நீ – 110

pudavai pundai மேலும் இரண்டு நாட்கள்.. நான் வீட்டிலேயேதான் இருந்தேன். எங்கும் போகவில்லை..!
காலை.. பதினொரு மணிக்கு.. நித்யா வீடு தேடி வந்தாள்..!

நீ ”வாங்க..” என்று வரவேற்றாய்.

கருநீலககலரில் புடவை கட்டியிருந்தாள்..! அவள் முகம் பளிச்சென.. திருத்தமாக இருந்தது..! பியூட்டி பார்லரிலிருந்து நேராக இங்கு வருகிறாளோ..?

Story Writer : Mukilan

”வா.. நித்தி.. உக்காரு. .” என்று சேரை நகர்த்திப் போடேன்.

பின்னால் இருந்த புடவைத் தலைப்பை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
உன்னைப் பார்த்து..
”காபி வெய..” என்றேன்.

நீ அடுப்படிக்குப் போக.. நித்யா என்னிடம் கேட்டாள்.
”ஏன்ணா.. இப்படி இருக்கீங்க..?”

”எப்படி..?”

”ரொம்ப டல்லா..? ஒடம்புக்கு சரியில்லையா..?”

”இல்ல.. அதெல்லாம்.. ஒன்னும் இல்ல..”

”எனி.. ப்ராப்ளம்…?” என்று சன்னமாகக் கேட்டாள்.

நான் அமைதியாக இருந்தேன். ஒரு வித மன இருக்கத்தை உணர்ந்தேன்.

என்னிடமிருந்து பதிலை எதிர்பார்த்து.. ஏமாற்றமடைந்தவள்.. மெதுவாகவே கேட்டாள்.
”என்ன பிரச்சினை… உங்களுக்குள்ள..?”

நான் பேசாமலே.இருந்தேன்.

”அலோ.. பிரதர்.. உங்களத்தான்..” என்றாள்.

”என்ன.. நித்தி..?” என்று அவளைப் பார்த்தேன்.

”என்ன பிரச்சினைனு கேட்டேன்..?” என்று கூர்மையாக என் கண்களைப் பார்த்தாள்.

நீ காபியுடன் வந்தாய்.
”காபி குடி…” என்றேன்.

வாங்கிக்கொண்டாள்.
”ரெண்டு பொண்டாட்டி விசயம் சாதாரணமானது இல்லே..” என்றாள்.

நீ ”அக்கா.. நல்லாருக்குங்குளா..?”என்று அவளிடம் கேட்டாய்.

”அவ நல்லாத்தான் இருக்கா.! ஏதோ பிரச்சினைனு புரியுது. ஆனா அது என்ன பிரச்சினைனுதான் தெரியல. அத தெரிஞ்சுட்டு போலாம்னுதான்.. நானே வந்தேன்…” என்றாள்

”காபிய குடி.. மொதல்ல..” என்றேன்.

காபியை உறிஞ்சினாள்.
”பிரச்சினை என்னன்னு சொல்லுங்க பிரதர்..”

”ஏன்.. அவ எதுவும் சொல்லல..?”

”ம்கூம்..” வேகமாக மண்டையை ஆட்டினாள் ”என்ன கேட்டாலும் பேசவே மாட்டேங்கறா.. எப்பவும் ரூம்லயே அடைஞ்சு கெடக்கா… அடிச்சிட்டிங்களா.. அவள..?”

நான் மௌனிக்க…

”சரி.. அத விடுங்க..! அவளா வந்தாளா..? இல்ல.. நீங்களா வெரட்டிட்டிங்களா..அங்க..?” என்று கேட்டாள்.

”அவளாதான் வந்துருக்கா…”

”அப்படியா.? என்ன பிரச்சினை..?” என்று லேசான முறைப்புடன் உன்னைப் பார்த்தாள்.
அவளது எண்ணம்.. என்ன என்பது நன்றாகவே புரிந்தது.
உனக்காக நான் அவளோடு சண்டை போட்டு.. அவளை விரட்டி விட்டதாக நினைக்கிறாள்.
என்னுள்ளும் பொசுபொசுவென ஒரு கோப உணர்வு பொங்கியது.

”அவளையே கேட்றுக்கலாம்..” என்றேன்.

”அவதான்..யாரோடயும் பேசறதே இல்லியே..? அப்றம் எப்படி கேக்கறது..?”

”உன் புருஷன் இருக்கானா வீட்ல…?”

”இல்ல.. ஸ்டேண்டுக்கு போய்ட்டாரு..” என்று காலியாகிவிட்ட டம்ளரைக் கீழே வைத்தாள்.

”இவ.. அங்க இருக்கறது அவனுக்கு தெரியுமில்ல..?”

”தெரியும்..! ஆனா அவதான் அவங்கண்ணன்கூட பேசியே. ரொம்ப நாள் ஆச்சே..? அப்படியே பேசினாலும்.. ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தைதான். .பேசுவா..! நானும் எவ்வளவோ கேட்டுப்பாத்துட்டேன்.. அவ கண்லருந்து தண்ணிதான் வருதே தவிற.. வாய்லருந்து ஒரு வார்த்தை வர்றதில்ல..! அதான் என்ன பிரச்சினைனு தெரிஞ்சுக்க வந்தேன்..”என்றாள்.

”பிரச்சினைனு பாத்தா… இது பெரிய பிரச்சினைதான்..” என்றேன்.

”சொல்லுங்க…என்ன அது..?”

நான் மீண்டும் அமைதியாகிவிட்டேன்.

நளினமான உதட்டசைவுகளுடன் கேட்டாள் நித்யா.
”அவளால குழந்தை பெத்துக்க முடியாதது ஏதாவது பிரச்சினையா..? எதுன்னாலும் ஓபனா சொல்லுங்கண்ணா..”

நான் மறுப்பாக தலையாட்டினேன்.

புன்னகையுடன் ”சக்களத்தி சண்டை.. ஏதாவது..?” என்று கேட்டாள்.

”ம்கூம்…!”

”அப்றம்..?”

மீண்டும் நான் மௌனியானேன். இந்த என் மௌனத்துக்குக் காரணம்.. என்னுள் பொங்கிய.. சீற்றம்தான்..! ஏதாவது பேசினால் கோபத்தில் கடுமையாக ஏதாவது பேசிவிடுவேனோ.. என்று தோண்றியது.!

நித்யா ”நிலா அங்க வந்து ரெண்டு நாளாச்சு..! நீங்க ஒரு எட்டு வந்து பாக்கல..!அதுதான் பரவால்ல.. கார எடுக்ககூட வரல..! ஸ்டேண்டுக்கும் போகல… இப்படி வீட்லயே கெடந்தா.. பிரச்சினை எப்படி சால்வாகும்..?” என்று கேட்டாள்.

”இல்ல நித்தி.. இது வேற மாதிரி பிரச்சினை…”

”அது.. என்னன்னுதான் சொல்லுங்களேன்..?”

”நீ.. ஒன்னு பண்ணு…”

”என்ன..?”

”நீ.. போய்.. மொத அவளையே கேளு..! அப்றம் என்கிட்ட வா பேசலாம்..! இப்ப நான் சொன்னா.. வேற மாதிரி போயிரும்..!”

”நீங்க. . இப்படி திடீர்னு பல்டியடிக்ககூடாது பிரதர்..”

” பல்டி இல்ல..! இது நீ நெனைக்கற மாதிரி பிரச்சினை இல்ல..! பிரச்சினையே வேற நான்ங்கறதால.. இவ்வளவு பொருமையா பேசிட்டிருக்கேன். வேற ஒருத்தனா இருந்திருந்தா.. நடக்கறதே வேறயா இருந்துருக்கும். .” என்று கொஞ்சம் சூடாகச் சொன்னேன்.

”திடீர்னு டென்ஷனாய்ட்டிங்க..? ஆனா கோபமா பேசறதால மட்டும் உண்மை.. பொய்யாகிடாது..” என்றாள்.

சர்ரென ஒரு நொடியில்.. தலைக்கேறிவிட்டது என் கோபம்..! அவளை சுட்டெரிப்பது போலப் பார்த்தேன்..!
”வேனாம் நித்தி.. மொதல்ல நீ.. அங்க பேசிட்டு.. இங்க வா..”

”என்னண்ணா நீங்க…”

”இல்ல.. இதுக்கு மேல பேசினா.. அப்றம் நான் கோபத்துல ஏதாவது.. ஏடாகூடமா பேசிருவேன்..”

”உங்க.. பேச்சு சரியில்ல…”

”அவளை வேண்டாம்னே நான் முடிவு பண்ணிட்டேன்னா.. என்னோட கோபம் எந்தளவுக்கு இருக்கும்னு புரிஞ்சுக்கோ..” என்றதும்…
அதிர்ந்து போய் என்னைப் பார்த்தாள் நித்யா.
என் முடிவைக்கேட்டு… அவழது முகம் வெளுத்துப் போனது. அவள் முகத்தில் ரத்தம் சுண்டி.. முகத்தசைகள் இருகிவிட்டது.!

”அண்ணா…என்ன.. சொல்றீங்க…மை காட்…” என்றாள்.

எனக்கும் கோபம் வந்துவிட்டது.
”நித்தி.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. இப்ப இருக்கற டென்ஷன்ல.. நான் என்ன பேசறதுனு தெரியாம ஏதாவது பேசிடலாம்..! மொதல்ல அவளையே போய் விசாரி..! விசயம் எத்தனை விபரீதமானதுன்னும் புரியும்..!!” என்றேன்.

சிறிது நேரம் என்னை வெறித்துப் பார்த்தாள்.
பின் ”நிலா.. தப்பு பண்ணிட்டானு சொல்றீங்களா.?” என்று கேட்டாள்.
அவள் போவதாகக்காணோம்.
நான் எழுந்து போய் ஜன்னல் அருகே நின்றேன்.
என் உள்ளக்கொந்தளிப்பை நான் அடக்க முயன்றேன்.
‘இவளிடம் நான் என்னவென்று சொல்வது..?’
முதலில் இவளை விரட்ட வேண்டும்..!

”என்னால நம்ப முடியல..” என்றாள்.

அவள் என்னவிதமாக நினைத்திருக்கிறாளோ..?

”உன்னால நம்ப முடியலேன்றதுக்காக.. பொய் உண்மையாகிடாது…” என்றேன்.

”அப்படி என்ன பண்ணிட்டா.. அவ..?”

சிறிது அமைதி காத்து..
”என்னைப் பத்தி..உனக்கே தெரியும்..” என்றேன்.

”ஸோ…?”

”என்னால.. அவள மன்னிக்க முடியாத அளவுக்கு ஒரு காரியம் பண்ணியிருக்கா..! இது அவ மட்டும் பண்ணது இல்ல..! மொத்த குடும்பமும் சேந்து பண்ணியிருக்கு..! அத.. நீ அவகிட்ட மட்டும்தான் கேக்கனும்னு இல்ல.. வீட்ல யார வேனா கேக்கலாம்..! இதுக்கு மூலகாரணமா இருந்ததே உன் புருஷன்தான் அவன கேளு… எல்லாம் தெரியும்..! கேட்டுட்டு.. அப்பறமா வா… பேசிக்கலாம்..” என்றேன்.

”சரி…” என எழுந்தாள் ”நான் மறுபடி வருவேன்..” என்று விட்டு வெளியேறிப்போனாள்.

கதவைச் சாத்திவிட்டு வந்த நீ.. என் பக்கத்தில் வந்து நின்று..
”எனக்கென்னமோ.. பயமாருக்குங்க…” என்றாய்.

”என்ன பயம்.. உனக்கு..?”

” நீங்க.. பெரிய.. பெரிய.. வார்த்தையா பேசறீங்க..”

”எனக்கு வேற வழி தெரியலடி..” என நான் உன்னைப் பார்க்க.. கண்கள் கலங்க.. என்னைப் பார்த்தாய்.
உன்னை இழுத்து.. அணொத்துக் கொண்டேன். நீயும் என்னைக் கட்டிக்கொணடாய்..!
ஆனால் உன் கண்கள் மட்டும்.. கண்ணீரைக் கொட்டியது..!

”நீ.. ஏன்டி.. அழற..?” என்று உன் கன்னங்களைத் துடைத்தேன்.

தலையை ஆட்டியபடி.. கேவினாய்.

உன் மோவாயைப் பிடித்து நிமிர்த்தி.. கண்களில் முத்தமிட்டேன்.
”நீ.. அழுது என்னடி பிரயோஜனம்..?”

”அக்காவ மன்னிச்சிருங்க…”

” மன்னிக்கறது சுலபன்டி..! ஆனா… மனசு..? ஆறவே.. ஆறாது…!!”

-சொல்லுவேன்……!!!!

1 thought on “நீ – 110”

  1. semeeee story pa entha allavukku romance erunthathoooo athey allavu soogam erkku nice story. …… continue…………………………………………………….

Leave a Comment