இதயப் பூவும் இளமை வண்டும் – 59 (idhayapoovum ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil kamakathaikal update ஆஸ்பத்ரியைவிட்டு வெளியேறியதும் மெல்லிய குரலில் கவிதாயினிடம் கேட்டான் சசி
    ”என்ன காரணம் சொன்னே..?”

    ”நீ சொன்னமாதிரிதான்..” என்றாள் கவிதாயினி அவள் குரல் சுரத்தின்றி இருந்தது.

    Story : Mukilan

    ”பாய்பிரெண்டு கிள்ளிட்டான்னா..?” லேசான சிரிப்புடன் கேட்டான்.

    ”ம்..ம்ம்..! ஆனா அந்த பொம்பள நா சொன்னத நம்பல.! துருவி துருவிக்கேட்டா.. நான் ஒரே காரணம்தான் சொன்னேன்.! யாரு வெளில நிக்கற பையனானு உன்னை காட்டி கேட்டா.. ஆமான்ட்டேன்..” என்றாள்.

    தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு.
    ”அடிப்பாவி.. ஹெல்ப் பண்ண வந்தா.. என்மேலயே பழி போட்டுட்டியா..”

    ”அப்றம் நான் இப்ப பாய் பிரெண்டுக்கு எங்கடா போவேன்..?”

    ”அதுக்குன்னு…..”

    ”கண்டபடி திட்னா..! எப்படியோ ஒரு வழியா ட்ரீட்மெண்ட் பண்ணா அது போதும் எனக்கு. மறுபடி ஏதாவது பிராப்ளம்னா வரச்சொல்லியிருக்கா.. ஊசி போட்டாச்சில்ல..? இனி பயமில்லதான..?” என அவனைக் கேட்டாள்.

    ”மருந்து.. மாத்திரை..?”

    ”வாங்கனும்..”

    ”சரி.. உன் பாய்பிரெண்டு என்ன ஆனான்.? போன் ஏதாவது பண்ணானா..?”

    ”இல்லடா.. பாவம்..”

    ”அவன்ட்ட போன் இருக்கா..?”

    ”ம்..ம்ம்..”

    ”நெம்பர் சொல்லு..”

    ”ஏன்..?”

    ”அவன் என்ன கண்டிசன்ல இருக்கானு தெரிஞ்சிக்கலாம்..”

    ”ஐய்யய்யோ..” என்றாள்.

    ”என்ன..?”

    ” அவனோட மொபைலயும் அவங்களுக்கே தந்துட்டான்..”

    ”சே..” வருந்தினான் ”தைரிமயே இல்லயா அவனுக்கு..?”

    ”இதென்ன சினிமானு நெனச்சியா..? அவனும் மனுஷன்டா..”

    ”சரி விடு.. இப்ப என்ன பண்ணலாம்..?”

    ”நைட்டு அவனே பண்ணுவான்.. எங்கம்மா மொபைலுக்கு..” என்று அவனிடம் மருந்துச் சீட்டைக் கொடுத்தாள் ”நீ போய் வாங்கிட்டு வா..”

    மருந்துக் கடையில் போய் மருந்து வாங்கி வந்தான் சசி.!!
    ”ம்..ம்ம்..! பத்ரமா வெச்சிக்கோ..! கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது குடிக்கறியா.?”

    ” ஒன்னும் வேண்டாம்டா எனக்கு.. மொதல்ல என்னைக் கோண்டு போய் வீட்ல விட்று போதும்..” என்றாள்.

    அவன் விடாமல் வற்புறுத்தி அவளைக் கூட்டிப்போய் ஜூஸ் குடிக்க வைத்தான் சசி.

    மறுபடி கவிதாயினியைக் கொண்டு போய் வீட்டில் விட்டபோது.. நாலரை மணி..!
    போனதும் கவிதாயினி படுத்து விட்டாள்.

    ”ஏன் படுத்துட்ட.?” சசி கேட்டான்.

    ”டயர்டா இருக்குடா..” என்றாள்.

    ”சரி.. ரெஸ்ட் எடு.. நான் கெளம்பறேன்..”

    ”நீ சாப்பிட்டு போடா..”

    ”பசியே இல்லடி.. ” சிகரெட் பற்ற வைத்தான்.

    ”சரி.. உக்காரு போவியாம்..” என்றாள்.

    அவளருகிலேயே உட்கார்ந்தான். அவன் சிகரெட் புகைக்க..
    கவி எழுந்து உட்கார்ந்தாள்.
    மருந்துகளை எடுத்து.. அவனிடம் விபரம் கேட்டுவிட்டு.. அவள் சுடி டாப்பை மேலே தூக்கி..
    அவளே மருந்து போட முயன்றாள். அவளுக்கு உடை அவளுக்குத் தடையாக இருந்தது.
    அவனைப் பார்த்தாள்.
    ”போட்டு விடுடா..”

    சிகரெட்டை உறிஞ்சிவிட்டு கை நீட்டி வாங்கினான்.
    ”நல்லா உக்காரு..”

    மருந்தைக் கொடுத்துவிட்டு அவன் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்தாள்.
    ”கதவு சாத்தலடா..”

    ”ஏன்.. நாம ஏதாவது பண்ணப்போறமா என்ன..?” என்று கேட்டான்.

    ”நாம பண்ணல..! ஆனா திடீர்னு யாராவது வந்துட்டா..? லேசா கதவ சாத்தி விட்று..” என்றாள்.

    சசி எழுந்து போய்.. கதவை லேசாகச் சாத்தி வைத்துவிட்டு வந்து அவள் முன் உட்கார்ந்தான்.
    ”ம்..ம்ம்.. காட்டு..”

    சுடிதார் டாப்பை மேலே தூக்கிவிட்டு.. பிராவைத் தளர்த்திவிட்டாள்.! அவளின் இரண்டு இளம்கனிகளும் முழுமையாக அவன் பார்வைக்கு விருந்தாகியது.

    சசி மருந்து ட்யூப்பைப் பிதுக்கினான். விரலில் பூசி.. அவள் மார்புக்கு பூசப்போனபோது அவன் விரல் லேசாக நடுங்கியது.

    ”அந்த லேடி டாக்டர் என்ன திட்டு.. திட்னா தெரியுமா..?” என்றாள் கவி.

    அவள் மார்பின் மெண்மையைத் தொட்டுத்தடவி மிகவும் நிதானமாக.. மார்பின் கீறலுக்கு மருந்து போட்டான் சசி.
    அவன் விரல் பட்டபோதே அவளுக்கு வலித்திருக்க வேண்டும். அவள் முகம் லேசாக சுணங்கியது. ஆனால் அதை அவள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.!

    சசி வேறு எந்த சில்மிசத்திலும் ஈடுபடவில்லை. அவள் மார்பின் காயத்துக்கு மருந்து போடுவதிலேயே கவனமாக இருக்க…
    ஸ்கூல் விட்டு வந்த புவியாழினி.. கதவைத் திறந்து அந்தக்காட்சியைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்.!!

    புவியைப் பார்த்த கவியும்..சசியும் அதே போலத்தான் அதிர்ந்து போயினர்.

    கவி சட்டென சுடிதாரைக் கீழே இறக்கி.. மார்பை மறைக்க.. சசியும் விருட்டென எழுந்தான்.
    ”ஹாய் புவி…” என்றான் சுதாரித்துக்கொண்டு.

    அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த புவியின் கண்கள் அவர்கள்மீது கணலைக் கக்கின.! அவள் முகத்தில் கோபம் ருத்ரதாண்டவம் ஆடியது.!

    சூழ்நிலையைச் சமாளிக்க.. மறுபடி..
    ”ஸ்கூலல விட்டாச்சா..?” என்று வழிந்துகொண்டு கேட்டான்.

    அவ்வளவுதான்.. ஸ்கூல் பேகைத் தூக்கி வீசினாள் புவி. ஸ்கூல்பேக் சுவற்றில் போய் மோதி.. உள்ளிருந்த புத்தகங்கள் எல்லாம் தெறித்துவந்து வெளியே சிதறின.!
    புவி வேகவேகமாக மூச்சு வாங்கினாள்.

    கவி வாயே திறக்கவில்லை.
    சசி தடுமாறினான்.

    ”தூ..!!” எனத் துப்பிவிட்டு.. உடனே அங்கிருந்து வெளியே போய்விட்டாள் புவி.

    திகைப்பு மாறாத சசி ”தப்பா நெனச்சிட்டா போலருக்கு..?” என்றான்.

    கவி ”ஆமா..!!” என்றாள்.

    ”இப்ப என்ன பண்றது..?”

    உதட்டைப் பிதுக்கினாள்
    ”ஒன்னும் பண்ண முடியாது..”

    ”ச்சே..”

    ”தயவு செய்து.. இத அவகிட்ட ஏதாவது சொல்லிடாதடா.. ப்ளீஸ்..” என இரைஞ்சுவது போலச் சொன்னாள் கவி ”எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..”

    ”அதப்பத்தி நீ கவலையே படாத..! ஆனா இவள எப்படி சமாதானப்படுத்தறது..?”

    ”அவள நா.. பாத்துக்கறேன்.. நீ கவலப்படாத..” என்றாள்.

    ” என்னமோ.. சரி நான் போகட்டுமா..?”

    ”ம்..ம்ம்..!” எழுந்தாள் ”ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா..”

    ”ஏய்.. என்னது..என்னமோ.. புதுசால்லாம் பேசிட்டு..” என்க..

    அவன் பக்கத்தில் வந்து அவன் கையைப் பிடித்தாள் கவி.
    ”இல்லடா.. நீ வரதுக்கு முன்னாலவரை.. நான் எப்படி இடிஞ்சு போய் இருந்தேனு உனக்கு தெரியாது..! செத்துடலாமானுகூடல்லாம் பீல் பண்ணிட்டு இருந்தேன்..! ஆனா இப்ப.. நீ இருக்கற தைரியம்.. என்னை தெம்பா இருக்க வெச்சிருக்கு.! இன்னிக்கு மட்டும்.. ஈவினிங்க்குள்ள நா உன்ன பாக்கலேன்னா.. நான் சூசைட் பண்ணிருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல..” என்றாள்.

    செல்லமாக.. ஆனால் பட்டென அவள் கன்னத்தில் அடித்தான் சசி.
    ”ஏய்.. லூசு பக்கி.. என்ன பேசற..? இப்படி எல்லாம் ஒளறிட்டிருந்தே.. அப்றம் நான் மசக்கடுப்பாகிருவேன்..!”

    ”இல்லடா.. இப்ப இல்ல..! ஆனா.. நீ வரதுக்கு முன்னவரை நான் அந்த மனநிலைலதான் இருந்தேன்..” என்று உருக்கமாகச் சொன்னாள்.

    ”சீ.. அப்படியெல்லாம் எதும் நெனைக்காதத.. எது வந்தாலும் பாத்துக்கலாம்.. நான் இருக்கேன்..! தைரியமா இரு.. என்ன..?”

    ” ம்..ம்ம்..!!” தலையாட்டினாள்.

    அவள் கன்னத்தில் தட்டி.. ”பை..” என்றான்.

    ”சாப்பிட்டு போடா..”

    ”இல்லே.. எனக்கு இப்ப பசி இல்ல.. பை..” என நகர்ந்தான்.

    ”சசி..” என அழைத்தாள்.

    நின்றான் ”என்ன..?”

    ”வா.. உள்ள வா…”

    ”ஏன்..?”

    ”உன்ன கிஸ் பண்ணனும்..”

    அவளை வெறித்தான். இபபோது அவன் மனதில் இவளை முத்தமிடும் எண்ணம் இல்லை.
    கோபித்துக்கொண்டு போன புவியாழினிதான் அவன் மனதைக் குடைந்து கொண்டிருந்தாள்.

    ”இல்ல.. பரவால்ல.. கவி..! வேண்டாம்..! நான் போறேன்..!” என்றான்.

    ”யேய்..” என்றாள் வியப்பு கலந்து ”மச்சி.. ஏன்டா..?”

    ”இப்ப எனக்கு அந்த மூடு இல்ல.. கவி..! ஸாரி.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சிரு..!”

    ” சரி.. நான் தரேன்டா.. உனக்கு..?”

    ”ம்கூம்.. இப்ப வேண்டாம்.! பத்ரமா வெய்.. நான் அப்றம் வாங்கிக்கறேன்..! பை.. கவி..! டேக் கேர்.!!” என அவன் பாத்ரூம் போய்வந்தான்.

    கவி.. அவன் பக்கத்தில் வந்து கேட்டாள்.
    ”நீ இப்ப போயே ஆகனுமாடா..”

    ”ஏன் கவி..?”

    ” என்கூடவே இரேன்.. ப்ளீஸ்.. எனக்கு பயமாருக்குடா..”

    ”ஏய்.. ச்சீ.. எதுக்கு இப்ப பயந்து சாகற..? டோண்ட் வொர்ரி.. தைரியமா இரு..! நா அப்பப்போ கால் பண்ணிட்டே இருப்பேன்..! பயப்படாத..!” என அவள் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு தன் சைக்கிளை எடுத்தான் சசி.

    கவிக்கு கையசைத்து விடைபெற்றான்.
    அவன் மதிய உணவு உண்ணவே இல்லை. அவன் இப்போது சாப்பிடும் மனநிலையிலும் இல்லை.
    புவி அவனைத் தவறாக நினைத்துவிட்டாளே என்கிற ஒன்றுதான் அவனுக்கு பெரும் மன உளைச்சலாக இருந்தது.
    இப்போது புவி எங்கிருப்பாள்.? தங்கமணி வீட்டிலோ.. அல்லது நசீமா வீட்டிலோதான் இருக்க வேண்டும்..! சைக்கிளை தங்கமணி வீட்டு சைடில் திருப்பினான் சசி..!
    அவனுக்கு உடனே புவியைப் பார்த்து.. சமாதானம் செய்தாக வேண்டும் என்று மிகவும் தவிப்பாக இருந்தது….!!!!

    -வளரும்…..!!!!

    Leave a Comment