இதயப் பூவும் இளமை வண்டும் – 95 (Idhayapoovum Ilamaivandum 95 )

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil kamam பைக் வாங்கிவிட்டான் சசி.!
    முதலில் கோவிலுக்குப் போய் பூஜை போட்டு வந்தான்.!
    பைக்கைப் பார்த்த கவிதாயினி
    ”வாவ்..!!” என வாயைக் குவித்தாள்.

    புவியாழினி.. அவளது தோழிகள் எல்லாரும் அவளது வீட்டில்தான் இருந்தனர்.!

    கவி பக்கத்தில் வந்து பைக்கில் உட்கார்ந்து அதைத் தடவிக்கொண்டிருக்க..

    ”எங்களுக்கு ட்ரீட் வெய்ங்க..!!” என்று கேட்டாள் நசீமா.

    ”ம்..ம்ம்.. ஓகே..! என்ன தண்ணியடிக்கறீங்களா..? வாங்க..?” என்றான் சசி.

    ”அண்ணா.. இதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா..?” என்றாள் தங்கமணி.

    ”ஏய்.. இப்பத்த பொண்ணுங்கள்ளாம்.. எந்த வகைலயும் பசங்களுக்கு சளைச்சவங்க இல்லேன்னு காட்றாங்க..! எவ்வளவோ பண்றாங்க..! நீ என்னமோ..?”

    ” நாங்கள்ளாம் அப்படிப்பட்ட பொண்ணுக இல்ல.. தெரிஞ்சுக்கோங்க..!”

    ”ம்.. ம்ம்.. ஓகே. . தெரிஞ்சுட்டேன்..! சரி விடு.. என்ன ட்ரீட் வேனும்..?”

    ”கூல்ட்ரிங்க்ஸ்.. பெருசூ..” என சிரித்தாள் தங்கமணி.

    நசீமா ”வித் ஐஸ்க்ரீம்..!!” என்றாள்.

    ”அவ்வளவுதானா..?”

    ”எங்க லெவலுக்கு இது போதும்ணா..” எனச் சிரித்தாள் தங்கமணி.

    புவியாழினி வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள்.
    ஒன்றுமே பேசவில்லை.!

    கவி ” ஒரு ரவுண்டு போலாண்டா.. மாமு..!!” என்றாள்.

    ”ம்.. ம்ம்.. ஓகே..!!” என்றான்.
    நசீமா.. தங்கமணியைப் பார்த்து ”வரீங்களா..?” என்று கேட்டான்.

    ”நாங்க வரல.. நீங்க வாங்கிட்டு வாங்க..” என்க..

    சசி பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.
    ”வெய்ட் பண்ணுங்க கேர்ள்ஸ்.. வாங்கிட்டு வரேன்..!” என்றுவிட்டு கவியுடன் பைக்கில் போனான் சசி.

    ஐஸ்க்ரீம் பார்லரில் உட்கார்ந்து.. ஐஸ்க்ரீமை ஒரு கட்டு கட்டினாள் கவி.
    புவியாழினிக்கும் அவள் தோழிகளுக்கும் ஆளுக்கு இரண்டு இரண்டாக வாங்கிக்கொண்டான்.
    அடுத்ததாக இரண்டு லிட்டர் மாஸாவும்.. மிரண்டாவும் வாங்கிப் போய்க்கொடுத்தான்.!

    புவியாழினிக்கு சசி நேரடியாகக் கொடுக்கவில்லை. அவளது தோழிகள்தான் கொடுத்தனர். ஆனாலும் அவள் அதை மறுக்கவில்லை..!
    அது சசியை வியப்படையச் செய்தது..!

    ”பரவால்ல நா வாங்கி குடுத்தத.. புவி சாப்பிடுவானு நா எதிர் பாக்கல..” என கவியிடம் சொன்னான் சசி.

    ”பேசுடா மாமு அவகூட.. அவள்ளாம் இப்ப முன்ன மாதிரி இல்ல..” எனறாள் கவி.

    ”இல்ல கவி.. நா பேசினாலும் அவ பேசுவானு தோணல..”

    ”பேசுவாடா.. நீ பேசித்தான் பாரேன்..”

    ”உன்கிட்டல்லாம் நல்லா பேசறாளா..?”

    ”ம்..ம்ம்.. அதெல்லாம் பேசுவா.. ஆனா முன்ன மாதிரி கலகலப்பு இல்ல..”

    ”ஓ..!!”

    ” ஈகோ பாக்காம.. நீயே முதல்ல போய் பேசு.. ஓகே..?”

    ”ம்.. பாக்லாம்.. ஆனா இப்ப இல்ல…!!” என்றான் கொஞ்சம் யோசணையுடன்..!!

    பைக் வாங்கியதற்காக நண்பர்களுக்கு பார்ட்டி வைத்தான் சசி.
    அதில் ராமு ஒருவன் மட்டும் இல்லை.

    ”நம்ம செட்ல இப்ப ராமுதான்டா இல்ல.” என்றான் சம்சு.
    அவன் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

    நுரைபொங்கிய பீரை சிப் சிபபாகப் பருகிக்கொண்டிருந்த காத்து
    ”கூப்ட்ருந்தா அவன்லாம் வந்துருப்பான்..” என்றான்.

    ”ஆமாடா.. நீதான்டா அவன கூப்டல..” என குற்றம் சாட்டினான் சம்சு.

    ”அவன பத்தி பேசினாலே.. ஆளு டெனஷனாகிர்றானே.. என்னடா பண்றது இவன..?” என சம்சுவைக் கேட்டான் காத்து.

    ”அதான்டா எனக்கும் தெரியல.. ஆனா பிரெண்ட்ஷிப்ல இதெல்லாம் இருக்கவே கூடாதுடா..” என சிகரெட்டை ஆழமாக உறிஞ்சினான்.

    நண்பர்களின் ஜாலியான உணர்வைக் கெடுத்துவிடக் கூடாது என்பதற்காக எதுவும் பேசாமல் இருந்தான் சசி.

    ஆனால் காத்துவும்.. சசியும் விடுவதாக இல்லை.
    சசி.. ராமு இருவரின் மனமுறிவு பற்றியே மாற்றி மாற்றிப் பேசி அவனை இன்னும் கடுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.!

    ”உன் விஷயத்துல அவன் பண்ண தப்ப அவனே ஒத்துக்கறான்டா.. அவனெல்லாம் பழைய மாதிரியே உன்கூட பழகனும்னுதான் ஆசைபடறான்.. ஆனா நீதான் இன்னும் அவன் மேல கோபமாவே இருக்க.. பொதுவான ஒண்ணு என்ன தெரியுமா.. பிரெண்ட்ஷிப்னு இல்லடா.. சொந்தம்.. பந்தம்னு எடுத்துகிட்டா.. எல்லாத்துலயுமே.. மனஸ்தாபங்கள்.. சங்கடங்கள்.. கசப்புகள்.. வெறுப்புகள்னு எல்லாமே இருக்கும்.. ஆனா அதையே மனசுல வெச்சிட்டு இருந்தா பகைதான்டா வளந்துட்டு போகும்.. அது நல்லதில்ல..” என அறிவுரை வழங்கினான் சம்சு.

    காத்து ”சுற்றம் பார்க்கின்.. அது என்னடா..? ஹா.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.. னு நம்மாளுக மொதவே சொல்லி வெச்சிருக்கிங்கடா..! எது எப்படியோ.. இந்த ஒரு தடவ அவன மன்னிச்சிரு.. எங்களுக்காக..? என்ன சொல்ற..?”

    ”சீ.. விடுடா.. என்ன இது..?” என சலித்துக் கொண்டான் சசி ”வேற ஏதாவது பேசுங்கடா..”

    ”என்னடா நீ..?” என காத்து அவன் கையைப் பிடிக்க..

    ”விடுங்கடா..! ப்ளீஸ்..! போதும் என் மூட அப்செட் பண்ணாதிங்க. !!” என சசி சொல்ல..
    அத்துடன் அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.!!

    அன்று இரவு.. இருதயாவுக்கு கேக் கொடுத்துவிட்டு அவளுடன் மொட்டை மாடியில் நின்று பேசும்போது இருதயா சொன்னாள்.
    ”நாளைக்கு நைட்.. நா மட்டும்தான் வீட்ல..”

    ”ஏன்..?”

    ”ஊட்டில.. எங்க பெரியம்மா பையனுக்கு மேரேஜ்.. எங்க மம்மி.. தம்பி ரெண்டு பேரும் நாளைக்கு போய்ட்டு.. நாளாநாள்தான் வருவாங்க.. ஸோ.. ஐ’ம்.. ஃப்ரீ..”

    ”நீ போகல..?”

    ” எனக்கு செம் இருக்குப்பா.. நா போகல..!!”

    ”ஹேய்.. அப்ப.. தனியாவா இருப்ப..?”

    ”எஸ்.. பா..!!” எனச் சிரித்தாள்.

    ”தனியா இருந்துப்பியா.. நீ..?”

    ”வொய்..? நீங்கள்ளாம் இல்ல..?”

    ”உங்க மம்மி.. உன்ன தனியா விட்டுட்டு போக ஒத்துகிட்டாங்களா..?”

    ”ம்..ம்ம்..! சொல்ல முடியாதுபா.. நா உங்க அககா வீட்ல ஸ்டே பண்ணவேண்டியது வந்தாலும் வரலாம்..” என்றாள்.

    சசியின் மனசுக்குள்.. ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம் படபடவென சிறகடிக்கத் தொடங்கியது.
    ”உன்ன இங்க விட்டுட்டு போனா.. உங்க டாடி ஒன்னும் சொல்லமாட்டாரா..?”

    ”நா பேசிட்டேன்..! அவரும் ஓகே சொல்லிட்டாரு..!!”

    ”அவ்ளோ முக்கியமான எக்ஸாமா..?”

    ”அப்படினு இல்ல… ஆக்சுவலா.. எனக்குதான்.. மேரேஜ்க்கு போக புடிக்கல..” என்றாள்.

    ”அப்படியா.. ஏன்..?”

    ”நா.. போனா.. எப்படியும் ரெண்டு மூனு நாள்.. அம்மா வரமாட்டாங்க..! நா போகலேன்னாதான் அடுத்த நாளே வருவாங்க..”

    ”ஓ..! சரி.. நீயும் போய்ட்டுதான் வாயேன்..! அரியர் வெச்சிட்டா கெடக்குது..!”

    ”ஹா.. அதப்பத்திலாம் எனக்கு கவலையே கெடையாது..!”

    ”அப்றம்.. என்ன..?”

    ”சொன்னா சிரிக்கக்கூடாது..” என்றாள்.

    ”அப்படியா.. சரி சொல்லு..”

    ”நா.. ஊருக்கு போனா.. ரிட்டனாக ரெண்டு மூனு நாள் ஆகும்னு சொன்னேன் இல்ல..?”

    ”ம்..ம்ம்..?”

    ” அப்படி போனா.. நா உங்கள ரொம்ம்ம்ம்ப.. மிஸ் பண்ணுவேன்.. ஸோ.. நா போகல..”

    சசிக்கு மிகவும் திகைப்பாக இருந்தது.
    ”வாட்.. மா. ? என்னை மிஸ் பண்ணுவேங்கறதுக்காக.. நீ ஊருக்கு போகலியா..?”

    ”எஸ்ஸ்ஸ்ஸ்.. பா..!!” என அவன் கையைக் கோர்த்துப் பிடித்தாள்.

    ஒருசில நொடிகள்.. உள்ளத்தில்.. உணர்ச்சி பொங்கிய நிலையில்.. நின்றிருந்தான் சசி.
    மெதுவாக
    ”ஹா.. புல்லரிக்குது..” எனறான்.

    ”இதான்.. நா சொல்லல..” என அவன் தோளில் சாய்ந்தாள்.

    அவள் தோளில் கை போட்டான் சசி.
    ”ஸாரி.. ஆனா.. எனக்கு வேற என்ன சொல்றதுனு தெரியல..!!”

    ”ம்..ம்ம்..!”

    அவனுக்கு மேலே பேசத் தோண்ற மறுத்தது. அவளை அணைத்த நிலையில் சிறிது நேரம் நின்றவன் மெதுவாக அவளது பட்டுக்கன்னத்தில்.. தன் உதட்டை ஒற்றி எடுத்தான்..!!

    அவன் அணைப்பில் தன்னை மறந்த நிலையில் நின்றிருந்த இருதயா மெதுவாக முனுமுனுத்தாள்.
    ”ஐ’ம் ஸோ ஹேப்பி.. அப்படியே ஒரு தடவ சொல்லிருங்களேன்..”

    ”என்னது..?”

    ”ஐ லவ்.. யூ…..”

    சிரித்துவிட்டான்.
    ”ஹேய்ய்ய்.. ”

    ”ஏன்.. பா..? இவ்ளோதூரம்.. வந்துட்டிங்க.. இன்னும் என்ன..?”

    ”அய்யோ.. நா.. தான் சொல்லிருக்கேன் இல்ல.. எனக்கு.. இந்த லவ் மேல இருந்த.. அட்ராக்சன்லாம்.. போய்ருச்சுனு….” என அவள் கன்னம் வருடினான்.

    ”அப்போ.. என்ன கிஸ் பண்றீங்க..? இப்படி ஹக் பண்றீங்க..? என்ன மீனிங் இதுக்கு..?” என மிகவும் மெல்லிய குரலில் கேட்டாள்.

    ”நா இன்னொன்னும் சொன்னேனே..”

    ”என்ன..?”

    ”உன்ன பொய் சொல்லி ஏமாத்த.. எனக்கு மனசு வரலேன்னு..?”

    ”ம்..ம்ம்.. சொன்னீங்க.. ஸோ..?”

    ” உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்.. பட்.. இது லவ்வா.. இல்ல வேற.. ஏதாவதானு எனக்கு சரியா.. சொல்ல தெரியல..” என அந்தப் பேச்சை முடிவின்றியே நிறுத்திவிட்டான் சசி….!!!!!!!!

    -வளரும்…..!!!!!!!!!

    Leave a Comment