இதயப் பூவும் இளமை வண்டும் – 76 (idhayapoovum ilamaivandum 76)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil kamakathaikal 2015 may அதிர்ந்த முகத்துடன்.. சசியைப் பார்த்தாள் அண்ணாச்சியம்மா.
    ”என்னடா சொல்ற..?”

    ”ஸாரி..! அவன நீங்க ஒரு பொண்ணுகூட பாத்ததா சொன்னீங்க இல்ல.. அவ வேற யாரும் இல்ல.. என் பக்கத்து வீட்டு பொண்ணு. எனக்கே தெரியாம அவள லவ் பண்ணியிருக்கான். அதனாலதான் அவளப் பத்தி என்கிட்ட சொல்லல..” என்றான் சசி.

    Story : Mukilan

    அவனையே வெறித்தாள் அண்ணாச்சியம்மா.
    அவளது எண்ண ஓட்டங்கள் என்ன என்பதை அவனால் உணரமுடியவில்லை.

    ”அது.. இப்ப எனக்கு தெரியவந்து நா கேட்டதுல.. எங்களுக்குள்ள சண்டை வந்துருச்சு..”

    ”ம்..?”

    ”என்னை கெட்டவனா காட்றதுக்காக.. அவன்.. நம்ம மேட்டரை..அவகிட்ட சொல்லிட்டான்..”

    அவனைவிட்டு விலகி.. அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்று.. தலையில் கை வைத்துக் கொண்டாள் அண்ணாச்சியம்மா.
    ”கடவுளே…”

    சசி உள்ளுக்குள் மேலும் உடைந்தான். பயந்து போய் நின்ற அண்ணாச்சியம்மாவை அவனால் பார்க்க முடியவில்லை.
    மெதுவாக.. ”இப்ப என்ன பண்றதுனு தெரியல.. இந்த நேரத்துல நீங்க கன்சீவா இருக்கறது தெரிஞ்சுது.. வேற விணையே வேண்டாம்.. அத ஊர்பூரா பரப்பிருவான்..” என்றான்.

    ‘பளீ ‘ ரென அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டாள் அண்ணாச்சியம்மா.
    நல்ல பலமான அறை.

    ”இப்படி என்னை சந்தி சிரிக்க வெச்சிட்டியேடா.. பாவி.. இவ்வளவு காலம் இல்லாம.. இப்ப….” இடிந்து போய்.. தடாலென அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டாள்.
    இரண்டு கைகளிலும் தலையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.

    அதைப் பார்த்த சசியால் தாங்க முடியவில்லை.
    அப்படியே மடங்கி உட்கார்ந்து அவள் கால்களைப் பிடித்தான்.
    ”நா பண்ணது மன்னிக்க முடியாத தப்புத்தான்.. அவன் இப்படி ஒரு துரோகியா மாறுவான்னு.. கொஞ்சம்கூட நான் நெனைக்கல.. என்னை மன்னிச்சிருங்க ப்ளீஸ்.. உங்க காலப் புடிச்சு கேக்கறேன்..”

    ”ஐயோ..கடவுளே.. உன் கையால என்னை கொண்ணுகூட வீசிருடா.. நான் சந்தோசமா செத்துப்போறேன். ஆனா இப்படி.. ஊர்பூரா பேசற.. இந்த கேவலமான பேச்ச.. என்னால தாங்கவே முடியாதுடா..” என அழுதாள்.

    அவனது கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
    ”அவன் இப்படி பண்ணுவான்னு.. நெனைக்கல..”

    கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்து
    ”என்னை இப்படி ஒரு அசிங்கத்துக்கு ஆளாக்கிட்டியேடா.. ஏன்டா இப்படி பண்ணே..?” என்று குரலடைக்கக் கேட்டாள்.

    அவனால் பேசமுடியவில்லை. இனி பேசியும் பலனில்லை.

    அழுது.. முந்தாணையால் கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டு எழுந்து.. எரிந்துகொண்டிருந்த அடுப்பை அணைத்தாள். சுவற்றில் சாய்ந்து நின்று
    ”எல்லாம் விதி..” என்றாள் கரகரக்குரலில் ”உன்ன மாதிரி ஒரு சின்னப் பையன்கூட படுத்து ஒடம்பு சுகத்த அனுபவிச்சதுக்கு.. அந்த ஆண்டவனா பாத்து எனக்கு குடுத்த பரிசு இது.. நீ என்ன பண்ணுவ..”

    சசி பேசமால் எழுந்து நின்றான்.

    ”சரி போ..” என்றாள். எங்கோ பார்த்துக் கொண்டு.

    அவள் முகத்தைப் பார்த்தான்.

    ”எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.” மூக்கை உறிஞ்சினாள் ”அத யாரால மாத்த முடியும்..? என் முன்னால நிக்காத போ..”

    அவனுக்கும் வேறுவழி தெரியவில்லை.
    இருண்ட முகமும்.. உடைந்த இதயமுமாக.. எதுவும் பேசாமல் அவள் வீட்டை விட்டு வெளியேறினான் சசி..!!

    சசி வேலைக்குப் போகவில்லை. சாப்பிடவும் இல்லை. காலையிலேயே பாருக்குப் போனான்.
    ஒரு குவார்ட்டர் வாங்கிக் குடித்துவிட்டு.. ஒரு ஆஃப் வாங்கிக்கொண்டு.. பவானி ஆற்றின் கீழ்பகுதிக்குப் போய்.. ஆற்றோரமாக இருந்த ஒரு மரநிழலில் உட்கார்ந்து.. கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தான்.

    வேதனை..துக்கம்.. துயரம் என அவன் மனதைப் பிசைய.. போதையில் மனம் விட்டு அழுதான் சசி.!!

    அன்று மாலைவரை அவன் ஆற்றோரமாகவேதான் படுத்துக்கிடந்தான். தாகமெடுத்தபோது தண்ணீர் மட்டும் குடித்தான்.!
    அவனது மொபைலையும் அவன் வீட்டிலேயே விட்டுப் போய்விட்டான்.
    சூரியன் மேற்கில் மறைந்து இருள் சூழ்ந்த பின்னரே அங்கிருந்து கிளம்பினான்.!

    அவன் போனபோது மளிகைக் கடையில் அண்ணாச்சிதான் இருந்தார். அண்ணாச்சியம்மாவைக் காணவில்லை. அவள் வீட்டுக்கதவும் சாத்தியிருந்தது.

    நேராக குமுதா வீட்டுக்குப் போய்விட்டான்.
    அவன் கோலம் பார்த்த குமுதா.. பதட்டத்துடன் கேட்டாள்.
    ”என்னாச்சுடா.. எங்கடா போன காலைலருந்து.. போனும் இங்கயே வெச்சுட்டு அப்படி எங்க போன போன.. வீட்டுக்கும் போகல.. கடைக்கும் போகல.. சாப்பிட்டியா.. இல்லையாடா..?” என அவள் தொடர்ந்து கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவன் மௌனத்தை மட்டுமே பதிலாகக் கொடுத்தான்.

    குமுதாவின் வற்புறுத்தலுக்காக கொஞ்சம் சாப்பிட்டான்.
    ” எனக்கு தலைவலிக்குது. நா தூங்கறேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாத. அம்மாக்கு போன் பண்ணி சொல்லிரு எனக்கு ஒண்ணும் இல்லேன்னு..” என்றுவிட்டுப் படுத்து விட்டான்..!!

    மறுநாள் காலையில் வழக்கம் போல எழுந்து.. குளித்து சாப்பிட்டு.. வேலைக்குக் கிளம்பினான் சசி.
    அவன் கிளம்பிய சமயம் அண்ணாச்சியம்மா கடையில் இருந்தாள்.
    ராமு கடை திறந்திருக்கவில்லை.
    அண்ணாச்சி டீக்கடையில் இருந்தார்.

    அண்ணாச்சியம்மா அவனை ஜாடையில் வா எனக் கூப்பிட்டாள்.
    சசி அமைதியாகப் போய் நின்றான்.

    பலகையில் கையூன்றி நின்று மெதுவாகக் கேட்டாள்.
    ”நேத்தெல்லாம் எங்க போன..?”

    பதில் பேசாமல் நின்றான் சசி.

    ”உன்னத்தான்டா..” என்றாள்.

    அண்ணாச்சியம்மாவை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு.. பலகையைச் சுரண்டினான்.

    ”போனும் கொண்டு போகல.. வீட்ல சாப்பிடவும் இல்ல.. கடைக்கும் போகல.. அப்படி எங்க போன.. காலைலயே..?”

    ”மனசு கஷ்டமாருந்துச்சு..” என்றான் முணுமுணுப்பாக.

    ”ம்.. அதுக்கு..?”

    ”ஆத்துலபோய் படுத்து தூங்கிட்டேன்..”

    ”தண்ணியடிச்சியா..?”

    ”ம்..ம்ம்..!”

    ”இப்ப மனசு கஷ்டமா இல்லையா.?” அவனை முறைத்தவாறு கேட்டாள்.

    அமைதியாக நின்றான்.

    ”தண்ணியடிச்சுட்டு கவுந்து படுத்துட்டா.. எல்லா பிரச்சினையும் சரியாகிருமா..? இல்ல மனசுதான்.. நல்லாகிருமா..?”

    சசி அமைதியாகவே நின்றான்.

    ”நீ செத்துட்டேன்னா.. அப்றம் நான் மட்டும் வாழ்றதுல எந்த அர்த்தமும் இல்ல.. நானும் செத்துருவேன்..” என்றாள் கலங்கிய குரலில்.

    சசி நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தான்.
    அவள் கண்களில் நீர் தழும்பிக் கொண்டிருந்தது.

    சசியின் உள்ளம் ஆட்டம் கண்டது.

    ”உன்ன அடிச்சதுக்கும்..திட்னதுக்கும் என்னை மன்னிச்சிரு.. ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டேன். அத நெனச்சு நெனச்சு.. நேத்து பூரா நான் நிம்மதியில்லாம அல்லாடிட்டு கெடந்தேன்..! பரதேசி இந்த மாதிரினு என்கிட்டயாவது ஒரு வார்த்தைசொல்லிட்டு போயிருக்க்கூடாதாடா..? நான் இங்க என்ன பாடு பட்டுட்டு கெடந்தேன் தெரியுமா..? நீ என்ன பண்ணயோ.. ஏது பண்ணயோனு..?” என உடைந்த குரலில் பேசினாள்.

    ”ஸாரி..! நா அப்படி.. எந்த தப்பான எண்ணத்துக்கும் போகல..” என்றான்.

    ”சரி.. விடு.! நீ நல்லவன்தான்.. உன் தப்பான சகவாசத்தால இப்படி ஆகிருச்சு.. இப்ப நா கர்ப்பமா இருக்கறது இங்க யாருக்கும் தெரியாது..! அதனால நா ஒரு முடிவு பண்ணியிருக்கேன்..” என கண்களை மெதுவாகத் துடைத்தாள்.

    அவளையே பார்த்தான்.

    லேசாக மூக்கை உறிஞ்சி..தன் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு சொன்னாள்.
    ”நா ஊருக்கே போயிடறேன்..”

    திடுக்கிட்டான்.
    ”ஊருக்கா..?”

    ”இதவிட்டா வேறவழி இல்ல. இதுக்கு மேல இங்க நல்ல பேரோட இனி வாழ முடியாது. இந்த.. நம்ம புகழ் ஊர் முழுக்க பரவறதுக்கு முன்னால.. நா ஊரவிட்டே போயிர்றேன்..” என்றாள்.

    அவனால் பேச முடியவில்லை.

    ”நீ பயப்படாத..” என்றாள்.

    ”ஊரவிட்டே போறீங்களா..?”

    ”வேற என்ன பண்றது. மொதவே சொன்னேன் இல்ல.. யாருகிட்டயும் சொல்லிடாத.. எவனையும் நம்பாதேனு.. என் பேச்சை கேட்றுந்தா இப்ப இந்த நிலமை வந்துருக்குமா..?” என லேசாகக் கடிந்து கொண்டாள்.

    ”தப்புதான்.. என்னை மன்னிச்சிருங்க..”

    ”தொலையுது.. இனிமேலாவது கொஞ்சம்.. சூதானமா இரு..!”

    ”ம்..!!” தலையை மட்டும் ஆட்டினான்.

    ”சரி நேத்து.. என்ன பண்ண.. அழுதியா..?” என்று கணிவோடு கேட்டாள்.

    ”ம்..!!” ஒப்புக்கொண்டான்.

    ”நா.. அடிச்சதுக்கா..?”

    ”ம்கூம்.. என்னால.. உங்களுக்கு இப்படி ஆனதுக்கு..”

    ”என்னை மன்னிச்சிர்றா.. இந்த பிரச்சினைய நா சால்வ் பண்ணிர்றேன். நீ.. ஏதாவது பண்ணித் தொலச்சராத.. உம்மேல நா உசுரையே வெச்சிருக்கேன். நீ செத்துட்டா அப்றம் நானும் வாழ மாட்டேன்..”

    ”சே.. அப்படியெல்லாம் பேசாதிங்க….”

    ”நேத்து பூரா நான் எப்படி பயந்து போய் கிடந்தேன் தெரியுமா..? நீ நல்லவிதமா வீட்டுக்கு வந்துட்டேனு தெரிஞ்சப்றம்தான் எனக்கு நிம்மதியாச்சு.. வந்தவன் போன ஏன் சுட்ச் ஆப் பண்ணி வெச்ச..?”

    ”யாருகூடயும் நான் பேசற நிலமைல இல்ல..”

    ”என்னைப் பத்தி.. நீ கொஞ்சம்கூட யோசிக்கவே இல்ல..?”

    ”உங்கள தவற.. வேற எதுவும் யோசிக்கற நிலமைல நான் இல்ல..” என்றான்.

    அவனையே வெறித்துப் பார்த்தாள். பின் ஆழமான ஒரு பெருமூச்சு விட்டாள்.
    ”கண்ட கண்ட.. தேவடியா பசங்ககூடல்லாம்.. எதுக்குடா சாவகாசம் வெச்ச.. இப்ப பாரு.. அதனால எத்தனை பிரச்சினை..?” என ஆதங்கத்தோடு சொன்னாள் அண்ணாச்சியம்மா.

    ”என்னை மன்னிச்சிருங்க….” என்று மட்டும் சொன்னான் சசி….!!!!

    -வளரும்….!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் – 76

    Leave a Comment