என்னருகில் நீ இருந்தால் – 1 (Ennarugil Nee Irunthal)

This story is part of the என்னருகில் நீ இருந்தால் series

    நான் கம்பெனியில் ஒரு முக்கியமான டாக்குமெண்டை உட்காந்து டைப் செய்துக் கொண்டிருந்தேன். அதே சமயம் கம்பியூட்டரில் என் மெயிலும் ஓபன் செய்திருந்தேன். அதற்கு காரணம் மது ஹேங்அவுட்டில் அனுப்பும் மெசேஜ் பார்த்து பதில் அனுப்ப தான் அதையும் சேர்த்து ஓபன் பண்ணி வைத்திருந்தேன்.. இந்த முக்கியமான டாக்குமெண்டை டைப் செய்துக் கொண்டிருந்த சமயத்தில் ஹேங்அவுட்டில் அவளிடமிருந்து அடுத்தடுத்து மெசேஜ் வந்துக் கொண்டே இருந்தது.

    சிறிது நேரத்திற்கு அதை கண்டுக் கொள்ளாமல் டாக்குமெண்டை முழுமையாக டைப் செய்து முடித்து ஒருமுறை சரியாக இருக்கிறதா என சரிபார்த்த பிறகு மேனேஜருக்கு மெயிலில் அனுப்பிவிட்டு ஹேங்அவுட்டில் அவள் அனுப்பியிருக்கும் மெசேஜை வரிசையாக படிக்க ஆரம்பித்தேன்.

    ஆரம்பித்தில் ஹாய் செல்லம், புஜ்ஜிக்கண்ணா என ஆரம்பித்து அடுத்தடுத்த மெசேஜில் ஏன்டா மெசேஜ் பண்ணினா ரிப்ளை பண்ணமாட்டியா லூசு, பன்னி, பேய் என அவளுக்கு தெரிந்த வார்தையில் திட்டி வசைபாடிவிட்டு கடைசியாக

    “ஷேல் ஐ கால் நவ்” என அனுப்பியிருந்தாள். அதற்கு பதிலாக அவளுக்கு நானே ஹேங்அவுட்டில் கால் செய்ய என் காலை அதிகம் எதிர்பார்த்திருந்திருப்பாள் போல இரு ரிங்கிலே அவள் காலை அட்டன் செய்ததும்,

    “டே உன்கிட்ட என்னடா சொன்னேன். டுமாரோ இன்பார்டென்ட் டே. சோ மெசேஜ் ஆர் கால் பண்ணா ரிப்ளை பண்ண சொல்லி ஆல்ரெடி சொல்லியிருக்கேன்ல.”

    “எஸ் டியர்.” சொல்ல

    “பின்ன ஏன்டா மெசேஜ்க்கு ரிப்ளைவே பண்ணல. தடிமாடு மாதிரி வயசு தான் ஆகுதுடா. ஆனா உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லடா..”

    “ஏய்.. கொஞ்சம் நா சொல்றத கேளுடி..”

    “என்ன சொல்ல போற.. சரி சொல்லு கேக்குறேன்.” அவளின் தொடர் பேச்சை நிறுத்தியதும்

    “ஹே செல்லம் ஒரு இம்பார்டெண்ட் டாக்குமெண்ட் டைப் பண்ணிட்டு இருந்தேன்டி. அதான் நீ மெசேஜ் பண்ணறப்ப ரிப்ளை பண்ண முடியலடி. சாரிடி மதுக்குட்டி. கோவிச்சுக்காதடி செல்லம்”
    சொல்ல

    “சரி கிளம்பிட்டியா?”

    “என்ன கிளம்பிட்டியா கேக்குற..?”

    “டே நாம மீட் பண்ணனும் சொல்லியிருந்தேன்ல.. உனக்கு மைண்ட்ல இருக்கா? இல்லயா?” கேட்க

    “ஹே அதலாம் இருக்குடி செல்லம்.. டுமாரோ தான.. கரைக்டா வந்துடுவேன்டி..” சொல்ல அவள் கடுப்பாகி

    “டே உனக்கு அறிவே இல்லனு அப்ப அப்ப ப்ரூப் பண்ணிட்டே இருப்பியாடா” கேட்க

    “ஏய் என்னடி சொல்ற. எதையும் குழப்பாம கரைக்ட்டா தெளிவா சொல்லுடி.. ஆபிஸ்ல பினிஸ் பண்ண வேண்டிய ஒர்க் வேற இருக்கு.. அத பினிஸ் பண்ணினா தான் டுமாரோ லீவ் அப்ருவல் பண்ணுவாங்க” சொல்ல..

    “நல்லா கேட்டுக்கோ.. நாம மீட் பண்றது டுமாரோ தான். பட் நெக்ஸ் டே ஸ்டார்ட் ஆன் டுடே நைட் 12 ஓ கிளாக்.. புரியுதா?” அவள் கேட்க எனக்கு இருந்த ஒர்க் டென்சனில் ‘ம்ம்’ மட்டும் சொன்னேன்.

    “ஹேங்அவுட்டில அட்ரஸ் சென்ட் பண்றேன். நீ நெக்ஸ்டே ஆரம்பிக்கும் போது என்கூட இருக்கனும்.. இல்ல இருந்தே ஆகனும்.. மைன்ட்ல நல்லா ஸ்டோர் பண்ணிக்கோ..” சொல்லிவிட்டு காலை கட் செய்தாள்.

    மது காலை கட் செய்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். மணியை பார்க்கும் போது இரவு 7ஐ தாண்டியிருந்தது. அதற்க்குள் சொன்னது போலவே அவள் அட்ரஸை ஹேங்அவுட்டில் அனுப்பியிருந்தாள். என்னிடம் பேசும் போது சொன்னது போல் அவளிருக்கும் ஊர் தென்காசி..

    நானிருக்கும் இடத்திலிருந்து போய் சேருவதற்கு குறைந்தபட்சம் மூன்றரை மணி நேரமாவது ஆகும்.. இப்போது என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் என்னை பற்றி சில வரிகள்..

    நான் சரண்.. ஒரு ஐடி கம்பெனியில் ப்ரோக்ராம் டிசைனராக வேலை செய்கிறேன். அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில் இணையதளங்களில் காமகதைகள் எழுதுவேன்.. அப்படி நான் எழுதிய கதைகளில் ‘என்னோடு நீ இருந்தால்’ கதையை படித்துவிட்டு மெயில் செய்தவள் தான் இப்போது என்னுடன் ஹேங்அவுட்டில் பேசிய மதுமிதா..

    மெயில் ரிப்ளையில் ஆரம்பித்த எங்களின் பழக்கம் நாளடைவில் ஹேங்அவுட்டில் மெசேஜ் செய்யும் வரை வளர்ந்து இப்போது அதிலே பேசிக் கொள்ளும் வரை வளர்ந்தது மட்டுமில்லாமல் சந்தித்துக் கொள்ளும் வரை வந்துள்ளது. இதை நினைத்துப் பாரக்கும் போது ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் கம்பெனியில் மீதியிருக்கும் வேலையை நினைக்கும் போது மலைப்பாக தெரிந்தது..

    மீண்டும் மணியை பார்க்கும் போது 7.30ஆகியிருந்தது.. இப்படியே இருந்தால் சரிவராது என வேலையை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

    மதுவை பற்றி எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அன்றைக்கான வேலைகளில் கவனம் செலுத்தினேன். நான் நினைத்த மாதிரியே ஆபிஸ் வேலை முடித்துவிட்டு மணியை பார்க்கும் போது மணி இரவு 8.30ஆகியிருந்தது.

    இப்போது கிளம்பினால் தான் அவள் சொன்ன நேரத்திற்கு போய் சேர முடியும் என்பதால் என் டீமில் இருக்கும் நபரிடம் நான் கடைசியாக டிசைன் செய்ததை ஒருமுறை சரி பார்க்க சொல்லிவிட்டு கிளம்பிவிட்டதாக ஹேங்அவுட்டில் மதுவிற்கு மெசைஜ் அனுப்பிவிட்டு ஆபிஸிலிருந்து வண்டியிலே அவளை பார்க்க கிளம்பினேன்..

    கார்த்த்திகை மாதம் அந்த இரவின் பனிப்பொழிவில் மனத்திற்கு பிடித்த பெண்ணை முதன் முதலாக பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் வண்டியை வேகமாக ஓட்டினேன்.

    வண்டி காற்றை கிழித்துக் கொண்டு வேகமாக சென்றாலும் என் மனம் எந்தவொரு பயமும் இல்லாமல் அவளை பற்றியே நினைக்க ஆரம்பித்தது.. அவள் முதன் முதலாக என் கதை நன்றாக இருக்கிறது. தனக்கு மிகவும் கிடைத்திருப்பதாக என அனுப்பிய மெயிலிருந்து ஒவ்வொன்றாக அசைய போட்டுக் கொண்டே வண்டியை ஓட்டினேன்.

    இருவருமே முதலில் மெயிலில் மட்டும் ரிப்ளை செய்து பேசிக் கொண்டோம். அப்போது எல்லாம் இவள் என்னுடன் இவ்வளவு தூரம் நெருங்கி வந்து பழகுவாள் என தெரியாது. எல்லாம் காலம் செய்த மாயம் தான். எங்களுக்கிடையேயான பேச்சு முதலில் சாதாரணமாக தான் ஆரம்பித்து சென்றது.

    அப்படியே எங்களையும் அறியாமல் படிபடியாக வளர்ந்து மெதுமெதுவாக காமம் பற்றி பொதுவாக பேச ஆரம்பித்து அதுவே நாளடைவில் எங்களுக்கு தேவையான சுகத்தை தன்னிச்சையாக ஒருத்தருக்கு ஒருத்தர் மாறி மாறி சாட்டிங்கில் குடுத்துக் கொண்டோம்.. எங்களுக்கிடையேயான ஒருவித புரிதல் தான் இன்று சந்திக்கும் அளவிற்கு கொண்டு வந்திருக்கிறது.

    இந்த சந்திப்பு நிகழ போகிறது என்பதற்காக எங்களுக்கிடையே காதல் என்றல்லாம் அர்த்தமில்லை. அது ஒருவிதமான புரிதலுடன் கூடிய ஈர்ப்பு. அவ்வளவு தான். வேறொன்றுமில்லை. அந்த ஈர்ப்பு புரிதலுடன் இருந்ததால் தான் ஹேங்அவுட்டில் சாட் செய்யும் போது ஒருவருக்கொருவர் சுகத்தை மாறி மாறி உண்மை தன்மையுடன் தர முடிந்திருக்கிறது..

    மதுமிதாவின் குரலை பலமுறை கேட்டவன் எல்லாம் இல்லை. இப்போது பேசியது தான் முதல் முறை.. இந்த இக்காட்டான நேரத்திலும் அவளின் குரலின் இனிமையை கேட்க தவறவில்லை. அவள் பேசும் போது என்னை திட்டினாலும் அவள் மேல் தவறு இருந்து அதை சுட்டிகாட்டினால் எந்த வித ஈகோ இல்லாமல் அடுத்த நொடியே மன்னிப்பு கேட்டுவிட கூடியவள்..

    அவளிடம் சாட்டில் பேசும் போது இதுதான் என்னை மிகவும் ஈர்த்தது.. தினமும் சாட்டில் பேசும் போதே பலமுறை தன் தவறுக்காக வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறாள்.. ஒவ்வொரு முறையும் அவள் மன்னிப்பு கேட்டதுமே அவள் மேல் இருந்த கோபமும், கடுப்பும் காணாமல் போய்விடும்.

    இப்போதும் அதுமாதிரி தான் என் சூழ்நிலை என்னவென்று தெரியாமல் அவள் திட்டியதற்கு அவளின் மேல் கோபம் இருந்தது. ஆனால் கால் செய்து பேசிய அடுத்த வினாடி கோபம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பனிக்கட்டி போல் உருகி இன்றரவே சந்திக்க வர சொன்னதும் நீர்த்துளி போல் முழுவதும் காணாமல் போய்விட்டது.

    இந்த சுகமான நினைவுகளை நினைத்துக் கொண்டே எங்கே வந்தியிருக்கிறேன் என ரோட்டை பார்க்கும் போது கிட்டதட்ட ராஜபாளையத்தை நெருங்கியிருந்தேன்.. பாதிதூரம் வந்துவிட்டதால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.. அந்த சந்தோஷத்துடனே சிட்டிக்குள் வந்து டீ கடையில் வண்டியை நிறுத்தி டீயை குடித்தேன்..

    டீ குடிக்கும் அந்த சில நிமிடங்கள் கூட அவளையே நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடன் பேசும் போது சொல்லியது போலவே இருப்பாளா? இல்லை அதை விட அழகாக இருப்பாளா என சிந்தித்துக் கொண்டே டீயை குடித்து முடித்தேன்.. அவள் எப்படி இருந்தாலும் என்னை பொறுத்தவரையில் அவள் ஒரு அழகு தேவதை தான். அந்த தேவதை காண வேண்டும் என்ற ஆவலிலே மீண்டும் வண்டியை எடுத்துக் கண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினேன்..

    அதன் பிறகு இரவு நேரம் வாகனம் அதிகம் செல்லாததால் 100கிமீ வேகத்திற்கு மேல் தான் வண்டியை ஓட்டி சென்றேன். அப்படி சென்றதால் வெகு சீக்கரமாகவே என்னால் புளியங்குடியை நெருக்க முடிந்தது. அதன் பின் மழை வேறு தூரலாக தூறி கொண்டிருந்தது.

    அதையும் பொறுத்தப்படுத்தாமல் வண்டியை ஓட்டினேன்.. இரவு நேரம் என்பதால் சாலைகள் எல்லாம் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. தென்காசியை நெருங்கியதும் மழை பெரிதாக பெய்ய தொடங்கியது.. என்ன செய்வதென்று தெரியாமல் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு மணியை பார்த்தேன் 11ஐ தாண்டியிருந்தது. அங்கிருந்து அவள் சொன்ன இடத்திற்கு செல்ல சில நிமிடங்கள் போதும் என்பதால் மழையில் செல்லாமல் அங்கையே நின்றுக் கொண்டேன்.

    அங்கு நிற்க நேரம் தான் சென்றதே தவிர மழை குறைந்த பாடியில்லை தொடர்ந்து விடாமல் பெய்துக் கொண்டேயிருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாக மழையில் நனைந்தாலும் பரவாயில்லை என அந்த இடத்தை விட்டு கிளம்பலாம் என முடிவு செய்து பெய்யும் மழையை பொறுட்படுத்தாமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்..

    மது சொன்னது போல் அவளுடைய ஏரியாவுக்குள் வந்து அவளின் தெருவை தேடி பார்த்தேன். மழை அதிகமாக பெய்வதால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கையே ஓரமாக நின்று நானிருக்கும் இடத்தை அவளுக்கு ஷேர் செய்து அடுத்து எப்படி வர வேண்டும் என கேட்டு மெசேஜ் அனுப்பினேன்.. நிமிடங்கள் தான் சென்றதை தவிர அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனாலே ஹேங்அவுட்டில் கால் செய்தேன்.. தொடர்ந்து இரண்டு, மூன்று முறை செய்தேன். அதற்கும் எந்த பதிலும் இல்லை.

    அவள் மேல் சில மணி நேரத்திற்கு முன் காணாமல் போயிருந்த கோபமும், கடுப்பும் மறுபடியும் வந்துவிட்டது. என்ன பெண் இவள்? வர சொல்லிவிட்டு ஒரு பொறுப்பே இல்லாமல் இருக்கிறாள் என மனதிற்குள் நானே நொந்துக் கொண்டேன்.

    இதில் எனக்கு பொறுப்பே இல்லை என சொல்ல வேண்டியது. என்ன செய்வதென்று தெரியாமல் அங்கே நிற்னேன். பின் இருந்த இடத்திலிருந்தே அவள் அனுப்பிய இடத்தை திரும்பி கூகில் மேப்பில் போட்டு பார்த்து அதன்படி சென்றேன்.. ஒருவழியாக அவள் இருக்கும் தெருவை கண்டுபிடித்துவிட்டேன். அந்த சமயம் பார்த்து அந்த ஏரியாவில் கரண்ட் கட் ஆக மழை வேறு தொடர்ந்து பெய்வதால் அவளின் வீட்டை கண்டுபிடிக்க தான் சற்று சிரமமாக இருந்தது.

    மணியை பார்த்தேன் 12ஆக இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருந்தது. அந்த மழையிலும் ஒவ்வொரு வீடாக பார்த்துக் கொண்டே சென்றேன். இறுதியில் அவள் அனுப்பிய அட்ரஸில் இருந்த வீட்டை கண்டுபிடித்துவிட்டேன். அவளின் வீட்டை கண்டுபிடித்தது ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும் மறுபக்கம் மழையில் அவசரத்திற்கு உதவி செய்யாததை நினைத்து செம கடுப்பில் இருந்தேன். அவளின் வீட்டிற்கு சென்று கதவை தட்ட கரண்ட் இல்லாததால் இருட்டிலே வந்து கதவை திறந்து,

    “ஹே வந்துட்டியா செல்லம்.. ரொம்ப தாங்க்ஸ்டா” சந்தோஷமாக சொல்லியதும் அவளின் மேல் இருந்த கோபம் சுர்ரென்று தலைக்கு ஏற அவளின் முகத்தை பார்க்காமல் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டேன்.

    “எனக்கு அறிவிருக்கா கேக்க தெரியுதுல.. அது உனக்கு கொஞ்சமாச்சும் இருக்கா.?” கோவத்தில் கத்த

    “இல்லடா.. அது வந்து..”

    “என்ன வந்து போய்னு இழுத்திட்டு இருக்க” இருட்டிலே வைத்து பேச

    “அது வந்து..” மறுபடியும் இழுக்க

    “உனக்கு தான்டி அறிவே இல்ல.. நம்ம ஒருத்தன வர சொன்னோமே.. எங்க வரான்.. வந்துட்டானா ஒரு மெசேஜ் அனுப்பி கேட்டியா.. வர சொல்லிட்டு நீ பாட்டுக்கு எப்படியும் சொன்னதுனால வந்துருவான் இருந்திட்ட” விடாமல் கத்தி பேசிட்டே இருக்க எனக்கு எதிரில் மதுமிதா விசும்பும் சத்தம் கேட்டதும் எனக்கே ஒருமாதிரியாகிவிட்டது. சில நாட்கள் பழக்கமாக இருந்தாலும் மிகவும் ஆழமாக நேசித்து பழகியதால் அதிக உரிமை எடுத்துக் கொண்டு தேவையில்லாமல் பேசிவிட்டோமோ என நினைத்துக் கொண்டிருக்கும் அந்த தருணத்தில் தான் போன கரண்ட் திரும்பி வந்தது.

    தொடரும். . .

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

    Leave a Comment