நண்பனின் முன்னால் காதலி – 31 (Nanbanin Munnal Kadhali 31 )

Okkum Images எனக்கு அதுக ரெண்டும் அப்படி கொஞ்சிகிட்டு இருக்கிறத பாத்து பயங்கர வருத்தமாவும் எமாற்றமாவும் இருந்துச்சு .நான் அவள ரொம்ப நம்பி இருந்தேன் .

என்னையே நான் நம்புனத விட அவள நான் நம்புனதுதான் அதிகம் .அவளால என் வாழ்க்கை மாறும்னு நினச்சேன் .இப்படி எல்லாம் நம்பி இருந்த நான் அவ அப்படி பண்ணவும் கொஞ்ச நேரம் அழுதேன் .நீ சொன்ன மாதிரி அதுக பண்றத பாத்துட்டு நான் தியட்டர் விட்டு எந்திருச்சு போயிரலாம்னு கூட நினச்சேன் .

ஆனா நான் அப்படி போகாம உக்காந்து என் அழுகைய நிப்பாட்டிட்டு என் கண்ண துடைச்ட்டு உக்காந்து யோசிச்சேன் .அப்பதான் எனக்கு புரிஞ்சுச்சு என்னோட மிக பெரிய வீக்னெசே என் வாழ்க்கைல நான் எப்பவுமே ரொம்ப நல்லவனா இருக்கிறதுதான் புரிஞ்சுகிட்டேன் .

அன்னைக்கு உமா கிட்ட இருந்து என்னையே எங்க அப்பா பிரிச்சப்ப நான் அவர்கிட்டயும் உமா அப்பா கிட்டயும் சண்டை போட்டு என் உமாவ நான் கல்யாணம் பண்ணிருக்கணும் .அத பண்ணால .அப்புறம் லதாவ காதலிச்சுருக்க கூடாது .அப்படியே காதலிச்சு இருந்தாலும் அவள நம்பி இருக்க குடாது .

இல்ல காதலிச்ச உடனே இவள தனியா கூப்பிட்டு போயி மேட்டர போட்ருக்கணும் .அப்படி போட்ருந்தா இன்னைக்கு இவ இப்படி போனாலும் ஏதோ அவ மூலமா கிடைச்சு இருக்குன்னு விட்ருப்பேன் .

ஒரு வேல அவளும் இதுக்காக வேற ஒருத்தன தேடி போக மாட்டான்னு .அன்னைக்கு முடிவு பண்ணேன் இனிமேல் எவளையும் லவ் பண்ண கூடாது .மேட்டர மட்டும் பண்ணிட்டு விட்ரனும்னு முடிவு பண்ணேன் .அதுக்கு அப்புறம் நான் தியட்டர விட்டு எந்தரிச்சு போகல

வேணும்னே அவளையே பாத்துகிட்டு இருந்தேன் .என்னையே இவளவு தூரம் அழுக வச்சவ கொஞ்ச நேரமாச்சும் சந்தோசம் இல்லாம இருக்கணும்னு நினைச்சு அவள நான் ஒரு கோபத்தோடு முறைத்து கொண்டு இருந்தேன் .அப்புறம் நான் பாத்துகிட்டே இருக்கிறத பாத்து அவ அவன ஒண்ணுமே பண்ண விடல .எனக்கு அதுல ரொம்ப சந்தோசமா இருந்துச்சு .

அந்த தியட்டர விட்டு போனதுக்கு அப்புறம் நான் அவள திரும்பி கூட பாக்கல .காலேஜ்ளையும் அவள பாக்கனும்னு ஆச படல .அதுக்கு அப்புறம் நான் நிறைய பொண்ணுகள கரெக்ட் பண்ணேன் மேட்டர் பண்ணேன் .எவளையும் லவ் மட்டும் பண்ணல .ஆனா எப்பவுமே ஒன்னு மட்டும் ஞாபகமா உறுதியா வச்சு கிட்டேன் .

எவள வேணும்னாலும் போடலாம் .ஆனா அடுத்தவனுக்கு சொந்தமான ஒருத்திய மட்டும் தொட கூடாதுனு .ஏன்னா என்னையே மாதிரி இன்னொருத்தொனோட நம்பிகைய நான் சிதைக்க கூடாது அப்படின்னு முடிவு பண்ணேன் .அதான் எவளும் அடுத்தவன் பொண்டாட்டியோ இல்ல லவ்வரோன்னு தெரிஞ்சா நான் அடுத்த நிமிசமே அவள பாக்க கூட மாட்டேன் என்றான் .

அதை சொல்லிவிட்டு அமைதி ஆனான் .இருவருமே அமைதியாக இருந்தார்கள் .பின் சுவாதி கேட்டாள் அதுக்கு அப்புறம் எப்படி மும்பை வந்த என கேட்டாள் .

ம்ம் அதுக்கு அப்புறம் நான் அப்படி இப்படி இருக்கிறது வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு .அதனால காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் எங்க அப்பா கம்பனிய எடுத்து நடத்த சொன்னாரு நான் முடியாதுன்னு சொல்லிட்டு முன்ன விட அதிகமா கூத்து அடிக்க ஆரம்பிச்சேன் .என்னால வீட்டுக்கு நிறைய கம்பலைன் போச்சு

அதனால வீட்ல எங்க அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சா சரி ஆகிடும்னு சொன்னங்க அவெங்கலெ சொந்தத்துல ஒரு பொன்னும் பாத்தாங்க .நான் கல்யாணமா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன் .அட்லிஸ்ட் பொன்னயச்சும் வந்து பாரு .பிடிக்காட்டி வேணாம்னு சொல்லிடுன்னு சொன்னாங்க .

அப்புறம் என்ன ஆச்சு போயி பொண்ணு பாத்தயா என கேட்டாள் சுவாதி .சரி நானும் எங்க அம்மா அடிகடி ஆஹா ஓஹோன்னு சொல்றத பாத்தா பொண்ணு எங்கிட்டும் அழகா இருக்கும்னு நினைச்சு போயி பாத்தா அவ ரொம்ப அவ்றேஜா இருந்தா .

பத்துக்கு நாலு மார்க்தான் வருவா நான் சரி அங்கேயே பிடிக்கலன்னு சொன்னா நல்லா இருக்காதுன்னு நினைச்சுகிட்டு வீட்ல வந்து சொன்னேன் எனக்கு பொண்ணு பிடிக்கலன்னு .

உடனே பெரிய சண்டை அப்புறம் ஏன் பாக்க வந்தே அப்படி இப்படின்னு ஒரு கட்டத்துல எங்க அம்மா நெஞ்ச பிடிச்சுகிட்டு மயங்கி விழுந்தாங்க என்றான் .

உடனே சுவாதி அய்யயோ அப்புறம் என்ன ஆச்சு என்றாள் .எல்லாரும் கொண்டு போயி ஹாஸ்பிட்டல் சேத்தோம் .எங்க அம்மா என்னையே கூப்பிட்டு சாகுரதுக்குள்ள நான் மருமகள பாக்கணும் அப்படின்னு சொன்னங்க அதுனால நான் வேற வழி இல்லாம ஒத்துகிட்டேன் .

அப்ப உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்றாள் ,இல்ல என்றான் .அப்புறம் என்ன ஆச்சு கல்யாணத்துக்கு அன்னைக்கு ஓடி வந்துட்டியா என்றாள் .இல்ல வீட்ல தடல புடல கல்யாண ஏற்பாடு எல்லாம் நடந்துச்சு கரெக்ட்டா படத்துல மாதிரி முகுர்த்த நேரத்து அப்ப பொண்ண காணோம் .

போயி பாத்தா அவ யாரையோ காதலிக்கிறதா லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போயிருக்கா .எனக்கு உள்ளுக்குள்ள சந்தோசமா இருந்தாலும் வெளியே காட்டிக்கல .அதுக்கு அப்புறம் நான் வீட்ல வந்து வழக்கம் போல சந்தோசமா இருந்தேன் .யாரையும் ஒன்னும் சொல்லல நான் பாட்டுக்கு இருந்தேன் .

ஆனா ஒரு ரெண்டு வாரம் கழிச்சு காய்ச்சல்ன்னு ஆஸ்பத்திரிக்கு போனேன் .அங்க என் பிரண்டு மூர்த்திதான் டாக்டர் .அவ கிட்ட பேசிக்கிட்டே இருக்கும் போது சொன்னான் எங்க அம்மாவுக்கு ஒன்னும் இல்ல .அவங்க நான் கல்யாணம் பண்ணனும்கிறதுக்கு காக பொய் சொல்லிருக்கங்கன்னு .எனக்கு வந்துச்சு பாரு கோபம் .வீட்டுக்கு போனேன் பிடிச்சு எல்லாத்தையும் திட்டுனேன் .

அப்புறம் இனிமேல் நான் அந்த வீட்ல இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு வெளியேறிட்டேன் .ஆனா அப்பயும் சென்னைலயே இருந்ததால எங்க அம்மா என் பிரண்ட்ஸ் தூது அனுப்பி என்னையே வீட்டுக்கு வர சொல்லிகிட்டே இருந்தாங்க .ரெண்டு மூனு தடவ எங்க அம்மாவே வந்து பாத்து அழுதாங்க வீட்டுக்கு வர சொல்லி நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன் .

அதுக்கு அப்புறம் தமிழ் நாட்டுல இருந்தாதானே இந்த தொல்லைன்னு முடிவு பண்ணி என் பிரண்டு ஒருத்தன் மூலமா மும்பை வந்துட்டேன் ,இன்னைக்கு வரைக்கும் நான் யார் கூடயும் எங்க வீட்ல இருக்கவங்க கூட பேசுறது இல்ல அதே நேரத்துல எப்பவும் லவ்வும் பண்ண கூடாது கல்யாணமும் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணேன் .என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான் .

சுவாதியும் எதுவும் சொல்லமால் இருந்தாள் .ம்ம் என்ன என் பிளாஸ்பேக் புடிக்கலையா என்றான் .அப்படி இல்லடா இது வரைக்கும் உன்னையே ஒரு பொம்பள பொறுக்கின்னுதான் நினைச்சு கிட்டு இருந்தேன் .ஆனா இப்ப உன் கதைய கேட்டதுக்கு அப்புறம்தான் உன் சோகம் புரியுது நீ எடுத்த முடிவு நல்ல முடிவு உன் இடத்துல நான் இருந்தாலும் இத தான் செஞ்சு இருப்பேன் என்றாள் .

அதை கேட்டு விக்கி ஆச்சரியப் பட்டு கொண்டே யே சும்மா ஐஸ் வைக்காத அதான் உன்னையே என் வீட்ல இருக்க அனுமதி கொடுத்துட்டேன்லே அப்புறம் என்ன என்றான் .

எ ஐஸ் வைக்கலடா உண்மைய தான் சொன்னேன் என்றாள் ,போடி இதுக்கு முன்னாடி என் கதைய சில பொண்ணுக கிட்ட சொன்னப்ப அவளுக எல்லாம் ஒரு ரெண்டு பொண்ணு ஏமாத்திட்டான்னு நீ கல்யாணமே வேணாம்னு சொல்ல கூடாது .உனக்குன்னு ஒருத்தி வேணும் .நீ வாழற வாழ்க்கை தப்பான வாழ்கை அப்படின்னு சொல்லி திட்டி இருக்கலாக என்றான் .

அதலாம் அவளுக லூசுக சும்மா சொல்றளுக என்னையே பொறுத்த வரைக்கும் அன்னைக்கு நீ சொன்ன பாரு லவ் எல்லாம் பொய்ன்னு .அதான் கரெக்ட் என்றாள் .

என்ன திடிருன்னு உனக்கு இப்படி ஒரு மாற்றம் உன் பழைய லவ் பெயிலியர் ஆனதலையா என கேட்டான் .அதுவும் ஒரு காரணம் .அதே நேரத்துல லவ்கிறது நீ சொல்ற மாதிரி ஒரு கானல் நீர் அது வேஸ்ட்ன்னு புரிஞ்சு கிட்டேன் .

லவ் கல்யாணம் அப்புறம் டிவோர்ஸ் எல்லாம் இப்ப நினச்ச்லே சுத்தமா பிடிக்கல என்றாள் .அப்ப குழந்தை மட்டும் பிடிக்குமா என்றான் சிரித்து கொண்டே .டேய் அது என்னோட பொருள் என்னோட ரத்தம்டா என்று சொல்லிக்கொண்டு விக்கியை செல்லமாக அடித்தாள் .

அவனும் வலிப்பது போல நடித்தான் .பின் இருவரும் சிரித்தனர் .நன்கு சிரித்து விட்டு விக்கி சொன்னான் சரி இனி உன்னையே பத்தி கொஞ்சம் சொல்லு தெரிஞ்சுகிறேன் என்றான் .

அவள் சிரிப்பதை நிறுத்தி விட்டு அமைதி ஆனாள் .அப்புறம் சொன்னாள் என் லைப்ல சொல்றதுக்குன்னு ஒன்னும் இல்ல என்றாள் .எ சும்மா சொல்லு நான்லாம் சொன்னேன்லே அதுனால நீயும் சொல்லு என்றான் .பின் பார்க்கில் மழை வந்தது சுவாதி சொன்னாள் பாத்தியா என் லைப் பத்தி பேசுறது அந்த வானத்துக்கு கூட பிடிக்கல என்றாள் .

பின் இருவரும் நனைந்து கொண்டே ஒதுங்க இடம் தேடினார் .விக்கி சொன்னான் எ கார் ஆச்சும் கொண்டு வந்து இருக்கலாம் மழை இப்படி பெய்யுதே என்ன பண்ண என்றான் .

ஹ மறுபடியும் கோப பட ஆரம்பிச்சுடாத அங்க மழைக்கு ஒதுங்கற மாதிரி ஒரு இடம் இருக்கு வா அங்க போவோம் என்றாள் .இருவரும் ஒரு இடத்தில போய் நின்றார்கள் .மழை நன்கு பெய்து கொண்டு இருந்தது .சுவாதி தனியாக ஒரு பக்கம் நின்று மழை துளிகளை கைகளால் தொட்டு தொட்டு ரசித்து கொண்டு இருந்தாள் ,

அப்போது விக்கி அவளை பார்த்தான் .அவன் பார்ப்பதை பார்த்த சுவாதி அவன் பக்கம் வந்து டேய் என் இப்ப என்னையே சைட் அடிக்கிற என்றாள் .

அடசீ உன்னையே யாரு சைட் அடிச்சா .என்னடா இவ ஏதோ லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கலேன்னு பாத்தேன் ,ஏன்னா படத்துல வர ஹீரோஇன் மாதிரி உனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும் அதானே என்றான் .

இல்ல எனக்கு மழைன்னா சுத்தமா பிடிக்காது என்றாள் .அப்புறம் ஏன் மழைய பிடிச்சு பிடிச்சு ரசிச்ச என்றான் .எனக்கு மழைநா பிடிக்காது .ஆனா என் வயத்துல இருக்க என் குழந்தைக்கு பிடிச்சு இருக்கு போல என்றாள் சுவாதி ,அது எப்படி உனக்கு தெரியும் என்றான்

தொடரும்

Leave a Comment