நண்பனின் முன்னால் காதலி – 12 (Nanbanin Munnal Kadhali 12)

udal uravu stories இரண்டு பேரும் மீண்டும் அதே மருத்தவமனைக்கு திரும்ப போனார்கள் ,அவர்களை பார்த்ததும் அந்த டாக்டர் பெண்மணி சந்தோசத்தோடு அவர்களை வரேவேற்றார் .வாங்க புது பேரெண்ட்ஸ் என்ன விசயம் எதுவும் சந்தேகமா என கேட்டார்

எதுல வேணும்னாலும் சந்தேகம் கேளுங்க சொல்றேன் ஆனா நான் முன்னாடியே சொன்ன மாதிரி எந்த குழந்தைன்னு மட்டும் வயத் துக்குள இருக்க வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி சிரித்தார் .

ஆனால் விக்கி சுவாதி ரெண்டு பேரும் சிரிக்கமால் அமைதியாக இருந்தனர் .என்ன மிஸ்டர் அண்ட் மிசஸ் சுவாதி ரெண்டு பேரும் டல்லா இருக்கீங்க என்ன விசயம் என்று டாக்டர் கேட்டார்.

டாக்டர் எங்க ரெண்டு பேருக்கும் இப்பதைக்கு குழந்தை வேணாம்னு நாங்க ரெண்டு பேரும் பீல் பண்றோம் அதனால என்று சுவாதி இழுத்தாள் .

அதனால என்னையே அபார்சென் பண்ண சொல்றிங்களா என்று டாக்டர் ஒரு மாதிரியாக கேக்க ரெண்டு பேரும் ஒன்றாக ஆமா டாக்டர் என்றார்கள் .

ரெண்டு பேரையும் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு ஏன் ரெண்டு பேரும் என்ன வேலை பாக்குறிங்க என டாக்டர் கேட்டார் .
நான் இங்க இருக்க தமிழ் எப் எம்ல ஆர் ஜே வா இருக்கேன் .இவரு gnb கம்பெனில அசிஸ்ன்ட் மேனேஜரா இருக்காரு என்றாள் .

அப்புறம் என்ன ரெண்டு பேரும் நல்லாத்தானே சம்பாதின்கிரிங்கே அப்புறம் என்ன குழந்தை பெத்துகிரதள கஷ்டம் உங்களுக்கு
இந்த காலத்துல வெறும் ரெண்டாயிரம் மூனாயிரம் சம்பளம் வாங்குரவெங்கலெ சந்தோசமா குழந்தை பெத்துகிறாங்க உங்களுக்கு என்ன
நல்லாதனே சம்பாதின்கிரிங்கே அப்புறம் என்ன குழந்தைய வளக்க கஷ்டம் என்றார் டாக்டர் .

இல்ல டாக்டர் இப்பதைக்கு வேணாம்னு என்று சுவாதி மீண்டும் இழுத்தாள் .இப்பதைக்கு வேணாம்னா பின்ன எப்ப அறுபது வயசுலேயே பெத்துக்க போறீங்க ரெண்டு பேரும் .என்று கோபப்பட்டார் .

இங்க பாருங்க முத குழந்தைங்கிறது கிட்டத்தட்ட தெய்வம் மாதிரி அத வேணாம்னு சொல்லாதிங்க என்று டாக்டர் உருக்கத்தோடு சொல்ல .

இல்ல டாக்டர் என் ஹஸ்பண்ட தான் இப்பதைக்கு வேணாம்னு சொல்றார் .அது வரை வழக்கம் போல எங்கிட்டோ பாத்துகிட்டு இருந்த விக்கி இதை கேட்டதும் அடி பாவி இப்ப ஏண்டி இந்த கிழடிகிட்ட என்னயே மாட்டி விட்ட என்று நினைத்தான் விக்கி .

டாக்டர் உடனே விக்கி பக்கம் திரும்பி ஹலோ மிஸ்டர் விக்னேஷ் குழந்தைய என்ன நீங்கள சுமக்க போறீங்க உங்க வோயிப்தானே கஷ்டப்பட்டு சுமக்க போறாங்க உங்களுக்கு என்ன அதுல கஷ்டம் என்று கோபத்தோடு டாக்டர்

பிறந்ததுக்கு அப்புறமும் உங்க வோயிப்தான் கஷ்டப்பட்டு வளக்க போறாங்க நீங்க உங்க குழந்தைய நேரம் கிடைக்கிறப்ப பாத்தா மட்டும் போதும் அப்புறம் என்ன குழந்தை வேணாம்னு சொல்றீங்க என்று டாக்டர் கேக்கவும் விக்கி அது இல்லை டாக்டர் என்று சமாளிக்க பார்த்தான் .

இங்க பாருங்க விக்னேஷ் நான் பிரன்கா பேசுறேன் இந்த குழந்தை உங்க ரெண்டு பேர் உயிரனுவால உருவானது .இந்த காலத்துல எத்தனையோ பேர் குழந்தை இல்லாம இருக்காங்க தெரியுமா அவங்க படுற மன வருத்தம் என்னனு உங்களுக்கு புரியாது ஆனா நான் இந்த பில்ட்ல இருபது வருசமா இருக்கேன் எனக்குத்தான் புரியும் குழந்தை இல்லாததோட வேதனை என்று சொல்லிக்கொண்டே விக்கியை பார்த்து சொன்னார்

விக்னேஷ் உங்கள மாதிரி எத்தனையோ ஆண்கள் அவங்ககிட்ட சரியான அளவுல ஸ்பெர்ம் இல்லன்னு ஸ்பெர்ம் டோனட்டர் மூலமா அவங்க மனைவிகள கர்ப்பம் ஆக்கி அது மூலம் புருஷன் பொண்டாட்டின்னு மனசு அளவுல எவளவு கஷ்டப்பட்ருக்காங்க தெரியுமா .

ஒரு ஆணுக்கு தெரிஞ்சே அவோனோட மனைவி கிட்ட இருக்க கரு வேறு ஒரு ஸ்பெர்ம் ஆல உருவானதுன்னு தெரிஞ்சு அந்த ஆண் படுற கஷ்டம் தெரியுமா

ஆனா உங்களுக்கு அப்படி இல்லை இது உங்க ரத்தம் உங்க ஜீன் உங்க ஸ்பெர்ம் மூலமா உருவான குழந்தை அத புரிஞ்சுகோங்க

அப்புறம் டாக்டர் சுவாதி பக்கம் திரும்பி நீ என்ன மாதிரி பொன்னுமா ஒரு பொண்ணுக்கு குழந்தை பெறந்தாதன் அவ பொண்ணு இல்லாட்டி அவ பொண்ணா பிறந்ததுக்கு அவசியமும் இல்ல ஒரு பொண்ணா இருக்க தேவையும் இல்ல .உன் கிட்ட ஒரு உயிர் இருக்கு ஒரு பொண்ணா இருந்துகிட்டு அந்த உயிர கொல்லப்போரியா

இப்படி அந்த டாக்டர் சுவாதிக்கு அறிவுரை சொல்ல சொல்ல சுவாதிக்கு ஏதோ ஒரு மாதிரி மனது உறுத்தியது .ஆனால் விக்கி அதற்கு மாறாக கடுப்பின் உச்சத்துக்கே போனான் .சொன்ன சொன்னத மட்டும் செய்யுமா இந்த கிழவி அத விட்டுட்டு ஸ்கூல் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கு என்று மனதிலே நினைத்து கோபப்பட்டான் .

என்ன நான் சொன்னது எல்லாம் புரிஞ்சுச்சா மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் என்று அந்த டாக்டர் சொல்லி முடிக்க விக்கி கோபத்தில் கத்தி விட்டான் .

First Of All டாக்டர் இவ ஏன் மிசசும் இல்ல நான் இவளோட மிஷ்டரும் இல்ல என்று அவன் சொல்லவும் அதை கேட்டு டாக்டர் What என்று அதிர்ச்சியாக கேட்க்க

ஆமா அதான் உண்மை இவ என் பிரண்டோட எக்ஸ் கேர்ள் பிரண்ட் இவளுக்கும் எனக்கும் ஏதோ ஒரு நைட் தெரியாம செக்ஸ் நடந்து போச்சு அதுல இந்த மாதிரி இவளுக்கு ஆகிடுச்சு .

எனக்கோ இல்ல இவளுக்கோ இந்த குழந்தை தேவை இல்ல சோ எந்த அறிவுரையும் சொல்லாம இவளுக்கு அபார்சென் மட்டும் பண்றீங்களா என்று அவன் சொல்லவும்

அதை கேட்டு டாக்டர் பெண்மணி கோபமாகி நர்ஸ் நர்ஸ் என்று கோபத்தோடு கத்தினார் .இந்த மாதிரி கல்ச்சர் மறந்த ஆளுகள எல்லாம் விடாதே ன்னு நான் எத்தன தடவ உன்கிட்ட சொல்லிருக்கேன் முதல்ல இவங்கள இங்க இருந்து வெளியே கூப்பிட்டு போ இடியட்ஸ் என்று கத்தினார் .

அதை கேட்டு விக்கியும் கோபப்பட்டான் ஒ நாங்க கல்ச்சர் மறந்த ஆளுக இன்னைக்கு நாட்டுல முக்கால்வாசி பேர் கல்ச்சர் மறந்து இப்படித்தான் இருக்காங்கே அத்தன பேருக்கும் இந்த மாதிரி முடியாதுன்னு சொன்னிங்கனா உங்க ஆஸ்பத்ரியும் சம்பாதிக்காது நீங்களும் சம்பாதிக்க மாட்டேன்கே என்று விக்கி பதிலுக்கு கத்தி கூச்சலிட்டான் .

ஆனால் அவனை பதில் பேச விடமால் கம்பவுண்டர் அவனை வெளியே இழுத்து சென்றார் .

அந்த பொண்ணையும் போ சொல்லுமா என்று டாக்டர் தலையில் கை வைத்தவாறு சொல்ல

நர்ஸ் சுவாதியிடம் சொல்ல சுவாதி அவளாகவே வெளியே போனாள் .

பின்னர் வெளியே கத்தி கொண்டு இருந்த விக்கியை சமாதானப்படுத்தி காருக்கு கூப்பிட்டு போனாள் .

ஏன் விக்கி இப்படி கோபம் படுற நீ கொஞ்சம் பொறுமையா இருந்த அவங்க கிட்ட நான் பேசி இன்னேரம் செஞ்சுருக்கலாம் .

இந்த கிழடி கிட்ட எல்லாம் எவளவு பேசுனாலும் ஸ்கூல் டிச்சர் மாதிரி நம்ம ரெண்டு பேருக்கும் பாடம் நடத்திகிட்டு தான் இருக்கும் .ஒன்னும் பண்ணாது ,என்றான் .

அவங்க வயசனாவங்க அப்படித்தான் பேசுவாங்க நீ அதுக்குன்னு அவங்க கிட்ட உடனே கோபப் பட்டு பேசுவியா என்றாள் .

என்ன வயசனாவங்க ஒழுங்கா சொன்னா சொல்றத மட்டும் செய்ய வேண்டியது தானே அத விட்டுட்டு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கு என்றான் .

நீ சொல்ற வேலைய சொன்னவுடனே கேக்கறதுக்கு அது என்ன உன் ஆபிஸ் பியுன்னு நினைச்சியா அவங்க டாக்டர் அப்படித்தான் பேசுவாங்க நீதான் பொறுமைய இருந்துருக்கணும் .

என்னையே நீ பொறுமையா இருக்க சொல்றியா நீ மட்டும் அன்னைக்கு பொறுமையா இருந்துருந்தா இன்னைக்கு இவளவு தூரம் வந்துருக்காதுடி என்று அவளிடிம் கோபப்பட்டான்

இங்க பாரு விக்கி சும்மா சும்மா நடந்ததே பத்தி பேசிகிட்டு இருக்காத அதால ஒரு பிரயோசனமும் இல்ல இனி என்ன பண்ணாலாம்னு பொறுமையா யோசிப்போம் என்றாள்

இதுல பொறுமையா யோசிக்க என்ன இருக்கு சீக்கிரம் நீ போயி அபார்சென் பன்னு அதான் நமக்கு நல்லது என்றான் .

அதான் அவங்க பண்ணமாட்டேன்னு சொல்லி அனுபிச்சு வச்சுட்டாங்களே விக்கி என்றாள் .

மும்பைல இது ஒன்னு மட்டும்தான் ஆஸ்பத்ரியா வா வேற எதுக்கு ஆச்சும் போவோம் என்று அவளை வேறு ஒரு ஆஸ்பத்ரிக்கு கூப்பிட்டு சென்றான் .

ஆனால் எல்லா ஆஸ்பத்ரியிலும் அவர்கள் கணவன் மனைவிக்கான சான்று கேட்டார்கள் .எந்த ஆஸ்பத்ரியிலும் யாரும் அவர்களுக்கு அபார்சென் பண்ண ஒத்துக்கவில்லை .

இறுதியாக ஒரு ஆஸ்பத்ரியில் விக்கி ஒரு ஆண் மருத்தவரிடம் பேசி அவரை சமாதனப்படுத்தி அபார்சென் பண்ண ஒத்துக்க வைத்தான் ஆனால் அன்று நேரமாகி விட்டதால் அடுத்த நாள் வர சொல்லி இருந்தார்கள் .

பாத்தியா கடைசியா ஒரு ஆம்பள டாக்டர் தான் ஒத்துகிட்டார் .அதான் ஒரு ஆணோட பீலிங் இன்னொரு ஆணுக்குதான் தெரியும் என்று சுவாதியிடம் சொல்லி சிரித்தான் .

உனக்கு எல்லாம் பீலிங்ன்னு ஒன்னு இருக்கா என்று கேட்டாள் கடுப்போடு .சரி சரி நான் பீலிங் இல்லாத மிருகமாவே இருக்கேன் .நீ வேணும்னா பிலிங் உள்ள தியாகிய இரு என்றான் பதிலுக்கு .

ஓகே நாளைக்கு அவங்க சொன்ன நேரத்துல சீக்கிரம் வந்து அபார்சென் பண்ணிடு என்றான் .

ஏன் நீ வரமாட்டியா என்றாள் .நாளைக்கு எனக்கு கம்பெனில ஒரு முக்கியாமான மீட்டிங் இருக்கு அதனால நான் நாளைக்கு வர மாட்டேன் நீயா போயிட்டு வா

நீ இத பண்ணதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல .எந்த போனும் பண்ண கூடாது என் ஆபிஸ் பக்கமும் வர கூடாது .புரிஞ்சுச்சா என்றான் .

அவன் அவ்வாறு கேட்க சுவாதி ஒரு வித பயத்தோடும் குழப்பத்தோடும் அமைதியாக இருந்தாள் ,அதை பார்த்த விக்கி என்ன சுவாதி நான் சொல்றது புரிஞ்சுச்சா என மறுபடியும் கேட்டான் .

அவள் ஒரு குழப்போதொடு சரி என்றாள் பின் அவனிடிம் விக்கி

என்னையே என் ஹோஸ்டல மட்டும் இறக்கி விட்ரு என்றாள் .அவனும் அவளை அழைத்து சென்றான் .அவளை இறக்கி விட்டு அப்பா இன்னைக்கோட இவ சங்காத்த முடிச்சுக்கணும் அப்படின்னு நினைச்சுகிட்டு கிளம்பினான் விக்கி .

ஆனால் சுவாதி மட்டும் ஒரு குழப்பமான நிலையில் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள்

தொடரும்

Leave a Comment