கண்ணாமூச்சி ரே ரே – 56 ( Tamil Sex Story - Kannamoochi Rae Rae 56)

Tamil Sex Story – படபடவென சொல்லிவிட்டு தாமிரா அமைதியானாள்.. சிபி சில வினாடிகள் அவளுடைய முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! தாமிரா தன்னை காதலிக்கவில்லை என்பது அவனுக்கு அதிர்ச்சியான, ஆச்சரியமான விஷயமாக இருந்தது.. அவளது பேச்சிலும், பார்வையிலும், செயல்பாட்டிலும் பலமுறை காதலை உணர்ந்திருக்கிறான்.. இப்போது அதெல்லாம் இல்லை என்று அவள் சொல்லும்போது, அவனால் நம்புவதற்கே மிக கடினமாக இருந்தது.. ஆனால் அதை நம்புவதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை..!!

18

“நெஜமாவே உனக்கு என்மேல காதல் இல்லையா தாமிரா..??” என்று பரிதாபமாக ஒருமுறை கேட்டான்.

“இல்லத்தான்.. சத்தியமா இல்லை..!!” உணர்ச்சியற்ற குரலில் தெளிவாக சொன்ன தாமிரா,

“ம்ம்.. அப்பாக்கு கால் பண்ணி பேசுங்க..!!” என்று சிபியின் செல்ஃபோனை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“……………………..” செல்ஃபோனை வாங்கிக்கொண்ட சிபி, வெறுமையாக அவளை பார்த்தான்.

“யோசிக்காதிங்கத்தான்.. பேசுங்க.. அக்காவை கட்டிக்க சம்மதம்னு சொல்லுங்க.. அப்பா அங்க டென்ஷனா உக்காந்துட்டு இருப்பாரு.. அவரு உங்களுக்கு எவ்வளவு நல்லது பண்ணிருக்காருன்னு நெனச்சு பாருங்க.. உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காருன்னு நெனச்சு பாருங்க..!! இந்த கல்யாணம் நடந்தாத்தான் எல்லாருக்குமே சந்தோஷம் அத்தான்.. ப்ளீஸ்.. பேசுங்க..!!”

சிபி சிறிதுநேரம் செய்வதறியாது தளர்ந்து போனவனாய் உறைந்திருந்தான்..!! இவனது பதிலுக்காக அகழியில் தணிகைநம்பி காத்திருக்கிற நிலையில்.. இவன் மீது காதல் இல்லை என்று தாமிரா திட்டவட்டமாக சொல்லி முடித்தபிறகும்.. அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை..!! தணிகை நம்பியை தனது கைபேசியில் அழைத்து பேசினான்.. ஆதிராவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தான்.. அதுவும் சுரத்தற்ற குரலில், சுத்தமாக விருப்பமே இல்லாமல்..!!

“பெரியவங்களா பாத்து என்ன செஞ்சாலும் எனக்கு சரிதான் மாமா..!!” என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

“தேங்க்ஸ் அத்தான்..!!”

தாமிரா சிபியை நன்றியுடன் பார்த்தாள்.. ஒரு பெரிய பிரச்சினையை ஒருவழியாக சமாளித்தாயிற்று என்று சற்றே நிம்மதியுற்றாள்.. ஆனால் அவளது நிம்மதி நீண்டநாள் நீடிக்கப்போவதில்லை என்பதை, அப்போது அவள் அறியவில்லை..!! கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்தாயிற்று என்று, சிபி அத்துடன் தனது முயற்சியை கைவிட்டு விடவில்லை.. முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தாமிராவை தொடர்ந்து கெஞ்சிக்கொண்டுதான் இருந்தான்..!!

காதலை புறக்கணிப்பது எப்போதுமே கடினமான காரியம்தான்.. தன்மீது அன்பு வைத்திருக்கும் இன்னொரு ஜீவனை எவ்வாறு எளிதில் உதறித்தள்ள முடியும்..?? அதுவும்.. மனதுக்குள் அவன்மீது அவளும் கொள்ளை கொள்ளையாய் காதலை வைத்துக்கொண்டு..?? தாமிரா அடுத்த நாளையும் மைசூரில்தான் கழித்தாள்.. இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளாவிட்டாலும், இருவருடைய இதயங்களும் ஒரு இனம்புரியாத அழுத்தத்துக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தன..!! சிபியின் ஏக்கமான பார்வையும், உடைந்துபோன குரலும், பரிதாபமான கெஞ்சலும்.. தாமிராவின் காதல் மனதை கசக்கி பிழிவதாக இருந்தன..!! அடிக்கடி அவன் தனது காதலை வலியுறுத்தி, கல்யாணக் கற்பனை சொல்வது.. அவளது மனஉறுதியை மிகவுமே அசைத்துப் பார்ப்பதாக அமைந்தது..!!

அடுத்தநாள் இரவு.. தாமிரா மைசூரில் இருந்து அகழி கிளம்புகையிலும்.. ரயில் பெட்டிக்குள் அவள் காலடி எடுத்து வைக்கும்போதும்கூட.. சிபி அதையேதான் சொன்னான்..!!

“இன்னும் எதும் கெட்டுப்போகல தாமிரா.. இப்போக்கூட உன் முடிவை நீ மாத்திக்கலாம்..!! மாமா, அத்தையை எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னு யோசிக்காத.. அதை நான் பாத்துக்குறேன்.. நான் பேசி அவங்கட்ட சம்மதம் வாங்குறேன்..!! ஆதிராவுக்கு வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிவச்சுட்டு.. அப்புறம்கூட நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்..!! ஊருக்கு போய் கொஞ்சம் ரிலாக்ஸ்டா யோசி.. கல்யாணத்துக்கு இன்னும் ஒருமாசம் இருக்கு.. அதுக்கு முன்னாடி ஒரு நல்லமுடிவா எடு..!!”

17

“எத்தனை நாள் ஆனாலும் என் முடிவு மாறாது அத்தான்..!!” – தாமிராவின் குரலில் இரண்டு நாட்க ளுக்கு முன்பாக இருந்த உறுதி இப்போது இல்லை என்பதை தெளிவாக உணரமுடிந்தது.

“ஹ்ம்ம்.. பாக்கலாம்..!! பார்த்து பத்திரமா போ.. நான் நாளைக்கு கால் பண்றேன்..!!”

“ப்ளீஸ்த்தான்.. வேணாம்.. இனிமே எனக்கு கால் பண்ணாதீங்க.. ப்ளீஸ்..!!”

“பண்ணுவேன் தாமிரா.. கண்டிப்பா பண்ணுவேன்..!! என் காதலை அவ்வளவு சீக்கிரம் செத்துப்போக விடமாட்டேன்.. கல்யாணத்துக்கு மொதநாள் வரைகூட, உன் மனசை மாத்த ட்ரை பண்ணிட்டேதான் இருப்பேன்..!! ‘என்மேல உனக்கு அக்கறை இல்ல.. எக்கேடோ நான் கெட்டாலும் பரவால்ல..’ன்னு நீ நெனச்சா.. என் காலை பிக்கப் பண்ணவேணாம்..!!”

சிபி சிந்திய வார்த்தைகள் தாமிராவின் தளிர்மனதை வதைப்பதாக இருந்தன.. கண்களில் வழியமுனைந்த கண்ணீர்த்துளிகளை கட்டுப்படுத்தியவாறே, கம்பார்ட்மன்ட்டுக்குள் அவசரமாக புகுந்துகொண்டாள்..!!

ஏ/ஸி கம்பார்ட்மன்ட்.. தோலை ஊடுருவும் ஈரப்பதமான காற்று.. அங்கொன்றும், இங்கொன்றுமாக அமர்ந்திருந்த பயணிகள்..!! தனது இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்துகொண்டாள் தாமிரா.. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரிந்த சிபியை பார்த்தாள்..!! அவனது பார்வையில் தெறித்த அந்த ஏக்கமும், காதலும்.. இப்போது இவளை ஏதோ செய்தன.. இவள் மனதிலும் காதல் ஊற்றை மெலிதாக கசியச் செய்தன.. கண்ணில் துளிர்த்த நீருடன் காதலனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

நீண்ட ஒரு இரைச்சலுடன் ரயில் கிளம்பியது..!! இவளது கம்பார்ட்மன்ட் மெல்ல நகர ஆரம்பிக்க.. வெளியே நின்றிருந்த சிபி, இவளைப்பார்த்து மெலிதாக கையை அசைக்க.. இவளுக்கு திடீரென என்னானதோ.. என்ன நினைத்தாளோ..

“ஐ லவ் யூ அத்தான்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!” என்று சிபியை பார்த்து கத்தினாள். அவளது குரலை கண்ணாடி ஜன்னல் தடுத்து நிறுத்தியது.

“எ..என்ன.. என்ன சொல்ற தாமிரா.. எனக்கு கேக்கல..!!” ரயில் பெட்டியின் பின்னாலேயே ஓடினான் சிபி.

“நான்.. நான் உங்களைத்தான் லவ் பண்றேன் அத்தான்.. உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்..!!”

“இ..இல்ல.. கேக்கல தாமிரா..!!”

“என்னை மன்னிச்சிடுங்க அத்தான்.. எனக்கு வேற வழி இல்ல..!! என்னை மன்னிச்சிடுங்க.. ப்ளீஸ்..!!”

“தாமிராஆஆ..!!”

ரயில் தடதடவென வேகமெடுத்து ஓட ஆரம்பித்திருந்தது.. கம்பார்ட்மன்ட்டுக்குள் கண்ணீர் சிந்தியவாறு அமர்ந்திருந்தாள் தாமிரா..!! அவ்வாறு அவள் அழுது கொண்டிருக்கையிலேயே.. அவளது செல்ஃபோன் இப்போது கிணுகிணுத்தது.. சிபிதான் கால் செய்திருந்தான்.. ஒருவித தயக்கத்துடனே எடுத்து பேசினாள்..!!

“எ..என்னாச்சு தாமிரா.. என்ன சொன்ன..?? எனக்கு ஒன்னும் கேக்கல..!!” சிபி பதற்றமாக கேட்டான்.

“ஒ..ஒன்னுல்லத்தான்..!! நீங்களும் கெளம்புங்க.. பார்த்து பத்திரமா போங்கன்னு சொன்னேன்..!! வேற ஒன்னும் இல்ல..!!” இறுக்கமாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள் தாமிரா.

ஆதிராவுக்கு மைசூரில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அப்போதெல்லாம் தெரியாது.. அகழி திரும்பிய தங்கையின் கண்களில் இருந்த கலக்கம் மட்டுமே அவளது கவனத்தில் சற்று உறுத்தியது..!!

“என்னடி.. என்னாச்சு.. ஒரு மாதிரி இருக்குற..??”

“அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே.. ட்ராவல் பண்ணின டயர்டா இருக்கும்..!!”

“கண்ணுலாம் செவந்து போயிருக்கு..??”

“நைட்டு சரியா தூக்கம் இல்லக்கா.. வேற ஒன்னும் இல்ல..!!”

16

“ஓ..!! போன வேலைலாம் நல்லபடியா முடிஞ்சுச்சா..??”

“ம்ம்.. பெர்ஃபக்ட்..!!” சொல்லும்போதே தாமிராவின் குரலில் இருந்த ஒரு மென்சோகத்தை, ஆதிராவால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை.

“ஹ்ம்ம்..!! அத்தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாருடி.. தெரியும்ல..??” என்று பூரிப்பாகவே கேட்டாள்.

“ஹாஹா..!! அத்தான் ஃபோன் பண்றப்போ நான் பக்கத்துலதான்க்கா இருந்தேன்..!!” புன்னகையுடன் சொன்ன தாமிரா,

“என் அக்கா மாதிரி ஒரு அழகு தேவதையை.. எந்த முட்டாப்பயலாவது வேணான்னு சொல்வானா..?? ம்ம்..??” என்று ஆதிராவின் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள்.

“ச்ச்சீய் போடி..!!!” வெக்கப்பட்ட ஆதிரா,

“அதுசரி.. மைசூர் நல்லா சுத்தி பாத்தியா.. எங்கல்லாம் உன்னை கூட்டிட்டு போனாரு..??” என்று பேச்சை வேறுபக்கம் திருப்பினாள்.

“ரொம்பலாம் சுத்தலக்கா.. ஃபர்ஸ்ட் டே மட்டும் வெளில போனோம்.. செகண்ட் டே செம டயர்ட்.. எங்கயும் போகல..!!”

“ஓ..!! ம்ம்ம்ம்.. சரி உன் கேமரா குடு.. ஃபோட்டோஸ் பாக்கலாம்..!!”

தாமிரா தனது டிஜிட்டல் கேமராவை எடுத்து அக்காவிடம் கொடுத்தாள்.. ஆதிராவும் ஆர்வமாக அந்த கேமராவில் சேகரிக்கப்பட்டிருந்த படங்களை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தாள்..!!

“என்னடி கொஞ்ச ஃபோட்டோதான் எடுத்திருக்கீங்க போல..??”

“அ..அதான் சொன்னன்ல.. ரொம்பலாம் வெளில சுத்தல..!!”

கட்டைவிரலால் பட்டனை அழுத்தி, ஒவ்வொரு படமாக பார்த்துக்கொண்டே வந்த ஆதிரா.. அந்த மைசூர் அரண்மனை முன்பாக எடுத்திருந்த படத்தை பார்த்ததும், சற்றே முகம் மாறினாள்.. அடுத்த படத்தை மாற்றத் தோன்றாதவளாய், அந்தப் படத்தையே உன்னிப்பாக முறைத்துப் பார்த்தாள்..!! தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறவனும், தனது தங்கையும்.. நெருக்கமாக எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம்.. ஆதிராவின் நெஞ்சுக்குள் ஒரு பொறாமைத்தீயை கொளுத்திப் போட்டிருந்தது..!!

“என்னாச்சு..??” தாமிரா கேட்க,

“ஒ..ஒன்னுல்ல..!!” ஆதிரா தடுமாறினாள்.

ஆதிரா சொல்லாவிட்டால் என்ன.. அக்காவின் முகமாற்றத்தில் இருந்தே, அவளுடைய மனநிலையை கச்சிதமாக புரிந்துகொண்டாள் தாமிரா..!!

“என்ன.. அத்தான்கூட உரசிட்டு நிக்கிறது உனக்கு எரிச்சலா இருக்கோ..??” என்று கேலியான குரலிலேயே கேட்டாள்.

“இ..இல்ல.. அப்படிலாம் ஒன்னுல்ல..!!” ஆதிரா பலவீனமாகவே மறுத்தாள்.

“ஹாஹா.. ஒன்னும் பயப்படாத.. உன் புருஷனை ஒன்னும் நான் வளைச்சுப்போட்ற மாட்டேன்..!!”

“ஏய் ச்சீய்.. லூஸு..!!”

“குடு.. டெலிட் பண்ணிடலாம்..!!”

“ஏய் வேணாண்டி.. பரவால..!!”

பதறிய ஆதிராவை பொருட்படுத்தாது, அவளது கையிலிருந்த கேமராவை பிடுங்கி, அந்த ஃபோட்டோவை படக்கென டெலிட் செய்தாள் தாமிரா..!!

“ஓகேவா இப்போ..?? ஹாஹா..!!” என்று அக்காவை பார்த்து போலியாக சிரித்தாள்.

“ப்ச்.. ஏன்டி டெலிட் பண்ணின..?? நான் ஒன்னும் அதுக்காக சொல்லல..!!”

“அடடடடா..!! விடு விடு.. எல்லாம் எனக்கு தெரியும்..!! உனக்கு பிடிக்கலல.. அப்புறம் என்ன..?? அதான் டெலிட் பண்ணிட்டேன்.. அக்கா இப்போ ஹேப்பிதான..??” கண்சிமிட்டி அழகாக சிரித்தாள் தாமிரா.

“ஹ்ம்ம்ம்ம்..!!! தேங்க்ஸ்டி..!!!”

பூரிப்பான முகத்துடன் சொன்ன ஆதிராவின் மனது, அப்போதைக்கு அமைதிப்பட்டுப் போனது.. ஆனால், புகைப்படத்தை அழித்து நீக்கிய தாமிராவின் மனதோ, ஒருவித பதைபதைப்புக்கு உள்ளாகியிருந்தது..!! எப்படியாவது அந்த புகைப்படத்தை, மீண்டும் மீட்டெடுத்து விடவேண்டுமே என்கிற பதைபதைப்பு..!!

அன்று மதியமே தாமிரா அந்தவேலையில் மூழ்கியிருந்தாள்.. கேமராவின் மெமரி ஸ்டிக்கில் இருந்து, டெலிட் செய்யப்பட்ட அந்த புகைப்படத்திற்கு, டேட்டா ரெகவரி டூல் மூலம் திரும்பவும் உயிர்கொடுக்கிற வேலை..!! ஒருவழியாக அந்த புகைப்படத்தை அவள் ரெகவர் செய்து, அவளும் சிபியும் அருகருகே உரசி நிற்பதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. ஆதிரா அந்த அறைக்குள் நுழைந்தாள்..!! அக்காவின் வருகையை உணர்ந்ததுமே, புகைப்படத்தை படக்கென மூடி, ஏதோ கட்டுரை டைப் செய்வது போல பாவ்லா செய்தாள் தாமிரா..!! கம்ப்யூட்டர் டேபிளில் வந்து படாரென விழுந்தது அந்த ஆட்டோக்ராஃப் புத்தகம்..!!

“என்னடி இது..??”

“எ..எது..??”

“ம்ம்ம்ம்..??? இது..!!!”

ஆட்டோக்ராஃப் புத்தகத்தில்.. ஆதிரா எடுத்துக்காட்டிய பக்கத்தில்.. அகல்விழியால் எழுதப்பட்ட அந்த வாசகம்..!!

“தெளிவாக யோசி பெண்ணே.. துணிச்சலாக ஒரு முடிவெடு.. உனது காதல் கைகூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! – அன்புத்தோழி அகல்விழி”

சிபியை மேற்கோள் காட்டியே அகல்விழி அதை எழுதியிருந்தாள்..!! ஆனால்.. அந்தமாதிரியான ஒரு நிலைமையில்.. அந்த உண்மையை.. அக்காவிடம் தாமிராவால் சொல்ல முடியாதே..?? காதலன் யார் என்று அவள் கேட்டதற்கு.. ஒரு சிறு திகைப்புக்கு அப்புறம், கதிர் மீது பழியை தூக்கிப் போட்டாள் தாமிரா..!! தன்னை காதலித்து தன்னால் நிராகரிக்கப்பட்ட கதிரின் பெயரை.. இப்படியொரு சூழ்நிலையில் சமயோஜிதமாக உபயோகப்படுத்திக் கொண்டாள்..!! அப்பாவிடம் பேசலாம் என்று கிளம்பிய ஆதிராவை..

“ஹையோ.. சும்மா இருக்கா நீ வேற.. காரியத்தையே கெடுத்துடாத..!! இப்போத்தான் உனக்கும் அத்தானுக்கும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க.. இந்த நேரத்துல இதைப்போய் சொல்லி அவங்களை டென்ஷனாக்க வேணாம்..!! நீ மொதல்ல கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டு கெளம்பு.. என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன்..!! கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை உனக்குள்ளேயே வச்சுக்கோக்கா.. யார்ட்டயும் சொல்லாத.. ப்ளீஸ்..!!” என்றுகூறி அப்போதைக்கு செயலிழக்க செய்துவிட்டாள்.

அக்காவின் விஷயத்தில்தான் அவ்வாறு வாயடைத்துப்போக வைக்க முடிந்தது தாமிராவால்.. சிபியின் விஷயத்தில் அவளால் அது இயலவில்லை..!! அடுத்து வந்த ஒரு வாரம், பத்து நாட்கள்.. தீயின் மீது நிற்கிற உக்கிரமான தகிப்பை உணர்ந்தாள் தாமிரா..!! ஒருபக்கம் அக்காவின் மீதான அளவிலா அன்பு.. இன்னொருபக்கம் சிபியின் மீதான ரகசியக் காதல்.. இரண்டுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிப் போனாள்..!!

சிபி தினசரியும் அவளை கைபேசியில் அடிக்கடி அழைத்தான்.. தாமிரா ஆரம்பத்தில் அவனது அழைப்பை உதாசீனம் செய்து பார்த்தாள்.. அப்புறம்.. அவளாலேயே முடியாமல் அவனுடன் பேச ஆரம்பித்தாள்..!!

அக்காவின் அருமை பெருமைகளை சொல்லி.. சிபியின் மனதை மாற்ற முயன்றாள் தாமிரா..!! அகத்துக்குள்ளிருந்த காதலின் தீவிரத்தை சொல்லி.. தாமிராவை தன்வழிக்கு கொண்டுவர முனைந்தான் சிபி..!! இரண்டு வெவ்வேறு விதமான முயற்சிகளில்.. சிபிதான் வெற்றியடைந்தான் என்று சொல்லவேண்டும்.. தாமிரா கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டிருந்தாள்..!! Sunni Oombum
Tamil Sex Story

– தொடரும்

NEXT PART

Leave a Comment