நண்பனின் முன்னால் காதலி – 33 (Nanbanin Munnal Kadhali 33)

Okkum facebook நண்பனின் முன்னால் காதலி-33

விக்கி சுவாதியை காரில் உக்காரவைத்து ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போனான் .பின் ஆஸ்பத்திரி வந்ததும் அவளை எழுப்பினான் .அவளும் எழுந்து நடந்து வந்தாள் .

பின் அவளை டாக்டரிடிம் கூப்பிட்டு சென்றான் .டாக்டர் அவளை பார்க்கும் முன் விக்கியை பார்த்து நீங்கதான் இவங்க ஹஸ்பண்டா என்று கேட்டார்கள் .

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ஏற்கனவே ஒரு ஆஸ்பத்திரியில் சண்டை போட்டது ஞாபகம் வர எதுக்கு வம்பு ஆமா என்று சொல்லி தொலைப்போம் என்று மனதில் நினைத்து கொண்டு ஆமாம் எனபது போல் வெறும் தலையை மட்டும் ஆட்டினான்.

டாக்டர் அவனை முறைத்து விட்டு சுவாதியை தனியாக கூப்பிட்டு சென்று செக் ஆப் செய்தனர் .பின் சுவாதியை பார்த்து கோபமாக மதியம் என்ன சாப்பிட்ட என கேட்டார் .வேற ஏதாவது சாப்பிட்டியா என கேட்டார் .இல்ல டாக்டர் என்று சொல்லிவிட்டு ம்ம் சாயங்காலம் பஜ்ஜி சாப்பிட்டேன் என்றாள் .

அதை கேட்டு டாக்டர் மிகவும் கோபம் அடைந்தார் .சுவாதியை செல்லமாக தலையில் கொட்டி குழந்தைய வயுத்தில வச்சுக்கிட்டு இப்படி செமிக்காத எண்ணெய் பண்டமா சாப்பிடறது என்றார் கோபத்தோடு .

இல்ல டாக்டர் ஆசையா இருந்துச்சு அதான் என்று இழுத்தாள் .ஆசையா இருந்தா எத வேணும்னாலும் சாப்பிட்ட்ருவியா .இப்ப நீ மட்டும் இல்ல உள்ள ஒரு உயிர் இருக்கு அத மறந்துடாத.நீ சாப்பிட்ட எண்ணெய் பண்டம் குழந்தைக்கு ஒத்துகிறாமாதான் உனக்கு வாந்தியும் மயக்கமும் மாறி மாறி வந்து இருக்கு என்றார் .

சாரி டாக்டர் என்றாள் சுவாதி .ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல இரு உன் புருஷன் கிட்ட சொல்றேன் என்றார் .ஐயோ வேணாம் டாக்டர் என்று சுவாதி சொல்லி கொண்டு இருக்க அதை கேட்கமால் டாக்டர் திரையை விளக்கி விட்டு விக்கியிடம் போனார்கள் .

என்ன மிஸ்டர் பொண்டாட்டிக்கு ரொம்ப முடியாட்டி மட்டும்தான் ஆஸ்பத்திரிக்கு வருவிங்களோ என்றார் .அதை கேட்டு விக்கி புரியமால் முழிக்க சுவாதியை பார்த்தான் .

அங்க என்ன பாக்குறிங்க வீட்டுக்கு போனதும் திட்டலாம்னு பாக்குறிங்களா என டாக்டர் கேட்டார் .விக்கி சரி பொறுமையவே போவோம் என்று நினைத்து கொண்டு அப்படி இல்ல டாக்டர் ஆபிஸ்ல கொஞ்சம் வொர்க் பிஸி அதான் வர முடியல என்றான் .அதை கேட்டு சுவாதி ஆச்சரியப் பட்டாள் .என்ன இவன் இன்னைக்கு சுத்தமா எதுக்குமே கோப படாம இருக்கான் என்று நினைத்தாள் .

எவளோ பிஸியா இருந்தாலும் அட்லிஸ்ட் மாந்தளி ஒரு தடவயாச்சும் வோயிப் கூட வாங்க அது உங்க குழந்தையும்தான அப்ப நீங்களும் அக்கறை காட்டனும் தான என்றார் .

விக்கி திணறி கொண்டே ஆமா டாக்டர் சரி டாக்டர் என்றான் .பாருங்க நீங்க வொர்க் பிஸில இருக்கீங்க அதுனால உங்க பொண்டாட்டிய பாத்துக்க முடியாம அவங்க கண்டதையும் சாப்பிற்றுகாங்க அதுனால இப்படி உடம்புக்கு முடியாம இருக்காங்க என்றார் .

உடனே விக்கி சுவாதியை மாட்டிவிட்டு நம் தப்பி விடலாம் என்று நினைத்து நான் சொன்னேன் டாக்டர் இவதான் கேக்கல நானும் பாவம் ஆசபடுறாலேன்னு வாங்கி கொடுத்தேன் என்றான் .

அதை கேட்டு சுவாதி மனதிற்குள்ளே அடப் பாவி என்றாள் .ம்ம் புருஷன் சொல்லியும் நீ கேக்கல அப்ப உன்னதான் உதைக்கன்னும் என்று சுவாதியை திட்டினார் .அவள் சாரி டாக்டர் என்றாள் .

என்னையே கேட்டா உங்க ரெண்டு பேத்தையும் உதைக்கனும் ரொம்ப careless எஆ இருக்கீங்க சரி மருந்தும் சிரபும் கொடுக்கிறேன் ஒழுங்கா சாப்பிடு அப்புறம் இந்த மாதிரி கண்டதையும் சாப்பிடாத சரியா என்று சுவாதியை பார்த்து சொன்னார் டாக்டர் .அப்புறம் சார் வொர்க்லையே முழ்கி இருக்காம அப்ப அப்ப வோயிப்யையும் பாருங்க என்றார் .

சரிங்க டாக்டர் என்றான் .சரி ரெண்டு பேரும் அடுத்த மாசம் வாங்க என்றார் .thank you டாக்டர் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர் .

அப்போது டாக்டர் சுவாதி ஒரு நிமிஷம் உன் ஹஸ்பெண்ட் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்றார் .உடனே சுவாதி விக்கி கிட்ட டேய் ப்ளிஸ்டா எதுவும் கோப பட்டு அன்னைக்கு மாதிரி கத்திராதடா மும்பைல எனக்கு இந்த ஒரு ஆஸ்பத்திரி தான் தெரியும் என்று கெஞ்சினாள் .ஓகே நான் பாத்துகிறேன் என்றான் .

என்ன சுவாதி பயப்படாத உன் ஹச்பண்ட் எதுவும் அடிக்க மாட்டோம் என்றார் சிரித்து கொண்டே .சுவாதியும் சிரித்து கொண்டே நான் வெளியே இருக்கேன் டாக்டர் நீங்க பேசிட்டு அனுப்புங்க என்று சொல்லிவிட்டு வெளியே போனாள் .

பிறகு விக்கி பயந்து கொண்டே நின்று கொண்டு இருந்தான் .அவனை பார்த்து டாக்டர் சொன்னார் வாங்க சார் வந்து உக்காருங்க என்றார் .அவனும் வந்து சேரில் உக்காந்தான் .

ம்ம் மிஸ்டர் உங்க பேரு என்றார் .என் பேரு விக்னேஷ் டாக்டர் என்றான் .மிஸ்டர் விக்னேஷ் எங்க வேலை பாக்குறிங்க என கேட்டார் .gnb கம்பனில டாக்டர் என்றான் .நல்லது பெரிய கம்பனிதான் என்று சொல்லிவிட்டு டாக்டர் சிறிது நேரம் யோசித்தார் .

பிறகு வீட்ல வேலைக்கு ஆள் இருக்கா எல்லா வேலையும் உங்க வோயிப் தான் பாக்குருங்களா என கேட்டார்.வேலைக்காரி யாரும் இல்ல டாக்டர் எல்லா வேலையும் அவ தான் பாக்குறா என்றான் .

பிறகு டாக்டர் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார் .அதை பார்த்து விக்கி கேட்டான் என்ன டாக்டர் என்ன விஷயம் என்றான் .ம்ம் விக்னேஷ் உங்க வோயிப் கொஞ்சம் வீக்கா இருக்காங்க ஒன்னு அவங்க நிறைய வேலை செய்யணும் இல்ல மனசு அளவுல அவங்க கொஞ்சம் ஆப் செட்டா இருந்து இருக்கலாம் .

இது ரெண்டு நாலையும்தான் அவங்க உடம்பு வீக்கா இருக்கணும் .நான் நினைக்கிறேன் நீங்க வொர்க் பிஸில அவங்கள சரியா கவனிக்காம அவங்க கிட்ட சரியா பேசாம இருந்து இருப்பிங்க அதான் அவங்க மனசு அளவுல வருத்தப்பட்டு இருப்பாங்க அதான் அவங்க உடம்பு வீக் ஆகிருக்கும் என்றார் .

ஐயோ அப்படி எல்லாம் இல்ல டாக்டர் என்றான் .சும்மா சொல்லாதிங்க உங்க ரெண்டு பேர் முகத்த பாத்தாலே தெரியுது என்றார் .விக்கி ஒன்றும் சொல்லமால் இருந்தான் .

இங்க பாருங்க மிஸ்டர் விக்னேஷ் பொண்ணுகளுக்கு புருஷன் சப்போர்ட் எப்ப தேவைப்படதோ இல்லையோ இந்த மாதிரி பிரகன்ட் இருக்க நேரத்துல கண்டிப்பா தேவைப்படும் .

அதுனால அடிக்கடி உங்க வோயிப் கிட்ட ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுங்க அவங்க ஹெல்த் பத்தி விசாரிங்க அப்பதான் அவளும் மனசு அளவுல செப்பா பீல் பண்ணுவா என்றார் ,விக்கி சரி டாக்டர் என்றான் .சரி போயிட்டு வாங்க நிறைய பழங்கள் வாங்கி கொடுங்க அவங்களுக்கு .ம்ம் அப்புறம் ஆறுதலா பேசாட்டியும் பரவல அவங்கள இந்த 5 மாசத்துல எப்பயும் திட்டிராதிங்க அது ரொம்ப டென்ஜெர் என்றார் .

சரி டாக்டர் thank you என்றான் .ஓகே என்றார் .பின் வெளியே வந்தான் .வெளியே வந்த உடன் சுவாதி அவனை பார்த்து என்ன ஏதும் நீ இத்தன நாளா வரலைன்னு திட்டுனங்களா என கேட்டாள் .

விக்கி ஒன்றும் சொல்லமால் இல்லை எனபது போல் தலை மட்டும் ஆட்டினான் .டேய் சொல்றா அப்படி ஏதும் திட்டி இருந்தா என்னையே மன்னிச்சுகோடா என்றாள் .

அவள் அவ்வாறு சொல்லும் போது அவள் முகத்தை பார்க்க பரிதாபமாக இருந்தது ஏற்கனவே வாந்தி அதிகமாக எடுத்தால் களைப்பாக வேற இருந்தாள் .

சே நம்ம ரொம்ப இவள திட்டித்தான் இவ இப்படி உடம்பு வீக் ஆகி கிடக்கா பாவம் இவள இனி மேல எதுக்கு ஆகியும் திட்ட கூடாது என்று நினைத்தான் .அதனால் அவளிடிம் அவங்க ஒன்னும் சொல்லல என்றான் .டேய் சும்மா சொல்றா எதுவா இருந்தாலும் பரவல என்றாள் .ம்ம் என்னையே அடிக்கடி உன் கூட வர சொன்னங்க என்றான் .

அத பத்தி நீ எதுவும் கவலைப்படாத நான் டாக்டர கிட்ட பேசி சமாளிச்சுக்கிறேன் .வேற என்ன சொன்னங்க என்றாள் .வேற நீ அதிகமா உடம்புக்கு வேலை கொடுக்காம உடம்ப பாத்துகிவியாம் என்றான் .அத நான் பாத்துக்கிறேன் வேற எதுவும் சொல்லலே என்றாள் .

இல்ல வேற எதுவும் சொல்லல வா போவோம் என்றான் .சரி என்றாள் .பின் இருவரும் காரில் வீட்டுக்கு போனார்கள் .பின் ஒரு இடத்தில சிக்னல் போட்டார்கள் .

விக்கி அப்போது எதார்த்தமாக பின்னே உக்காந்து இருந்த சுவாதியை பார்த்தான் ,அவள் தூங்கி கொண்டு வந்தாள் .அப்போது அவள் முகம் மிகவும் களைப்பில் வாடி ஒரு மாதிரி இருந்தது .சன்னல் காற்றுக்கும் அதுக்கும் அவள் தலை முடிகள் ஒரு சில அவள் முகத்தில் அடித்து கொண்டு இருந்தது .

அவள் தூங்கி கொண்டு இருப்பதற்கும் அவள் தலை முடிகள் அவள் முகத்தில் அடிப்பதற்கும் அவள் ஒரு குழந்தை போலவும் cute ஆக இருந்தது .

விக்கி தன்னை மறந்து அவளை ரசித்தான் .பின் அவ்வோபோது அவள் முகத்தை மறைக்கும் அவள் முடிகளை ஒதுக்கி விட்டு அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்து கையை கொண்டு போனான் .

அதற்குள் சிக்னல் போட்டு பின்னே இருக்கும் கார்காரன் ஆரன் அடிக்க விக்கி முன்னே திரும்பினான் .பின் வீட்டிற்கு வண்டியை ஓட்டினான் .போகும் போது அடிக்கடி கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து கொண்டே வந்தான் .

பின் வீடு வந்ததும் அவளை எழுப்பினான் .அவளும் தூக்க கலக்கத்தில் அதுக்குள்ளே வீடு வந்துருச்சா என்றாள் .ஆமா என்றான் .சே டாக்டர் ஊசி போட்டதுனால தூக்கமா வந்து இருச்சு என்று சொல்லி விட்டு உள்ளே போனாள் .பின் இருவரும் வீட்டிற்கு உள்ளே போனார்கள் .

சரி விக்கி எனக்கு ரொம்ப டய்ர்ட்டா இருக்கு நான் போயி தூங்குரென் என்றாள் .ஓகே குட் நைட் என்றான் .ஹ by the bye தேங்க்ஸ் என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்ததுக்கா என்றான் .இல்ல இன்னைக்கு புல்லா கோப படாம இருந்ததுக்கு என்று சொல்லி சிரித்தாள் .

ஒ அப்படியா என்று அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு எ உனக்கும் தேங்க்ஸ் என்றான் .எதுக்கு என்றாள் .பிரண்ட்லியா மனசு விட்டு பேசுனதுக்கு என்றான் .

ஓகே என்று சொல்லி சிரித்தாள் .விக்கி மீண்டும் அவள் முகத்தை பார்த்தான் .அவள் முகம் மிகவும் களைப்பில் வாடி போயி பார்க்க ஒரு மாதிரி இருந்தாலும் என்னமோ அவனுக்கு அவள் என்னைக்கும் இல்லாத மாதிரி அழகாக தெரிந்தாள் .

அவள் அங்கு வெளியே சொன்னது போல எனக்கு இதுதான் பிடிச்சு இருக்கு என்று சுவாதி தன் கர்ப்ப மான தாய் அழகை பிடித்து இருக்கிறது என்று சொன்னது போல

விக்கிக்கும் அவள் அழககாக இருப்பதாக தோன்றியது .பின் அவளிடிம் குட் நைட் சொல்லி விட்டு அவன் ரூமிற்கு போனான் .அவனை அறியமால் வாவ் என்றான் .

பின் அந்த நாளை பற்றியும் ஸ்வாதியோடு பார்க்கில் மனம் விட்டு பேசியதை பற்றியும் நினைத்து பார்த்தான் .பின் சுவாதியின் குழந்தை முகம் அவன் கண்ணில் வந்து போனது .அவனுக்கு அந்த முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது .

படுத்து இருந்தவன் உடனே எழுந்து அவளை பார்க்க செல்ல எழுந்தான் .அப்போது யாரோ அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டது போல இருந்தது .

தொடரும்

Leave a Comment