பண்ணுனேன்..!!”

‘ஆமாம்.. அப்பா சொல்வதும் சரிதான்.. அவனுடைய மனதை அறிந்து கொள்ளாமல் என்னுடைய காதலை அவனிடம் சொல்ல துணிந்து விட்டேன்..!! நல்லவேளை.. அவனிடம் எதுவும் சொல்லவில்லை.. நான் வெட்கமில்லாமல் ‘ஐ லவ் யூ..’ என்று அவனிடம் வழியப்போய்.. அதைக்கேட்டு அவன் கைகொட்டி சிரித்திருந்தால்..?? என் நிலைமை எவ்வளவு அவமானகரமானதாக இருந்திருக்கும்.. கேவலம்தானே..?? இல்லை.. இந்த விஷயம் அசோக்கிற்கு தெரியவே கூடாது..!!’ Pundai Nakki Edukkum Latest Tamil Sex Stories

– தொடரும்

Leave a Comment