முதுமையில் ஒரு காதல் – பாகம் 1 (Muthumayil Oru Kathal)

This story is part of the முதுமையில் ஒரு காதல் series

    இது சற்று வயது வந்த இரு ஆண்களுக்கு இடையிலான ஒரு காதல் கதை. கொஞ்சம் உண்மையும் மீதி கற்பனையும் கலந்த ஒரு கதை தான் இது. எல்லோரும் எழுதுவது போல் இல்லாமல் சற்று நிஜமாக இருக்க வேண்டுமென்று இந்த இரு கதா பாத்திரங்களை உருவாக்கி இருக்கிறேன். எடுத்த உடனே படுக்கைக்கு போகாமல், இவர்கள் இருவரின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் சற்று விவரித்து எழுதி இருக்கிறேன். படித்து இன்புறுங்கள்.

    முதுமையில் ஒரு காதல்…. பாகம் 1

    அகிலன் என் பெயர் அகிலன். எனக்கு வயது 55 ஆனால் பார்க்க சுமார் 45 வயது போல் தான் இருப்பேன். எனக்கு மது அருந்துவதோ அல்லது புகை பிடிக்கும் பழக்கமோ இல்லை. விளையாட்டு துறையில் குறிப்பாக கால்பந்து துறையில் இருப்பதால், நான் என் உடலமைப்பை கட்டு கோப்பாக வைத்திருக்கிறேன். நான் வேலை செய்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை.

    எனக்கு பண வசதி போதுமான அளவுக்கு மேலேயே உள்ளது. இருந்தாலும், எனது ஆர்வம் காரணமாகவே இந்த துறையில் நான் இருந்து வருகிறேன். என் முகம் கூட சற்று இளமையாகவே தோற்றம் அளிக்கும். மேலும் நான் உடுத்துவதும் சிகை அலங்காரமும் கூட இளைஞர்கள் போல தான் இருக்கும். எனக்கு 15 வருடங்களுக்கு முன்பே விவாகரத்து ஆகி விட்டது. என் மகனும் மனைவியும் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். நான் மட்டும் தனியே கோலாலம்பூரில் இருக்கிறேன்.

    எனக்கு சிறு வயதில் இருந்தே வயதான ஆண்களை கண்டால் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும். பெண்களை விட இப்படி பட்ட ஆண்களையே நான் அதிகம் விரும்புகிறேன். ஆனால், நான் செய்யும் வேலையும், சமுதாயத்தில் எனக்கிருக்கும் ஒரு பேரும் என் சொந்த மகிழ்ச்சிக்காக, என்னை எதுவும் செய்ய விடாமலும் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலையையும் உருவாக்கி விட்டது. இருந்தும் இவைகளை ஏற்று கொண்டும் என் ஆசைகளை அடக்கி கொண்டும் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருக்கிறேன்.

    கால்பந்தை தவிர்த்து எனக்கு மிகவும் பிடித்த விஷயம் உலகை சுற்றி பார்ப்பது தான். எங்கு சென்றாலும், நான் தனியே செல்வது தான் வழக்கம். ஆஸ்திரேலியா செல்லும் போது மட்டும் தான் நான் என் மற்ற குடும்ப உறுப்பினர்களோடு செல்வேன்.

    ஒரு முறை, இப்படி நான் கேரளாவுக்கு தனியே 10 நாள் பயணம் மேற்கொண்டேன். 8 நாட்கள் முடிந்து கோயம்பத்தூர் சென்று ஒரு பெரிய ஹோட்டலில் தங்கினேன். அன்று மாலையில் துணி வாங்கும் எண்ணத்தில் ஒரு பெரிய கடைக்கு சென்றேன். என்னை பார்த்ததும், நான் வெளியூர் காரன் என்று தெரிந்து எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். எனக்கு ஒரு ரக துணி தேவை பட்டதால் அங்குள்ள பணியாளருக்கு அது தெரியாமல் முதலாளியை கேட்டார்.

    அப்பொழுதான் அங்கு வந்த முதலாளி என்னிடம் பேசி எனக்கு தேவையான துணி தற்பொழுது இல்லை என்றும், வெளியூரில் இருந்து தருவிக்க வேண்டும் என்றார். வந்த பிறகு அதனை எனக்கு அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். அவரை பார்க்க சுமார் 60 வயது இருக்கும், நல்ல சிவந்த மேனி, லேசாக முன் புறம் வழுக்கை விழுந்த அகன்ற நெற்றி, முக்கால் வாசி நரைத்த வெள்ளை முடி, அடர்த்தியான ரோமம் நிறைந்த மெறுகேரிய கைகள். வெள்ளையும் கருப்புமாக முடி நிறைந்த அகன்ற மார்பு, மீசை இல்லாத வடிவுடன் அமைந்த அவர் முகம், என்னை வெகுவாகவே கவர்ந்து இழுத்தது.

    மேலும் அவர் என்னிடம் பேசிய பாணியும் என்னை கவணித்துக் கொண்ட விதமும் என்னை மிகவும் ஈர்த்தது. ஒரு நண்பரை போல் என்னிடம் பழகினார். அவரை எப்படியாவது என் நண்பராக்கி கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் என் மனதில் அவ்வேளை தோன்றியது, வேறு எந்த தப்பான எண்ணம் எதுவுமே உதிக்க வில்லை. அதை மனதில் கொண்டு நானும் அவரிடம் ஒரு ஆர்டரை கொடுத்து எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு கொண்டு முழு பணத்தையும் செலுத்தினேன்.

    துணியை அனுப்பி வைக்க என்னிடம் என் முகவரியும் என் தொலை பேசி எண்களையும் வாங்கி கொண்டார். நானும் அவர் எண்களை வாங்கி கொண்டேன். அவர் பெயர் முரளிதரன் நாயர். சிறிது நேரம் பேசி கொண்டிருந்தோம். நான் நாளை மறு நாள் மலேசியா திரும்புவதாக இருப்பதால், எனக்கு வேறு என்ன புரோக்ராம் என்று கேட்டார். நானும் ஒன்றும் இல்லை, என்று சொல்ல அவர் மறு நாள் மதிய உணவுக்கு என்னை அழைத்தார். நானும் சரி என்று சொல்லி விட்டு அவரிடம் இருந்து விடை பெற்றேன்.

    மறு நாள் தன் ட்ரைவரை அனுப்பி என்னை அழைத்து கொண்டு ஒரு பெரிய உணவகத்துக்கு சென்றார். ட்ரைவரை அனுப்பி விட்டு நாங்கள் இருவரும் உணவகத்துக்கு உள்ளே சென்றோம். அருமையான சாப்பாட்டுடன் குதூகலமாக பேசி கொண்டு இருவரும் நன்றாக அப்பொழுதை கழித்தோம். உணவை முடித்தவுடன் இருவரும் காப்பி குடித்து கொண்டே பேச்சை தொடர்ந்தோம்.

    அவரை பற்றிக் கூறினார், தன் தந்தை ஒரு மலையாளி என்றும், தாய் தமிழ் மற்றும் என்னை போலவே தானும் ஒரு தனி மரம் என்றும், அவரின் மனைவி இறந்து 10 வருடங்கள் ஆகி விட்டன என்றும் கூறினார். அவருடை புத்தி சுவாதீனம் இல்லாத ஒரே மகனும் ஒரு ஆசிரமத்தில் இருக்கிறான். என்னை போலவே பணம் இருந்தும் அவரிடம் ஏதோ ஒன்று இல்லாததை நான் உணர்ந்தேன்.

    அது தனிமை தான் என்று ஓரளவு என்னால் யூகிக்கவும் முடிந்தது. ஆனால் மற்றவர்களை போல அதை அவர் வெளி காட்டி கொள்ள விரும்ப வில்லை போல் தோன்றியது. நாங்கள் இப்பொழு தான் சந்தித்து கொண்டோம் என்பதால் தயக்கம் காட்டுகிறார் என்றும் புரிந்தது. அதே போல தான் நானும் என் சொந்த அந்தரங்க விஷயங்களை அவரிடம் சொல்ல தயங்கி அந்த பேச்சை அப்படியே திசை திருப்பி விட்டேன். இருந்தும் நாங்கள் நொடிக்கு நொடி நெருக்கமாவதை நான் உணர்ந்தேன்.

    அவரும் இதை உணர்ந்திருப்பார் என்றே எனக்கு தோன்றியது. இதை எங்கள் இருவராலும் தவிர்க்க முடியாது என்பதையும் நான் உணர்ந்தேன். வெகு நேரத்திற்கு பிறகு மனம் திறந்து பேசினோம். அவர் தங்கி இருப்பது கிராமத்துக்கு வெகு அருகில் உள்ள தன் தோட்டத்தில் தான். இந்த வியாபாரத்தையும் தன் அக்கா மகனிடம் ஒப்படைத்து விட்டார். பொழுது போக்கிற்காக மட்டும் வாரம் ஒரு முறை அல்லது இரு முறையோ இங்கு வந்து போவாராம்.

    மற்றபடி அவர் காலம் கழிப்பது எல்லாம் அவர் தோட்டத்தில் உள்ள மரங்களும் மற்றும் செடி கொடிகளுடன் மட்டும் தான். மற்றும் என்னை போலவே நிறைய படிப்பார். எனக்கும் வேளாண்மை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், நேரம் போனதே தெரியாமல் நிறையவே பேசினோம். பிறகு அவர் என்னை என் ஹோட்டலில் விட்ட பிறகு கிளம்பி சென்று விட்டார்.

    அவர்பால் என்னை வெகுவாக ஈர்த்த ஒரு விஷயம், அவர் கட்டும் அந்த கேரளா வேஷ்டி தான். 5 அடி 10 அங்குல உயரத்தில், சுமார் 85 கிலோ எடையுடன் அந்த உடலுக்கு ஏற்ப பெரிதாகவும் இல்லாமல் சிறிதாகவும் இல்லாமல் அவர் முன் வந்து நிற்கும் அந்த அழகிய தொப்பைக்கு ஏற்ப அவர் கட்டும் அந்த வேஷ்டி அவரை அந்த வயதிலும் இன்னும் கவர்ச்சியாக காட்டியது.

    ஓரின சேர்க்கையில் எல்லாரும் தேடி ஓடுவது இளமையான ஆண்களை மட்டுமே. ஆனால் பலருக்கு தெரிவதில்லை இந்த அனுபவம் மிக்க ஆண்கள் எப்படி ஒருவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்று காம பாடத்தை போதிப்பார்கள் என்று. வாழ்க்கையில் அனுபவத்திற்கு உள்ள விலை வேறு எதற்கும் கிடையாது. எனது அக்காவின் மகன் ஒரு மாடல் மற்றும் ஆணழகன் போட்டியில் தென் கிழக்கு ஆசியாவின் தங்க பதக்கம் வென்றவன். ஆனால் அவன் என் முன் முழு நிர்வாணமாக நின்றாலும் கூட எனக்கு எதுவுமே தோன்றாது.

    மறு நாள் மாலை தொலை பேசியில் அழைத்துப் பேசினார். இம்முறையும் வெகு நேரம் பேசினோம். மறு நாள் காலை 11.30 மணிக்கு நான் பயணிக்க வேண்டுமென்பதால் அவர் எனக்கு விடை கொடுத்தார். அதற்கு முன் தன் ட்ரைவரை காலை அனுப்பி வைப்பதாக சொன்னார். நான் எதற்கு சிரமம் என்றேன். அதற்கு அவர் எதுவும் சிரமம் இல்லை என்று கூறி என்னிடம் ஒப்புதல் வாங்கி கொண்டார்.

    காலையில் டிரைவரும் வந்தார். என்னுடைய பெட்டி பைகளை எடுத்து கொண்டு காருக்கு செல்ல நான் அவரை பின் தொடர்ந்தேன். காரில் அவரை கண்டதும் எனக்கு ஒரு சிறு இன்ப அதிர்ச்சி. ஏன் என்று கேட்க, அவருக்கு பக்கத்தில் சிறு வேலை ஒன்று இருப்பதாகவும் என்னை வழி அனுப்பி வைத்து விட்டு அங்கே செல்வதாகவும் சொன்னார். ஒரு சிறு குதூகலத்துடன் அவர் பக்கத்தில் அமர்ந்தேன். விமான நிலையத்தில், செக்-இன் செய்து விட்டு, அங்கிருந்த காபி ஹவுசில் அமர்ந்து பேசினோம்.

    விடை பெரும் நேரமும் நெருங்க, அவர் என்னிடம் கை கொடுக்க நெருங்கினார். பதிலுக்கு நான் அவரை லேசாக கட்டி அணைத்து, “ரொம்ப நன்றி சார்” என்றேன். இதனை சற்றும் எதிர் பார்க்காத அவர், சற்றே நெகிழ்ந்தவராய், “பார்த்து போயிட்டு வாங்க” என்றார். அவர் கண்களை சற்று நோக்கினேன், அவை லேசாக கசந்து இருந்தன. ஏன் பொய் சொல்ல வேண்டும்? என் கண்களுக்கும் அதே கதி தான்.

    எங்கள் இருவரின் சங்கடத்தை தவிர்க்க, சட்டென்று என் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டேன். பிறகு விடை பெற்ற பின் நான் அங்கிருந்து உள்ளே சென்று விட்டேன். நான் போகும் வரை அவர் அங்கு நின்றது, காலேஜில் நெருக்கமான நண்பர்களை விட்டு பிரியும் அதே மன நிலை தான், அக்கணம் எனக்குத் தோன்றியது.

    நாடு திரும்பியதும், உடனே அவரை அழைத்துப் பேசினேன். பிறகு வழக்கம் போல் என் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டேன். தினமும் ஒரு முறை அல்லது இரு முறையோ நாங்கள் பேசிக் கொள்வோம். ஒரு வாரத்திற்கு பிறகு துணி வந்து விட்டதாகவும் உடனே அனுப்பி வைக்கிறேன் என்றும் சொன்னார். அதற்கு நான் வேண்டாம் என்றேன். சற்று திகைத்தவராய் ஏன் என்று கேட்டார். அதற்கு நான் இன்னும் இரு வாரத்தில் அங்கு மறுபடியும் வரப் போவதாகவும் அங்கேயே நான் அதை எடுத்து கொள்வதாகவும் சொன்னேன். உடனே அவர்,

    “எத்தனை நாள் இங்கே வரீங்க, எங்கே தங்க போறீங்க?” என்றார்.
    “2 வாரம், அதே ஹோட்டல் தான்” என்றேன்.

    “ஏன் ஹோட்டல்ல தங்க போறீங்க, என் வீட்டிலேயே இருக்கலாமே?” என்றார்.
    இதை எதிர் பார்த்த நானும், உடனே சரி என்றேன்.

    மிக்க மகிழ்ந்தவராய், “எப்போ வரீங்க? என்றார்.
    நான் பயணிக்கும் தேதியையும் நேரத்தையும் கூறினேன். மிக்க மகிழ்ச்சியுடன், சிறிது நேரம் கழித்து விடை பெற்றோம்.

    கோயம்புத்தூர் பயணம் செல்லும் வரை ஒவ்வொரு நாளும் நாங்கள் பேசி எங்கள் நட்பை வளர்த்துக் கொண்டோம். பயணம் செல்லும் நாளும் வந்தது. பல பல சிந்தனைகளுடன் விமானம் ஏறினேன். என்ன நடக்கும், எப்படி எங்கள் நட்பு விரிவடையும், அல்லது எங்களுக்குள் எதாவது மனஸ்தாபமோ இல்லை கருத்து வேறு பாடுகள் ஏற்படுமா? அவரை பற்றி என் கணிப்பு தப்பாகி விட்டால் என்ன ஆவது? இப்படி சிறு மன குழப்பத்துடன் தூங்க முயன்று தோற்று போனேன்.

    தொடரும்…

    Leave a Comment