இதயப் பூவும் இளமை வண்டும் – 57 (idhayapoovum ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    kamaveri kudumba kathai மறுநாள் காலையில் அண்ணாச்சியம்மா கேட்டாள்.
    ”நேத்து ஏன்டா வரல..?”

    ”எப்படி வரது.?” என்று மெதுவாகக் கேட்டான் சசி.

    Story Writer : Mukilan

    ”வரனும்னு நெனச்சா எப்படி வேணா வரலாம்.?” என லேசான முறைப்புடன் சொன்னாள். அவள் பார்வையிலும் குரலிலும் கோபம் தெரிந்தது.

    ”ம்.. வரலாம்..” என இழுத்தான் ”ஆனா.. யாருக்காவது.. தெரிஞ்சுட்டா..?”

    அவனையே வெறித்தாள் அண்ணாச்சியம்மா.

    ”அலோ… ஸாரி..!” என்றான்.

    ”பரவால்ல..!”

    ”கோபமா..?”

    ”கோபமில்ல.. வருத்தம்.!”

    ”ஸாரி.. ஸாரி..! எனக்கு என்ன பிரச்சினைனா.. நைட்ல எப்படி.. இங்க வரதுனுதான்.. நா வர நேரம் யாராவது பாத்துட்டா..? சப்போஸ் குமுதாளோ எங்க மச்சானோ பாத்துட்டா.. நா என்ன பதில் சொல்ல முடியும்..? கொஞ்சம் யோசிங்க..”

    அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு.. ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டாள்.
    ”ஹ்ஹ்ம்ம்ம்ம்..”

    ”சரி.. நீங்க.. வெளில வரமாட்டிங்களா..?” என்று கேட்டான்.

    ”எங்காவது.. சினிமா.. ”

    ”ம்கூம்.. கடை வீட்டை விட்டு நா எங்கயும் நகர முடியாது. ஏதாவது விஷேசம்னா போலாம். மத்தபடி.. சினிமால்லாம் பழக்கமே இல்ல..!”

    ”இதான் பிரச்சினை இப்ப என்ன பண்றது..?”

    ”நீதான் சொல்லனும்..” என்றாள் முடிவாக.

    கடைக்கு ஆள்வர அந்தப் பேச்சு முற்று பெறாமலே நின்று போனது.

    ராமுவிடம் போனான் சசி. அவனோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கேட்டான் ராமு.
    ”ஆமா.. அந்த பூக்கார அக்கா இருக்கே..? கவியோட அம்மா.. அது எப்படி..?”

    ”எப்படின்னா..?”

    சிரித்த ராமு ”இல்ல.. ஒரு மாதிரினு கேள்விபபட்டேன்..” என்றான்.

    சசிக்கு புரிந்தது. இருந்தாலும் கேட்டான்.
    ”என்ன மாதிரி..?”

    ”கேஸா..?”

    ”இல்லடா…”

    ”உங்களுக்கு சொந்தமா அவங்க..?”

    ”அதெல்லாம் இல்ல..! பக்கத்து வீடு. சின்ன வயசுலருந்தே நல்ல பழக்கம்.. ஏன்டா..?”

    ”தெரிஞ்சுக்கலாம்னுதான்.! அதோட புருஷன் என்ன எறந்துட்டாரா..?”

    ”சாகல..!ஆனா கூட இல்ல..!”

    ”ஆனா.. அதப்பத்தி..ஒரு மாதிரி பேச்சு இருக்கே..?”

    ”இருக்கலாம்..!!” என்றான் சசி.

    ”இல்ல.. அடிக்கடி..ஒரு ஆளுகூட வண்டிலல்லாம் சுத்திட்டிருக்கு.! நானே பாத்துருக்கேன்.. அதான் கேட்டேன்..”

    ”அப்படியா..?” என அப்பாவி போலக் கேட்டான் சசி ”இருந்தாலும்.. இருக்கலாம்..”

    ”இது அந்த புள்ளைகளுக்கு தெரியுமா..?”

    ”தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.. இது காலைல ஆறுமணிக்கு முன்னால வீட்லருந்து கிளம்பிறும். பூ மார்க்கெட்ல போய் பூ வாங்கிட்டு வந்து.. கட்டி வேவாரம் பண்ணும். ஒரு நாள்கூட லீவ் போடாது. ஒவ்வொரு சமயம் மத்யாணமே வீட்டுக்கு வந்துரும்..! ஆனா பெரும்பாலும் ஏழு மணிக்குமேலதான் வீட்டுக்கு வரும்..!”

    ” அப்ப சாப்பாடு..?”

    ”காலைலயே சாப்பாடு செஞ்சு யாராவது கொண்டு போய் குடுத்துருவாங்க..”

    ”சாப்பாடு செய்யறது யாரு..?”

    ”ரெண்டு பேருமே செய்வாங்க. ஆனா அதிகமா கவிதான் செய்வா. தண்ணி எடுக்கறது.. பாத்திரம் கழுவறது..எல்லாம் புவி செய்வா.! அப்றம் கல்யாண சீசன்ல அம்மா மகளுக.. எல்லாம் சேந்து விடிய விடிய பூ கட்டுவாங்க..! மாலை கட்டுவாங்க..! ஆனா நல்ல உழைப்பாளி.. இல்லேன்னா ரெண்டு பொட்டப்புள்ளைகளையும் நல்லா படிக்க வெக்க முடியுமா..? அது பாடு படறதே.. இதுகளுக்காகத்தான்.!”

    ”சேமிப்பெல்லாம் இருக்குமா..?”

    ”இருக்கும்.. கல்யாண சீசன்ல நகை நட்டுன்னெல்லாம் எடுக்கும்..! ஒரு நோம்பி நொடினு வந்தா ஒருத்திக்கு ரெண்டு செட்.. மூணு செட் ட்ரஸ் எடுத்து குடுக்கும். அதுலெல்லாம் குறையே சொல்ல முடியாது. புருஷன் இருந்துருந்தாக்கூட புள்ளைங்களுக்கு இந்தளவுக்கு செலவு பண்ணுமா என்னன்னு தெரியல.! புள்ளைங்க கேட்டதெல்லாம் வாங்கிகுடுத்துரும்..!”

    ”அந்தளவுக்கு வருமானம் இருக்கா..?”

    ”வருமானம் இருக்காவா..? நல்லா கேட்ட போ..! மாலை கட்றதுலெல்லாம் என்ன காசு தெரியுமா..? கல்யாண ஆர்டர்ல செம வருமானம் இருக்குடா..! அதேமாதிரி நல்லாவும் கட்டிக்குடுக்கும்.!” என.. புவனாவின் வாழ்க்கையைப் பத்தியும் நிறையச் சொன்னான் சசி.!

    புதன்கிழமை நாள்.!
    மதியம்.. சசி சாப்பிடப்போனபோது.. கவிதாயினி வீட்டில் இருந்தாள்.
    சைக்கிளை நிறுத்திவிட்டுப் போய்..
    ”ஹாய்.. டீ..” என்றான்.

    கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவளிடம் இருக்கும் வழக்கமான உற்சாகம் இன்று இல்லை. அவளது முகம் வாடியிருந்தது.

    ”ஹேய்.. என்னாச்சு..? டல்லாருக்க..?” கேட்டுக்கொண்டே உள்ளே போனான்.

    டிவி ஓடவில்லை. பேனும் சுழலவில்லை. பவர் கட்.! அவள் முகம் கொஞ்சம் வியர்த்திருந்தது.
    ”ஒடம்பு சரியில்லையா..?” என மீண்டும் கேட்டான்.

    பெருமூச்சு விட்டு ‘ப்ச்..’ என உச் கொட்டினாள் கவிதாயினி. நீட்டிப் படுத்திருந்தவள் அசையக்கூட இல்லை.
    ‘இவள் உம்மணா மூஞ்சி பெண்ணல்லவே.. என்னாயிற்று..?’

    அவள் அருகில் உட்கார்ந்தான் சசி.
    ”யேய்.. என்னாச்சு.. மச்சி..?”

    சுரத்தின்றி ”ஒன்னுல்ல…” என்றாள்.

    ”பின்ன ஏன் டல்லாருக்கா எதாவது பிரச்சினையா..?”

    அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் விட்டத்தை வெறித்தாள்.

    அவனே யூகித்து.. ”லவ்ல ஏதாவது பிரச்சினையா கவி..?” என்று கேட்டான்.

    மறுப்பாகத் தலையை மட்டும் அசைத்தாள்.

    சசிக்கு அவள் மேல் கொஞ்சம் எரிச்சல் வந்தது.
    ”வேற என்னதான்டி ஆச்சு உனக்கு..?” என்று கேட்க..

    ”நீ போய் உன் வேலையை பாரு போ..” என்றாள் சட்டென.

    இவள் இப்படி பேசக்கூடிய பெண்ணே அல்ல. சசிக்கு ஆர்வம் அதிகமானது.
    ”ஓகே நான் போறேன்..! முதல் முறையா.. நான் வேற ஒரு கவிய பாக்கறேன்.! சாப்பிட்டியா..?”

    ”இல்ல….”

    ”ஏன்..?”

    பதில் இல்லை. சீராக ஏறி இறங்கும் அவள் மார்பைப் பார்த்தான். அவள் மேல் ஆசை வந்தது.
    அவள் தோளில் கை வைத்தான் சசி.
    ”என்ன்னுதான் சொல்லேன்டி..”

    அவன் முகத்தை நேராகப் பார்த்தாள். அவள் கண்கள்.. அவன் கண்களை ஊடுருவியது.
    அவள் கண்களில் ஒரு வலி.. அல்லது கவலை.. அல்லது வேதணை.. இப்படி ஏதோ ஒன்று தெண்பட்டதாக உணர்ந்தான் சசி.

    கவி மார்புகள் மேலெழுந்து அடங்க ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.
    ”மனசு சரியில்லைடா..”

    ”உனக்கா..?” சிரித்துவிட்டான் சசி ”என்ன கொடுமைடி.. இது..? உனக்கு மனசு சரியில்லையா.? இத மனசுனு ஒன்னு இருக்கறவங்க சொல்லனும்..! நாமல்லாம் வேற ஜாதி.! நம்ம வாய்லருந்தெல்லாம் இந்த மாதிரி டயலாக்லாம் வரவே கூடாது.. ஓகே..?”சசி சிரித்தான்.

    ஆனால் அப்போதும் கவி சிரிக்கவில்லை. அவள் முகம் சீரியஸாகவே இருந்தது.

    சசி ”சரி.. என்னாச்சு சொல்லு..” என்று கேட்டான்.

    ”அத எப்படி சொல்றதுனு தெரியல..” என்றாள் மிகவும் மெல்லிய குரலில்.

    மறுபடி சிரித்தான் சசி.
    ”வாயாலாதான்.. வேற எப்படி..?”

    மல்லாந்து படுத்திருந்த அவளது துப்பட்டா இல்லாத மார்புகள் மிகவுமே அவனை உசுப்பேற்றிக்கொண்டிருந்தது. ஆனால் சோகமுகத்துடன் இருக்கும் அவளிடம் உடனே சில்மிசம் செய்ய வேண்டிமென பொருமை காத்தான்.!

    ”சொல்லவே வெக்கமாருக்கு..” என்றாள் கவி.

    ”வெக்கமா.. உனக்கா..?” வாய்விட்டுச் சிரித்தான் சசி ”அதெல்லாம்கூட உன்கிட்ட இருக்கா என்ன..? ஆமா ஏன் இப்படி.. புதுசு புதுசா.. புரியாத வார்த்தையெல்லாம் பேசற.? இப்ப என்னதான் பிரச்சினை உனக்கு.. அத ஓபனாவே சொல்லு பாக்கலாம்..”

    அவள் முகம் இருக்கமாகவே இருக்க.. அவளது கன்னத்தில் தட்டினான்.
    ”ஏய் நீ இப்படி பிகு பண்றத பாத்தா.. எனக்கு டென்ஷனாகுது கவி.. சொல்லித்தொலையேன்.?”

    சட்டென அவளது உதடுகளை வாய்க்குள் இழுத்து கவ்வினாள். ஆனாலும் அவள் வாய் கோணியது. மூச்சு லயம் மாற.. அவள் கண்களில் உடனடியாக நீர் கோர்க்க… ‘ஹெக் ‘கென விம்மினாள் கவி..!!

    திடுக்கிட்டான் சசி.
    ‘மை காட்.. கவி அழுகிறாள்….????’

    -வளரும்…….!!!!

    Leave a Comment