இதயப் பூவும் இளமை வண்டும் – 72 (idhayapoovum ilamaivandum 71)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil sex.com இரவு நேரத்து மொட்டை மாடி.. குளிர் காற்றை அனுபவித்தவாறு.. சிகரெட் பற்ற வைத்தான் சசி.
    அவன் இரண்டாவது பப் இழுக்க.. மேலே வந்தாள் இருதயா.
    அவளைப் பார்த்ததும் சட்டென சிகரெட்டை மறைத்தான் சசி.

    Story : Mukilan

    மேலே வந்தவள்.. ”இன்னும் விடலியா..?” என்று கேட்டாள்.

    சிகரெட்டை சுவற்றில்.. தேய்த்து நசுக்கி.. அணைத்தான்.
    ”அது அத்தனை சுலபமா என்ன..?”

    ” ஏன்.. உங்க ஸ்வீட் கேர்ள்க்காக விடக்கூடாதா..?”

    சிகரெட்டை கீழே தூக்கி வீசினான்.
    ”ஸ்வீட் கேர்ள்.. ஒரு ஸ்வீட் கிஸ் குடுத்தா விட்றலாம்..”

    ”அலோவ்..பாத்திங்களா..” என்று சிரித்தாள்.

    ”ஹேய்.. ஜஸ்ட் ஜோக்.. இருதயா..! விட்றுவேன்.. டோண்ட் வொர்ரி..!”

    ”ம்..ம்ம்..! தேங்க்ஸ்..!! ஓகே நா போறேன்..! மம்மி திட்டுவாங்க..!” என்றாள்.

    ‘அடிப்பாவி நா சிகரெட் குடிக்கறத கெடுக்கனும்னே வந்தியா..?’
    ”ம்..ம்ம்..! குட்நைட்..!!” என்றான்.

    ” குட்நைட்..” என்றுவிட்டுப் போனாள்.

    ‘அவசரப்பட்டு சிகரெட்டை நசுக்கி வீசிவிட்டோமோ.’ என வருத்தப் பட்டான் சசி.
    சிறிது நேரம் பேசுவாள் என நினைத்தான். இப்படி உடனே போய்விட்டாளே.?
    அவன் திரும்பி நின்று ரோட்டைப் பார்க்க…

    ”நம்பலாமா..?” என்று அவன் பின்னால் வந்து நின்று கேட்டாள் இருதயா.

    திரும்பினான் ”என்னது..?”

    ”கிஸ் குடுத்தா.. சிகரெட்ட விட்றுவீங்களா..?”

    அவன் யோசணையாகப் பார்க்க… அவன் பக்கத்தில் வந்து.. ‘பச்சக் ‘ என அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
    ”நீங்க சொன்னத நா செஞ்சுட்டேன்..! நா சொன்னத.. நீங்க செய்யனும்..!! என்றுவிட்டு ஓடினாள் இருதயா..!!

    அடுத்த நாள் காலையிலேயே அண்ணாச்சியம்மா ஊருக்குக் கிளம்பிவிட்டாள். அவள் போகும் முன் சசியைப் பார்த்துவிட்டுத்தான் போனாள்.

    சசியின் அம்மாவுக்கும் உடல்நலமின்றி போய்விட்டது. மாலை நேரம்.. குமுதா போனில் சொன்னாள்.
    இரவு கடையில் இருந்து கிளம்பிய சசி நேராக.. அவன் வீட்டுக்குப் போனான்.
    அம்மா படுத்துக்கொண்டிருந்தாள்.
    அப்பா டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

    ”என்னாச்சுமா..?” என்று அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்து கேட்டான்.

    ”காச்சல்தான்..” என்றாள் அம்மா.

    ”ஊசி போட்டியா..?”

    ”ம்..ம்ம்..!”

    ”மாத்திரை சாப்பிட்டியா..?”

    ”ம்..! நீ சாப்பிடறியா..?”

    ”இல்ல வேண்டாம். குமுதா செஞ்சுருவா.! நல்லா ரெஸ்ட் எடு.. நா கெளம்பறேன்..”

    ”அவகிட்ட நல்லாருக்கேனு சொல்லு..”

    ”ம்..ம்ம்..! சொல்லிர்றேன்..!” அப்பாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

    அவன் சைக்கிளை எடுக்க.. வீட்டில் இருந்து வெளியே வந்தாள் கவிதாயினி.
    ”ஹாய்..டா.. என்ன இந்த நேரத்துல..?”

    ” அம்மாக்கு உடம்பு சரியில்ல..”

    ” பாத்துட்டியா..?”

    ”ம்..! நீ சாப்பிட்டாச்சா..?”

    ”யாடா.. நீ..?”

    ”போய்த்தான்..! அப்றம்..?”என்றான்.

    புவி வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனாள்.

    ” ஒரு ஷேட் நியூஸ்டா..” என்றாள் அவன் பக்கத்தில் நெருங்கி நின்று.

    ”வாட்.. றீ.. பேபி ஃபாமாகிருச்சா..?” என சிரித்தான்.

    ”சீ..!!” அவன் மண்டையில் தட்டினாள் ”ராஸ்கல்..”

    ”வேற என்ன.. சொல்லு..”

    ”வெய்ட் எ மினிட்..!!” என்றுவிட்டு பாத்ரூம் போனாள்.

    ஆர்வமாகக் காத்து நின்றான் சசி. உள்ளே போனவள் மீது எரிச்சல் வந்தது.
    சைக்கிள் பெல்லை மெதுவாக அழுத்தினான்.

    சாவகாசமாக வெளியே வந்தாள் கவி.
    ”வீட்டுக்காடா மச்சி..?”

    ” ம்.. என்ன நியூஸ்..?”

    ”வெரி பேட் நியூஸ்..!!”

    ”அப்படியா.. சொல்லு..”

    ”அது தெரிஞ்சா நீ ஷாக்காய்ருவ..”

    ”மொதல்ல சொல்லுடி..”

    அவள் வீட்டைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அவனிடம் மிகவும் மெல்லிய குரலில் சொன்னாள் கவி.
    ”புவி லவ் பண்றா..”

    ”புவியா..?” தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு.

    ”ம்..ம்ம்..!!”

    ”நெஜமாவா சொல்ற..?”

    ” உன்கிட்ட போய் பொய் சொல்லுவனாடா.. பிராமிஸ்..டா..”

    ”யார லவ் பண்றா..?”

    ” அது தெரிஞ்சா.. நீ இன்னும் ஷாக்காகிருவ..”

    ”யாரு..?”

    ”இரு வரேன்..” என்று அவள் வீட்டுக்குள் போனாள்.
    சசியின் உள்ளம் நடுங்கியது. உடம்பே ஒரு மாதிரி கிடுகிடுவென ஆடியது அவனுக்கு. மிகவும் கவலையானான் சசி.

    குதித்து வந்தாள் கவி. அவள் கையில் அவளது மொபைல் இருந்தது. கேலரியிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து சசியிடம் காட்டினாள்.
    ”ஸீ…”

    அதைப் பார்த்த சசி.. சம்மட்டியால் பின்னந்தலையில் அடி வாங்கியது போலானான்.

    ”எப்படி. .?” என்று கேட்டாள்.

    சசியின் காலடியில் பூமி நழுவியது. அந்த போட்டோவைப் பார்க்கப் பார்க்க.. அவன் கண்கள் இருளடைந்தது.

    புவியும்.. ராமுவும் ஜோடியாக இருக்கும் போட்டோ..!!

    ”இது.. இது.. உனக்கு எப்படி..?”

    ”நேத்து அவ ஒரு மொபைல் கொண்டு வந்திருந்தா.. அவளோட பிரெண்டுதுனு சொன்னா..! அவ தூங்கினப்பறம்.. அதை எடுத்து செக் பண்ணேன். அதுல இந்த போட்டோ இருந்துச்சு.. சரி.. உன்கிட்ட காட்லாமேன்னு.. என் மொபைலுக்கு ஏத்தினேன்..” என்று சிரித்தவாறு சொன்னாள்.

    பேசமுடியாமல் நின்றான் சசி.

    ”உன் பிரெண்டு கரெக்ட் பண்ணிருக்கான்.. உனக்கு தெரியலயாடா..?”

    குறுக்காகத் தலையாட்டினான்.

    ”ஆள் எப்படி.. ஓகேதான..? இதுல நீ என்ன சொல்ற..?” அவன் தோளில் கை வைத்துக் கேட்டாள் கவி.

    சசியின் முகம் இருகியது. அவன் மனதில் அணல் மூண்டது.
    ‘இதை ஏன் மறைத்தான்..?’

    ”இதுலருந்து என்ன தெரியுது மச்சி..?” கவி சாதாரணமாகக் கேட்டாள்.

    அவனது காதல் சிதைந்து போனது தெரிந்தது. நெருங்கிய நண்பனின் நம்பிக்கை துரோகம் தெரிந்தது. சசியைக் காண.. அடிக்கடி ராமு வீடுதேடி வந்ததன் ரகசியம் தெரிந்தது. புவி.. மீண்டும் சசியுடன் சிரித்துப் பேசியதன் அர்த்தம் தெரிந்தது. முக்கியமாக சசி எந்தளவு முட்டாளாக்கப் பட்டிருக்கிறான் என்று தெரிந்தது..!!

    உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்.. வேதணையின் விளிம்பில்.. அவனது தோல்வி உருமாறிக் கொண்டிருந்தது..! அவன் மனதில் கோபமும்.. வன்மமும்… அதிகமாகவே உருவெடுத்தது…!!

    ‘ராமு.. என் இனிய நண்பனே..! கூடவே இருந்து குளிபறித்தவனே.. இப்படி ஒரு காரியத்தைச் செய்ய.. எப்படியடா மனசு வந்தது உனக்கு..? நான் மனதாரவும்..உண்மையாகவும் நேசித்த ஒரு பெண்ணை இடையில் நீ வந்து தட்டிக்கொண்டு போய்விட்டாயே..? என் இதய தேவதையாக நான் பூஜித்தவளை.. நீ கவர்ந்து விட்டாயே.. உன் வஞ்சகத்தை நான் எப்படி மன்னிப்பேன்.. பாவி..?’ அவனையும் மீறி அவனது மனசு ஓலமிட்டது..!!

    காதல் தோல்வியாலும்.. அவமானத்தாலும்.. வேதனையடைந்த அவன் முகம் கருத்துப் போனது. அவன் முகத்தில் எந்த உயிரோட்டமான உணர்ச்சியும் இல்லை..!

    ”உன்னோட பெஸ்ட் பிரெண்டுதான் இவளோட ஆருயிர் காதலன். ஒன்னும் மோசமில்லை. நல்ல பையனாத்தான் புடிச்சிருக்கா.. எப்படிடா மேரேஜ்லாம் பண்ணிக்குவானா..? அவனப் பத்தி நீ என்ன நெனைக்கற..?”

    அவன் மன உணர்வு என்ன என்பதை அவள் உணர வாயப்பு இல்லை. கண்கள் வெறிக்க அவன் முகம் கருத்துப் போய் நின்றிருப்பதை..கவி கவனிக்கவில்லை..!!

    ஆனால் சசி ஆதாள பாதளத்தில் விழுந்து கிடந்தான்.

    கவி மேலும் ஏதோ பேசினாள். ஆனால் அது எதுவும் அவன் காதில் விழவில்லை.
    அவனது மனம் உலைக்கமாக உழன்று கொண்டிருந்தது.
    ராமு அடிக்கடி அவன் வீட்டுக்கு வர ஆரம்பித்தபின் நடந்த சம்பவங்கள் ஒவவொன்றாக முன்னும் பின்னும்.. அவன் நினைவில் வந்தன..!!

    ” என்னடா.. ரொம்ப ஷாக்கா இருக்கா..?” அவன் தோளை அழுத்தினாள் கவி.

    சசியின் தொண்டை அடைத்தது.
    ”அவகிட்ட இதுபத்தி கேட்டியா..?”

    ”இன்னும் கேக்ல.. நா கேட்டா.. கன்டிப்பா சண்டைதான் போடுவா..”

    ”ஏன்..?”

    ”என் பிரச்சினய அவ பெருசு பண்ணுவா..! நீ யோக்கியமானு என்னை கேப்பா..? நாம ரெண்டு பேரும் படுத்துட்டிருந்தோம்னு அடிச்சு பேசுவா..! மொத்தமா என்னை பிளாக் மெயில் பண்ணுவா..” என்றாள் மிகவும் மெதுவான குரலில்.

    சசி எதுவும் பேசாமல்.. அவள் மொபைலில் இருந்து.. அவன் மொபைலுக்கு அந்த படத்தை ஏற்றினான்..!!

    ”என்னடா பண்ணப்போற..?” என்று கேட்டாள் கவி.

    ” எதுவும் பண்ண மாட்டேன்.. தெரிஞ்சுக்கத்தான்..! சரி நான் போகட்டுமா..?”

    ” போறியா..? அவன்கிட்ட எப்படினு கேளு.. மொத..!!” என்றாள் கவி.

    ”ம்..!!” மண்டையை ஆட்டிவிட்டு.. சைக்கிளை நகர்த்தினான் சசி….!!!!

    -வளரும்….!!!!

    -இந்தக் கதைக்கு.. ஊக்கமும்.. உற்சாகமும் அளித்து வரும்.. அனைத்து நண்பர்களுக்கும்.. வணக்கம்..!
    மன்னிக்கவும் நண்பர்களே..புவியை ராமுவோடு இணைக்கக்கூடாது என்பது உங்களில் பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் இந்தக் கதையில்.. அதுதான் நடக்கப்போகிறது.!
    இது உங்களுக்கு அதிருப்தியை அளித்தால்.. மன்னியுங்கள்..!

    இந்தக் கதை வழக்கம் போல.. ஒரு எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதைதான். தவிற.. இந்த கதையின் முக்கியத் திருப்பங்கள்.. முன்பே தீர்மானிக்கப் பட்டவை. அதை இபபோது மாற்றினால்.. கதையின் மொத்த வடிவமும் மாற்றி அமைக்க வேண்டியிருக்கும்.! அது இனி சாத்தியமும் இல்லை..!

    வாழ்வின் சில எதார்த்தங்களைப் பிரதிபலிக்கச் செய்வதே என் கதைகளின் முயற்சி..! தொடர்ந்து படித்து வாருங்கள்..!
    உங்கள் விமர்சனங்களைத் தெரிவியுங்கள்..!!

    – நன்றியுடன்…. உங்கள் முகிலன்….!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் – 72

    Leave a Comment